Jump to content

தீர்வு காணப்படுமா?


Recommended Posts

தீர்வு காணப்படுமா?

 

நாயாற்று கட­லோ­ரத்தில் வன்­மு­றை­ வெடித்து வடிந்­துள்ள போதிலும், தென்­னி­லங்கை மீன­வர்­க­ளுக்கும் முல்­லைத்­தீவு மீன­வர்­க­ளுக்குமிடையில் எழுந்­துள்ள முரண்­பாடு சுமு­க­மாகத் தீர்க்­கப்­பட்­டி­ருக்­கின்­றது எனக் கூறமுடி­யாது. அங்கு ஏற்­ப­டுத்­தப்­பட்ட வன்­முறை கவ­லைக்­கு­ரி­யது. கடும் கண்­ட­னத்­துக்கும் உரி­யது.

யுத்­தத்தின் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் இனங்­க­ளுக்­கி­டையில் புரிந்­து­ணர்­வுடன் கூடிய நல்­லு­ற­வையும், ஐக்­கி­யத்­தையும் உரு­வாக்­கு­வ­தற்­காக மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற நல்­லி­ணக்க முயற்­சி­க­ளுக்கு விடுக்­கப்­பட்­டுள்ள மோச­மான சவால் என்­பதில் எந்­த­வித சந்­தே­கமும் இல்லை.

கடற்­றொ­ழிலில் ஈடு­ப­டு­கின்ற மீன­வர்கள், அந்தத் தொழி­லுக்­கென அர­சினால் வகுத்­தொ­துக்­கப்­பட்ட நிய­தி­க­ளுக்கு அமை­வாகச் செயற்­பட வேண்டும். அதன் ஊடாக அந்தத் தொழி­லுக்­கு­ரிய சட்­டத்­தையும் ஒழுங்­கையும் மதித்துச் செயற்­பட வேண்டும். இந்த நிலைப்­பாட்டை அங்கு நிகழ்ந்த வன்­முறை தகர்த்­தி­ருக்­கின்­றது. இதனால், கடற்­றொழில் முறை­மைக்கு அர­சாங்கம் வகுத்­துள்ள சட்ட நெறி­மு­றைகள் மீறப்­பட்­டி­ருக்­கின்­றன. எட்டி உதைத்­ததுபோல உதா­சீனம் செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றன.

ஆனால், 'பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்த மீன­வர்கள் சிறு­பான்மை இன மீன­வர்­களின் உடமை­க­ளுக்கும் வாழ்­வா­தா­ரத்­திற்கும் பாதிப்பை ஏற்­ப­டுத்தியிருக்­கின்­றார்கள். அது உண்­மைதான். இது தொழில் ரீதி­யான ஒரு போட்டி நட­வ­டிக்­கையே தவிர, வேறு ஒன்­று­மில்லை. அதற்கு வேறு அர்த்தம் கற்­பிக்க முயல்­வது அபத்­த­மா­னது. இந்தச் சம்­ப­வத்தில் ஏற்­பட்ட பாதிப்­பு­க­ளுக்கு உரிய நட்­ட­யீட்டைக் கொடுத்­து­விட்டால் முடிந்து போய்­வி­டும்­தானே' என்ற மேம்­போக்­கான ஓர் அணு­கு­மு­றையில் அரச தரப்­பி­னரும் பேரி­ன­வாத சிந்­தனை கொண்ட அதி­கா­ரி­களும் இந்த விட­யத்தில் நடந்துகொள்­வ­தற்கு முற்­பட்­டி­ருந்­தமை சந்­தே­கத்­திற்கு அப்­பாற்­பட்ட முறையில் வெளி­யா­கி­யி­ருந்­தது.

இருப்­பினும் நாயாற்றுப் பிர­தேச தமிழ் மீன­வர்­களின் 8 வாடிகள் எரிக்­கப்­ப­ட்ட­தனால், அவர்­க­ளு­டைய மீன்­பிடி உப­க­ர­ணங்­க­ளுக்கு 35 லட்சம் ரூபா நட்டம் ஒரே இரவில் ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. இது சாதா­ர­ண­மா­ன­தல்ல.இரு சமூ­கங்­க­ளுக்­கி­டையில் இன ரீதி­யான மோதல்­க­ளுக்குத் தூப­மி­டத்­தக்க வகையில் அது நடந்­தே­றி­யி­ருந்­தது. - நடத்­தப்­பட்­டி­ருந்­தது.

