Jump to content

ரூபாய் வீழ்ச்சிக்கு காரணமான துருக்கி இந்தியாவின் எதிர்காலத்தை காட்டும் கண்ணாடியா ?


Recommended Posts

டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ 70-க்கு வீழ்ச்சியடைந்தற்கான உடனடி காரணம் துருக்கி நாணயமான லிராவின் மதிப்பு 45% வீழ்ச்சியடைந்தது என்று படித்திருப்பீர்கள்.

rupee.jpg

துருக்கி லிரா ஏன் வீழ்ச்சியடைந்தது என்று பார்க்கலாம். துருக்கி என்ற நாடு, அந்த நாட்டின் அரசியல் பொருளாதார நிலைமை இவற்றை நமது நாட்டோடு ஒப்பிட்டால்தான் இதை புரிந்து கொள்ள முடியும்.

துருக்கியின் மக்கள் தொகை சுமார் 8 கோடி (இந்தியாவின் பெரிய மாநிலங்களுடன் ஒப்பிடக் கூடியது), இந்திய மக்கள் தொகையில் 15-இல் ஒரு பங்கு. மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3-இல் ஒரு பங்கு.

எனவே, ஒரு நபருக்கான ஆண்டு வருமானம் ($11,114) இந்தியாவை ($2,134) விட 5 மடங்கு அதிகம். இரண்டு நாடுகளுமே அன்னிய முதலீட்டைச் சார்ந்து, மலிவான உள்நாட்டு உழைப்பையும், திறன்சார் உழைப்பையும் விற்பதை மட்டுமே ஆதாரமாக கொண்டுள்ளன.

துருக்கி அதிபர் எர்டோகன் இசுலாமிய மதவாதத்தை தூண்டி, சிறுபான்மை மக்களை படுகொலை செய்து, அரசியல் எதிரிகளை அடக்கி ஒடுக்கி, ஜனநாயக நிறுவனங்களை துவம்சம் செய்து சர்வாதிகாரத்தை தன் கையில் குவித்திருக்கிறார்.

1994 முதல் 1998 வரை இஸ்தான்புல் மேயராக இருந்த அவர் 2002-இல் பிரதமர் தேர்தலில் வெற்றி பெற்றார். அதன் பின்னர் 2007, 2011 தேர்தல்களிலும் வெற்றி பெற்று 2014-இல் நாட்டின் அரசியல் சட்டத்தை திருத்தி நாட்டு அதிபராக பதவி ஏற்றார். 2018-இல் அவர் மீண்டும் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று 2028 வரை பதவியில் நீடிக்கும் வகையில் ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்.

மோடி பயணிப்பது எர்டோகன் போட்ட பாதையில் என்று  உங்களுக்கு தோன்றினால் அதில் தவறு ஏதும் இல்லை.

இது தொடர்பாக மைக்கேல் ராபர்ட்ஸ் என்ற மார்க்சிய பொருளாதார அறிஞர் ஆகஸ்ட் 11, 2018 அன்று எழுதிய  Turkey Total Meltdown கட்டுரையின் மொழிபெயர்ப்பு கீழே

துருக்கி : ஒட்டு மொத்த வீழ்ச்சி

துருக்கிய லிரா முழு வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கடந்த ஆறு மாதங்களில் டாலருக்கு எதிரான தனது மதிப்பில் 40%-ஐ இழந்திருக்கிறது. சென்ற வாரத்தில் 20% வீழ்ச்சியடைந்திருக்கிறது.  சமீபத்திய தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட  துருக்கியின் எதேச்சதிகார அதிபர் ரிசல் தயீப் எர்டோகனின் தாறுமாறான பொருளாதார கொள்கையும், துருக்கிய நிறுவனங்களும் தனிநபர்களும் செய்த வினைகளும் நாட்டைச் சுட ஆரம்பித்திருக்கின்றன.

Turkish Lira

 

அமெரிக்க பாதிரியார் ஆண்ட்ரூ பிரன்சன் கைது செய்யப்பட்டதில் பங்கு வகித்ததற்காக துருக்கியின் நீதித்துறை அமைச்சர் அப்துல்ஹமித் குல் மீதும், உள்துறை அமைச்சர் சுலைமான் சொய்லு மீதும் சொத்துக்களை முடக்கும் நடவடிக்கையை அமெரிக்கா சுமத்தியது இந்த நெருக்கடியை வெளிக் கொண்டு வந்தது.

