Jump to content

புலிகளிடம் இருந்த ஆயுதங்கள் தற்போது முஸ்லிம் தலைவர்களிடம்...! சிங்களவருக்கும் பாதிப்பு...?


Recommended Posts

புலிகளிடம் இருந்த ஆயுதங்கள் தற்போது முஸ்லிம் தலைவர்களிடம்...! சிங்களவருக்கும் பாதிப்பு...?

 

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினரிடம் இருந்த ஆயுதங்கள் தற்பொழுது முஸ்லிம் அரசியல்வாதிகளிடமே இருப்பதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் இன்பராஜா தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்படுவதாவது,

2009ஆம் ஆண்டு யுத்தத்தின் பின்னர் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் பலர் வெளிநாடுகளுக்குச் சென்றனர். அவர்களிடம் இருந்த 5 ஆயிரத்துக்கும் அதிகமான ஆயுதங்கள் தற்பொழுது எங்குள்ளது என இன்பராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

இத்தனை ஆயுதங்களும் முஸ்லிம் அரசியல்வாதிகளிடமே உள்ளன. இந்த ஆயுத பலத்தை வைத்துக் கொண்டுதான் ஹிஸ்புல்லா, றிசாட் பதியுதீன் போன்றோர் இந்த நாட்டில் இரத்த ஆறு ஓடும் எனக் அச்சுறுத்துகின்றனர்.

அத்துடன், கோவிலை உடைத்து பள்ளிவாசல் கட்டுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இந்த விடயத்தில் ஏன் அரசாங்கம் மௌனம் காக்கின்றது. காத்தான்குடி, கிண்ணியா, மூதூர் பிரதேசங்களிலும் இந்த ஆயுதங்கள் இருப்பதாக தகவல்கள் உள்ளன. இது தமிழ் மக்களுக்கு மாத்திரமல்ல, சிங்கள மக்களுக்கும் பிரச்சினைக்குரியது.

எந்தவொரு அமைச்சருக்கும் புலிகள் வர வேண்டும் எனக் கூறமுடியும். இருப்பினும், புலிகளின் உறுப்பினர்களாக இருந்த எமக்குத் தான் தெரியும், அவ்வாறு ஒன்று நடைபெறாது என்பது. நாம் விரும்பியோ, விரும்பாமலோ புலிகள் அமைப்பில் இணைந்தோம்.

இந்த நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்பாட்டால், நாம் 12 ஆயிரம் பேரும் இந்நாட்டைப் பாதுகாக்க படையில் இணைவோம். எமக்கு வேறு ஒரு நாடு தேவையில்லை. இருப்பினும், தமிழ் அரசியல் தலைவர்கள் இதற்கு உடன்பட மாட்டார்கள் என இன்பராஜா குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் அரசியல்வாதிகளுக்கு திரும்பவும் ஓர் ஆயுதக் கலாச்சாரத்தைக் கொண்டுவரவே தேவையாகவுள்ளது எனவும் குறித்த செய்தியின் மூலம் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

http://www.tamilwin.com/politics/01/191115?ref=imp-news

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, நவீனன் said:

தமிழ் அரசியல்வாதிகளுக்கு திரும்பவும் ஓர் ஆயுதக் கலாச்சாரத்தைக் கொண்டுவரவே தேவையாகவுள்ளது எனவும் குறித்த செய்தியின் மூலம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவையள் குளிர்காயோணுமெண்டால் பொடியள் ஆயுதம் தூக்கவேணும்.

Link to comment
Share on other sites

விà®à¯à®¤à®²à¯à®ªà¯à®ªà¯à®²à®¿à®à®³à®¿à®©à¯ à®à®¯à¯à®¤à®à¯à®à®³à¯ à®®à¯à®¸à¯à®²à®¿à®®à¯ à®à®°à®à®¿à®¯à®²à¯à®µà®¾à®¤à®¿à®à®³à®¿à®à®®à¯;à®à®°à¯à®à¯à®à¯à®¯à¯ à®à®¿à®³à®ªà¯à®ªà®¿à®¯ à®à®©à¯à®ªà®°à®¾à®à®¾

விடுதலைப்புலி அமைப்பினரிடம் இருந்த ஆயுதங்கள் தற்பொழுது முஸ்லிம் அரசியல்வாதிகளிடமே இருப்பதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பு தெரிவித்தது.

இவ்வமைப்பின் உறுப்பினர்கள் நேற்று கொழும்பில் நடாத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அமைப்பின் தலைவர் இன்பராஜா இதனை அறிவித்தார்.