இந்த சம்­ப­வத்தை, வெறு­மனே வெளி­மா­வட்ட மீன­வர்கள், உள்ளூர் மீன­வர்­களின் உடமை­க­ளுக்கு தற்­செ­ய­லாக சேதம் விளை­வித்­தார்கள் என மேலோட்­ட­மான, திடீ­ரென நிகழ்ந்த வன்­முறை சார்ந்த சம்­பவம் என்ற வரை­ய­றைக்குள் மாத்­திரம் மட்­டுப்­ப­டுத்­தி­விட முடி­யாது. இது ஓர் இன வன்­மு­றையின் குறி­யீடு. சிறு­பான்மை இனத்­த­வ­ரா­கிய தமிழ் மீன­வர்­களின் வாழ்­வா­தா­ரத்தில், அவர்­க­ளு­டைய பொரு­ளா­தாரத்தின் மீது தொடுக்­கப்­பட்ட ஒரு மோச­மான தாக்­குதல் நட­வ­டிக்கை. அவர்கள் மீது பேரி­ன­வாதப் போக்­குடன் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள ஓர் அடக்­கு­முறைச் செயற்­பாடு. வர­லாற்று ரீதி­யான ஓர் இனத்­த­வரின் பிர­தே­சத்­திற்குள் அத்­து­மீறி புகுந்து அங்கு அடா­வ­டித்­தனம் புரிந்­தது என்­பது, அர­சாங்­கத்தின் தொழில் ரீதி­யான நெறி முறை­களை அப்­பட்­ட­மாக உதா­சீனம் செய்த நட­வ­டிக்­கை­யு­மாகும்.

இந்த வன்­மு­றையின் மூலம் நாட்டின் சட்­ட­வி­திகள் மீறப்­பட்­டி­ருக்­கின்­றன. தேசிய அள­வி­லான மனி­தா­பி­மா­னமும் மீறப்­பட்­டி­ருக்­கின்­றது. ஏனெனில் முல்­லைத்­தீவில் அத்­து­மீறிப் பிர­வே­சித்து கடற்­றொழில் செய்­கின்ற தென்­ப­கு­தியைச் சேர்ந்த சிங்­கள மீன­வர்கள் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் அல்ல. யுத்தச் சூழலில் சிக்கி, பாது­காப்­புக்கு ஏற்­பட்ட அச்­சு­றுத்தல் கார­ண­மாக பல வரு­டங்­க­ளாக இடம்­பெ­யர்ந்­த­வர்­க­ளு­மல்ல. அவர்கள் எல்லா வச­தி­க­ளையும் கொண்­டி­ருப்­ப­வர்கள். அது மட்­டு­மல்­லாமல், பெரும்­பான்மை இனத்­தவர் என்ற ரீதியில் அர­சாங்­கத்தின் ஆத­ர­வையும் செல்­வாக்­கையும் பெற்­றி­ருப்­ப­வர்கள்.

ஆனால் நாயாறு பிர­தேச மீன­வர்கள், யுத்த மோதல்­களைக் காரணம் காட்டி, அங்­கி­ருந்து பல­வந்­த­மாக வெளி­யேற்­றப்­பட்­ட­தனால் இடம்­பெ­யர்ந்­த­வர்­க­ளாவர். அவர்கள் தாங்­க­ளாக விரும்பி, தமது வர­லாற்று ரீதி­யான வாழ்­வி­டங்­களைக் கைவிட்டு வெளி­யேறிச் செல்­ல­வில்லை. பாது­காப்­புக்­காக இடம்­பெ­யர்ந்­தி­ருந்த போதிலும், இடம்­பெயர் வாழ்க்­கை­யின்­போது பாது­காப்­பாக வாழ­வு­மில்லை.