பாதிரியார் பிரன்சன் கடந்த 20 ஆண்டுகளாக துருக்கியில் ஒரு சிறு கிருத்துவ சபையை நடத்தி வந்தார். எர்டோகன் ஆட்சிக்கு எதிரான சதித் திட்டத்தில் பங்கேற்றதாக குற்றம் சாட்டப்பட்டு அவர் அக்டோபர் 2016-இல் கைது செய்யப்பட்டார்.

பிரன்சன் இந்த குற்றச்சாட்டுக்களை “அவதூறு” என்று மறுத்திருக்கிறார். சிரியா தொடர்பான எதிரெதிர் நிலைப்பாடுகள், அமெரிக்க ஆயுதங்களை வாங்குவது போன்ற துருக்கிக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான பல சச்சரவுகளில் ஒன்றுதான் பிரன்சனின் கைது.

இந்நிலையில், துருக்கிய ஸ்டீல் மீதான இறக்குமதி வரியை 50 சதவீதம் ஆக உயர்த்துவதாக அமெரிக்க வர்த்த அமைச்சர் வில்பர் ராஸ் அறிவித்தார். இதற்கு முன்பு அமலில் இருந்த 25% வரி அமெரிக்காவுக்கு துருக்கியின் ஏற்றுமதிகளை குறைப்பதற்கு போதுமானதாக இல்லையாம்.

“துருக்கியில் இருந்து இறக்குமதி ஆகும் ஸ்டீல் மீதான வரியை இரட்டிப்பது, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக வர்த்தக அமைச்சகம் கருதும் இந்த இறக்குமதிகளை மேலும் குறைக்கும்” என்று ராஸ் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

லிராவின் தற்போதைய வீழ்ச்சிக்கு இவை தூண்டுதல்களாக இருந்தாலும் துருக்கிய பொருளாதாரத்தின் வேகமான சீர்குலைவுதான் அதன் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக அச்சுறுத்துகிறது. 2016-இல் தனக்கு எதிரான தோல்வியடைந்த இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு பிறகு எர்டோகன் பொருளாதாரத்தை ஊதிப் பெருக்கும் வகையில் கடன்களை  வாரி வழங்க ஆரம்பித்தார். அதே நேரத்தில் ஆயிரக்கணக்கான பேரை சிறையில் அடைத்து, அதை விட அதிகமான எண்ணிக்கையிலானவர்களை கல்வித்துறையிலிருந்தும், அரசு பதவிகளிலிருந்தும் பணிநீக்கம் செய்தார்.

வட்டி வீதங்களை குறைந்த அளவில் வைத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தியதோடு, வேகமாக அதிகரித்து வந்த பண வீக்கத்தை கட்டுப்படுத்த துருக்கியின் ரிசர்வ் வங்கி எடுத்த முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டார். “அனைத்து தீமைகளுக்கும் தாயும் தந்தையும் வட்டி வீதங்களே” என்பது அவரது கோட்பாடு.

அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டி வீதங்களை உயர்த்தியதால் டாலர் வலுவடைந்து வந்த நேரத்தில்,  எர்டோகனின் பொருளாதார நடவடிக்கைகளை துருக்கியின் முதலாளித்துவ பொருளாதாரத்தால் தாங்கிக் கொள்ள முடியாமல் போனது.

Turkey Corporate debt

துருக்கியின் தொழில்துறை வளர்ச்சி, கட்டுமானம், ரியல் எஸ்டேட் ஆகியவற்றுக்குத் தேவையான நிதி ஆதாரத்தில் பெரும்பகுதி, அமெரிக்க, ஐரோப்பிய முதலீட்டாளர்கள் மூலமாக வெளிநாட்டில் இருந்து வருகின்றன. துருக்கி எரிசக்தி ஆதாரங்களை சொந்தமாக கொண்டிருக்கவில்லை; மனிதத் திறமையையும், மலிவான உழைப்பையும் சார்ந்து மட்டுமே ஏற்றுமதி செய்ய முடிகிறது.

இந்நிலையில், துருக்கியின் குடிமக்களும் நிறுவனங்களும் டாலரிலும், யூரோக்களிலும் பெருமளவு கடன் வாங்கி குவித்திருக்கின்றனர். [இது இந்தியப் பொருளாதாரத்தின் நிலையை ஒத்திருக்கிறது]

கடந்த இரண்டு ஆண்டுகளில் துருக்கிய பொருளாதாரம் வேகமாக வளர்கிறது என்ற தோற்றம் கடன், அன்னிய நிதி முதலீடுகள் என்ற பலவீனமான அடிப்படையில் கட்டியமைக்கப்பட்டது. ஏற்றுமதியை விட அதிக அளவு இறக்குமதிகள் வந்து குவிந்தன.

