Jump to content

யாழ் மாவட்ட கூடைப்பந்தாட்டத்திடலில் ஆதிக்கம் செலுத்திய மட்டக்களப்பு சென். மைக்கல்ஸ் கல்லூரி


Recommended Posts

யாழ் மாவட்ட கூடைப்பந்தாட்டத்திடலில் ஆதிக்கம் செலுத்திய மட்டக்களப்பு சென். மைக்கல்ஸ் கல்லூரி

u15-tamil-basketball-696x464.jpg
 

இலங்கை பாடசாலை கூடைப்பந்தாட்ட சங்கம் நடாத்தும் பதினைந்து வயதுக்கு உட்பட்ட பாடசாலை வீரர்களிற்கான கூடைப்பந்தாட்டப் போட்டி இந்த வருடம் வடக்கு கிழக்கு இணைந்த முறையில் முதல் முறையாக யாழ் மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கத் திடலில் சிறப்பான முறையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் வடமாகாணத்தை சேர்ந்த எட்டு பாடசாலைகள் மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒரு பாடசாலையும் போட்டி நிரலில் காணப்பட்ட போதும் மொத்தமாக எட்டு அணிகள் மாத்திரம் போட்டியில் பங்குபற்றியிருந்தன. 10.08.2018 அன்று காலை 7 மணியளவில் போட்டிகள் ஆரம்பமாகி மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றன. போட்டித் தொடரில் காற்பகுதியாட்டம் மிகவும் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும் பயிற்றுவிப்பாளர்களின் சாதுரியம், திட்டமிடல் போட்டியின் வெற்றியைத் தீர்மானிக்க உதவும் வகையிலும் மிகவும் விறுவிறுப்பான முறையில் போட்டிகள் நடை பெற்றது.

 

 

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மற்றும் சாவகச்சேரி றிபேக் கல்லூரிகளுக்கு இடையிலான காலிறுதிப் போட்டியில் சாவகச்சேரி றிபேக் கல்லூரி வருகைதராத காரணத்தால் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி நேரடியாக அரையிறுதிக்குள் நுழைந்தது. புனித பத்திரிசியார் கல்லூரி கொக்குவில் இந்துக் கல்லூரிகளுக்கு இடையில் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் முதல் பகுதி 12 – 07, இரண்டாம் பகுதி 19 – 07, மூன்றாம் பகுதி 13 – 08, நான்காம்  பகுதி 10 – 13 என்ற புள்ளிகள் அடிப்படையில் போட்டி நிறைவடைந்தது. முதல் மூன்று பகுதிகளில் பத்திரிசியார் தொடர்ந்து முன்னிலை வகித்தது. இறுதிப் பகுதியாட்டத்தில் கொக்குவில் இந்துக் கல்லூரி அணி பத்திரிசியார் கல்லுரியை விட அதிகமாக மூன்று புள்ளிகளைப் பெற்ற நிலையிலும் ஆரம்பத்தில் அதிக புள்ளிகளைப் பெற்று தன் வசம் வெற்றியைக் கொண்டிருந்த புனித பத்திரிசியார் கல்லூரி அணி கொக்குவில் இந்துக் கல்லூரியை விட 10 புள்ளிகள் அதிகமாகப் பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.

யாழ் மத்திய கல்லூரிக்கும் யாழ் பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான காலிறுதிப் போட்டியில் மிகவும் சிறப்பான முறையில் தம் பக்கம் புள்ளிகளை பெற்று, எதிரணியினருக்கு புள்ளிகளை விட்டுக்கொடுக்காத வண்ணமும் பாதுகாத்து முதல் பகுதியில் 17 புள்ளிகளைப் யாழ் மத்திய கல்லூரி அணி பெற்றிருந்தது. இரண்டாம் கால் பகுதியில் புனித பரியோவான் கல்லூரி அணியும் தம்பக்கம் புள்ளிகளை பெற ஆரம்பித்தன. இரண்டாம் கால் பகுதியில் 07 – 09 என்று புள்ளிகள் அமைந்தன. மூன்றாம் கால் பகுதியில் 09 – 11 என்ற புள்ளிகள் கணக்கிலும், இறுதிக் கால் பகுதி 04 – 10 என்றும் புள்ளிகள் அமைந்தன. ஆரம்பம் முதல் இறுதிவரை திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி யாழ் மத்திய கல்லூரி அணி அரையிறுத்திக்கு தகுதி பெற்றது.

