Jump to content

முல்லைத்தீவிலிருந்து பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள்


Recommended Posts

முல்லைத்தீவிலிருந்து பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள்

 

முல்லைத்தீவு நாயாறு பகுதியிலிருந்து வாடிகள் எரிப்பு தொடர்பில் கைதான தென்னிலங்கை மீனவர்கள் பொலிஸ் பாதுகாப்புடன் இன்று வெளியேறினர்.

39408868_1790237611073019_68018101704615

முல்லைத்தீவு நாயாறு பகுதியில் கடந்த 13 ஆம் திகதியன்று  தமிழ் மீனவர்களுக்கு சொந்தமான 8 மீன் வாடிகள் மற்றும் உடைமைகள் விஷமிகளால் எரித்து  அழிக்கப்படட சம்பவத்தை தொடர்ந்து குறித்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வந்தது.

39406741_1790236664406447_87709613603778

இதனையடுத்து அந்த பகுதியில் அத்துமீறி குடியேறி கடற்தொழில் நடவடிக்கையினை மேற்கொண்டுவந்த தென்பகுதி மீனவர்கள் ஒரு பகுதியினர்  இன்றையதினம் மாலை முதல் தாமாக வெளியேறிவருகின்றனர் .

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தமிழ் மீனவர்களின் உடமைகளை  எரித்தார்கள் என்ற சந்தேகத்தில் மூன்று  தென்னிலங்கை மீனவர்கள் பொலிஸாரால்  கைதுசெய்யப்பட்டனர்.

39313152_1790237047739742_87731346095346

இந்நிலையில் இன்றையதினம்  படகுகள் வலைகள் என்பனவற்றை வாகனங்களில் ஏற்றிக்கொண்டு புறப்பட ஆயத்தமான வேளை தமது எரிக்கப்பட்ட சொத்துக்களுக்கு பதில் கூருமாறு   நாயாறு மக்களால் அவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாதபடி மக்கள் தடுத்ததையடுத்து ஏராளமான பொலிஸார்  குவிக்கப்பட்டு மிகவும் பாதுகாப்பான முறையில் தென்பகுதி மீனவர்கள்  அனுப்பி வைக்கப்பட்டனர்.

39301919_1790236564406457_83188881609562

இதனால் அந்த பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டதோடு  பொலிஸார் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாதவண்ணம் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் .

http://www.virakesari.lk/article/38603

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, நவீனன் said:

தமது எரிக்கப்பட்ட சொத்துக்களுக்கு பதில் கூருமாறு   நாயாறு மக்களால் அவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாதபடி மக்கள் தடுத்ததையடுத்து ஏராளமான பொலிஸார்  குவிக்கப்பட்டு மிகவும் பாதுகாப்பான முறையில் தென்பகுதி மீனவர்கள்  அனுப்பி வைக்கப்பட்டனர்.

இங்கு ஓட்டு பிச்சை எடுக்க தமிழ் அரசியவாதிகள் வருவினம்தானே ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனுமான் வைச்ச நெருப்பு, தங்கள் தொழிலுக்கே நாசம் வரும் என்று தெரிந்தும் வைக்கிறாங்களே.

இதால தான் மோட்டுச் சிங்களவன் எண்டு சொல்லுறவயளோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Nathamuni said:

அனுமான் வைச்ச நெருப்பு, தங்கள் தொழிலுக்கே நாசம் வரும் என்று தெரிந்தும் வைக்கிறாங்களே.

இதால தான் மோட்டுச் சிங்களவன் எண்டு சொல்லுறவயளோ?

இல்லை நாதமுனி அவர்கள் திரும்பி செல்வது போல் சென்று எங்கடை வலசு அரசியல்வாதிகளை வைத்து ஒரு சட்டம் இயற்றி அந்த சட்ட மூலம் அதிகாரத்தை தக்கவைத்து வடகிழக்கு கடலில் பாரிய சுரண்டல் நடைபெறும் தமிழனை சுரண்டி அடிமையாக்குவது ஒன்றே சிங்கள இனவாதிகளின் பிறப்பு முதல் கொண்டு இறப்பு உள்ளவரைக்கும் குறிக்கோள் அதுக்காக எதை இழக்கவும் தயாராக உள்ளனர் நாம அப்படியா ....

