Jump to content

இழந்து விட்ட அரசியல் ஓர்மம்


Recommended Posts

இழந்து விட்ட அரசியல் ஓர்மம்
 

தேர்தலொன்று விரைவில் வரப்போகிறது போல் தெரிகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் ஊர்களுக்குள் அடிக்கடி வந்து போகின்றமை அதற்கான கட்டியமாகும்.   

குறிப்பாக, முஸ்லிம் கட்சித் தலைவர்கள், ‘மடித்து’க் கட்டிக் கொண்டு, களத்தில் இறங்கி விட்டார். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம், அம்பாறை மாவட்டத்துக்கும், தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா, திருகோணமலை மாவட்டத்துக்கும் கடந்த வாரம் சென்று, தத்தமது கட்சிகளைப் புனரமைக்கும் நடவடிக்கைகளிலும், அங்குள்ள முக்கியஸ்தர்களைத் தங்களின் கட்சிகளுக்குள் ஈர்த்துக் கொள்ளும் செயற்பாடுகளிலும் இறங்கியிருந்தனர்.  

 அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், கடந்த வாரம் வடக்கில் வாழ்வாதார உதவிப் பொருட்களை, மக்களுக்கு வழங்கிவைத்தார்.   

அடுத்துவரும் சில மாதங்களில், மாகாண சபைகளுக்கான தேர்தல் நடப்பதற்கான சாத்தியங்கள், அதிகமாகவே உள்ளன.   

ஆனால், பழைய முறையிலா, புதிய முறையிலா? அந்தத் தேர்தல்கள் நடக்கும் என்பதற்கு, அறுதியான விடை இன்னும் கிடைக்கவில்லை.   

இருந்தபோதும், “பழைய முறையில் மாகாணசபைத் தேர்தல்களை நடாத்திக் காட்டுவோம்” என்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், மருதமுனையில் நடந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசியிருந்தார்.    

மாகாண சபைத் தேர்தல், பழைய முறையில் நடப்பதற்கான சாத்தியங்கள்தான் அதிகமாக இருப்பது போல் தெரிகிறது. அதுதான், முஸ்லிம் சமூகத்துக்கு சாதகமாகவும் அமையும்.  

ஆனாலும், புதிய முறையில்தான் மாகாண சபைத் தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என்பதில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, பிடிவாதமாக உள்ளதாகத் தெரியவருகிறது.  

மாகாண சபைத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டால், முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் கிழக்கில்தான் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளும் என்பதை, சொல்லித் தெரிய வேண்டியதில்லை. முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை அதிகமாகப் பெறுவதற்கான சாத்தியங்கள், கிழக்கில்தான் உள்ளன.   

அதுமட்டுமன்றி, முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரைப் பெறுவதற்கும், ஆட்சியில் முஸ்லிம் கட்சிகள் பங்குகொள்வதற்குமான வாய்ப்புகளும் கிழக்கு மாகாணத்தில்தான் அதிகமாக இருக்கின்றன. அதனால், முஸ்லிம் அரசியல் கட்சிகள், கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளும்.   

ஆனால், முஸ்லிம் அரசியல் கட்சிகளில் எவையெல்லாம் தனித்துக் களமிறங்கும், எந்தக் கட்சிகள் கூட்டமைத்துப் போட்டியிடும் என்பதையெல்லாம் இப்போதைக்கு உறுதியாகச் சொல்லிவிட முடியாது. ஆனாலும், சில அனுமானங்கள் உள்ளன.   

கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் களம், இம்முறை வெகுவாகச் சூடுபிடிக்கும். அதற்கான ஏற்பாடுகளையும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் செய்து வருகின்றன. உதாரணமாக, அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸும், அ.இ.ம காங்கிரஸும் தத்தமது கட்சி சார்பில், தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களென, தலா ஒவ்வொருவரை நியமித்திருக்கின்றன. அந்தக் கட்சிகளின் வாக்கு வங்கிகளில், இந்த நியமனங்கள் அதிகரிப்பை ஏற்படுத்தும் என்கிற நம்பிக்கை, குறித்த கட்சிகளிடம் உள்ளன.  