2009 ஆம் ஆண்டு யுத்தத்தின் பின்னர் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் பலர் வெளிநாடுகளுக்குச் சென்றனர். அவர்களிடம் இருந்த 5 ஆயிரத்துக்கும் அதிமான ஆயுதங்கள் தற்பொழுது எங்குள்ளது எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

இத்தனை ஆயுதங்களும் முஸ்லிம் அரசியல்வாதிகளிடமே உள்ளன. இந்த ஆயுத பலத்தை வைத்துக் கொண்டு தான் ஹிஸ்புல்லா, பத்தியுத்தீன் போன்றோர் இந்த நாட்டில் இரத்த ஆறு ஓடும் எனக் அச்சுறுத்துகின்றனர்.

அத்துடன், கோவிலை உடைத்து பள்ளிவாயல் கட்டுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இந்த விடயத்தில் ஏன்? அரசாங்கம் மௌனம் காக்கின்றது. காத்தான்குடி, கிண்ணியா, மூதூர் பிரதேசங்களிலும் இந்த ஆயுதங்கள் இருப்பதாக தகவல்கள் உள்ளன.

இது தமிழ் மக்களுக்கு மாத்திரமல்ல, சிங்கள மக்களுக்கும் பிரச்சினைக்குரியது.

எந்தவொரு அமைச்சருக்கும் எல்.ரி.ரி.ஈ. வர வேண்டும் எனக் கூறமுடியும். இருப்பினும், எல்.ரி.ரி.ஈ. உறுப்பினர்களாக இருந்த எமக்குத் தான் தெரியும், அவ்வாறு ஒன்று நடைபெறாது என்பது. நாம் விரும்பியோ, விரும்பாமலோ புலிகள் அமைப்பில் இணைந்தோம்.

இந்த நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்பாட்டால், நாம் 12 ஆயிரம் பேரும் இந்நாட்டைப் பாதுகாக்க படையில் இணைவோம். எமக்கு வேறு ஒரு நாடு தேவையில்லை. இருப்பினும், தமிழ் அரசியல் தலைவர்கள் இதற்கு உடன்பட மாட்டார்கள். தமிழ் அரசியல்வாதிகளுக்கு திரும்பவும் ஒர் ஆயுதக் கலாச்சாரத்தைக் கொண்டுவரவே தேவையாகவுள்ளது எனவும் இன்பராஜா மேலும் கூறினார்.

http://thinakkural.lk/article/16887

Link to comment
Share on other sites

தமிழ் மக்களிடம் ஆயுதம் இல்லை - முஸ்லிம் மக்களிடமே ஆயுதம் உள்ளது

தமிழ் மக்களிடம் ஆயுதம் இல்லை - முஸ்லிம் மக்களிடமே ஆயுதம் உள்ளது

 

 
 
எந்தவொரு தமிழ் மக்களிடமும் தற்போது ஆயுதம் இல்லை என்றும் முஸ்லிம் மக்களிடமே ஆயுதம் இருப்பதாகவும் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் இன்பராசா தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார். இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர்,

யுத்தத்தின் பின்னர் தமிழ் மக்கள் அனைவரும் ஆயுதங்களை முஸ்லிம்களுக்கு விற்றுவிட்டு சென்று விட்டனர். தற்போது முஸ்லிம்களிடமே ஆயுதம் இருக்கின்றது.

ஒரு இனத்திடம் ஆயுதம் இருப்பது ஆபத்தானது. இதனால் ஏனைய இரு இனத்தவர்களுக்கும் அச்சுறுத்தல் இருப்பதாக அவர் கூறினார்.

ஆகவே சவூதி, பாகிஸ்தான் நாடுகளின் உதவிகள் கிடைக்காமல் போய்விடும் என்று பயப்படாது அரசாங்கம் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டது தமிழ் மற்றும் சிங்கள மக்களே. ஆனால் அதன்போது முஸ்லிம் மக்கள் பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்து விட்டார்கள்.

இது எங்களுக்கு பெரும் கவலையாக இருக்கின்றது. இப்போது எமக்கு நாட்டுப்பற்று இருக்கின்றது. நாம் இலங்கையர் என்ற வகையிலேயே இப்போது செயற்படுகின்றோம் என்று அவர் கூறியுள்ளார்.

அதேநேரம் அரசாங்கமே புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கி வளர்த்துவிட்டது என்றும், முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்கியதாகவும் அவர் கூறினார்.

http://tamil.adaderana.lk/news.php?nid=105490

Link to comment
Share on other sites

ஆயுதக் கொள்வனவு – முஸ்லிம் அமைச்சர்களுக்கு அவசியம் ஏற்பட்டதா?

 

 

விளக்கம் கேட்கின்றது அமைச்சர் ரிஷாட்டின் ஊடகப்பிரிவு!

