Jump to content

கோபி அனான் – காலமானார்!!


Recommended Posts

கோபி அனான் – காலமானார்!!

 
kofi-750x405.jpg

முன்னாள் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் கோபி அனான்(வயது-80) அன்று காலமானார்.

ஐக்கிய நாடுகள் அவையின் ஏழாவது செயலாளராக பதவி வகித்த இவர் . ஜனவரி 1997 இல் இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு 2006 இல் ஓய்வு பெற்றார்.

ஐக்கிய நாடுகளுக்கு கூட்டாக “ஒரு சிறந்த ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் அமைதியான உலகத்திற்காக உழைத்ததற்காக ” அமைதிக்கான நோபல் பரிசு, விருது பெற்ற இவர் கானா நாட்டைச் சேர்ந்தவர். சுவிட்சர்லாந்து அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார்.

https://newuthayan.com/story/15/கோபி-அனான்-காலமானார்.html

Link to comment
Share on other sites

இரு இனப்படுகொலைகளை சந்தித்த கோபி அனான்

 

மேற்கு ஆபிரிக்க பாடசாலை ஒன்றிலேயே  கோபி அனான் தனது வாழ்க்கையின் முக்கிய பாடத்தை கற்றார்

உலகில் எந்த பகுதியில் மக்கள் துயரத்தில் சிக்கினாலும் அது முழு உலகினதும் அக்கறைக்கும் உரிய விடயம் என்பதே  நான் கற்றுக்கொண்ட  பாடம் என அவர் பின்னர் தெரிவித்தார்.

அந்த சிந்தனை அனானிற்கு வாழ்க்கை முழுவதும் வழிகாட்டியது, இதன் காரணமாகவே அவர் தனது வாழ்நாளின் போது உலகம் சந்தித்த முக்கிய நெருக்கடிகள் அனைத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

எச்ஐவிக்கு எதிரான போராட்டம்,ஈராக் யுத்தம், காலநிலை மாற்றம் சிரியாவின் உள்நாட்டு யுத்தம் என அவர் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளாத விடயமேயில்லை எனலாம்.

அவரது மனிதாபிமான பணிகள் அவரிற்கு நோபல் பரிசையும் பெற்றுக்கொடுத்தன- கூடவே விமர்சனங்களும் எழுந்தன.

 

மாறும் காலங்கள்

கோபி அட்டா அனானும்,அவரது சகோதரி எவுவா அனானும் குமாசி நகரில் பிறந்தவர்கள்- இரட்டையர்கள்

அனான் செல்வச்செழிப்புள்ள குடும்பத்தில்  பிறந்தவர்,அவரது குடும்பத்தவர்கள் பாராம்பரியமாக சமூகத்தின் உயர் பதவிகளை வகித்தவர்கள் தந்தை மாகாண ஆளுநர்

 

அனானிற்கு பத்தொன்பது வயதாவதற்கு இரண்டு நாட்களிற்கு அவரது நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தது- ஹானா என அது மாறியது.

நான் மாற்றங்கள் சாத்தியம் என கருதிய இளைஞன்,தீவிர புரட்சிகர மாற்றங்கள் கூட சாத்தியம் என அவ்வேளை கருதினேன் என அனான் ஒரு முறை கனடா இராஜதந்திரிகளிடம் தெரிவித்திருந்தார்.

ஹானாவிலும் அமெரிக்காவிலும் கல்விகற்ற அனான் ஐநாவில் பணியாற்ற ஆரம்பித்தார்.

அவர் தனது பணியை உலக சுகாதார ஸ்தாபனத்திலேயே ஆரம்பித்தார்- அங்கிருந்தே அவர் உலகின் தலைசிறந்த இராஜதந்திரி என்பதை நோக்கிய பயணத்தை ஆரம்பித்தார்.

ஆனால் அக்காலப்பகுதியில் அவர் தன்வாழ்நாளின் மிக மோசமான குற்றச்சாட்டுகளையும் எதிர்கொண்டார்.

இனப்படுகொலை

1993 ம் ஆண்டளவில் அனான் ஐநாவின் பிரதி செயலாளர் நாயகம் என்ற முக்கியமான பொறுப்பு வரை பயணித்திருந்தார்.அமைதிப்படையின் தலைவராக விளங்கினார்.

1994 ம் ஆண்டு உலகத்தை உலுக்கிய அந்த இனப்படுகொலை இடம்பெற்றது.

100 நாட்களில் ருவான்டாவில் 800.000 டுட்சி இனத்தவர்களும்,மிதவாத ஹ_ட்டுகளும் கொல்லப்பட்டனர்.