சென். மைக்கல்ஸ் மற்றும் மல்லாவி மத்திய கல்லூரிகளுக்கு இடையிலான காலிறுதிப் போட்டியில் முதல் கால் பகுதியில் சென். மைக்கல்ஸ் அணி 28 புள்ளிகளைப் பெற்ற நிலையில் எதிரணி எந்தப் புள்ளிகளும் பெறாதவகையிலும் சிறப்பாக விளையாடியிருந்தது. இரண்டாம் கால் பகுதி 12 – 01 என புள்ளிகள் அமைந்தது. மூன்றாம் கால் பகுதி 01 – 07 என்ற புள்ளிகள் கணக்கில் முடிவடைய இறுதிக் கால் பகுதி 12 – 06 என்ற புள்ளிகள் கணக்கில் முடிவிற்கு வந்தது. ஆரம்பம் முதல் இறுதி வரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்.மைக்கல்ஸ் கல்லூரி அணி வீரர்கள் 53 புள்ளிகளைப் பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தனர்.

நான்கு காலிறுதிப் போட்டிகளிலும் வெற்றி  பெற்ற நான்கு அணிகளும் அரையிறுதியில் மோதிக் கொண்டன. இதன்படி முதலாவது அரையிறுதியில் புனித பத்திரிசியார் கல்லூரி அணி யாழ் மத்திய கல்லூரி அணியுடன் மோதிக்கொண்டது. 13 – 09, 11 – 07, 13 – 09, 11 – 11 என்ற புள்ளிகள் கணக்கில் ஒவ்வொரு பகுதியும் முடிவிற்கு வந்தது. அதிக புள்ளிகளை தன்வசப்படுத்திய யாழ் மத்திய கல்லூரி அணி புனித பத்திரிசியார் அணியை விட 12 புள்ளிகள் அதிகம் பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது.

 

 

சென். மைக்கல்ஸ் கல்லூரி அணிக்கும் யாழ் இந்துக் கல்லூரி அணிக்கும் இடையிலான இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தபோதும் ஆரம்பம் முதல் சென்.மைக்கல்ஸ் கல்லூரி புள்ளிகள் மூலம் ஆதிக்க செலுத்த தொடங்கியது. முதல்  பாதி முடிவின் போது யாழ் இந்துக் கல்லூரி அணியை விட 10 புள்ளிகள் அதிகமாகப் பெற்று முன்னிலையிலிருந்தது. யாழ் மத்திய கல்லூரி அணி 24 புள்ளிகளையும் சென். மைக்கல்ஸ் அணி 34 புள்ளிகளையும் பெற்றுக்கொண்டது. சென்.மைக்கல்ஸ் அணி 10 புள்ளிகளை அதிகமாக பெற்றிருந்த நிலையில், யாழ் இந்துக் கல்லூரி அணி எந்தவொரு சளைப்புத்தன்மையும் இல்லாது இரண்டாவது பாதியில் மிகவும் விறு விறுப்புடன் மோதிக் கொண்டது. சென்.மைக்கல்ஸ் அணி 64 புள்ளிகளையும் யாழ் இந்துக் கல்லூரி அணி 47 புள்ளிகளையும் பெற்ற நிலையில் போட்டி முடிவிற்கு வந்தது. இதனால் சென்.மைக்கல்ஸ் கல்லூரி 17 புள்ளிகள் வித்தியாசத்தில் யாழ் இந்துக் கல்லூரியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்தது.

13.08.2018 மாலை மூன்று மணியளவில் நடைபெற்ற மூன்றாமிடத்திற்கான போட்டியில் புனித பத்திரிசியார் கல்லூரி அணியை எதிர்த்து யாழ் இந்துக் கல்லூரி அணி மோதிக்கொண்டது. இதில் இரு அணிகளும் ஆரம்பம் முதல் இறுதி வரை சிறப்பாக விளையாடியிருந்தது. எனினும் தமக்குரிய சாதகத்தன்மையைப் பயன்படுத்தி சாதுரியமாக விளையாடி மூன்றாமிடத்திற்கான இடத்தை யாழ் இந்துக் கல்லூரி அணி பிடித்துக்கொண்டது.

