Jump to content

விடுதலைப் புலிகள் குறித்த கருத்துக்காக மன்னிப்புக் கோரமாட்டேன்- விஜயகலா


Recommended Posts

விடுதலைப் புலிகள் குறித்த கருத்துக்காக மன்னிப்புக் கோரமாட்டேன்- விஜயகலா

 

vijayakala-300x200.jpgயாழ்ப்பாணத்தில் கடந்த மாதம் விடுதலைப் புலிகள் தொடர்பாக வெளியிட்ட கருத்துக்காக மன்னிப்புக் கோரவோ, அந்தக் கருத்தை விலக்கிக் கொள்ளவோ போவதில்லை என்று தெரிவித்துள்ளார் முன்னாள் இராஜாங்க அமைச்சரான விஜயகலா மகேஸ்வரன்.

விடுதலைப் புலிகள் மீண்டும் வர வேண்டும் என்று அரசாங்க நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய விஜயகலா மகேஸ்வரன், இராஜாங்க அமைச்சர் பதவியை இழந்தார். அவருக்கு எதிரான நடவடிக்கை குறித்து விசாரணைகளும் நடத்தப்பட்டன.

இந்தநிலையில், ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள விஜயகலா மகேஸ்வரன்,

”நான் எதனைக் கூறினேனோ அதே நிலைப்பாட்டில் தான் இருக்கிறேன். நான் கூறிய கருத்தை விலக்கிக் கொண்டு எனது கௌரவத்தையும் மரியாதையையும் இழக்கமாட்டேன்.

விசாரணை அறிக்கை குறித்து நான் ஆர்வம் கொண்டிருக்கவில்லை. ஆனால் ஊடகங்கள் அதில் ஆர்வம் காட்டுகின்றன.

எனக்கு எதிராக எந்த நடவடிக்கை எடுத்தாலும், அதனை வரவேற்பேன். அதற்கு அச்சப்படமாட்டேன். என் மீது நம்பிக்கை கொண்ட மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன்.

நான் தமிழ் மண்ணில் பிறந்தேன். தெற்கிலுள்ள மக்கள் எங்களுடன் வாழ்ந்திருந்தால், அவர்களும் நான் கூறிய உணர்வுகளையே வெளிப்படுத்தியிருப்பார்கள்.

இன்னும் பல முக்கிய அரசியல்வாதிகள் விசாரணைக்காக வரிசையில் இருக்கிறார்கள்.என்மீதான விசாரணையும் அத்தகைய ஒன்று தான். அதுபற்றி நான் கவலைப்படவில்லை.

விடுதலைப் புலிகளின் காலத்தில் தமிழ் மக்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் இப்போது எப்படி வாழ்கிறார்கள் என்பதைத் தான் நான் வெளிப்படுத்தினேன்.

அப்போது வல்லுறவு, சிறார் வல்லுறவு, போதைப்பொருட்கள், பாலியல் துன்புறுத்தல்கள், கொலைகள், கொள்ளைகள் பற்றி நாம் கேள்விப்பட்டதில்லை.

ஆனால் இப்போது அதற்குள் தள்ளப்பட்டிருக்கிறோம். நான் இதனை வெளிப்படுத்தியது மற்றவர்களுக்கு கவலையை ஏற்படுத்தியிருந்தால் அது என்னுடைய தவறு அல்ல.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/08/19/news/32407

Link to comment
Share on other sites

அக்கா வடக்கு முதலமைச்சர் பதவிக்கு கண் வைக்கிறா போல, கூட்டமைப்பு சீ வீ க்கு பதிலாக இவவை களம் இறக்கினாலும் ஆச்சர்யப்பட வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, Dash said:

அக்கா வடக்கு முதலமைச்சர் பதவிக்கு கண் வைக்கிறா போல, கூட்டமைப்பு சீ வீ க்கு பதிலாக இவவை களம் இறக்கினாலும் ஆச்சர்யப்பட வேண்டாம்.

அவ கூட்டமைப்பு கட்சி அல்ல ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவங்க குள்ள நரி ரணிலின் ஆசியுடன்தான் இவ கூவுறா . 

Link to comment
Share on other sites

5 minutes ago, பெருமாள் said:

அவ கூட்டமைப்பு கட்சி அல்ல ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவங்க குள்ள நரி ரணிலின் ஆசியுடன்தான் இவ கூவுறா . 

அதாவது அக்கா கட்சி தாவுவா / மைத்திரி மாதிரி பொது வேட்பாளராக களம் காணவும் சந்தர்ப்பம் உண்டு...!!!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் அரசியல் மாய ஜாலங்கள் எனக்கு அவ்வளவாகத் தெரியவில்லை - விஜயகலா எவ்வளவு சாதாரண / மலிவான அரசியல்வாதி என்பது உட்பட . ஆனால் சட்டம், ஒழுங்கு நிலைமை  அவர் சொல்வது போல் இருக்கும் பட்சத்தில் , யாராவது இந்த ஒப்பீட்டை ( சுயலாபம் என்றாலும் ) செய்துதானே ஆக வேண்டும் ? சாத்தானாக இருந்தாலும் மெய்மறை ஓதி விட்டுப் போகட்டுமே எனத் தோன்றுகிறது .

