Jump to content

திசை மாறிய பறவை!


Recommended Posts

 
திசை மாறிய பறவை!
 
 
 
E_1533883856.jpeg
 
 
 

அம்மா ஹாலுக்குள் நுழைந்ததும், 'அம்மா... நாங்க கேள்விப்பட்டது நிஜமா?'
'வீட்டை வித்துட்டீங்களா?'
'எங்களுக்கு சொல்ல வேணாமா... நாங்கள்லாம் செத்தா போயிட்டோம்...' பிள்ளைகள் ஆளாளுக்கு எகிறினர்.
தேனம்மைக்கு ஆயாசமாக இருந்தது. நான்கு பேரில் ஒருவர் கூட, 'ஏம்மா முதியோர் இல்லத்திற்கு வந்திருக்கிறே... என் வீட்டுக்கு வாம்மா... உயிருக்கு போராடிக்கிட்டிருந்த அப்பா, இப்போ எப்படி இருக்கிறார்'ன்னு ஒரு வார்த்தை கேட்கலை.
பாசத்தைக் கொட்டி, சுயநல பேய்களை வளர்த்து இருக்கிறோமே என்று எண்ணி, அவர்களையே வெறித்து பார்த்தாள், தேனம்மை.
குங்குமமும், திருநீறும் துலங்கும் முகம்; மூக்குத்தி பளிச்சிட, கிள்ளி வைத்திருந்த கொஞ்சூண்டு மல்லிகைப் பூ, சிறிய கொண்டையில் சரிய, எளிய காட்டன் சோலையில் மங்களகரமாக திகழும் தேனம்மையின் வதனம், இன்று, வெறுப்பையும், விரக்தியையும் ஏந்தியிருந்தது.
''வாயைத் திறந்து பேசும்மா,'' படபடத்தான் மூத்தவன்.
''எவ்வளவுக்கும்மா வீட்டை வித்தீங்க,'' சீறினான் இளையவன்.


''நான் எவ்வளவுக்கு வித்தா உங்களுக்கென்னடா?''
''எங்களுக்கு என்னவா... நாங்க, உங்க பிள்ளைக இல்லயா?''
''நீங்களா என் பிள்ளைக...'' ஏளனமாக சிரித்த தேனம்மை, ''நான் வீட்டை வித்த விஷயம் தெரிஞ்சதுமே, இப்படி அடிச்சு புடிச்சு ஓடி வந்துருக்கீங்களே... பெத்த அப்பா, உயிருக்கு ஆபத்தான நிலையில போராடிக்கிட்டு கிடக்கிறார்ன்னு சொன்னப்போ... நீங்க, எங்க பிள்ளைகள்ன்னு உங்களுக்கு ஞாபகமே வரலயாப்பா... பக்கத்திலே இருக்கிற இவதான் அடிச்சு பிடிச்சு வந்துட்டாளா...''
''ஆபிசுல லீவு கிடைக்க வேணாமா...'' என்று மூத்தவனும், ''உடனே ஓடி வரணும்ன்னா, கையில பணம் வேணாமா...'' என்று இளையவனும் சொல்ல, ''புகுந்த வீட்டுல, 'பர்மிஷன்' வாங்கிட்டு தானே வரணும்,'' லேசாய் முணகினாள், மகள்.
''சரி... இப்போ என்ன விஷயமா, எல்லாரும் ஒண்ணா கூடி வந்து நிக்கிறீங்க?''
''நான் பில்டரை கூப்பிட்டுட்டு வந்து விலை பேசுனப்போ, 'வேணாம், முடியாது'ன்னு சொன்னே...''
''ஆமாம்... நீ யாருடா, என் வீட்டை விலை பேச...'' முகத்தில் அறைந்தது, தேனம்மையின் கேள்வி.
நால்வரும் விக்கித்து நின்றனர்; தேனம்மையின் இந்த முகம் இவர்களுக்கு புதுசு.

 