சென் மைக்கல்ஸ் கல்லூரிக்கும் யாழ். மத்திய கல்லூரிக்கும் இடையிலான இறுதிப் போட்டியில் ஆரம்பத்தில் யாழ். மத்திய கல்லூரி அதிக புள்ளிகளைப் பெற்று முன்னிலையில் காணப்பட்டது. முதல் கால் பகுதியானது யாழ்.மத்திய கல்லூரி அணி 12 புள்ளிகளையும் சென்.மைக்கல்ஸ் அணி 09 புள்ளிகளையும் பெற்ற நிலையில் முடிவடைந்தது. இரண்டாம் கால் பகுதியில் புள்ளிகளால் தமது ஆதிக்கத்தை வெளிப்படுத்தத் தொடங்கிய சென்.மைக்கல்ஸ் அணி அந்த பகுதியில் எதிரணியை இரு புள்ளிகள் மாத்திரம் பெறுவதற்கு இடமளித்து அதே வேளை தாம் 20 புள்ளிகளை பெற்று அதிக புள்ளிகளுடன் ஆட்டத்தை தம் பக்கம் மாற்றிக்கொண்டனர். மூன்றாம் நான்காம் கால்ப் பகுதியிலும் 20 – 16, 19 – 08 எனப் புள்ளிகள் பெறப்பட்டிருந்தன. போட்டி முடிவில் சென்.மைக்கல்ஸ் கல்லூரி அணி 66 புள்ளிகளையும் யாழ். மத்திய கல்லூரி அணி 38 புள்ளிகளையும் பெற்றுக் கொண்டது.

இரு அணிகளும் இறுதியாட்டத்தில் சிறப்பாக மோதியிருந்தபோதும் சென்.மைக்கல்ஸ் அணியின் சிறப்பான ஆட்டம் அவர்களது வெற்றிக்குக் காரணமாய் அமைந்தது. அனைத்து அணிகளுடனும் அதிக வித்தியாசத்தில் புள்ளிகளைப் பெற்று இந்தப் போட்டியில் வெற்றியை பெற்ற தன்மையானது ஆரம்ப காலங்களில் சென்.மைக்கல்ஸ் கல்லூரி கூடைப்பந்தாட்ட அணி நாட்டில் தனெக்கென ஒரு இடத்தை கூடைப்பந்தாட்ட அரங்கில் பிடித்துக்கொண்ட நிலையை ரசிகர்கள் மத்தியில் மீட்டிப் பார்க்க வைக்கின்றது. மீண்டும் தமக்கான பதிவுகளை ஏற்படுத்தும் வகையில் வளர்ந்து வரும் நிலையைக் இந்த அணியிடம் பார்க்க முடிந்தது. எந்தவெரு வீரரிலும் தங்கி நிற்காத தன்மையுடன் அனைத்து வீரர்களும் சமனிலையில் விளையாடும் நிலை பார்ப்பவர்களை   ரசிக்க வைத்தது.

 

 

அத்துடன் பெண்களிற்கான போட்டியில் யாழ்.வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை அனைத்து அணிகளுடனும் திறமையாக விளையாடி புள்ளிகள் அடிப்படையில் சம்பியன் பட்டத்தைப்  பெற்றுக்கொண்டது. யாழ் இந்துக் கல்லூரியுடன் விளையாடி 60 புள்ளிகளைப் பெற்று அந்த அணியை 2 புள்ளிகள் பெற அனுமதித்தது. யாழ் மெதடிஸ்ட் கல்லூரியுடன் விளையாடி 60 புள்ளிகளைப் பெற்ற அதே வேளை அந்த அணியை 2 புள்ளிகள் பெறுவதற்கான சந்தர்ப்பத்தை அளித்திருந்தது. யாழ் உடுவில் மகளிர் கல்லூரியுடன் மோதி 39 புள்ளிகளைப் பெற்றிருந்தது. நான்கு அணிகள் பங்குபற்றிய இந்த ஆட்டத்தில் வேம்படி மகளிர் அணி சம்பியனானது.