 

Link to comment
Share on other sites

2 hours ago, Dash said:

மைத்திரி மாதிரி பொது வேட்பாளராக களம் காணவும் சந்தர்ப்பம் உண்டு...!!!!!!!

கூட்டமைப்பு - ஐக்கிய தேசிய கட்சியின் பொது வேட்பாளராக முதலமைச்சர் பதவிக்கு நிற்கும் சாத்தியம் அதிகம். சி. வி. விக்னேஸ்வரன் வேறு ஆதரவுடன் மீண்டும் போட்டியிடும் போது அவரை வெற்றிபெற விஜயகலா போன்ற ஒருவரே கூட்டமைப்புக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் தேவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Jude said:

கூட்டமைப்பு - ஐக்கிய தேசிய கட்சியின் பொது வேட்பாளராக முதலமைச்சர் பதவிக்கு நிற்கும் சாத்தியம் அதிகம். சி. வி. விக்னேஸ்வரன் வேறு ஆதரவுடன் மீண்டும் போட்டியிடும் போது அவரை வெற்றிபெற விஜயகலா போன்ற ஒருவரே கூட்டமைப்புக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் தேவை.

அப்படி ஒன்று நடந்தால் 
சீ வி க்கு வெற்றி நிச்சயம்.

அங்கால இந்திய ஆதரவுடன் டக்கலூசும் களம் இறங்குகிறாராம் 
இவர்கள் வாக்குகளை பிரித்துவிட 

சி வி ஆதர்வாவு வாக்குகளுடன் அவர் எளிதாக வெல்லுவார் 
இப்போதைக்கு அதுதான் மக்களுக்கும் நல்லது.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சி.வி ஒரு நல்ல மனிதர்.அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை தனிப்பட எனக்கு.ஆனால் அவர் மீண்டும் முதல்வர் ஆனால் அரக்காத தேராகத்தான் இருக்கும் வட பகுதி.தலைவரே அந்த யுத்த நேரத்திலும் அபிவிருத்திக்கும் வேலை வாய்பிற்க்கும் முக்கியவத்தும் கொடுத்தார்.ஆனால் இவர்?

Link to comment
Share on other sites

1 hour ago, சுவைப்பிரியன் said:

சி.வி ஒரு நல்ல மனிதர்.அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை தனிப்பட எனக்கு.ஆனால் அவர் மீண்டும் முதல்வர் ஆனால் அரக்காத தேராகத்தான் இருக்கும் வட பகுதி.தலைவரே அந்த யுத்த நேரத்திலும் அபிவிருத்திக்கும் வேலை வாய்பிற்க்கும் முக்கியவத்தும் கொடுத்தார்.ஆனால் இவர்?

சி. வி. மிகவும் நல்ல மனிதர். ஆனால் அவர் ஒரு முன்னாள் நீதியரசரே அன்றி தேவையானவற்றை பெற்றுக்கொள்ளும் ஆற்றல் கொண்ட அரசியல்வாதியோ அல்லது வணிக நிறுவன நிருவாகியோ அல்ல. விஜயகலா சிங்கள அரசுக்குள் சுழியோடி தனது கணவரின் வணிகத்தையும் அரசியலையும் இன்றுவரை தனது தேவைக்கு பயன்படுத்தி வரும் திறமையான அரசியல்வாதியும் நிருவாகியும் ஆவார். தேவையானால் கொலைகாரரையும் குண்டர்களையும் கூட தனது தேவைக்கு பயன்படுத்தும் ஆற்றல் உள்ளவர் என்பதை சுவிஸ்குமார் வழக்கு காட்டுகிறது. சி. வி. இந்த விடயங்களில் அனுபவம் இல்லாதவர். ஆனால் துணிகரமாக முன்னாள் பெண் போரளிகளுக்காகவும், விடுதலை புலிகள் பற்றி நல்ல கருத்துகளையும் சொன்னது தவிர வேறு எவற்றை விஜயகலா மக்கள் நலன்கருதி இதுவரை செய்து உள்ளார் என்பது பற்றி செய்திகளில் நான் அறியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Dash said:

அதாவது அக்கா கட்சி தாவுவா / மைத்திரி மாதிரி பொது வேட்பாளராக களம் காணவும் சந்தர்ப்பம் உண்டு...!!!!!!!

என்னது மைத்திரி பொது வேட்பாளரா????? எப்ப தொடக்கம்?
ராசா! அதெல்லாம் சிங்களத்தின்ரை சதுரங்க அரசியல்.......இந்த விசயம் எங்கடை தமிழ் அரசியல்  ஐயாமாருக்கும் தெரியும்.
பொது வேட்பாளர் எண்டது சிங்களத்தின்ரை ஒற்றுமை பாருங்கோ :grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.