துருக்கிய மூலதனத்தின் இலாப வீதம் வெகுவாக சரிந்தது. உலகச் சந்தையில் டாலர் மதிப்பு அதிகரிப்பும் வட்டி வீதங்கள் உயர்த்தப்படுவதும் துருக்கிய பலூனை வெடிக்க வைத்து உலக முதலாளித்துவத்தின் நிதர்சனங்களை எர்டோகனுக்கு உணர்த்தின.

துருக்கியின் வங்கிகளும், கார்ப்பரேட்டுகளும் இப்போது படு மோசமான சுழலில் சிக்கியுள்ளனர். துருக்கியின் நிதி அல்லாத நிறுவனங்களின் அன்னிய நாணய கடன்கள், அவர்களது அன்னியச் செலாவணி கையிருப்புகளை விட $20,000 கோடி அதிகமாக உள்ளன.

turk-6.png

அந்த நாட்டின் வங்கிகளும், கார்ப்பரேட்டுகளும் பல நூறு கோடி டாலர் அன்னியக் கடன்களை விரைவில் கட்ட வேண்டியிருக்கிறது. அடுத்த ஒரு ஆண்டில் துருக்கியின் வங்கிகள் $5,100 கோடி கடன் கட்ட வேண்டியிருக்கிறது. இன்னும் $1,850 கோடி கடன் நிதித்துறை அல்லாத கார்ப்பரேட்டுகள் வசம் உள்ளது.

கார்ப்பரேட் கடன் விகிதம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 62 சதவீதமாக இருக்கும் நிலையில்தான் (அவற்றில்பாதி டாலர், யூரோ போன்ற அன்னிய நாணயங்களில் கட்ட வேண்டியவை) கடன்காரர்கள் கழுத்தில் துண்டை போடுகின்றனர்.

இந்தக் கடன்களை துருக்கியால் கட்ட முடியாது என்று அன்னிய முதலீட்டாளர்கள் கவலைப்பட ஆரம்பித்துள்ளனர். அதன் குறுகிய கால வெளிநாட்டுக் கடனுடன் ஒப்பிடும் போது துருக்கியின் அன்னியச் செலாவணி கையிருப்பு மேலும் குறைந்துள்ளது.

இது எல்லாம் சேர்ந்து துருக்கியிலிருந்து மூலதனம் வெளியேற காரணமாக அமைந்தன. எனவே லிரா மண்ணைக் கவ்வியது.

இப்போது சர்வதே மூலதனத்தின் இன்னொரு கவலை என்னவென்றால் துருக்கியின் வங்கிகளும், கார்ப்பரேட்டுகளும் கடன் கட்டத் தவறினால், அவற்றுக்குக் கடன் கொடுத்திருக்கும் ஐரோப்பிய வங்கிகளின் நிலைமையும் மோசமாகும். இழப்புகளும், கடன் கட்ட தவறுதலும் இவ்வாறு நாடு கடந்து பரவுவது “தொற்று” என்று அழைக்கப்படுகிறது. துருக்கியின் வங்கிகளில் சில வெளிநாட்டவர்க்கு சொந்தமானவை, மேலும் துருக்கிக்கு பெருமளவு கடன் கொடுத்திருக்கும் வங்கிகள் ஸ்பெயினின் BBVA, இத்தாலியின் யூனிகிரெடிட், பிரான்சின் BNP பாரிபா ஆகியவை.

turk-7.png

துருக்கியின் வங்கிகளிடம் போதுமான அளவு கையிருப்பு இருப்பதாக தோன்றுகிறது. மேலும் ஐரோப்பிய வங்கிகள் துருக்கிக்கு கொடுத்திருக்கும் கடன்கள் அவற்றின் மொத்த கடன் பட்டியலில் ஒரு சிறு பகுதிதான்.

