Jump to content

ரூபாய் மதிப்பு சரிவு: காரணங்களும் தாக்கங்களும்!


Recommended Posts

ரூபாய் மதிப்பு சரிவு: காரணங்களும் தாக்கங்களும்!

689_thumb.jpg
 

ரூபாய் மதிப்பு 80 ஆகச் சரிந்தாலும் கூட அரசுக்கு கவலை இல்லை. இந்தியாவிடம் போதுமான அந்நியச் செலாவணி கையிருப்பு உள்ளது.

ரூபாயின் மதிப்பு, வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு செவ்வாய்க்கிழமையன்று 70.06 ஆகக் கடுமையாகச் சரிந்தது. துருக்கியில் நிலவி வரும் ஸ்திரமற்றத் தன்மையே இந்த வீழ்ச்சிக்குக் காரணம் எனக் கூறப்படும் நிலையில், இந்தச் சரிவு குறித்து அச்சப்படத் தேவையில்லை என பொருளாதார விவகாரங்களுக்கான செயலர் சுபாஷ் சந்திரா கார்க் தெரிவித்துள்ளார். 

ரூபாய் மதிப்பு சரிவு

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது மற்றும் அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தகப் போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த சில மாதங்களாகவே டாலருக்கான தேவை அதிகரித்து வந்தது. இதன் காரணமாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடந்த சில மாதங்களாகவே சரிவைச் சந்தித்து வந்தது. 

 

 

அந்நியச் செலவாணி சந்தையில் திங்கள்கிழமையன்றே, ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத வகையில், 69.91 ஆக சரிந்து, பின்னர் ஓரளவுக்கு மீண்டு, மாலை வர்த்தகம் நிறைவடையும்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 69.92 ஆகக் காணப்பட்டது. 

 
 
 

ரூபாய் மதிப்பு எந்த அளவுக்கு சரிந்தால், அது அரசுக்கு கவலை அளிக்கக்கூடியதாக இருக்கும் என்று செய்தியாளர்கள் கேட்டபோது, ``டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 80 ஆகச் சரிந்தாலும் கூட அரசுக்கு கவலை இல்லை. இந்தியாவிடம் போதுமான அந்நியச் செலாவணி கையிருப்பு உள்ளது" என சுபாஷ் தெரிவித்தார். 

பங்குச் சந்தையில் ஏற்றம்

ரூபாய் மதிப்பு சரிவினால் ஐடி துறைப் பங்குகள் ஏற்றமடைந்தன. தேசியப் பங்குச் சந்தையில், நிஃப்டி ஐடி இண்டெக்ஸின் கீழ் இடம்பெற்றுள்ள 10 பங்குகளும் காலை 11.24 மணி அளவில் ஏற்றமடைந்து காணப்பட்டன. மும்பை பங்குச் சந்தையில் காலை வர்த்தகத்தின்போது, சென்செக்ஸ் 185 புள்ளிகள் வரை உயர்ந்து 37,829.93 ஆகக் காணப்பட்டது. அதேபோன்று தேசியப் பங்குச் சந்தையிலும் நிஃப்டி 32.25 புள்ளிகள் உயர்ந்து 11,392 ஆகக் காணப்பட்டது. 

தாக்கங்கள்

இந்த ஆண்டு மட்டும் ரூபாய், 8 சதவிகிதம் வரை அதன் மதிப்பை இழந்துள்ளது. இதனால் இறக்குமதியாகும் பொருள்களின் விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக, பெட்ரோல், மின்னணு சாதனப் பொருள்களின் விலை அதிகரித்துள்ளது. டாலருக்கு நிகரான துருக்கியின் பணமான லிராவின் மதிப்பு, இந்த ஆண்டு 45 சதவிகிதம் அளவுக்கு சரிந்துள்ள நிலையில், ``ஒரு வர்த்தகப் போரில் துருக்கி இலக்காக மாறியுள்ளது" என்று துருக்கி அதிபர் தயீப் எர்டோகன் தெரிவித்துள்ளார். 

