Jump to content

'ஒருநாள் இரவில் ஹர்திக் பாண்டியா கபில்தேவ் ஆகிவிட முடியாது'- பொரிந்து தள்ளிய ஹர்பஜன் சிங்


Recommended Posts

'ஒருநாள் இரவில் ஹர்திக் பாண்டியா கபில்தேவ் ஆகிவிட முடியாது'- பொரிந்து தள்ளிய ஹர்பஜன் சிங்

 

 

 
hardik%20and%20harbajanjpg

ஜாம்பவான் கபில்தேவுடன் ஹர்திக் பாண்டியாவை ஒருபோதும் ஒப்பிடாதீர்கள், ஒருநாள் இரவில் யாரும் கபில்தேவ் ஆகிவிட முடியாது என்று மூத்த வீரர் ஹர்பஜன் சிங் கடுமையாகச் சாடியுள்ளார்.

இந்திய அணியின் இளம் வீரர் ஹர்திக் பாண்டியாவின் ஆல் ரவுண்டர் திறமையை வைத்து ரசிகர்கள் கபில்தேவுடன் ஒப்பிட்டுப் பேசி வருகின்றனர். எதிர்கால இளம் கபில்தேவ் என்று ஹர்திக் பாண்டியா ரசிகர்களால் வர்ணிக்கப்படுகிறார்.

 

பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் குறிப்பிடத்தகுந்த அளவு பங்களிப்பைச் செய்ய வேண்டியதும், அணி இக்கட்டான நேரத்தில் சிக்கும் போது தூக்கி நிறுத்த வேண்டிய பொறுப்பும் ஆல் ரவுண்டரின் கடமையாகும்.

பந்துவீச்சு அதிகமாகத் தேவைப்படும் நேரத்தில் அதில் பங்களிப்பைச் செலுத்துவதும், பேட்டிங் தேவைப்படும் போது, அதில் கவனத்தை திருப்புவதும் ஆல் ரவுண்டருக்கு இருக்க வேண்டிய முக்கியத் திறமைகளில் ஒன்றாகும். இவர்களைத்தான் ஆல் ரவுண்டர் என்று அழைக்க முடியும். ஆனால், ஒரு சில போட்டிகளில் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் சிறப்பாகச் செயல்பட்டார் என்பதற்காக ஹர்திக் பாண்டியா கபில்தேவுடன் ஒப்பிடப்பட்டு வருகிறார்.

ஆனால், இங்கிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி மோசமான தோல்வியைச் சந்தித்தது. இந்த இரு போட்டிகளிலும் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

ஹர்திக் பாண்டியாவை கபில்தேவுடன் ஒப்பிட்டுப் பேசுவது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மூத்த வீரர் ஹர்பஜன் சிங்கிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர் அளித்த பதில்:

''ஹர்திக் பாண்டியாவுக்கு பல போட்டிகளில் பேட்டிங்கிலும் வாய்ப்பு அளிக்கப்பட்டது, பந்துவீச்சிலும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை பேட்டிங்கில் நம்பிக்கை ஏற்படும் வகையில் சிறப்பாகச் செயல்படவில்லை. ஒருவேளை பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்பட்டு இருக்க வேண்டும். இரண்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இதேநிலையில், ஹர்திக் பாண்டியா செயல்பட்டால், எதிர்காலத்தில் அவர் இந்திய அணியில் நீடித்து இருப்பதே கடினம்தான். தயவுசெய்து லெஜண்ட் கபில்தேவுடன், ஹர்திக் பாண்டியாவை ஒப்பிடாதீர்கள்.

ஆல் ரவுண்டர்களாக இருக்கும் இங்கிலாந்து வீரர்கள் பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் செயல்படுவதைப் போல் ஹர்திக் பாண்டியா செயல்படுகிறாரா? பின் ஏன் அவர் பின், ஆல் ரவுண்டர் என்ற பட்டத்தைக் கொடுக்கிறீர்கள். அவர் மீது இருக்கும் ஆல் ரவுண்டர் பட்டத்தை எடுத்துவிடுங்கள்.

ஒருநாள் இரவில் கபில்தேவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. ஒருநாள் இரவில் ஹர்திக் பாண்டியா, கபில்தேவ் ஆகிவிட முடியாது.''

இவ்வாறு ஹர்பஜன் சிங் காட்டமாகத் தெரிவித்தார்.

https://tamil.thehindu.com/incoming/article24705627.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.