ஆனால், ‘இலாபங்கள் கையைக் கடிக்கும் நேரத்தில் சிறிதளவு’ இழப்புகள் கூட நிலைகுலையச் செய்து விடலாம். ஐரோப்பிய வங்கிகளின் வாராக் கடன்கள் ஏற்கனவே அதிகரித்து வருகின்றன (கடன் கையிருப்பில் ‘வாராக்’ கடன்களின் %, வரைபடத்தை பார்க்கவும்)

இந்த நாணய நெருக்கடியில் இருந்து எர்டோகன் எப்படி விடுபட முடியும்? இதற்கான முதலாளித்துவ தீர்வின் முதல் படி வட்டி வீதங்களை விண்ணளவுக்கு உயர்த்துவதன் மூலம் இனிமேலும் கடன் வாங்குவதை தடுத்து நிறுத்துவது ஆகும் [இந்திய ரூபாயின் வீழ்ச்சியை தடுக்க ரிசர்வ் வங்கி வட்டி வீதத்தை கணிசமாக உயர்த்த வேண்டும் என்று எகனாமிக் டைம்ஸ் நாளிதழ் தலையங்கம் எழுதியிருக்கிறது].

அதன் பிறகு அரசு செலவினங்களை கடுமையாக வெட்டி, வரிகளை உயர்த்த வேண்டும் (அதாவது நிதிச் சிக்கன நடவடிக்கைகளை அமல்படுத்த வேண்டும்). இந்த ‘சேமிப்புகளை’ பயன்படுத்தி வங்கிகளுக்கு நிதி வழங்கி அவை தமது வெளிநாட்டு கடன்களை அடைப்பதை உறுதி செய்ய வேண்டும். பின்னர் கிரீஸ் நாட்டைப் போல சர்வதேச நாணய நிதியத்திடம் கையேந்தி நிற்க வேண்டும்.

turk-9.png

சர்வதேச நாணய நிதியத்தின் விதிகளின்படி, துருக்கி தனது கடன்களை அடைப்பதற்கு $2,800 கோடி வரை கடன் வாங்க முடியும். ஆனால், அந்த வசதியை பயன்படுத்த வேண்டுமானால் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கை உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும்.

இதுதான் துருக்கியின் நெருக்கடிக்கான முதலாளித்துவ தீர்வு. இது பொருளாதாரத்தில் படு தீவிரமான வீழ்ச்சியை ஏற்படுத்தும், துருக்கி மக்களை கடுமையாக பாதித்து எர்டோகனின் ஆதரவை அரிக்கும்.

இதற்கு மாற்றாக, மூலதன கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் நாட்டிலிருந்து பணம் வெளியேறுவதை தடுக்கலாம். ஆனால், அப்படி செய்தால் பிற நாடுகளும், வெளிநாட்டு வங்கிகளும் கடன்களை ரத்து செய்து விடுவார்கள், பொருளாதாரம் முட்டுச் சந்தில் சிக்கிக் கொள்ளும்.

இதை எதிர்கொள்ள பாகிஸ்தான் செய்தது போல ரசியா, சீனா அல்லது சவுதி அரேபியாவிடமிருந்து நிதி உதவி பெற முயற்சிக்கலாம். ஆனால், இந்த நாடுகளுடனும் எர்டோகனின் உறவு மோசமாக உள்ளது.

இவை எதையும் கண்டு கொள்ளாத எர்டோகன் ‘கடவுள்’ மீதும் தன் மீதும் நம்பிக்கை வைக்குமாறு தனது ஆதரவாளர்களுக்கு சொல்கிறார். [மோடி, மோடி என்று ஜெபிக்கும் படி பக்தாக்களுக்கு பா.ஜ.க. சொல்வதைப் போல]

துருக்கியின் நெருக்கடியை விட சர்வதேச முதலாளித்துவம் எதிர்கொண்டிருக்கும் பெரிய பிரச்சனை வளரும் நாடுகளின் அதிகரித்து வரும் கடன் நெருக்கடி.

மே மாதம் எர்டோகன் மீண்டும் வெற்றி பெற்ற துருக்கியின் பொதுத் தேர்தலுக்கு பிறகு இதைத்தான் நான் சொல்லியிருந்தேன்.

“உலகளாவிய வட்டி வீதங்களின் அதிகரிப்பும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தொடங்கிய கடுமையான வர்த்தகப் போரும் துருக்கி போன்ற வளரும் முதலாளித்துவ பொருளாதாரங்களை வெகுவாக பாதிக்கப் போகிறது. அன்னிய கடன் வாங்குவதற்கான வட்டி வீதம் கடுமையாக அதிகரிக்கும், அன்னிய முதலீடுகள் வெளியேற ஆரம்பிக்கும். அர்ஜென்டினாவில் இது ஏற்கனவே நடந்து விட்டது. அதை அடுத்து உக்ரைன், தென் ஆப்பிரிக்கா போன்றவை அடங்கிய கடன் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் நாடுகளின் வரிசையில் துருக்கியும் இப்போது முன்னணிக்கு வந்திருக்கிறது.”