ரிசர்வ் வங்கிக்கு சிக்கல்

அதே சமயம் ரூபாய் மதிப்பு சரிவு, பணவீக்கத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க நினைக்கும் ரிசர்வ் வங்கிக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. விலைவாசி உயர்வைக் கட்டுக்குள் வைப்பதற்காக ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தலைமையிலான நிதிக் கொள்கைக் குழு, கடந்த ஜூன் மாதத்திலிருந்து இரண்டு முறை வட்டி விகிதத்தை அதிகரித்த நிலையில், ரூபாய் மதிப்பின் ஏற்ற இறக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பை 23 பில்லியன் டாலராக ரிசர்வ் வங்கி குறைத்தது. ஆனாலும், நாட்டின் சில்லறை பணவீக்கம் ஜூலை மாதத்தில் 4.17 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக திங்கள்கிழமையன்று வெளியிடப்பட்ட அரசின் புள்ளி விவரத் தகவல் தெரிவிக்கிறது. 

 

 

ரிசர்வ் வங்கி

ரூபாய் மதிப்பு மேலும் சரியுமா? 

இந்த நிலையில், ரூபாய் மதிப்பு மேலும் சரிவடைவதற்கு வாய்ப்பில்லை எனப் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ``இந்தியாவின் மேக்ரோ காரணிகள் நல்ல அடித்தளத்தைக் கொண்டதாக உள்ளது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 70 ஐத் தொடும் என்பது ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். ஆனால், இதுதான் தடை நிலை. இதற்கு மேல் சரிவடைய வாய்ப்பில்லை. ஏற்றுமதியாளர்களுக்கு, தங்களது நிலையைப் பாதுகாத்துக்கொள்ள இதுதான் நல்ல தருணம்"  என ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் மூத்த ஆலோசகர் பஸ்கார் பாண்டா தெரிவித்துள்ளார். 

ஆனால், துருக்கியில் நிலைமை மேலும் மோசமானாலோ அல்லது டாலர் மதிப்பு இன்னும் அதிகரித்தாலோ இந்திய ரூபாய் மதிப்பு இன்னமும் சரிவடையலாம் என்றும், ஆனால், மற்ற கரன்சிகளின் மதிப்பும் சரிவடையும் என்பதால் அது குறித்து கவலை கொள்ளத்தேவையில்லை எனப் பிரபல அமெரிக்க நிதி வங்கியான ஜேபி மார்கனின் இந்தியாவுக்கான தலைமைப் பொருளாதார நிபுணரான சாஜித் சினாய் தெரிவித்துள்ளார்.