Link to comment
Share on other sites

1 hour ago, பெருமாள் said:

இல்லை நாதமுனி அவர்கள் திரும்பி செல்வது போல் சென்று எங்கடை வலசு அரசியல்வாதிகளை வைத்து ஒரு சட்டம் இயற்றி அந்த சட்ட மூலம் அதிகாரத்தை தக்கவைத்து வடகிழக்கு கடலில் பாரிய சுரண்டல் நடைபெறும் தமிழனை சுரண்டி அடிமையாக்குவது ஒன்றே சிங்கள இனவாதிகளின் பிறப்பு முதல் கொண்டு இறப்பு உள்ளவரைக்கும் குறிக்கோள் அதுக்காக எதை இழக்கவும் தயாராக உள்ளனர் நாம அப்படியா ....

சிங்களவன் சரி, அரேபிய வந்தேறிகளை பற்றி ஒருத்தரும் ஏன் வாய் திறக்கவில்லை???????

அங்கே தொடங்குகிறது அரெபியனின் வெற்றி.

Link to comment
Share on other sites

நன்றி கூறி, மன்னிப்புக்கோரி நாயாற்றில் இருந்து சிங்கள மீனவர்கள் வெளியேறினார்கள்….

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

Mullai-Nayaru2.jpg?resize=800%2C533

 

முல்லைத்தீவு நாயாறு இறங்குதுறை பகுதியில் தங்கியிருந்த தென்னிலங்கை சிங்கள மீனவர்கள் இன்று மாலை அதியுச்ச காவற்துறைப் பாதுகாப்புடன் நாயாறு பகுதியிலிருந்து வெளியேறி சென்றுள்ளார்கள். நாயாறு இறங்குதுறையில் தமிழ் மக்களுக்கு சொந்தமான 8 வாடிகள் மற்றும் கடற்றொழில் உபகரணங்கள் கடந்த 13ம் திகதி திட்டமிட்டு தீக்கிரையாக்கப்பட்டது.

இதனையடுத்து தென்னிலங்கை மீனவர்கள் நாயாற்றிலிருந்து வெளியேற்றப்படவேண்டும். என கோரிக்கை விடுத்த நிலையில் இன்று வியாழக்கிழமை மாலை நூற்றுக்கணக்கான காவற்துறையினரின்  பாதுகாப்புடன், சிங்கள மீனவர்கள் நாயாற்றிலிருந்து வெளியேறியுள்ளனர்.

சிங்கள மீனவர்கள் வெளியேறும் போது, தமிழ் மீனவர்களுக்கு நன்றி தெரிவித்தனர் எனவும், வாடிகள் எரிக்கப்பட்ட சம்பவத்திற்கு தமது வருத்ததைத் தெரிவித்து மன்னிப்புக்கோரியதாகவும். தமிழ் மீனவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக சம்பவ இடத்தில் நின்றிருந்த மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது,

கடந்த 13ம் திகதி தமிழ் மக்களுக்கு சொந்தமான வாடிகள் அநியாயமாக தீக்கிரையாக்கப்பட்டு இன்று அந்த மக்கள் தொழிலுக்கும் செல்ல முடியாமல் கையறு நிலையில் நிற்கிறார்கள். இந்நிலையில் மக்களும் அதனுடன் இணைந்து பல்வேறு தரப்புக்கள் ஊடாகவும் தாங்கள்கோரிக்கையை முன்வைத்ததாகவும் தெரிவித்தார்.

Mullai-Nayaru2-1.jpg?resize=800%2C533

அதாவது, நாயாற்றிலிருந்து தென்னிலங்கை மீனவர்கள் வெளியேற்றப்படவேண்டும், கொழுத்தப்பட்ட நாசமக்கப்பட்ட சொத்துக்களுக்கு இழப்பீடு கொடுக்கப்படவேண்டும். இது நிறைவேற்றப்படும்வரை பட்டினிசாவை எதிர்கொண்டாலும் பரவாயில்லை.  மீனவர்கள் தொழிலுக்கு செல்லமாட்டார்கள். என இந்நிலையில் இன்று மாலை மக்கள் தன்னை அழைத்த மக்கள் அதிகளவான காவற்துறையினர் வந்து நிற்பதாக சொன்னார்கள்.