இன்னொருபுறம் அதிகாரங்கள் எவையுமில்லாத நிலையில், மாகாண சபைத் தேர்தலொன்றைத் தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாவுல்லா, முதன் முதலாக எதிர்கொள்ளும் நிலை ஏற்படவுள்ளது.   

கடந்த காலங்களில் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து, தேர்தல்களில் தனது கட்சியைக் களமிறக்கிப் பழக்கப்பட்டவர் அதாவுல்லா.  

கடந்த, கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல்களின் போது, அம்பாறை மாவட்டத்தில் தனது கட்சி சார்பாக, மூன்று உறுப்பினர்களைச் சொல்லி வைத்தால்போல் வென்றெடுத்து வந்த அதாவுல்லாவுக்கு, எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலானது, கடந்த காலத்தைப் போல், சுகமாக அமையும் எனக் கூறிவிட முடியாது.   

இன்னொருபுறம் ஹசன் அலி - பஷீர் சேகுதாவூத் தலைமையிலான வண்ணத்துப் பூச்சியைச் சின்னமாகக் கொண்ட ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பும் கிழக்குத் தேர்தலில் களமிறங்குவதற்குத் தயாராக இருப்பதாகத் தெரியவருகிறது. ஆனாலும், வண்ணத்துப்பூச்சி தனித்துப் பறக்குமா? கூட்டணி அமைக்குமா என்பது குறித்து, இப்போதைக்கு அறிந்து சொல்ல முடியவில்லை.  

எவ்வாறாயினும், முஸ்லிம் கட்சிகளின் சில நடவடிக்கைகள், மக்கள் மத்தியில் சில சந்தேகங்களையும் குழப்பங்களையும் ஏற்படுத்தி வருகின்றமையையும் ஆங்காங்கே காணக்கூடியதாக உள்ளது.   

உதாரணமாக, “அரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் பங்காளிக் கட்சிகள், முஸ்லிம் காங்கிரஸை கிழக்கில் மிகப்பெரிய எதிரியாகப் பார்க்கின்றன” என்று, முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் குற்றம் சாட்டியிருக்கின்றார்.  

மேலும், “சினேக சக்திகள் என்று நினைத்தவர்கள், இன்று பெரிய வில்லங்கமாக மாறியிருக்கின்றனர்” என்றும், தமது பங்காளிக் கட்சிகள் குறித்து, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கூறியிருக்கின்றார்.   
இந்தச் சினேகக் கட்சிகள் எவை, என்பதையும் அவற்றின் நடத்தைகள் எவ்வாறுள்ளன என்பதையும் கூட, ஹக்கீம் விவரித்துள்ளார்.

“ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து முதல் தடவையாக, கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டோம். இதன்மூலம் அழிந்து போயிருக்கின்ற ஒரு கட்சிக்கு, உயிரூட்டுகின்ற வேலையைப் பார்த்துவிட்டோமா என்றும் சிந்திக்க வேண்டியுள்ளது. அது மாத்திரமின்றி, அழிந்து போயிருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் தற்போது தலைதூக்கி ஆடிக்கொண்டிருக்கிறது” என்றும் ஹக்கீம் கூறியிருக்கின்றார்.  

இவ்வாறானதொரு நிலையில்தான், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் சந்தித்துப் பேசியதாகத் தெரிவிக்கும் செய்திகளும் படங்களும் ஊடகங்களில் வெளியாகி இருக்கின்றன.   

இவை அனைத்தையும் கூட்டிக்கழித்துப் பார்ப்பவர்களுக்கு, எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷ அணியுடன் இணைந்து, முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடப் போகிறதா என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளமையையும் அவதானிக்க முடிகிறது.  

