Jump to content

முன்னாள் பிரதமர் `பாரத ரத்னா’ வாஜ்பாய் காலமானார்!


Recommended Posts

முன்னாள் பிரதமர் `பாரத ரத்னா’ வாஜ்பாய் காலமானார்!

3338_thumb.jpg
 

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் உடல்நலக் குறைவால் இன்று மாலை காலமானார். 

YYYYYYYY_18141.jpg

பா.ஜ.க-வின் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாய் வயது மூப்பின் காரணமாகவும், சிறுநீர்த்தொற்று நோய் ஏற்பட்டதாலும் டெல்லியில் உள்ள எம்ய்ஸ் மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, தலைமை மருத்துவர்களின் மேற்பார்வையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. முன்னதாக, வாஜ்பாயின் உடல்நலத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக நேற்று இரவு மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அறிக்கை வெளியானதும் பா.ஜ.க தலைவர்களும் தொண்டர்களும் பதற்றத்தில் ஆழ்ந்தனர். அதன் பின்னர், மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வாஜ்பாய்க்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. 

 

 

இதையடுத்து, பிரதமர் மோடி, சுஷ்மா ஸ்வராஜ், அத்வானி, ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று  நலம் விசாரித்தனர். இவர்களைத் தொடர்ந்து, துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பா.ஜ.க தலைவர் அமித் ஷா உள்ளிட்டோரும் இன்று காலை நேரில் சென்று உடல்நிலை குறித்துக் கேட்டறிந்தனர். இந்த நிலையில், வாஜ்பாயின் உடல்நிலை மேலும் பின்னடைவு ஏற்பட்டதாகப் புதிய அறிக்கையை மருத்துவமனை வெளியிட்டது. இதனால், பா.ஜ.க-வின் முக்கிய தலைவர்கள் மருத்துவமனைக்கு விரைந்தனர். இந்த நிலையில் இன்று மாலை 5.05-க்கு வாஜ்பாய் காலமானார் என்று எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்துள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் 1924-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி பிறந்த வாஜ்பாய் தனது 93 வயதில் மரணம் அடைந்தார்.

 

 

vajpaeee_17134.jpg

அடல் பிகாரி வாஜ்பாய்... இந்திய அரசியல் வரலாற்றில், குறிப்பாக பி.ஜே.பி-யின் அதீத வளர்ச்சியில் இவரைத் தவிர்த்துவிட்டு எந்தவொரு தலைவரையும் சொல்லிவிட முடியாது எனலாம்...

https://www.vikatan.com/news/india/134203-atal-bihari-vajpayee-passed-away.html

Link to comment
Share on other sites

ஓரளவுக்கு ஏனும் ஈழத் தமிழர்கள் மேல் அனுதாபம் மட்டும் சிறிதளவு ஆதரவு போக்கை கொண்ட இந்திய ஆட்சியாளர்களாக விளங்கியவர்கள் இருவர். ஒருவர் வி.பி.சிங், மற்றவர் வாஜ்பாய்.

வாஜ்பாய் காலத்தில் தான் (1999 to 2004) இலங்கை இராணுவம் ஜெயசிக்குரு ஆரம்பித்து 1999 இல் படுதோல்வி அடைந்தது. இக் காலத்தில் புலிகள் ஆயுத மற்றும் வள ரீதியில் உச்சத்தை  அடையக் கூடிய விதமாக கடற்புலிகளின் பலம் பெரு வளர்ச்சி அடைந்து இருந்தது. இதற்கு வாஜ்பாய் அரசில் இருந்த புலிகளின் அனுதாபி என சொல்லப்படுகின்ற இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்ணாண்டஸ் இந்திய கடற்படையை புலிகளுக்கு எதிராக பெரியளவில் இயங்க விடாமை தான் காரணம்  என அப்போது சொல்லப்பட்டது. புலிகளின் ஓயாத அலைகள் 3 உம் இவரது ஆட்சி காலத்தில் தான் இடம்பெற்றது. ஆனால் யாழ்ப்பாணத்தை புலிகள் முழுமையாக கைப்பற்ற முற்பட்ட வேளை ராஜதந்திர செயற்பாடுகள் மூலம் அதை தடுத்ததும் வாஜ்பாய் அரசு தான்