தேச­பக்­தி­யு­மில்லை

மனி­தா­பி­மா­ன­மு­மில்லை

அவர்கள் தாம் வாழ்ந்த ஊரையும், உறை­வி­டங்­க­ளையும், உட­மை­க­ளையும் மட்டும் இழக்­க­வில்லை. யுத்தச் சூழ­லின்­போது, அவர்கள் உயி­ரி­ழப்­பு­க­ளுக்கும் அவ­யவங்­களின் இழப்­புக்கும் ஆளா­கி­யி­ருந்­தார்கள். அத்­தி­யா­வ­சிய அடிப்­படைத் தேவை­க­ளைக்­கூட பூர்த்தி செய்துகொள்ள முடி­யாமல் அவல வாழ்க்­கை­யையே வாழ்ந்­தனர். அவர்கள் தமது சுய கௌர­வத்­தையும், சுயமரி­யா­தை­யையும் இழந்­த­வர்­க­ளாக நாடோ­டி­க­ளிலும் பார்க்க மோச­மான ஒரு நிலை­மைக்கு ஆளாக்­கப்­பட்­டி­ருந்­தார்கள். ஒவ்­வொரு நிமி­டமும் உயி­ரச்­சு­றுத்­த­லுக்கு உள்­ளா­கி­யி­ருந்த அவர்கள் பல இடங்­க­ளுக்கும் தொடர்ச்­சி­யாக இடம்­பெ­யர்ந்து, இடம்­பெ­யர்ந்து இறு­தி­யாக முள்­ளி­வாய்க்­காலில் ஓர் ஊழிக்­கா­லத்தை எதிர்­கொண்டு மர­ணத்தின் வாசல்­வரை சென்று திரும்­பி­யி­ருக்­கின்­றார்கள்.

இவ்­வாறு பாதிக்­கப்­பட்­ட­வர்கள் மீதே அடா­வ­டித்­த­ன­மாக, திட்­ட­மிட்ட வகை­யி­லான வன்­முறை பிர­யோ­கிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. நாயாறு மீன­வர்கள் மாத்­தி­ர­மல்ல. யுத்தம் கார­ண­மாக வட­கி­ழக்குப் பிர­தேச மக்கள் அனை­வ­ருமே மிக மோச­மாகப் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தார்கள். இது உல­க­றிந்த இர­க­சியம். அதனை மறைக்­கவோ மறுக்­கவோ முடி­யாது.

யுத்தம் முடி­வ­டைந்­ததன் பின்னர், இடம்­பெ­யர்ந்த மக்கள் மீள்­கு­டி­யேற்றம் செய்­யப்­பட்டு, யுத்த மோதல்கள் இடம்­பெற்ற பிர­தே­சங்கள் மீள்­கட்­டி­ய­மைக்­கப்­பட்­டன. பல்­வேறு உட்­கட்­ட­மைப்புப் பணிகள் அங்கு மேற்­கொள்­ளப்­பட்­டன. முக்­கி­ய­மாக யுத்த காலத்தில் நாட்டின் ஏனைய பகு­தி­களிலிருந்து தரை­வழித்தொடர்பும், போக்­கு­வ­ரத்து இணைப்பும் அற்ற நிலையில் வடக்கும் கிழக்கும் துண்­டிக்­கப்­பட்­டி­ருந்­தன. நாட­ளா­விய ரீதியில் அரசு கோலோச்­சிய போதிலும், தேசிய பாது­காப்புப் படைக்­கட்­ட­மைப்புப் பொறி முறையின் கீழ், அந்தப் பிர­தே­சங்­களில் ஓர் இரா­ணுவ ஆட்­சியே நடத்­தப்­பட்­டது.

பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் நலன்­களில் பெய­ர­ள­வி­லான அக்­க­றையும் கரி­ச­னை­யுமே காட்­டப்­பட்­டது. நாட்டின் சக இன குடி­மக்கள் என்ற உண்­மை­யான தேசிய பய­பக்­தி­யுடன், யுத்­தத்­தினால் சீர­ழிந்த அவர்­க­ளு­டைய வாழ்க்­கையை மறு­சீ­ர­மைப்­ப­தற்­கான மனி­தா­பி­மான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை.

யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்­டி­ருந்த அந்தப் பிர­தே­சத்தில் உள்­ளகப் போக்­கு­வ­ரத்­துக்கும், வெளி­யி­டங்­களுக்­கான போக்­கு­வ­ரத்­துக்கும் உரிய கட்­ட­மைப்பு முற்­றாக சீர்­கு­லைந்­தி­ருந்­தன. மறு­சீ­ர­மைப்புப் பணி­க­ளின்­போது, அந்தப் பிர­தே­சத்து மக்­களின் போக்­கு­வ­ரத்துத் தேவை கவ­னத்­திற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. மாறாக நாட்டின் ஏனைய பகு­தி­களிலிருந்து துண்­டிக்­கப்­பட்ட அந்தப் பிர­தே­சத்தில் யுத்த காலத்­தின்­போது படை­யினர் என்ன செய்­தார்கள், எவ்­வாறு அவர்கள் யுத்­தத்தை வெற்­றி­கொண்­டார்கள் என்­பதை, பெரும்­பான்மை இன மக்­க­ளுக்கு, பரந்த அளவில் வெளிப்­ப­டுத்­து­வ­தற்­கு­ரிய போக்­கு­வ­ரத்­துக்­கான வலை­ய­மைப்பே கட்­டி­யெ­ழுப்­பப்­பட்­டது.

வடக்கு– கிழக்கு மாகா­ணங்­களின் முக்­கிய நக­ரங்­க­ளுக்கும், நாட்டின் பிர­தான போக்­கு­வ­ரத்து வலை­ய­மைப்­புக்குமிடை­யி­லான மார்க்­கங்கள் - வீதிகள் முழு­மை­யாக சீர­மைக்­கப்­பட்­டன. அவற்றின் ஊடாக இந்த மீள்­கு­டி­யேற்றப் பிர­தே­சத்து மக்கள் வெளி­யு­லகத் தொடர்­பு­களை மேற்­கொண்டு நன்மை பெற வேண்டும் என்­பதைவிட, பெரும்­பான்மை இன மக்கள் இந்தப் பகு­தி­களின் மூலை முடுக்­குகள் அனைத்­தையும் சென்று பார்­வை­யிட வேண்டும். யுத்­தத்தை வெற்­றி­கொண்ட படை­யி­ன­ரு­டைய செயற்­பா­டு­களை வெற்றிச் சாகஸ நிகழ்­வு­க­ளாக, நிதர்­ச­ன­மாகக் கண்­ட­றிய வேண்டும் என்ற வகையில் இரா­ணுவ மய­மான ஒரு சூழலில் அந்த மக்கள் ஊக்­கு­விக்­கப்­பட்­டார்கள். பாதிக்­கப்­பட்ட மக்கள் தங்­க­ளு­டைய பிர­தே­சத்தில் என்ன நடந்­தது என்று பல இடங்­க­ளுக்கும் சுதந்­தி­ர­மாகச் சென்று பார்­வை­யிட அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை.

நோக்கம் என்ன?

மறு­பக்­கத்தில், மீள்­கட்­ட­மைப்புப் பணி­களில், பாதிக்­கப்­பட்ட பிர­தே­சங்­களைச் சேர்ந்த மக்­களின் நேர­டி­யான பங்­க­ளிப்பும், அதன் ஊடான பயன்­களை அனு­ப­விக்­கின்ற வாய்ப்பும் மறுக்­கப்­பட்­டி­ருந்­தன. உட்­கட்­ட­மைப்புப் பணி­களில் தென்­ப­கு­தி­களைச் சேர்ந்த ஒப்­பந்­தக்­கா­ரர்­க­ளுக்கே இட­ம­ளிக்­கப்­பட்­டி­ருந்­தது. அந்தப் பணி­களில் சாதா­ரண கூலித் தொழில்­க­ளுக்­கு­ரிய தொழி­லா­ளர்­களும் தென்­ப­கு­தியிலிருந்தே கொண்டு வரப்­பட்­டி­ருந்­தார்கள். உள்ளூர் தொழி­லா­ளர்கள் காலந்­தாழ்த்­தியே உள்­வாங்­கப்­பட்­டார்கள்.

அதே­போன்று குறிப்­பாக முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் மீன்­பிடி தொழி­லிலும், விவ­சா­யத்­திலும் பாதிக்கப்­பட்ட உள்ளூர் மக்­க­ளை­விட தென்­னி­லங்­கையைச் சேர்ந்­த­வர்­க­ளுக்கே முத­லிடம் வழங்­கப்­பட்­டது. இதன் கார­ண­மாக யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட அந்த மாவட்­டத்து மக்கள் தமது வாழ்­வா­தார கட்­ட­மைப்­புக்­களை நிர்­மா­ணித்துக் கொள்­வ­தற்கு அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை.