''அம்மா... நீ ரொம்பவே மாறி போயிட்டே,'' முணுமுணுத்தாள், மகள்.
''என்ன, பிள்ளைங்க நீங்கள்லாம்... செத்துப் பொழைச்சிருக்கிறாரு உங்க அப்பா... அவர பத்தி ஒரு வார்த்தை கேக்கல; வந்ததுல இருந்து, 'வீட்டை வித்துட்டியா, வித்துட்டியா'ங்கிற பாட்டை தான் படிக்கிறீங்களே தவிர, 'எப்படிம்மா இருக்கீங்க, அப்பா நல்லா இருக்காரா'ன்னு ஒரு வார்த்தை கேட்கல...'' என்றாள், வெறுப்புடன்!
அப்போதுதான் நால்வருக்குமே உறைத்தது. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்; சங்கடம் நிறைந்த அமைதி, அவ்விடத்தில் சூழ்ந்தது.
''கேட்கணும்ன்னு தான் நினைச்சேன்...'' என்று இழுத்தான், மூத்தவன்.
''அப்பா எப்படிம்மா இருக்காங்க?'' என்றான், கடைசிகாரன்.
''தப்பா எடுத்துக்காதம்மா... ஏதோ ஒரு டென்ஷன்,'' என்றான், இரண்டாமவன்.
எதையும் காதில் வாங்காதவளாய் அமர்ந்திருந்தாள், தேனம்மை.
அன்று, கணவரை, மருத்துவமனையில் சேர்க்கும் வரை, 'நமக்கு ஒண்ணுக்கு மூணு ஆம்பள பசங்க இருக்காங்க. அப்பாவுக்கு முடியலன்னதுமே, ஓடோடி வந்து தாங்க மாட்டாங்களா...' என்று தைரியமாகவே இருந்தாள், தேனம்மை. வெறும் ஜுரம் என்பது, சிறுநீரக பிரச்னை என்று தெரிந்ததுமே, நால்வருக்கும் தனித்தனியே போன் செய்து கதறித் தீர்த்தாள்.

 


அப்போது கூட, பிள்ளைகள் தோள் கிடைக்கும் என்றுதான் பெருமையாக நினைத்திருந்தாள். ஆனால், 'அட்மிட்'டாகி ஒரு வாரம் கழித்து, ஒருமுறை, 'டயாலிசிஸ்' ஆனதும், நால்வரும் குடும்பத்தோடு ஒன்றாக வந்து சேர்ந்த போதும் கூட, நம்பிக்கை இழக்கவில்லை, தேனம்மை. யானை பலம் வந்தது போல உணர்ந்தாள்.
'நால்வரில் ஒருவர் சிறுநீரகம் கொடுத்தால் கூட, உயிருக்கு ஆபத்தின்றி போகும்...' என்று டாக்டர் சொன்னதும், சந்தோஷமாக தலையாட்டினாள், தேனம்மை.
ஆனால், நடந்தது வேறு; ஏதேதோ காரணம் சொல்லி, நால்வருமே இதிலிருந்து விலகுவதிலேயே குறியாக இருந்தனர். சுலபமாக, 'புகுந்த வீடு அனுமதிக்காது...' என்று கூறி விட்டாள் மகள். மூவருடைய மனைவியரோ, தத்தம் கணவன்மாரை அடை காத்தனர்.
ஒரு தடவை, 'டயாலிசிஸ்' பண்ண ஆகும் செலவு, மூவரையும் பயமுறுத்தியது. தம் தலையில் விழுமோ என்ற பயம் பகிரங்கமாகவே தெரிந்தது. தவித்துப் போனாள் தேனம்மை; இதில், மூத்தவன், 'என்னம்மா இது... இவ்ளோ நாளா ஒரேயொரு கிட்னியை வச்சுதானா அப்பா மேனேஜ் பண்ணியிருக்கிறாரு... இன்னொன்னு என்னாச்சு, தொலைச்சிட்டாரா...' என்று சிரிக்க, கூடவே, மற்றவர்களும் சிரித்தனர்.
அப்போது தான் வெடித்தாள் தேனம்மை...