அதனையடுத்து தான் நாயாறு பகுதிக்கு சென்றபோது அங்கே தென்னிலங்கை மீனவர்கள் தங்களுடைய பொருட்களை வானங்களில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு பல நூற்றுக்கணக்கான காவற்துறையினருடைய பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கையை யார் எடுத்திருந்தாலும் அதனை தாம் வரவேற்பதாகவும், காரணம் மிக மோசமான போரை சந்தித்த மக்கள் மீள்குடியேற்றத்தின்போது எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லாமலேயே வந்தார்கள் எனவும் குறிப்பிட்டார்.

குறிப்பாக அந்த மக்களுடைய பொருளாதாரத்தை அல்லது வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் திட்டமிட்டு தென்னிலங்கை மீனவர்கள் முல்லைத்தீவுக்கு வரவழைக்கப்பட்டார்கள். அதற்கு மேலாக சட்டவிரோத தொழில்கள் அத்தனையையும் செய்வதற்கு அவர்களுக்கு பூரணமான அனுமதி கொடுக்கப்பட்டது.

இதனால் போருக்கு பின்னரான காலத்தில் தமிழ்  மக்கள் இழந்தவைகள் ஏராளம். அந்தவகையில் எவருடைய தலையீடும் இல்லாமல், எந்த இடையூறும் இல்லாமல் தமிழ்  மீனவர்கள் தங்கள் சுய பொருளாதாரத்தை வளர்த்தெடுப்பதற்கதன சந்தர்ப்பமாக தென்னிலங்கை மீனவர்களின் வெளியேற்றம் அமையும் என தாம் நம்புவதாகவும் காவற்துறையினர்  தெரிவித்துள்ளனர்.

Mullai-Nayaru1.jpg?resize=800%2C533

http://globaltamilnews.net/2018/91693/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

இல்லை நாதமுனி அவர்கள் திரும்பி செல்வது போல் சென்று எங்கடை வலசு அரசியல்வாதிகளை வைத்து ஒரு சட்டம் இயற்றி அந்த சட்ட மூலம் அதிகாரத்தை தக்கவைத்து வடகிழக்கு கடலில் பாரிய சுரண்டல் நடைபெறும் தமிழனை சுரண்டி அடிமையாக்குவது ஒன்றே சிங்கள இனவாதிகளின் பிறப்பு முதல் கொண்டு இறப்பு உள்ளவரைக்கும் குறிக்கோள் அதுக்காக எதை இழக்கவும் தயாராக உள்ளனர் நாம அப்படியா ....

இது வெளியே தெரியாமல் கொள்ளை, கொலை... அட்டுழியம் செய்யும் முந்தின காலம் இல்லை என்பதை சிங்களவர்கள் உணர்கிறார்கள். காலம் எப்போதும் ஒரே வகையாக இருப்பதில்லை.

சும்மா எரித்துப் பயமுறுத்தி, அடித்து திரத்தி...சிங்கள போலீஸ், ராணுவ துணையுடன் தாமே தொழில் செய்ய முடியும் என்று நினைத்திருக்கலாம். 

ஆயினும், சமூக வலைத்தளங்கள் மூலமாக எரியும் போதே.... நேரடியாக உலகம் முழுவதும் பரவிய நிலையில்... அரசுக்கு வந்த அழுத்தமே, இவர்களை வெளியேற வைத்ததுக்கும்.... மூவர் கைதானத்துக்கும் காரணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடந்தது நன்மைக்கே என எடுத்துக்கொண்டு நாயாறு இனி முற்றிலும் தமிழ் பிரதேசமாக இருக்க என்ன ஆகவேணுமோ அதை பாருங்கப்பா !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vanangaamudi said:

நடந்தது நன்மைக்கே என எடுத்துக்கொண்டு நாயாறு இனி முற்றிலும் தமிழ் பிரதேசமாக இருக்க என்ன ஆகவேணுமோ அதை பாருங்கப்பா !