நாயாறு, கொக்­கிளாய், கொக்­குத்­தொ­டுவாய், தென்­ன­ம­ர­வடி போன்ற கிரா­மங்­களைச் சேர்ந்த மக்கள் வர­லாற்று ரீதி­யான உரித்து கொண்ட கடற்­ப­ரப்பில் சுதந்­தி­ர­மாகத் தொழில் செய்­வ­தற்கு அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை. கைவிட்டுச் சென்ற விவ­சாய நிலங்­க­ளுக்கு அவர்கள் சுதந்­தி­ர­மா­கவும் உரித்­தோடும் திரும்பிச் சென்று மீண்டும் தமது வாழ்­வா­தார நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தற்கு அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை. அந்தத் தொழி­லி­டங்­களில் தென்­னி­லங்­கையைச் சேர்ந்­த­வர்கள் ஆக்­கி­ர­மித்­தி­ருந்­தார்கள். அவர்­க­ளுக்கே முன்­னு­ரிமை வழங்­கப்­பட்­டி­ருந்­தது.

இத்­த­கைய ஒரு பின்­பு­லத்­தில்தான் நாயாற்றில் தமிழ் மீன­வர்­க­ளு­டைய 8 வாடிகள் எரி­யூட்­டப்­பட்­டன. அங்­கி­ருந்த தொழில் உப­க­ர­ணங்கள் நாச­மாக்­கப்­பட்­டன. இரவு நேரம் அந்த வாடி­களின் உரி­மை­ய­ாளர்­க­ளான தமிழ் மீன­வர்கள் தமது குடும்­பங்­க­ளுடன் தங்­கி­யி­ருந்­த­போதே அவற்­றுக்குத் தீயி­டப்­பட்­டது. இரவு சுமார் பத்­தரை பதி­னொரு மணி­ய­ளவில் இந்த வாடி­க­ளுக்குத் தீமூட்­டி­யதன் மூலம், அந்த வாடி­களை மட்­டு­மல்ல, அதிலிருந்­த­வர்­க­ளுக்கும் உயிர்ச்­சேதம் விளை­விக்­கின்ற திட்­ட­மிட்ட நோக்­கத்­து­ட­னேயே, விஷ­மிகள் செயற்­பட்­டி­ருந்­தார்கள் என்­பது வெளிப்­பட்­டி­ருக்­கின்­றது.

சுருக்கு வலைகள் பயன்­ப­டுத்த முடி­யாது, வெளிச்சம் பாய்ச்சி மீன்­பிடிக்கக்கூடாது, வெடி­பொ­ருட்கள் பயன்­ப­டுத்தக் கூடாது, கடற்­ப­ரப்பின் தூரப் பிர­மா­ணங்­களின் அடிப்­ப­டையில் சாதா­ரண படகு, இயந்­திரப் படகு மற்றும் சிறிய, பெரிய அள­வி­லான பட­குகள் பயன்­ப­டுத்­தப்­பட வேண்டும். கரை­வலை தொழில் பாது­காக்­கப்­பட்டு, அதற்­கு­ரிய நெறி­மு­றை­களைப் பின்­பற்றி மீன­வர்கள் நடந்து கொள்ள வேண்டும். மீன்­பி­டிப்­ப­தற்­கென கரை­யோ­ரங்­களில் இடங்கள் 'பாடு' முறையில் ஒதுக்­கப்­பட்­டி­ருப்­ப­தற்­கேற்ற ஒழுங்­கு­களைக் கடைப்­பி­டிக்க வேண்டும் என்று பல­வா­றாக கடற்­றொ­ழி­லுக்­கு­ரிய நடை­மு­றைகள் தொடர்பில் கடற்­றொழில் அமைச்­சினால் நிய­தி­களும், சட்ட விதி­மு­றை­களும் வகுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. அவற்றை அந்த அமைச்சின் கீழ் செயற்­ப­டு­கின்ற கடற்­றொழில் திணைக்­கள அதி­காரிகள் பல்­வேறு நிலை­களிலிருந்து கண்­கா­ணித்துப் பரா­ம­ரிப்­ப­திலும், அவற்­றுக்­கு­ரிய பணி­க­ளையும் மேற்­கொள்­வார்கள். இந்தக் கட்­ட­மைப்­புக்­க­ளையும், கடற்­றொழில் நிய­மங்கள் சட்­டங்­க­ளையும் மீறிச் செயற்­பட்ட தென்­னி­லங்கை மீன­வர்­களின் செயற்­பா­டு­களைக் கட்­டுப்­ப­டுத்த வேண்டும் என்ற கோரிக்­கையை முன்­வைத்­துத்தான் முல்­லைத்­தீவு மீன­வர்கள் போராட்டம் நடத்­தி­னார்கள். அர­சாங்­கத்தின் சட்­ட­விதி முறைகள் மீறப்­ப­டு­கின்­றன. அதனால் தாங்கள் மோச­மாகப் பாதிக்­கப்­ப­டு­கின்றோம் என்பதைச் சுட்­டிக்­காட்டி அந்தப் பிரச்­சி­னைக்குத் தீர்வு காண வேண்டும் என்­ப­தற்­கா­கவே அந்தப் போராட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்­டது. மொத்­தத்தில், சட்ட விதிகள் மீறப்­ப­டு­கின்­றன. சட்­டத்­தையும் ஒழுங்­கையும் நிலை­நாட்­டுங்கள். அரச சட்ட ஒழுங்­கு­களின் ஊடாக தமக்கு உரித்­தான கடற்­றொழில் வாய்ப்பை அனு­ப­விப்­ப­தற்கு உரிய நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும் என்­பதே அந்தப் போராட்­டத்தில் அவர்கள் முன்­வைத்த கோரிக்­கை­யாகும்.