'எப்படிடா இருக்கும்... அந்த ரெண்டில ஒண்ணை வித்துதாண்டா உன்னை காப்பாத்துனாரு உங்கப்பா... தலைப் பிள்ளே சாகக் கிடக்கிறான்னு தெரிஞ்சதுமே, கொஞ்சம் கூட யோசிக்காம, கர்ண மகாராஜா, தன் உடம்புலேயிருந்து கவச குண்டலத்தையே அறுத்துக் குடுத்தாற் போல, தன்னோட உடல் உறுப்பையே அறுத்து, உனக்காக வித்தவருடா உங்கப்பா... அந்த பணத்துலே தான் உனக்கு உயிர் பிச்சை கிடைச்சுது...' என்று பொரிந்த போது, நால்வருமே அதிர்ச்சியில் உறைந்தனர்.
சட்டென சுதாரித்த மூத்தவனின் மனைவி, 'இவருடைய சிகிச்சைக்கு, மாமா கிட்னியை வித்தது எல்லாம் பழைய கதை; ஆனா, இப்போ இவருக்கு, பி.பி., சுகர்ன்னு ஆயிரம் கம்ப்ளைன்ட்; என்னா பண்றது... இவர நம்பி நாங்க மூணு பேரு இருக்கோமே...' என்று நீட்டி முழக்கினாள்.
இரு கை சேர்த்து கும்பிட்டு,'போதும்மா... போதும்; என் புருஷனை நான் காப்பாத்திக்கிறேன்; வந்தீங்க, பார்த்தீங்கள்ல இப்ப கிளம்புங்க... ' என்றாள் தேனம்மை.
பின், தன் கணவரின் பால்ய சினேகிதரும், வக்கீலுமான சட்டநாதன் பக்கம் திரும்பி, 'அண்ணே... மண் குதிரைகளை நம்பிட்டேன்; 'டோனர்' கிடைக்கிறாங்களான்னு எங்காவது முயற்சி பண்ணுங்க...' என்றாள், உடைந்த குரலில்!
நால்வரும் எதுவுமே பேசவில்லை; மறுநாள், வீட்டை விற்பதற்காக, பில்டர் ஒருவரை அழைத்து வந்தான், மூத்தவன்.
ரவுத்திரமானாள், தேனம்மை.
அதிலும், இளையவன் அசால்ட்டாக, 'டயாலிசிஸ் பண்ணிக்கிட்டே இருந்தா செலவு தாங்காதும்மா... இந்த வீட்டை ஒரு கோடிக்கு பேசியிருக்கேன்; உங்களுக்கும் ஒரு, 'ப்ளாட்' கொடுத்துடுவார். ஒரு கோடியை, அஞ்சு பங்கா பிரிச்சு கொடுத்திடுங்க. அப்புறம் ஒரு விஷயம், அப்பாவை கவர்ன்மென்ட் ஆஸ்பிடலில் சேர்த்துடுங்க; அதுதான் நல்லது...' என்று பேசிக் கொண்டே போனவனை, 'நிறுத்துடா...' என்ற அம்மாவின் குரல்,
மிரள வைத்தது.
'நீ யாருடா... என் வீட்டை விக்கிறதுக்கும், பங்கு போடவும்...' என்றாள்.

 


'பளீர்' என்று கன்னத்தில் அறைந்தது போன்று இருந்தது, அவனுக்கு!
'அப்படி மூர்க்கமாய் இருந்தவள், இப்போது எப்படி வீட்டை விற்றாள்... அந்த பணம் எங்கே... ஏன் இப்படி, 'ஓல்ட் ஏஜ் ஹோம்'க்கு வந்தாள்... அப்பாவுக்கு சரியாகி விட்டதா, 'டோனர்' கிடைத்து விட்டாரா...' மனதை பல கேள்விகள் வண்டு போல குடைந்தன.
அப்போது அங்கு வந்த வக்கீல் சட்டநாதன், ''தேனும்மா... இங்கேயா இருக்கே... இந்தா இதில, ஒரு கையெழுத்து போடு,'' என்று எதையோ நீட்டினார்.
அவற்றில் கையெழுத்திட்டாள், தேனம்மை. ஒவ்வொருவர் பெயரிலும், லட்சம் ரூபாய் என்று கையெழுத்திடப்பட்ட காசோலைகளை எடுத்து அவர்களிடம் நீட்டினாள்.
வாங்கி, அதன் மீது கண்களை ஓட்டிய மூத்தவன், ''என்னம்மா... பிச்சை போடறீங்களா...'' என்றவாறே மேஜை மீது காசோலையை விசிறினான்.
''ஒரு கோடி ரூபாய்க்கு வித்துட்டு, பிள்ளைகளுக்கு ஒரு லட்சம் ரூபாய பிச்சை போடற தாயை, நான், இப்போதுதான் பாக்கிறேன்,'' துள்ளினான், இளையவன்.
''ஏண்டா துள்ளுறீங்க... அமைதியா இருங்க; வீடு, 50 லட்சம் ரூபாய்க்குத் தான் போச்சு,'' என்றார், சட்டநாதன்.
'என்ன...' என்று அவர்கள் அதிர்ச்சியுடன் கூவ, ''ஆமாம்பா... உங்கம்மாவே இஷ்டப்பட்டு, 50 லட்சம் ரூபாய்க்கு வேத பாடசாலைக்கு கை மாத்திட்டாங்க,'' என்றதும், 'உங்களுக்கு பைத்தியமாம்மா...' என்றனர், கோரஸாக!
''ஆமாம்... அப்படிதான் வச்சுக்கங்க. என் வீடு, என் இஷ்டம்; இது கூட உங்களுக்கு தரணும்ங்கிற அவசியம் இல்ல; போனாப் போகுதுன்னு தரேன்,'' என்றாள், தேனம்மை.
'எங்களுக்கு இந்த பிச்சைக் காசு தேவையில்ல...' என்றனர்.
''சரி... வேணாம்ன்னா குடுங்க... எனக்கு ஒண்ணும் பிரச்னை இல்ல.''