Rishad-Bathiudeen.jpg?resize=800%2C450

 

புலிகளிடமிருந்த அனைத்து ஆயுதங்களும் முஸ்லிம்கள் வசமே இருப்பதாகவும், இதனை வைத்துக்கொண்டே அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஹிஸ்புல்லா ஆகியோர் அரசாங்கத்தை அச்சுறுத்தவும், அடிபணியவைக்கவும் முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ள புனர்வாழ்வளிக்கப்பட்ட புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவரின் கருத்துக்கள் தொடர்பில், அரசாங்கம் ஆழமான பார்வையுடன் அக்கறை செலுத்தி, உரிய விசாரணை நடாத்தி உண்மை நிலையை கண்டறிய வேண்டுமென அமைச்சர் ரிஷாட்பதியுதீனின் ஊடகப் பிரிவு அரசாங்கத்தைக் கோரியுள்ளது.

அமைச்சர் றிஸாட் பதியுதீனின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,,

நல்லாட்சி அரசாங்கத்தில் வழங்கப்பட்டுள்ள அதிக பட்ச கருத்துச் சுதந்திரம்,  ஊடகச்சுதந்திரங்களைப் பயன்படுத்தி எவரும் கருத்துக்களை வெளியிட முடியும். எனினும்,இவ்வாறான நாட்டின் ஆள்புல எல்லை,பாதுகாப்புகளுக்கு அச்சுறுத்தலாகவுள்ள கருத்துக்களின் பின்னணிகள் பற்றி அரசாங்கம் மட்டுமன்றி பொதுமக்களும் அறிவதற்கு உரித்துடையோராக உள்ளனர். அரச படைகள் அன்றி வேறு எவரும் ஆயுதங்கள் வைத்திருப்பது பயங்கரவாதச் செயற்பாடுகளாகவே ஜனநாயக நாடுகளில் நோக்கப்படுகின்றன.

இந்த வகையில், புலிகளின் ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்கான நோக்கம், குறித்த அமைச்சர்கள் அரசாங்கத்தை அச்சுறுத்துவதற்கான அவசியம் பற்றியும் புனர்வாழ்வளிக்கப்பட்ட புலிகள் அமைப்பின் குறிப்பிட்ட முக்கியஸ்தரிடமிருந்து அறிந்துகொள்ள முஸ்லிம்கள் மட்டுமன்றி, நாட்டின் பாதுகாப்பில் அக்கறையுள்ள அனைவரும் எதிர்பார்ப்பதாகவும் ஊடகப்பிரிவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வரலாற்றுக் காலந்தொட்டு நாட்டின் அமைதி, பாதுகாப்புக்கு ஒத்துழைத்து வரும் முஸ்லிம்கள் மீது ஆங்காங்கே கட்டவிழ்த்து விடப்பட்ட இவ்வாறான கற்பனைக் கதைகள், புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளின் பின்னர் பொய்ப்பித்துப் போனதே வரலாறு.  அரசாங்கத்திடமிருந்து முஸ்லிம்களைப்பிரித்து பயங்கரவாதமாகக் காட்டமுனையும் இவ்வாறான சில தீய சக்திகளை வெளிநாடுகள் இயக்குகின்றதா? அல்லது உள்ளூர் கடும்போக்காளர்களின் பிரித்தாளும் தந்திரங்களுக்கு சிலர் பலிக்கடாக்களாகியுள்ளனரா? என்று சந்தேகிக்க வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் ரிஷாட்டின் ஊடகப்பிரிவு ஐயம் வெளியிட்டுள்ளது.

வடக்கில் முஸ்லிம்களின் ஆதரவை மட்டுமல்ல, தமிழர்களின் கணிசமான ஆதரவையும் பெற்றுவரும் அமைச்சர் ரிஷாட்டின் அரசியல் எழுச்சிப் பயணத்தில் தடைகள் போட முனையும் சில சமூக சீர்கேடர்களின் முயற்சிகளுக்கு, இவ்வாறானவர்கள் இரையாவது மீண்டும் இனவாத சிந்தனைகளையே மக்கள் மத்தியில் வளர்க்கும் என்பதை அரசாங்கம் கவனத்தில் கொள்வதே, நல்லாட்சி அரசில் சிறுபான்மைச்சமூகங்கள் வைத்துள்ள நம்பிக்கையை தொடர்ந்து பாதுகாக்க உதவும்.

எனவே, குறித்த நபரின் குற்றச்சாட்டுகள் பற்றி ஆராய்ந்து, குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பு.