இது­கு­றித்து கடற்­றொழில் அமைச்சர் விஜி­த­முனி சொய்சா ஞாயி­றன்று முல்­லைத்­தீ­வுக்குச் சென்று போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்­த­வர்­களைச் சந்­தித்து பிரச்­சி­னை­க­ளையும் நிலை­மை­க­ளையும் கேட்­ட­றிந்தார். சட்­ட­வி­ரோதச் செயற்­பா­டுகள் தடுத்து நிறுத்­தப்­பட வேண்டும் என்­பதை அவர் வலி­யு­றுத்திச் சென்­ற­தை­ய­டுத்து, மறுநாள் திங்­கட்­கி­ழமை இரவு நாயாற்று மீன­வர்­களின் வாடிகள் தீயி­டப்­பட்­டன. சட்­ட­வி­ரோத கடற்­றொழில் செயற்­பா­டுகள் கட்­டுப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்­ப­தற்­காக முன்­ன­ணியிலிருந்து செயற்­பட்­ட­வர்­களை இலக்கு வைத்தே இந்த நாச­காரச் செயல் அரங்­கேற்­றப்­பட்­டி­ருந்­தது.

நாயாறு, கொக்­கிளாய், கொக்­குத்­தொ­டுவாய் பிர­தே­சங்­களில் தென்­னி­லங்கை மீன­வ­ர்­களின் அத்­து­மீ­றல்­களும், சட்­ட­வி­ரோத மீன்­பிடி நட­வ­டிக்­கை­களும் முக்­கிய பிரச்­சி­னை­யாக, இந்தப் பிர­தே­சங்­களில் மீள்­கு­டி­யேற்றம் ஆரம்­பிக்­கப்­பட்ட நாளிலிருந்தே தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றது.

     நிரந்­தரத்தீர்வு அவ­சியம்

பருவப்பெயர்ச்சிக் காற்றின் கார­ண­மாக முல்­லைத்­தீவு பகு­திக்கு நீர்­கொ­ழும்பு மீன­வர்கள் பரு­வ­கால கடற்­றொ­ழி­லுக்­காக வந்து தொழில் செய்­து­விட்டு திரும்பிச் செல்­வது வழமை. யுத்தம் கார­ண­மாக முல்­லைத்­தீவு மக்கள் முழு­மை­யாக இடம்­பெ­யர்ந்­தி­ருந்­த­போது, இந்­தப்­பி­ர­தே­சங்கள் படை­யி­ன­ரு­டைய முழு­மை­யான ஆளு­கைக்குள் இருந்தபோது, அங்­கி­ருந்த கடல் வளத்தை தென்­ப­குதி மீன­வர்கள் அனு­ப­விப்­ப­தற்குப் படை­யினர் உத­வி­யி­ருந்­தார்கள். அந்தப் பின்­ன­ணியில் உள்ளூர் மீன­வர்கள் மீள்­கு­டி­ய­மர்ந்த பின்­னரும், தென்­னி­லங்கை மீன­வர்கள் அந்தத் தொழில்­வாய்ப்பை நிரந்­த­ர­மாக அனு­ப­விப்­ப­தற்­கான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