இன்னொருபுறம், நல்லாட்சி அரசாங்கத்தின் மீது, முஸ்லிம் மக்கள் வைத்திருந்த நம்பிக்கையும் பெருமளவில் இல்லாமல் போயிருப்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.   

முஸ்லிம்களுக்கு, மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தில் நடந்த அநீதிகளுக்கு கொஞ்சமும் குறைவில்லாமல், அல்லது அவற்றை விடவும் அதிகமான கொடுமைகள், இந்த ஆட்சியில் நடந்துள்ளதாக முஸ்லிம்கள் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்.  

 இவ்வாறானதொரு சூழ்நிலையில், மஹிந்த தரப்புடன் முஸ்லிம் அரசியல் கட்சியொன்று, தேர்தல் கூட்டு வைத்துக் கொள்வதை, ‘செய்யக் கூடாத’ காரியமாக முஸ்லிம் சமூகம் பார்க்கப் போவதில்லை என்பதையும் இங்கு பதிவு செய்ய வேண்டியுள்ளது.  

‘அரசியலில் முஸ்லிம்கள், தமது எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் போடக் கூடாது’ என்று, அறிஞர் ரி.பி. ஜாயா கூறியமை குறித்து, முஸ்லிம் சமூகம் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்து, இப்போது சிந்திக்கத் தொடங்கி இருக்கிறது.  

ரி.பி. ஜாயா சொன்னதன் முழுமையான அர்த்தத்தை, இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் முஸ்லிம்கள் புரிந்து கொண்டுள்ளார்கள் போலவே தெரிகிறது.   

முஸ்லிம் சமூகத்தின் 21 நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஆளுந்தரப்பின் கூடைகளுக்குள்ளேயே போடப்பட்டிருப்பது, முஸ்லிம்களுக்கு அத்தனை ஆரோக்கியமானதாக அமையவில்லை என்பதை, இந்த அரசாங்கத்தில் நடைபெற்ற கடந்த கால நிகழ்வுகள் மூலம் புரிந்து கொள்ள முடியும். ஆட்சியாளர்களின் தவறுகளையும் பிழைகளையும் முஸ்லிம் சமூகம் சார்பாகத் தட்டிக் கேட்பதற்கு, அரசாங்கத்துக்கு வெளியில், அந்தச் சமூகம் சார்பாக ஒரு நாடாளுமன்ற உறுப்பினரேனும் இல்லை என்பது ஆபத்தானதாகும்.  

எனவே, மாகாண சபைத் தேர்தலின்போது முஸ்லிம் அரசியல் கட்சிகள், இது குறித்தும் கவனம் செலுத்துதல் வேண்டும். தனது முட்டைகளை எல்லாக் கூடைகளுக்குள்ளும் பிரித்துப் போடுவது பற்றி, முஸ்லிம் சமூகம் யோசிக்க வேண்டும். தேர்தல் கூட்டுகளும் அதனை மனதில் வைத்து அமைக்கப்படுதல் அவசியமாகும்.  

இன்னொருபுறமாக, ஒவ்வொரு தேர்தல்களிலும் வாக்களிக்கும் இயந்திரங்களாக மட்டுமே, முஸ்லிம் மக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றமையையும் இங்கு சுட்டிக்காட்டுதல் அவசியமாகும். நல்லாட்சி அமைவதற்கும், அமைந்த பின்னரும் நடந்துள்ள தேர்தல்களில், முஸ்லிம் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை.   

உதாரணமாக, அம்பாறை மாவட்டம் நுரைச்சோலை பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள 500 வீடுகளையும் பயனாளிகளுக்கு வழங்கப் போவதாக ஜனாதிபதி உறுதியளித்து, இரண்டு வருடங்கள் கடந்து விட்ட போதும், இதுவரை அது நடக்கவில்லை. சுனாமியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கென நிர்மாணிக்கப்பட்ட இந்த வீட்டுத் திட்டத்துக்காக, சவுதி அரேபியா நிதியுதவி வழங்கியிருந்தது.  