இறுதி யுத்தத்தில்கடுமையாகப் பலமிழந்த புலிகள், கனரக ஆயுதங்களை கைவிட்டுத் தப்பிப்பிழைத்து ஓடுகையில் ஆயுதவியாபாரத்தில் ஈடுபட நேரம் கிடைத்திருக்குமா? என்பதை யோசித்தால் குறித்த நபர் அரசியல் காழ்ப்புணர்ச்சி அல்லது இனவாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு இயைந்து செயற்பட்டிருப்பதாகவே எண்ணத் தோன்றுவதாகவும் அமைச்சரின் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது

http://globaltamilnews.net/2018/91999/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்களிடம் ஆயுதங்கள் உள்ளதா ? அரச புலனாய்வுத்துறையை கேள்விக்குட்படுத்தும் முன்னாள் புலி உறுப்பினர்.

39441790_1865101480242842_680463866412400640_n.jpg

-முகம்மத் இக்பால்  சாய்ந்தமருது -
முஸ்லிம்களிடம் ஆயுதங்கள் உள்ளதா ? அரச புலனாய்வுத்துறையை கேள்விக்குட்படுத்தும் முன்னாள் புலி உறுப்பினர்.

முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்களும்இ கருணா அணியினர்களும் தப்பி ஓடியபோது அவர்களது ஆயுதங்களை முஸ்லிம்களிடம் விற்பனை செய்ததாகவும்இ அவ்வாறான ஆயுதங்கள் இன்றும் முஸ்லிம்களிடம் உள்ளதாகவும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலை புலி உறுப்பினர் பகிரங்கமாக கூறியுள்ளார்.


இவரது கூற்று இன்று அரசியல் மட்டத்தில் பாரிய விமர்சனங்களை தோற்றுவித்துள்ளதுடன் இதனை சாதாரணமான ஒரு பேச்சாக எடுத்துக்கொள்ள முடியாது.


சிங்கள இனவாதிகள் தொடக்கம் மதத் தலைவர்கள் வரைக்கும் அரசியலில் தங்களை பிரபலப்படுத்துவதற்காக பாவிக்கின்ற ஒரு துரும்புதான் முஸ்லிம் மக்களாகும்.


அதுபோலவே அரசியலில் தமிழ் மக்கள் மத்தியில் தடம்பதிக்க முற்படும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் புலி உறுப்பினர்கள் முஸ்லிம்களிடம் ஆயுதங்கள் உள்ளதாக புரளியை கிளப்பிவிட்டு அதன்மூலம் பிரபலம் அடையவும்இ அரசியல் இலாபம் பெறுவதற்குமான முயற்சியா ? அல்லது இதற்குப்பின்னால் வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா என்று சிந்திக்க தோன்றுகின்றது.


இலங்கையின் அரச புலனாய்வு துறையினர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. விடுதலை புலிகள் பலமாக இருந்த காலங்களில் யாராலும் பிரவேசிக்க முடியாத அவர்களது கட்டுப்பாட்டு பிரதேசத்துக்குள் ஆழ ஊடுருவும் அணியினர்களை அனுப்பி புலிகளின் விமானப்படை தளபதி சங்கர் உட்பட பல முன்னணி தளபதிகளை கொலை செய்தார்கள்.


அத்தோடு துல்லியமான புலனாய்வு தகவலின் அடிப்படையிலேயே புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனை விமானத்தாக்குதல் மூலம் அழித்தார்கள். 


சர்வதேச பொலிசாரின் கண்களில் மண்ணை தூவிக்கொண்டு புனைப்பெயர்களில் நடமாடிய புலிகளின் சர்வதேச பொறுப்பாளர் கே.பி அவர்களை மலேசியாவில் அதிரடியாக கைது செய்து விசேட விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டுவந்தவர்கள்.


இவ்வாறு எத்தனையோ சாதனைகளை இலங்கை புலனாய்வு துறையினர்கள் செய்ததுடன்இ இறுதி யுத்த காலத்தில் கொழும்பில் புலிகளின் தற்கொலை தாக்குதல் நடைபெறாதவாறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்கள். 
இலங்கை அரசாங்கத்திடம் இப்படியான திறமையான புலனாய்வு துறையினர்கள் இருக்கும்போது முஸ்லிம்களிடம் ஆயுதங்கள் இருப்பது மட்டும் அவர்களுக்கு தெரியாமல் போனது எவ்வாறு ?