படிப்­ப­டி­யாக இந்­தப்­பி­ர­தே­சத்தில் வந்­தி­ருந்து தொழில் செய்த தென்­னி­லங்கை மீன­வர்கள், அங்­கேயே வாடி­க­ளையும் குடில்­க­ளையும் அமைத்து, நிரந்­த­ர­மாக வாழ்க்­கையை அமைத்துக் கொள்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தி­ருந்­தார்கள். இந்த முயற்­சியில் 400 தொடக்கம் 500 வரை­யி­லான சிங்­கள மீனவக்குடும்­பங்கள் முழு­மை­யாக ஈடு­பட்­டி­ருந்­தன. அவர்­க­ளுக்­கு­ரிய பாது­காப்­பையும், ஏனைய உத­வி­க­ளையும் அந்தப் பகுதியில் நிரந்தரமாக நிலைகொண்டுள்ள படையினர் வழங்கி வந்தார்கள். இதனை எதிர்த்து குரல் கொடுத்த தமிழ் மீனவர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டார்கள். அச்சுறுத்தப்பட்டார்கள்

இதனால் மீள்குடியேறிய மீனவர்கள் சுதந்திரமாகத் தொழில் செய்ய முடியாத நிலை உருவாகியது. அவர்களுடைய 'மீள்குடியேற்ற வாழ்வாதார முயற்சிகள்' பெரும் இடையூறுகளுக்கு ஆளாகி, மோசமான பாதிப்புக்குள்ளாகியது. இது முறையற்றதொரு செயலாக இருந்த போதிலும், கடற்றொழில் நியமங்களையும், நியதிகளையும் கண்காணித்து நடைமுறைப்படுத்த வேண்டிய கடற்றொழில் அமைச்சும், மீள்குடியேற்ற நடவடிக்கைகளை முழு அளவில் ஊக்குவித்ததாகக் கூறுகின்ற அரசாங்கமும் கண்டுகொள்ளவே இல்லை.

இதனால் நிலைமைகள் தீவிரமடைந்து, உடமைகளுக்கும் உயிர்களுக்கும் சேதம் விளைவிக்கத்தக்க வகையிலான தீவைப்பு வன்முறை வரையில் நிலைமை மோசமடைந்தது. இந்த வன்முறையில் ஈடுபட்டிருந்தவர்களை உள்ளடக்கிய தென்னிலங்கை மீனவர்கள் அங்கிருந்து வெளியேறியிருந்தாலும், அந்தப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு எட்டப்பட்டுவிட்டது என்று கூறுவதற்கில்லை.

யாழ். மாவட்டத்தில் வடமராட்சி கிழக்கிலும் அத்துமீறிப் பிரவேசித்து தங்கியிருந்து, சட்ட விதிகளை மீறி கடலட்டை பிடிப்பதில் தென்னிலங்கை மீனவர்கள் ஈடுபட்டிருப்பதனால், பாதிக்கப்பட்ட தமிழ் மீனவர்கள் அங்கேயும் நியாயம் கேட்டு போராடியவர்களின் படகுகள் தீயிடப்பட்டு வன்முறை கட்டவிழ்ந்திருந்தது. அந்தப் பிரச்சினை இன்னும் எரிந்து கொண்டிருக்கின்றது. நீறு பூத்த நெருப்பாக இருந்து நிலைமைகள் மிகவும் மோசமடைவதைத் தடுப்பதற்கு உரியவர்கள் விரைந்து தீர்க்கமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

உண்மையில் சட்டம் ஒழுங்குடன் தொடர்புடைய இந்த மீனவர்களின் பிரச்சினைக்கு, சட்டத்தையும் ஒழுங்கையும் சீராக நிலைநாட்டுவதன் மூலம் தீர்வு காணமுடியும் என்பதில் சந்தேகமில்லை. அதனை அரசு செய்யுமா? 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-08-18#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வ‌ண‌க்க‌ம் மோக‌ன் அண்ணா என‌து பெய‌ரை (வீர‌ப்ப‌ன் பைய‌ன்26 ) மாற்றி விடுங்கோ    ந‌ன்றி🙏🥰.......................................
    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.