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீங்கள் மீள மீள பொய்யை சொல்வதால் உண்மை ஆகாது. 1.தேசிய அல்லது குறைந்தது  மாநில கட்சி அந்தஸ்து இருந்தால் மட்டுமே நிரந்தர சின்னம். 2. மாநில கட்சி அந்தஸ்துக்கு ஒன்றில் 10% வாக்கு அல்லது 2% வாக்கும் இரு லோக்சபா சீட்டில் வெற்றியும் அடைந்திருக்க வேண்டும். 3. இது இரெண்டும் நாதக வுக்கு இல்லை. 4. மாநில கட்சி அந்தஸ்து இல்லாவிடின் - தேர்தல் அறிவிக்கப்பட்டு யார் முதலில் கோருகிறார்களோ அவர்களுக்கே சின்னம் கொடுக்கப்படும். 5. சீமான் அசட்டையாக தூங்கி கொண்டிருக்க ஏனையோர் (திமுக) தந்திரமாக சுயேட்சை மூலம் அந்த சின்னத்தை கோரி விட்டது. 6. வாசனுக்கு இப்படி யாரும் செய்யவில்லை. 7. திருமாவின் சின்னத்தையும், வைகோவின் சின்னத்தையும் இன்னொரு தக்க காரணம் சொல்லி மடக்கினாலும், திருமா போராடி வென்றார். வைகோ விட்டு விட்டார். 8. சீமானும் சுப்ரீம் கோர்ட் வரை போனார். முடியவில்லை. 9. தேர்தல் ஆணையம் களவு செய்கிறதெனில் சுப்ரீம் கோர்ட்டும் அதை ஆமோதித்ததா? உண்மையில் இதில் ஆணையத்தின் எந்த பாரபட்சமும் இல்லை, சீமானின் சோம்பேறித்தனத்தை பாவித்து திமுக சின்னத்தை சுயேட்சை மூலம் தந்திரமாக முடக்கி விட்டது.
    • திருநெல்வேலி மக்களவை தொகுதியில் பாஜகவின் நயினார் நாகேந்திரன் வெற்றிபெறுவார் என ஊகிக்கின்றேன்.
    • ஏன் அந்தக்கவலை? தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் அப்படி என்ன பெரிதாக கெடுதல் நடந்து விடும்?
    • ஒம் 1000ரூபாய்க்கு பிற‌ந்த‌வ‌ங்ள் என்று  திருட‌ர்க‌ளை பார்த்து சொல்லி விட்டா ச‌கோத‌ரி காளிய‌ம்மாள் வென்று விட‌க் கூடாது என்று அந்த‌ தொகுதியில் ஒரு ஓட்டுக்கு 2000ரூபாய்......................ப‌டிச்ச‌ அறிவுள்ள‌ ஜீவிக‌ள் அந்த் 2000ரூபாயை வேண்டி இருக்காதுக‌ள் ஏழை ம‌க்க‌ள் க‌ண்டிப்பாய் வேண்டி இருப்பின‌ம்......................ப‌ண‌ம் கொடுக்கும் முறைய‌ முற்றிலுமாய் இல்மாம‌ ப‌ண்ண‌னும்...............................பொய் என்றால் பாருங்கோ என்னும் ப‌த்து வ‌ருட‌ம் க‌ழித்து காசு கொடுத்து ம‌க்க‌ளிட‌ன் ஓட்டை பெற‌ முடியாது...............கால‌ம் கால‌மாய் வேண்டின‌ வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் கை நீட்டி வேண்டுங்க‌ள்..................... சிறு கால‌ம் போக‌ காசு கொண்டு வ‌ருப‌வ‌ர்க‌ளுக்கு வீட்டுக்குள் வைச்சு ஊமை குத்து விழும் அதை காணொளி மூல‌ம் காண‌லாம் க‌ண்டு ரசிக்க‌லாம்😂😁🤣......................................
    • யார் து…துரைமுருகன் சொல்வதையா…நோ சான்ஸ்🤣. ஜூன் 4 தெரியும்தானே ஏன் அவசரம். எனது ஒரே கவலை பிஜேபி எவ்வளவு சீட் எடுக்கப்போகிறது என்பது மட்டுமே. பூஜ்ஜியம் என்றால் சந்தோசம்.  பூஜ்ஜியத்துக்கு மேல் கூடும் ஒவ்வொரு சீட்டுக்கும் ஏற்ப கவலை கூடும். தேர்தல் கட்டம் கட்டமாக தானே நடக்குது? இன்று முழு உபிக்கும் நடக்கவில்லை. நடந்த இடங்களில் 67% மாம். ஆனால் மேற்கு வங்கத்தில் நடந்த இடங்களில் 77 சதவீதமாம். இன்று நடந்த மொத்த தொகுதிகளில் 62% பதிவு. ஆனால் தமிழ் நாட்டு தொகுதிகளில் 72.09% நான் யாழ்கள திமுக ஆதரவாளன் இல்லை. ஆனால் சீமான், பிஜேபியை எதிர்ப்பவன். பழனிச்சாமி எதிர்கட்சி தலைவர், குறைந்ததது 29% வாக்கு வங்கி உள்ள கட்சியின் தலைவர். அவர் எப்படி வாக்கை பிரிப்பவர் ஆவார்? விட்டால் திமுக வும் வாக்கை பிரிக்கும் கட்சி என்பீர்கள் போலுள்ளது. 10% கீழே வாக்கு வங்கி, தனியே ஒரு தொகுதியிலும் வெல்ல வாய்ப்பு இல்லை என தெளிவாக தெரிந்தும், 39 தொகுதியிலும் நிற்பவர்கள்தான் வாக்கை பிரிப்போர்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.