2004 இன் இறுதியில் கருணா அணியினர்கள் ஆயுதங்களை களைந்துவிட்டு தப்பி சென்றார்கள். அதுபோல் 2009 இல் இறுதி யுத்தம் நடைபெற்று புலிகள் இயக்கத்தின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இன்றைய நல்லாட்சி அரசாங்கம் முஸ்லிம்களிடம் உள்ள ஆயுதங்களை களயவில்லை என்றும்இ நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்றும் கூறுவது நியாயமென்றால்இ கடந்த 2005 தொடக்கம் 2014 இறுதி வரைக்கும் மகிந்த ராஜபக்ஸவே இந்த நாட்டை ஆட்சி செய்தார். ஏன் மகிந்தவினால் முஸ்லிம்களின் ஆயுதங்களை கண்டுபிடிக்கவில்லை ? அல்லது களைய முடியவில்லை ?    


புலனாய்வு துறையினர்கள் உட்பட அரச படையினர்களை மிகவும் திறமையாக வழி நடாத்திய அன்றைய பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சாவுக்கு இது தெரியாமல் போனது எவ்வாறு ?
குறித்த காலப்பகுதிக்குள் முஸ்லிம் மக்களை சிங்களவர்கள் தாக்கி அவர்களது பொருளாதாரத்தை அழித்தபோது இந்த ஆயுதங்களை அவர்கள் ஏன் பாவிக்கவில்லை ?


எனவே புனர்வாழ்வு பெற்ற இமுன்னாள் புலி உறுப்பினர்களின் இந்த அறிவிப்பானது பின்னணி அரசியல் நோக்கம் கொண்டதே தவிர எந்தவித உண்மையுமில்லை. 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காட்டிக்கொடுப்புக்களில் சிறந்த காட்டிக்கொடுப்பு இதுதான்.

 

யுத்தம் முடிவடைந்ததன் பின் எல்லா தமிழ் மக்களும் ஆயுதங்களை முஸ்லிம்களுக்கு விற்றுவிட்டு
சென்றுவிட்டார்கள் என விடுதலைப் புலிகளின் புணர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் உறுப்பினர் கூறியிருப்பதானது யுத்த காலத்தில் எல்லா தமிழ் மக்களிடத்திலும் ஆயுதங்கள் இருந்து என்பதை வெளிப்படுத்தும் கருத்தாகும். அப்படியானால் இலங்கையில் எப்படி யுத்தக்குற்றங்கள் இடம்பெற்றிருக்க முடியும்? எப்படி மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருக்க முடியும்?


லட்சக்கணக்கான அப்பாவி தமிழ் மக்களை இறுதி யுத்தத்தில் முள்ளி வாய்க்கால் பகுதியில் இலங்கை ராணுவம் கொன்றதாக எப்படி கூற முடியும்? அவரின் கருத்துப்படி ஆயுதங்கள் வைத்திருந்த அனைவரும் புலிகள் தானே?

ஆயுதங்கள் விற்ற பணத்தை என்ன செய்தீர்கள்? பழையதை விற்று நவீன ரக ஆயுதங்களை வாங்கினீர்களா? எந்த ஒரு முஸ்லிமும் அரசாங்கத்தோடு ஆயுதமேந்தி சண்டை பிடிக்கவில்லையே? அலுத்கம முதல் தெல்தெனிய வரை அடிவாங்கிக் கொண்டு உயிர் உடமைகளை இழந்து அனாதைகள் போலத் தானே நின்றோம்.


 நீங்கள் சொல்வது போல ஆயுதங்கள் இருந்தால் அதனை அப்போது சரி பயன்படுத்தி இருப்போமே? ஒன்று நீங்கள் ஆயுதங்களை முஸ்லிம்களுக்கு விற்றிருக்காமல் ரகசியமாக பதுக்கியிருக்க வேண்டும் அல்லது நீங்கள் சொல்வது போல பாவனைக்கு உதவாத ஆயுதங்களை ஏமாற்றி விற்று அந்த பணத்தில் நவீன ரக ஆயுதங்களை வாங்கி மீண்டும் யுத்தம் நடத்த தயாராக வேண்டும். நீங்கள் எல்லா தமிழ் மக்களிடமும் ஆயுதங்கள் இருந்தது என்கிறீர்கள். அவர்கள் ஆயுதங்களை விற்றார்கள் என்கிறீர்கள்.


அப்படியானால் ஆவா குழு போன்ற ஆயுதக் குழுக்கள், போதைக்கடத்தல் குழுக்கள் , கொள்ளைக்குழுக்கள் கிழக்கில் அல்லவா உருவாகியிருக்க வேண்டும். ஏன் வடக்கில் உருவானது? அதில் தமிழ் இளைஞர்கள் மட்டும் இருப்பது ஏன்? தமிழ் மக்களையே அவர்கள் வதைப்பது ஏன்?