இதற்கு சரியான வேலை, புலம் பெயர் தமிழர்களிடம் உருவாகக் கூடிய ஒரு சட்டபூர்வமான லிமிட்டட் கம்பனி, பங்குகள் மூலம் நிதி திரட்டி, மேல்நாட்டு தொழில் நுட்பங்களை பயன்படுத்தி, உள்ளுர் மீனவருக்கு பயிற்சி கொடுதது, வேலை கொடுத்து, மீன்களை இங்கு அனுப்பி வருமானம் பார்ப்பது, தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

இதற்கு சரியான வேலை, புலம் பெயர் தமிழர்களிடம் உருவாகக் கூடிய ஒரு சட்டபூர்வமான லிமிட்டட் கம்பனி, பங்குகள் மூலம் நிதி திரட்டி, மேல்நாட்டு தொழில் நுட்பங்களை பயன்படுத்தி, உள்ளுர் மீனவருக்கு பயிற்சி கொடுதது, வேலை கொடுத்து, மீன்களை இங்கு அனுப்பி வருமானம் பார்ப்பது, தான்.

அது வேறை கொடுமை அங்கு வளம் வாய்ப்பு எல்லாம் இருந்தும் கன பொடி மோட்டார் சைக்கிளில் சுத்துவதுக்கு தான் முன்னுக்கு நிக்கினம் நண்டு பதனிட்டு நல்ல விலைக்கு அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகிறது அந்த விலை கொடுத்து இங்கு லண்டன்க்கு கூட வாங்கமுடியாத உயர் விலை பிரச்சனை ஆள் வள பற்றாகுறை இந்த கதை பழசாறு அடைத்து விற்க்கும் இடத்திலும் தொடர்கிறது ஊள்ளூர் ஆட்கள் எடுக்க முடியாமல் மலையக பக்கம் உள்ளவர்கள் வந்து வேலை செய்து இப்ப ஒன்று இரண்டு சிங்களமும் வேலைக்கு சேர்ந்து விட்டது யாரை முன்னுக்கு விடனும் என்று தொழிலை தொடங்க அதுகள் கொஞ்சம் காசு வந்தவுடன் லண்டன் கனடாவில் குளிருக்குள் வந்து கஷ்டபட போறம் என்று ஒற்றைக்காலில் நிக்குதுகள் இதுகளை என்ன செய்வது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, பெருமாள் said:

அது வேறை கொடுமை அங்கு வளம் வாய்ப்பு எல்லாம் இருந்தும் கன பொடி மோட்டார் சைக்கிளில் சுத்துவதுக்கு தான் முன்னுக்கு நிக்கினம் நண்டு பதனிட்டு நல்ல விலைக்கு அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகிறது அந்த விலை கொடுத்து இங்கு லண்டன்க்கு கூட வாங்கமுடியாத உயர் விலை பிரச்சனை ஆள் வள பற்றாகுறை இந்த கதை பழசாறு அடைத்து விற்க்கும் இடத்திலும் தொடர்கிறது ஊள்ளூர் ஆட்கள் எடுக்க முடியாமல் மலையக பக்கம் உள்ளவர்கள் வந்து வேலை செய்து இப்ப ஒன்று இரண்டு சிங்களமும் வேலைக்கு சேர்ந்து விட்டது யாரை முன்னுக்கு விடனும் என்று தொழிலை தொடங்க அதுகள் கொஞ்சம் காசு வந்தவுடன் லண்டன் கனடாவில் குளிருக்குள் வந்து கஷ்டபட போறம் என்று ஒற்றைக்காலில் நிக்குதுகள் இதுகளை என்ன செய்வது ?

நான் யாழ் US கோட்டலில் தங்கியிருந்த போது, ரெஸ்ரோரன்ற்ல, வெயிற்றர் வேலை செய்பவர், நீஙகள் லண்டன் எவ்விடம் என்றார். சொன்னதும், இங்கு வாழ்ந்தவர் போல, இவ்விடத்தில, இந்த ரோட்டில இருக்கிற கடைக்கு போறனியளோ என்றார். தமையனின் கடையாம். 35 இலட்சம் கட்டிப் போட்டு வெயிற்றிங்கு.