https://www.vikatan.com/news/india/133992-rupee-breaches-70mark-hits-lifetime-low.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதுதானே உலகத்திலை இல்லாத பிரச்சனையா சிலோனிலை இருக்குது? மிண்டு கொடுத்து வாழ்பவர்களுக்கு சகலதும் சகஜம்.😂 இலங்கையில் எவ்வித பிரச்சனையுமே இல்லை என நிறுவ ஒரு கூட்டம் யாழ் இணையத்தில் உள்ளது யாவரும் அறிந்ததே.🤣
    • நீங்கள் விரைந்து குணம் பெற எல்லாம் வல்ல இறையை வேண்டுகிறோம். அத்தோடு வைத்திய ஆலோசனைகளை சரியாக பின்பற்றத் தவற வேண்டாம்.. அதேவேளை வைத்தியர்களின் அலோசனைக்கு ஏற்ப உடல் தன்னை சரிப்படுத்திக் கொள்ளவில்லை என்றால்.. உடல் உளம் சொல்வதை வைத்தியரிடம் சொல்லாமல் இருப்பதையும் செய்ய வேண்டாம். 
    • இல்லை பொதுவாக வில்லனும் வில்லனும் ஒன்றாவது சகஜம்தானே. அமெரிக்காவுக்கு சோவியத் காலம் தவிர ரஸ்யா வேறெப்போதும் எதிரி இல்லைத்தான்.  ஆனால் கிழக்கு ஐரோப்பிய சிறிய தேசிய இனவழி நாடுகள், பின்லாந்து இவையின் நிலமை எப்போதும் முதலை குளத்தில் நீர் அருந்தும் மான்களின் நிலைதான். ரஸ்யாவில் ஒரு பீட்டர் த கிரேட், அல்லது அவன் த டெரிபிள், அல்லது கத்தரீன் த கிரேட், அல்லது ஸ்டாலின், அல்லது புட்டின் இருந்தால் இவர்கள் இரையாவது நிச்சயம்.
    • ஒரு குட்டி ஸ்டோரி  50 வயதான எல்லாளன் பெரும் படையுடன்.  எதிரே, சிறிய படையுடன் - ஆனால் பதின்ம வயதின் முடிவில் உள்ள கட்டேறிய உடலுடன் டுட்டு கெமுனு. தந்திரமாக வீரர்கள் மாய வேண்டாம் - நீயும் நானும் மட்டும் போரிடுவோம் என்கிறான் கெமுனு. சின்ன பயல், அதுவும் மோட்டு குடியினன், கவுங் தின்பதில் மட்டும் சூரன் - போரின் முதல் தவறாகிய எதிரியை கீழ் மதிப்பீடு செய்வதை செய்கிறான் மாமன்னன் எல்லாளன். பெரும் படையை பாவிக்காமலே தோற்று, இறந்து போகிறான். தீவு முழுவதையும் ஆண்ட கடைசி தமிழ் அரசு முடிவுக்கு வருகிறது. எல்லாளனில் தொடங்கியது - புத்தன் வரை தொடர்கிறது. கெமுனுக்கள் வென்று கொண்டே இருக்கிறார்கள் 🥲. ——******——— (போர் நடந்த விதம் வரலாறா தெரியவில்லை, தமிழர் தரப்பில் கர்ணபரம்பரையாக வருகிறது - வெறும் கதையே என்றாலும் - செய்தி கனமானது).
    • காசை கொடுத்து ஓட்டு பிச்சை எடுத்து வெல்ற‌து எல்லாம் வெற்றியா...................... கிருஷ்ண‌கிரில‌   வீஜேப்பியை முந்துவா வீர‌ப்ப‌ன் ம‌க‌ள் ஆனால் இதில் வீர‌ப்ப‌ன் ம‌க‌ளுக்கு 4வ‌து இட‌ம் என்று போட்டு இருக்கு   பெரிய‌ப்ப‌ர் ப‌ந்தைய‌ம் க‌ட்டுவோமா நான் சொல்லுறேன் வீர‌ப்ப‌ன் ம‌க‌ள் வீஜேப்பிய‌ முந்துவா என்று💪..............................   இது முற்றிலும் திமுக்காவுக்கு சாத‌க‌மான‌ ஊட‌க‌ம் அது அவ‌ர்க‌ளையும் அவ‌ர்க‌ள் சார்ந்த‌ கூட்ட‌னிக‌ளையும் முன் நிறுத்தின‌ம்..................... ஆனால் யூன் 4ம் திக‌தி இந்த‌ ஊட‌க‌த்தை காரி உமுந்து துப்புவ‌து உறுதி........................   ப‌ல‌ ச‌ர்வே வேற‌ மாதிரி சொல்லுகின‌ம் ஆனால் இதில் முற்றிலும் பொய்யான‌ ச‌ர்வே............................. இது முற்றிலும் திமுக்காவுக்கு ஓ போடு ஓ போடு ஊட‌க‌ம் தாத்தா க‌ள‌ நில‌வ‌ர‌ம் வேறு மாதிரி இருக்கு😁......................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.