அதாவது, லிராவின் வீழ்ச்சி ஒரு தொடக்கம் மட்டும்தான். இன்னும் நிறைய காத்திருக்கிறது.

நன்றி : new-democrats தளத்தில் வெளியான கட்டுரை
மேலும் :Turkey: total meltdown

 

https://www.vinavu.com/2018/08/17/turkey-shows-indian-economy-future/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதவன் உங்கள் இணைப்பை... மேலோட்டமாக வாசித்தேன்.
துருக்கி - இந்தியா  ஒப்பீடை  பற்றி கட்டுரையாளர் நன்றாக எழுதியுள்ளார்.
ஆறுதலாக....  இந்தக் கட்டுரையை,  முழுமையாக.....  வாசிப்பேன். 
இணைப்பிற்கு... நன்றி ஆதவன்.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துருக்கிக்கு பிளான் போட்டு செய்யுறாங்கள். ஏனெண்டால்  ஏர்டோகானுக்கு மண்டை கனக்க வெளிக்கிட்டுது....எப்பிடியும் இறக்கிப்போட்டுத்தான் விடுவாங்கள்.

 

Link to comment
Share on other sites

6 hours ago, தமிழ் சிறி said:

ஆதவன் உங்கள் இணைப்பை... மேலோட்டமாக வாசித்தேன்.
துருக்கி - இந்தியா  ஒப்பீடை  பற்றி கட்டுரையாளர் நன்றாக எழுதியுள்ளார்.
ஆறுதலாக....  இந்தக் கட்டுரையை,  முழுமையாக.....  வாசிப்பேன். 
இணைப்பிற்கு... நன்றி ஆதவன்.?

உலகின் முக்கிய நாடுகளில் ஒன்றான துருக்கியின் நாணயத்தின் மதிப்பு 45% வரை வீழ்ச்சி யடைந்துள்ளது , யாழில் எந்தவிதமான சலசலப்பையும் காணவில்லை . யோவ் நாதமுனி எதையாவது எழுதுங்கோப்பா....., அப்ப தானே நாங்களும் வேலைத் தளத்தில் போய் எங்களுக்கும் நாலு விசயம் தெரிந்த மாதிரி பீலா விடலாம்.
சனத்தொகையில் இளையோரின் வீதம் அதிகமாக உள்ள நாடுகளில் துருக்கியும் ஒன்று, சிறப்பான அரசியல் இருந்தால் மிகவும் முன்னேற கூடிய நாடு. ஏர்டோகானைப் போல ஊழல் வாதிகளிடம் இருந்து தப்பினால் முன்னேறிவிடும். ஆனால் ஏர்டோகான் மததைத் தூக்கிப் பிடிக்கிறார்.

ஆண்டவா இன்னொரு சிரியா ஆகமல் பார்த்துக் கொள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Athavan CH said:

உலகின் முக்கிய நாடுகளில் ஒன்றான துருக்கியின் நாணயத்தின் மதிப்பு 45% வரை வீழ்ச்சி யடைந்துள்ளது , யாழில் எந்தவிதமான சலசலப்பையும் காணவில்லை . யோவ் நாதமுனி எதையாவது எழுதுங்கோப்பா....., அப்ப தானே நாங்களும் வேலைத் தளத்தில் போய் எங்களுக்கும் நாலு விசயம் தெரிந்த மாதிரி பீலா விடலாம்.
சனத்தொகையில் இளையோரின் வீதம் அதிகமாக உள்ள நாடுகளில் துருக்கியும் ஒன்று, சிறப்பான அரசியல் இருந்தால் மிகவும் முன்னேற கூடிய நாடு. ஏர்டோகானைப் போல ஊழல் வாதிகளிடம் இருந்து தப்பினால் முன்னேறிவிடும். ஆனால் ஏர்டோகான் மததைத் தூக்கிப் பிடிக்கிறார்.

ஆண்டவா இன்னொரு சிரியா ஆகமல் பார்த்துக் கொள்.

கிழக்கு ஐரோப்பிய வாசலில், துருக்கியை... ஒரு சிரியா ஆக்க,  ஐரோப்பா விரும்பாது.
ஆனால்... பொருளாதார விடயத்தில்,    துருக்கியை.... மண்டி இட  வைத்து விடுவார்கள். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.