இதேவேளை, ஒலுவில் பிரதேசத்தில் மக்களின் நூற்றுக் கணக்கான ஏக்கர் நிலங்களைச் சுவீகரித்து, நிர்மாணிக்கப்பட்ட துறைமுகம் இன்னும் இயங்காமலேயே உள்ளது. இந்தத் துறைமுகத்தைச் செயற்பட வைக்கப் போவதாகவும், துறைமுகப் பிராந்தியத்தை வர்த்தக வலயமாக மாற்றப் போவதாகவும், தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் வாக்குறுதி வழங்கியிருந்தமையும் இங்கு நினைவுகொள்ளத்தக்கது.   

ஆனால், தனது வாக்குறுதி தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இதுவரை எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.   

இப்படி அபிவிருத்தி ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் முஸ்லிம் மக்களுக்கு வழங்கப்பட்ட, எந்தவொரு பெறுமானம்மிக்க வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படாத நிலையிலேயே, மாகாண சபைத் தேர்தலொன்றை முஸ்லிம் சமூகம் சந்திக்கப் போகின்றமை குறிப்பிடத்தக்கது.   

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழர் சமூகமானது, பல்வேறு பலன்களைப் பெற்றுக் கொண்டுள்ளது. அரச படைகள் பிடித்து வைத்திருந்த தமிழர்களின் நூற்றுக் கணக்கான ஏக்கர் நிலங்கள், விடுவிக்கப்பட்டுள்ளன.   

நாடாளுமன்றிலுள்ள தமிழர் சமூகம் சார்பான அரசியல் கட்சிகள், இதற்காகப் பெரும் முயற்சிகளை எடுத்திருந்தன. ஆனால், கிழக்கு மாகாணத்தில் அரச இயந்திரங்களால் அபகரிக்கப்பட்டுள்ள,  முஸ்லிம்களுக்குச் சொந்தமான நிலங்கள், நல்லாட்சி அரசாங்கம் வந்த பிறகு, விடுவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.  

ஆக, முஸ்லிம் சமூகத்துக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும், வெற்று வாக்குறுதிகளாக உள்ள நிலையிலேயே, அடுத்தடுத்துத் தேர்தல்கள் வருகின்றன. அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலின்போதும், முஸ்லிம் மக்களிடையே வாக்குறுதிகள் தாறுமாறாக அள்ளி வீசப்பட்டிருந்தமையும் நினைவு கொள்ளத்தக்கது.   

எனவே, முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட ஆகக்குறைந்த வாக்குறுதிகளாவது நிறைவேற்றப்படும் வரையிலாவது, ஆட்சியாளர்களையும் ஆட்சியில் பங்காளிகளாக உள்ள முஸ்லிம் கட்சிகளையும் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் புறக்கணிப்பதற்கான அரசியல் ஓர்மம், முஸ்லிம் சமூகத்துக்கு இருக்குமா என்கிற கேள்வி இங்கு முக்கியமானதாகும்.  

நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை மீளமீள வழங்கிக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகளையும் அவர்கள் சார்ந்த கட்சிகளையும் தொடர்ந்தும் ஒரு சமூகம் சொரணையின்றி ஆதரித்துக் கொண்டிருக்கலாமா என்ற கேள்வியும் எழுகிறது.  

ஒருவர் நம்மை ‘முட்டாள்’ என்று சொல்லும் போது வருகின்ற கோபம், அரசியலில் நம்மை மீளமீள ஏமாற்றுகின்றவர்கள் மீது, ஏன் நமக்கு வருவதில்லை என்பது குறித்து, நம்மில் அதிகமானோர் ஏன் சிந்திப்பதேயில்லை?  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இழந்து-விட்ட-அரசியல்-ஓர்மம்/91-220286

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.