 


''எதுக்காக வேத பாடசாலைக்கு அடிமாட்டு விலைக்கு வித்தே... எங்ககிட்ட சொல்லியிருந்தா, நல்ல விலைக்கு வித்துருப்போம்ல்ல...'' என்றான், கடைசி மகன்.
''இங்க பாருங்கடா... அந்த வீடு, என் புருஷன் சொந்த சம்பாத்தியத்திலே கட்டினது. அதுல இருக்கிற ஒவ்வொரு கல்லிலும் எங்க வியர்வையோட வாசம் இருக்கு. அதை, சும்மா கூட கொடுப்பேன்; அதை கேட்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்ல. உங்களுக்கு செய்ய வேண்டிய கடமைய செஞ்சு முடிச்சாச்சு; கிளம்புங்க,'' என்றாள், தீர்க்கமாக!
''என்ன மாமா இது...''


''இங்க பாருங்கப்பா... உங்கம்மாவுக்கு தோட்டத்தை, வீட்டை இடிச்சு ப்ளாட் போடறதுல இஷ்டமில்ல; உங்கப்பாவுக்கு உடம்பு முடியாத இந்த நிலையில, 'பென்ஷனை' மட்டும் வைச்சு, அவங்களால சமாளிக்க முடியல.
''நீங்களும் எனக்கு என்னன்னு போயிட்டீங்க; ஒருத்தருமே பணம், சரீர உதவின்னு செய்ய முன் வரல. உங்கம்மா என்ன செய்யும், புருஷனை காப்பாத்திக்க வேணாமா... ஒரு, 'டோனர்' கிடைச்சார்; அவருக்கு பணமுடை. அந்த சமயம், வேத பாடசாலைக்காரங்க படிக்கிற பிள்ளைகளுக்கு இந்த இடம் தோதா இருக்கும்ன்னு கேட்டாங்க... வேத பாடசாலைதானே... அதென்ன, கான்வென்ட் ஸ்கூலா... அவங்க, '50 லட்சம் தான் தரமுடியும்; அவ்ளோதான் வசதியிருக்குன்னு சொன்னதும், உங்கம்மாவும் மன திருப்தியோட போதும்ன்னு சொல்லிருச்சு. செலவு போக, மிச்சத்தை வங்கியிலே போட்டாச்சு. அதுலதான், உங்களுக்கு ஆளுக்கொரு லட்சம்,'' என்றார், சட்டநாதன்.
''நான்சென்ஸ்; வேத பாடசாலையாம்... எந்த காலத்துலே இருக்குறீங்க...'' என்றாள் மூத்தவன்.


''கலி காலம்தான்; சுயநலக்கார பிள்ளைகளை பெத்த பாவத்தை கரைச்சுக்க வேணாமா...'' பட்டென்று சொன்னாள், தேனம்மை.
''நான் வாழ்ந்த வீட்டுல, வேத கோஷம் முழங்கினா, போற வழிக்கு புண்ணியம்ன்னு தோணுச்சு; காசாசை பிடிச்சவன் எவனும், நான் பார்த்து பார்த்து வளர்த்த தோட்டத்தை அழிச்சுட்டு, கட்டடம் கட்ட வேணாம்ன்னு நினைச்சேன். சும்மாவே குடுத்திருக்கலாம்; ஆனா, என் பூவையும், பொட்டையும் காப்பாத்திக்கணுமே...
''நாலு பெத்து என்ன பிரயோஜனம்... மனசுலே ஈரம் இல்லாத ஜென்மங்கள்... எனக்கு உதவறதுக்கு வந்த இன்னொரு பாவப்பட்ட ஜென்மத்தையும் காப்பாத்துற பொறுப்பு இருந்தது. பேராசைப் படாம, கிடைச்சதே போதும்ன்னு வாங்கி திருப்தி பட்டுக்கிட்டேன். 'தென்னைய வச்சா இளநீரு, பிள்ளைய பெத்தா கண்ணீருன்னு' சும்மாவா பாடி வச்சாங்க... போதும்டா சாமி; போயிட்டு வர்றீங்களா... எனக்கு நிறைய வேலை இருக்கு,'' தேனம்மையின் கை, வாசலை நோக்கி நீண்டது.
கனிந்து நின்ற தாய்மை மறைந்து, புதிய கம்பீர இறுக்கம் நிறைந்த புதுமை அவதாரம் அங்கு காட்சியளித்தது.

http://www.dinamalar.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.