 யுத்தத்தாலும் வறுமையாலும் பாதிக்கப்பட்டு நாதியற்ற நிலையில் வறுமைக்கோட்டில் வாழும் அப்பவாவி தமிழ் மக்களை உங்கள் பேராசை பிடித்த பண மோகத்துக்காக ,யாரோ போடும் எலும்புத்துண்டுக்காக இப்படி காட்டிக்கொடுக்கிறீர்களே? நீங்கள் முஸ்லிம்களிடம் ஆயுதங்கள் இருக்கிறது என்று கூறியது நான் மேலே கேட்க கேள்விகளை நேரடியாகவே ஆமோதிப்பதற்கு சமன்.

அஸாம் ஏ கரீம்
https://www.madawalaenews.com/2018/08/pnr.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான புலிகளின் மறைவிற்குப் பின்னர் எவரெல்லாம் "புலிகள்" என்னும் சொல்லை தமது கட்சிப் பேர்களில் சேர்த்துக்கொள்கிறார்களோ, அவர்கள் எல்லாம் ஒன்றில் அரசினால் ஏவப்படுபவர்கள் அல்லது மக்களின் வாக்குகளுக்காக அவ்வாறு கூறக் கட்டாயப்படுத்தப்பட்டவர்கள். 

இவர்களுக்கான சிறந்த உதாரணங்கள், பிள்ளையான் கட்சி, கருணாவின் கட்சி, தற்போது புணர்வாழ்வழிக்கப்பட்ட முன்னால் புலிகள் கட்சி.

ஆகவே இவர்கள் சொல்வதை எவரும் கேட்கவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை.

 

இப்போது, இவர்கள் இயங்குவது பொதுபலசேனாவின் சொற்படி இருந்தால்க்கூட ஆச்சரியப்படுதற்கில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முரளிதரன் ஒட்டுக்குழு.. பிள்ளையான் ஒட்டுக்குழு ஆட்கள் நிறைய ஆயுதங்களை காசுக்கு விற்ற சம்பவங்கள் பல நிகழ்ந்துள்ளன. மேலும் இராணுவத்தை விட்டு தப்பியோடியோரும் ஆயுதங்களை விற்றுள்ளனர்.

இது போக.. முஸ்லீம்களிடம் சிங்கள அரசுகள் வழங்கிய ஆயுதங்களும் உள்ளன. அவை மீளப் பெறப்பட்டமைக்கான எந்த சாட்சியங்களும் கிடையா.

அந்த வகையில்.. முஸ்லீம்களிடம் தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடத்தக்க வகையில்.. ஆயுதங்களும்.. சவுதி... பாகிஸ்தான் பணமும் உள்ளது உண்மையாகவே இருக்க வேண்டும். 

இந்த வகையில்.. முஸ்லீம்கள் தொடர்பில் மிக விழிப்புணர்வு தமிழ் மக்களுக்கு அவசியம்.