அதன் பின்னர் 1995 இல் உலகம் மீண்டும் மற்றொரு இனப்படுகொலையை சந்தித்தது.

பொஸ்னியாவில் ஐநாவின் பாதுகாப்பான இடம் என அறிவிக்கப்பட்ட பகுதியில் 8000 முஸ்லீம்கள் சேர்பிய படைகளால் கொலை செய்யப்பட்டனர்.

kofi4.jpg

இந்த இரு இனப்படுகொலைகளுக்காகவும் அனானும் அவரது அலுவலகமும் கடும்  குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் சந்திக்க வேண்டிய நிலை உருவானது.

ருவான்டாவில் இனப்படுகொலைகள் இடம்பெறலாம் என முன்கூட்டியே கிடைத்த தகவல்களை அனானின் அலுவலகம்  அலட்சியம் செய்தது என வெளியான தகவல்கள் கடும்  சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தன.

ருவான்டா படுகொலையின் பத்தாவது வருடம் நினைவுகூறப்பட்டவேளை அனான் தான் எதிர்கொண்ட நெருக்கடியை ஏற்றுக்கொண்டார்.

ருவான்டா படுகொலைகள் இடம்பெற்றவேளை நான் ஐக்கியநாடுகள் அமைதிப்படையின் தலைவராக பணியாற்றினேன்,பலநாடுகளிடமிருந்து இராணுவத்தை கோரினேன்,என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன் என அவர் குறிப்பிட்டார்.

ஆனால் அந்த இனப்படுகொலை முடிந்த பின்னரே நான் இன்னமும் அதிகளவிற்கு  திறமையாக பணியாற்றியிருக்கவேண்டும் என்பதை உணர்ந்தேன்,நான் எச்சரிக்கை விடுத்து ஆதரவை பெற்றிருக்கவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ருவான்டாவில் கிடைத்த வேதனை மிகுந்த நிகழ்வுகளும் பொஸ்சினியா அனுபவங்களும் எனது சிந்தனையிலும் எனது நடவடிக்கைகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின என அவர்  தெரிவித்திருந்தார்.

இதன் பின்னர் தனது 59 வயதில் 1997 இல் கோபி அனான் ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகமாக பதவியேற்றார்.

அனான் அவ்வேளை 52 வருடங்களிற்கு வருடங்களிற்கு பின்னர் வங்குரோத்து நிலையில் காணப்பட்ட ஐநாவின் செயலாளர் நாயகமாக பதவியேற்றார்.

ஐக்கியநாடுகள் அமைப்பினை சீர்செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பித்த அனான் உலகின் நன்மைகளிற்காக மில்லேனியம் இலக்கு,எயிட்ஸ் மற்றும் வறுமைக்கு எதிரான போராட்டங்களையும் ஆரம்பித்தார்.

 

ஈராக் யுத்தம்

2003 இல் அனானிற்கான பெரும் ஆதரவு சக்தியாக காணப்பட்ட அமெரிக்கா ஈராக்கிற்கு எதிராக தாக்குதலை மேற்கொள்ளப்போவதாக அறிவித்தது.

இறுதியில் ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையின் அங்கீகாரத்தை பெறாமல் அமெரிக்கா தனது நேசநாடுகளுடன் போரில் குதித்தது.

இதன் காரணமாக அனானிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் முரண்பாடுகள் உருவாகின.

ஈராக் மீதான தாக்குதல்கள் ஐநா சாசன அடிப்படையிலும் எங்களின் கருத்துக்களின் அடிப்படையிலும் சட்டவிரோதமானவை என அவர் பின்னர் குறிப்பிட்டார்.

2004 இல் வெளியான எண்ணெய்க்காக உணவு மோசடியுடன் அனானின் பெயரும் சேர்க்கப்பட்டது,இதனால் அவர் நெருக்கடிகளை சந்தித்தார்.

இதற்கு 18 மாதங்களின் பின்னர் 2006 இல்தனது 70 வயதில்  அவர் தனது பதவியை இராஜினாமா செய்தார்.

எனினும் ஓய்வினை ஏற்றுக்கொள்ளும் மனமின்றி அவர் தனது கோபி அனான் பவுண்டேசனை ஆரம்பித்தார்.

அதன் பின்னர் பல நாடுகளில் சமாதான பணியில் ஈடுபட்டார்

2012 இல் சிரியாவிற்கான விசேட பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.

 

அதன் பின்னர் எல்டர்ஸ் அமைப்பு மியன்மார் என அவரது பயணம் தொடர்ந்தது.

(வீரகேசரி இணையத்தளம்)

http://www.virakesari.lk/article/38729

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.