Jump to content

நாளிதழ்களில் இன்று: 'ரூபாய் மதிப்பு மீண்டும் உயரும்'


Recommended Posts

நாளிதழ்களில் இன்று: 'ரூபாய் மதிப்பு மீண்டும் உயரும்'

இன்றைய நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள் சிலவற்றைத் தொகுத்தளிக்கிறோம்.

தினமணி - 'ரூபாய் மதிப்பு மீண்டும் உயரும்'

Rupee Dollarபடத்தின் காப்புரிமைINDRANIL MUKHERJEE

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துவருவது குறித்து கவலைப்படத் தேவை இல்லை என நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் ராஜீவ் குமார் கூறியுள்ளார்.

டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு கடந்த மூன்று ஆண்டுகளில் 17% அதிகரித்துள்ளது. ஆனால், கடந்த ஓராண்டில் மட்டும் 9.8% சரிந்துள்ளது. எனவே ரூபாய் தனது பழைய மதிப்பை எட்டும் என்று அவர் கூறியுள்ளார்.


தி இந்து ஆங்கிலம் - கேரளாவில் உயரும் பலி எண்ணிக்கை

Kerala Floods

கேரளாவில் கனமழையால் உண்டான வெள்ளம் தொடர்பான பாதிப்புகளால் வியாழன்று 89 பேர் இறந்துள்ளனர். இத்துடன் சேர்த்து இதுவரை கேரளாவில் வெள்ளத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை 156 ஆக உயர்ந்துள்ளதாக தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மாநிலமெங்கும் உள்ள 1,200 நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். தேசிய பேரிடர் மேலாண்மைப் படையின் மேலும் 12 குழுக்கள் கேரளா சென்றுள்ளன.


தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - அஸ்ஸாமில் ஒரு பசுக்கொலை

பசுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகோப்புப் படம்

அஸ்ஸாம் தலைநகர் குவஹாத்தியில் பசுக்களை கடத்தியதாக சந்தேகப்பட்டு, வியாழக்கிழமை அதிகாலை கும்பல் ஒன்று நால்வரைத் தாக்கியதில் தெபென் ராஜபோங்ஷி எனும் 35 வயதாகும் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மீதமுள்ள மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாங்கள் பன்றிகள் வாங்கவே வாகனத்தில் வந்ததாக தாக்கப்பட்டவர்கள் கூறியுள்ளனர். அவர்கள் தாக்கப்பட்ட இடத்தின் அருகில் இரு பசுக்கள் இருந்ததாக காவல் துறை தெரிவித்துள்ளது.


டெக்கன் கிரானிக்கல் - உமர் காலித் மீதான தாக்குதல் முயற்சி

உமர் காலித்படத்தின் காப்புரிமைUMAR KHALID / FACEBOOK

டெல்லியில் கடந்த திங்களன்று ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர் உமர் காலித் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயன்றது தாங்கள்தான் என்று இரு இளைஞர்கள் ஃபேஸ்புக்கில் காணொளி ஒன்றை பதிவேற்றம்செய்துள்ளனர்.

தர்வேஷ் ஷாபுர், நவீன் தலால் என்று தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் அவர்கள் இந்தியர்களுக்கு சுதந்திர தின பரிசு வழங்க அந்த தாக்குதலை நடத்த முயன்றதாகக் கூறியுள்ளனர். தாங்களாகவே காவல் துறையிடம் சரணடைய உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

https://www.bbc.com/tamil/india-45217514

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.