போதைப்பொருள் வியாபாரமும் இவர்களால்.. பெருமளவில் முன்னெடுக்கப்படுகிறது. ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பாகப்பிரிவினை"     குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அல்லது வாரிசுகள் இரு பக்கமும் பாதிக்காமல் பூர்வீக சொத்தை பிரித்து எடுத்தல் என்று பாகப்பிரிவினைக்கு விளக்கம் கொடுக்கலாம். என்றாலும் அங்கு எதோ ஒரு விதமான அரசியல் செல்வாக்கு தலையிடுவதை தடுக்கமுடியாது என்பதே உண்மை. இது குடும்ப சொத்துக்கு மட்டும் அல்ல, இரு இனம் வாழும் நாட்டுக்கும் பொருந்தும்      அப்படியான ஒரு நாடுதான் நான் பிறந்து வளர்ந்த இலங்கை தீவு! தமிழர் , சிங்களவர் என இரு மொழி பேசும் மக்களும் அன்னியோன்னியமாக ஒரு தாய் மக்களாக இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த பூமி. பெப்ரவரி  4, 1948 , அது சுதந்திரம் என்று அடுத்த கட்டத்துக்கு போக, எல்லாம் தலைகீழாக மாறாத் தொடங்கியது.      "நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு"     இது எல்லாம் எட்டில் மட்டும் தான் என எந்த அன்றைய தமிழ் தலைவர்களுக்கும் விளங்கவில்லை. ஆனால் முகம்மது அலி சின்னா ஓரளவு புத்திசாலி! என்றாலும் அவர் பின்னாளில் இன்னும் ஒரு பாகப்பிரிவினையை தமக்குளேயே, வங்காளதேசம் ஒன்றை  ஏற்படுத்திவிட்டார்.  அது இப்ப முக்கியம் இல்லை?     நான் இப்ப கூறூவது என் கதையே! நாம் ஒரு கிராமத்தில் , தோட்டம், வயல், வீடு என எல்லோரும் ஒன்றாக இருந்த காலம் . நான் என் பெற்றோருக்கு கடைக்குட்டி. எல்லோரிடமும் குட்டு வாங்கி சலித்தவன் நான். படிப்பு கொஞ்சம் மட்டம். ஆசிரியரும் இவன் உருப்படமாட்டான் என கழித்து விடப் பட்டவன்!        "தெருவோர   மதகில்  இருந்து ஒருவெட்டி   வேதாந்தம் பேசி உருப்படியாய் ஒன்றும்   செய்யா கருங்காலி   தறுதலை  நான்"   "கருமம்      புடிச்ச     பொறுக்கியென வருவோரும் போவோரும் திட்ட குருவும்     குனிந்து    விலக எருமை     மாடு       நான்"     இப்படித்தான் என் வாழ்வு அந்த கிராம வெளியில் உருண்டுகொண்டு இருந்தது. அந்த வேளையில் தான் என் பெற்றோர்கள் சென்ற பேருந்து விபத்துக்கு உள்ளாகி இருவரும் அந்த இடத்திலேயே மாண்டுவிட்டார்கள்      "மணலில் கதிரவன் புதையும் மாலையில்    மனதை கல்லாக்கி திங்கள் நன்னாளில்  மரணம் தழுவும் விபத்து எனோ? பேருந்து கவுண்டு விழுந்தது எனோ??"          "அம்மாவின் அறைக்கு மெல்ல போனேன்  அப்பாவுடன் அம்மா சாய்ந்து நின்றார்  அவளது சிறிய விரல்களை தொட்டேன் காதில் கூறி மறைந்து போனது!"     எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை, அம்மா என் காதில் என்ன கூறியிருப்பார் ?, ஒரு வேளை திட்டினவோ இவன் உருப்பட மாட்டான் என்று ?, அம்மா ஒரு முறையும் என்னை திட்டுவது இல்லை. இவன் பாவம், எல்லோரும் திருமணம் செய்து போக தனித்துவிடுவான், இவனுக்கு தான் என் மிஞ்சிய சொத்து எல்லாம் என்று எல்லோருக்கும் கூறுவார். அப்ப  அவர் [அம்மா] காதில் கூறியது என்ன ? என் மூளைக்கு புரியவில்லை!     அம்மாவின் அப்பாவின் பிரேதம் வீடடை விட்டு போகத் தொடங்கவே , அக்கா இருவரும் மெல்ல தங்களுக்குள் முணுமுணுக்க தொடங்கி விட்டார்கள். இவனுக்கு ஏன் இந்த சொத்துக்கள் எல்லாம். அம்மா எழுதி வைக்கவில்லை தானே?, அப்படி என்றால் இது எல்லோருக்கும் தானே ... கதை வளர்ந்து கொண்டு போனது. .. எனக்கு ஒரு வழக்கறிஞர் தெரியும் . நாம் பாகப்பிரிவினை போகலாம் , தம்பி இருவரும் கொள்ளி  வைத்துவிட்டுவரட்டும் ...  . நான் இரு அண்ணரின் கைகளையும் பிடித்துக்கொண்டு சுடுகாடு அதன் பின் போய்விட்டேன்.     