 

அந்தக் காசை வைச்சு இங்க நல்ல முயற்சி செய்திருக்கலாமே என்ற போது, அசட்டு சிரிப்பு வந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

இங்கு வாழ்ந்தவர் போல, இவ்விடத்தில, இந்த ரோட்டில இருக்கிற கடைக்கு போறனியளோ என்றார்.

கூகிள் மப்பை பார்த்து அடித்து விட்டுருக்கிறார் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, vanangaamudi said:

நடந்தது நன்மைக்கே என எடுத்துக்கொண்டு நாயாறு இனி முற்றிலும் தமிழ் பிரதேசமாக இருக்க என்ன ஆகவேணுமோ அதை பாருங்கப்பா !

நடந்தது நன்மைக்கு அல்ல......இனித்தான் அரசியல் சித்து விளையாட்டுகள் இருக்கு......

14 hours ago, Nathamuni said:

இதற்கு சரியான வேலை, புலம் பெயர் தமிழர்களிடம் உருவாகக் கூடிய ஒரு சட்டபூர்வமான லிமிட்டட் கம்பனி, பங்குகள் மூலம் நிதி திரட்டி, மேல்நாட்டு தொழில் நுட்பங்களை பயன்படுத்தி, உள்ளுர் மீனவருக்கு பயிற்சி கொடுதது, வேலை கொடுத்து, மீன்களை இங்கு அனுப்பி வருமானம் பார்ப்பது, தான்.

 அங்கு எதுவுமே நடமுறைப்படுத்த மாட்டீர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/17/2018 at 1:50 PM, பெருமாள் said:

அது வேறை கொடுமை அங்கு வளம் வாய்ப்பு எல்லாம் இருந்தும் கன பொடி மோட்டார் சைக்கிளில் சுத்துவதுக்கு தான் முன்னுக்கு நிக்கினம் நண்டு பதனிட்டு நல்ல விலைக்கு அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகிறது அந்த விலை கொடுத்து இங்கு லண்டன்க்கு கூட வாங்கமுடியாத உயர் விலை பிரச்சனை ஆள் வள பற்றாகுறை இந்த கதை பழசாறு அடைத்து விற்க்கும் இடத்திலும் தொடர்கிறது ஊள்ளூர் ஆட்கள் எடுக்க முடியாமல் மலையக பக்கம் உள்ளவர்கள் வந்து வேலை செய்து இப்ப ஒன்று இரண்டு சிங்களமும் வேலைக்கு சேர்ந்து விட்டது யாரை முன்னுக்கு விடனும் என்று தொழிலை தொடங்க அதுகள் கொஞ்சம் காசு வந்தவுடன் லண்டன் கனடாவில் குளிருக்குள் வந்து கஷ்டபட போறம் என்று ஒற்றைக்காலில் நிக்குதுகள் இதுகளை என்ன செய்வது ?

நான் உங்கள் கருத்துக்கள் முலம் அறிந்த வரையில் உங்களுக்கு ஊரில் இருந்து யாவாரம் செய்யும் அல்லது செய்ய நினைக்கும் நபர்களுக்கு பெரிதாக உதவ முடியும் என்று நினைக்கிறேன்.அதை ஒரு திரி திறந்து விரிவாக பகிரலாமே.உங்களுக்கு இடையுறு இல்லை என்றால்.பலருக்கு உதவலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, சுவைப்பிரியன் said:

நான் உங்கள் கருத்துக்கள் முலம் அறிந்த வரையில் உங்களுக்கு ஊரில் இருந்து யாவாரம் செய்யும் அல்லது செய்ய நினைக்கும் நபர்களுக்கு பெரிதாக உதவ முடியும் என்று நினைக்கிறேன்.அதை ஒரு திரி திறந்து விரிவாக பகிரலாமே.உங்களுக்கு இடையுறு இல்லை என்றால்.பலருக்கு உதவலாம்.

ஆம் நீங்கள் கூறுவது நல்ல விடயமே ஏற்கனவே கையை சுட்டுக்கொண்ட அனுபவமும் இருக்கு எதுவென்றாலும் யாழ் குடா நாட்டு மறை நீர் இழப்பு அற்ற தொழில்கள் நல்லது .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.