எனக்கு இப்ப அம்மா என்ன கூறியிருப்பார் என்று புரிந்தது. நான் மக்குத்தான். மக்கு மக்கு என்று குட்டி கூட்டியே மக்கு ஆக்கப் பட்டவன். வளர விடவில்லையே? நானும் அம்மாவுடன் செல்லம் பொழிந்து பொழிந்து காலத்தை வீணாக்கிவிட்டேன்! இனி இதுபற்றி கதைத்து ஒன்றும் நடக்கப் போவதில்லை. அம்மா என்ன கூறியிருப்பார் ? திருப்ப திருப்ப அந்த நிகழ்வை மீட்டு மீட்டு பார்த்தேன்.        அப்ப தான், நான் அவர் விரலை தொடும் பொழுது, அதை மடித்து உறியில்  ஒரு போத்தலை காட்டியது ஞாபகம் வந்தது. நான் கடைக்குட்டி என்பதால் கொள்ளி என் கையாலே வைக்கப்பட்டது. வீடு திரும்பியதும் அந்த உறியை பார்க்கவேண்டும் போல் இருந்தாலும், இப்ப நான் மக்கு அல்ல, என் சூழ்நிலை, தனித்து விடப்பட்ட என்னை சிந்திக்க வைக்கிறது. ஆகவே கொஞ்சம் ஆற அமரட்டும், கூட்டம் களைந்து போகட்டும். அவர்கள் நால்வரும் ஒன்று சேர்ந்து கட்டாயம் பாகப்பிரிவினை ஒன்றுக்கு வழிவகுக்க வழக்கறிஞரிடம் ஆலேசனை கேட்க போவார்கள். அதுவே சந்தேகம் ஏற்படாத சூழலாகும். அப்பொழுது அதை பார்க்க எண்ணினேன். எனக்கே நான் ஆச்சரியமாக இருந்தேன்!. இந்த மாக்குவா திட்டம் போடுது?     எட்டு செலவு முடிய, அந்த சந்தர்ப்பம் விரைவில் எனக்கு கிடைத்தது. மெல்ல உறியை எட்டிப்பார்த்தேன். என்ன ஆச்சரியம் அதில் ஒரு போத்தல், எதோ கடிதங்களால் உள்ளே அடைக்கப்பட்டு இருந்தன. அதை எடுத்து, என் அறையில் என் உடுப்புக்களுக்கு இடையில் மறைத்து வைத்தேன் . அதில் என்ன எழுதி இருக்கும்? எனக்கு புரியக் கூடியதாக அது இருக்கவில்லை. முழுக்க முழுக்க ஆங்கிலத்தில், முத்திரையிட்டு என் அம்மா , அப்பா மற்றும் இருவரின் கையொப்பத்துடன் இருந்தது. அப்ப தான் என் நண்பனின் ஞாபகம் வந்தது. அவன் படிப்பில் சூரன். இப்ப பொறியியல் பீட மாணவன். அடுத்த கிழமை விடுதலையில் வருவதாக ஞாபகம். ஒரு கிழமைதானே , மன ஆறுதலுடன் பொறுத்திருந்தேன். அப்பொழுது என் மூத்த நால்வரும் மிக மகிழ்வாக கதைத்துக்கொண்டு வருவது வேலியால் தெரிந்தது. நான் இப்ப முன்னைய மக்கு இல்லையே, எனக்குள்ளே சிரித்துக்கொண்டு அவர்களை முன்போலவே மக்காக வரவேற்றேன்!     என் நண்பனும் அடுத்த கிழமை வர, அவனிடம் எல்லாவற்றையும் கூறி அந்த கடித்த கட்டையும் கொடுத்தேன். அவன் அதை வாசித்தவுடனேயே ,பயப்படாதே, மிஞ்சிய சொத்து எல்லாம் பூரணமாக உன் பெயரில், சாட்சியுடன் அடுத்த ஊர் வக்கீல் மூலம் எழுதி வைத்துவிட்டார்கள். இனி ஒன்றும் செய்ய முடியாது. நீ மக்கு இல்லை. அவர்கள் தான் மக்கு என்று காட்டும் தருணம் வந்துவிட்டது. நீ ஒன்றும் ஒருவருக்கும் சொல்லாதே. அவர்கள் பாகப்பிரிவினை வழக்கு போடட்டும், செலவழிக்கட்டும். தீர்ப்பு வரும் கட்டத்தில், இதை நீதிபதியிடம் கொடு. பாவம் அவர்கள் இருந்த சொத்தில் பலவற்றை இழக்கப் போகிறார்கள் . மக்கு என்ற பட்டத்தையும் உன்னிடம் இருந்து வாங்க போகிறார்கள் என்று சிரித்தான் . நானும் முதல் முதல் அவனுடன் சேர்ந்து பலமாக சிரித்துவிட்டேன்!     முகம்மது அலி சின்னா, சேக் முஜிபுர் ரகுமான் ... எல்லோரும் என் கண்ணில் தோன்றினார்கள், ஆனால் இவர்களையும் வென்ற அறிஞன் என்று என் உள் மனம் சொல்லிக்கொண்டு இருந்தது. என் நண்பனை கட்டிப்பிடித்து, அவன் அன்புக்கு, ஆறுதலுக்கு கன்னத்தில் முத்தம் ஒன்று பதித்தேன்! மக்காக அல்ல , எழுந்து நிற்கும் மனிதனாக!!       [கந்தையா தில்லை விநாயக லிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]   
    • ஈரான் இஸ்ரேலை நேரடியாகத் தாக்கியபோதும் , இஸ்ரேல் திரும்ப ஈரானைத் தாக்காமல்  இருப்பது  தங்களுக்கு அவமானமாக இருக்கிறது என்பது மட்டும் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.  😁  
    • அதேதான். இரண்டு கருத்திலும் சொற்கள் மாறியிருந்தாலும் ஒரே விடயம்தான்.  🙂 
    • ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார். https://thinakkural.lk/article/299459
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.