(மேலே நான் எழுதியுள்ளது என் நினைவுகளில் இருந்து- சில தவறுகள் இருக்கலாம்)

வாஜ்பாய் இற்கு அஞ்சலிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாஜ்பாயின் அரசின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த திரு ஜோர்ஜ் பெர்ணாண்டஸ் அவர்கள் தமிழர்மீது கொண்டிருந்த அனுதாபமும், புலிகள் மீது வைத்திருந்த பரிவும் அந்நாட்களில் கடற்புலிகளின் தங்குதடையின்றிய போக்குவரத்திற்கு உதவியது என்பது நாங்கள் அறிந்ததுதான். இதன் காரணத்தினாலேயே அப்போதிருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், அந்நாள் இந்தியக் கடற்படைத் தளபதியும் வெளிப்படையாகவே திரு ஜோர்ஜ் பெர்ணாண்டஸ் அவர்களை விமர்சித்து வந்தார்கள்.

புலிகளின் யாழ் நோக்கிய முன்னகர்வுக்கு எதிரான வாஜ்பாய் அரசின் அழுத்தமே இம்மோதலில் புலிகளைக் கட்டிப் போட்டதென்பதும், புலிகளின் முன்னேற்றத்தில் இந்தியாவினால் கட்டாயமாக ஏற்படுத்தப்பட்ட தொய்வே இலங்கை ராணுவத்திற்குத் தேவையான கால அவகாசத்தையும், மீள ஒருங்கிணையும் சந்தர்ப்பத்தையும் வழங்கியதோடு, பாக்கிஸ்த்தானிடமிருந்து பல்குழல் ஏவுகணைகளை வாங்கிக் குவிக்க உதவியதும் குறிப்பிடத் தக்கது.

இந்த பல்குழல் ஏவுகணைகளின் பாவனையே இறுதியில் சாவகச்சேரி வரை முன்னேறியிருந்த புலிகளின் அணிகளுக்கு பலமான இழப்புகளை ஏற்படுத்தி முகமாலைவரை பின்னகரத்தியென்பதும் ஈழப்போராட்டத்தின் வரலாற்றில் பதிவாகியிருக்கிறது.

அரச, வெளிவிவகார அதிகாரங்களுக்கு அப்பால்சென்று, உண்மையாகவே ஈழத் தமிழருக்கு ஆதரவாகச் செயற்பட்ட பெர்ணான்டஸ் போன்றவர்களைச் செயற்பட அனுமதி தந்த திரு வாஜ்பாயிற்கு எனது அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அணுகுண்டு சோதனை இழுத்துக்கொண்டு கிடந்தபோது உறுதியாக அனுமதியை குடுத்த மனிதர் இன்றும் அதன் சோதனை முடிவுகள் பலத்த முரண் இருந்தபோதிலும் இந்தியா எனும் தேசம் தலைநிமிர செய்தவர் .அவரின் நாட்டிக்கு விசுவாசமாய் இருந்தார் அந்த வகையில்  அவருக்கு அஞ்சலிகள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரு வாஜ்பாய் அவர்களுக்கு  அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள்  இந்திய பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது வரை ஆட்சி செய்த,  இந்தியப்  பிரதமர்களில்...
மக்களின் மன ஓட் டத்தையும், நாட்டின் நிலைமையையும்  நன்கு அறிந்து,  
ஆட்சி செய்த சிறந்த பிரதமர் வாஜ்பாய்.
திரு வாஜ்பாய் அவர்களுக்கு, எனது   அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரணித்த பிரதமருக்கு....எனது ஆழ்ந்த அஞ்சலிகள்!

இவரைப் பற்றிய ஒரு சுவாரசியமான கதை ஒன்றும் அப்போது உலாவியது!

இவர் தனக்குப் பிடித்துப் போன....பெண்ணைத் திருமணம் செய்யப்போவதாகத் தந்தையிடம் கூறினார்!

அப்போது தந்தையார்....கொஞ்சம் பொறுத்திரு...என்று கூறுவாராம்!

இவர் எப்போது தந்தையைக் கேட்டாலும்....அதே பதில் தான் வந்ததாம்!

அவ்வாறே....இவருக்குத் திருமணம்...நடக்காமலே போய் விட்டதாம்!

மிகச் சிறந்த பொறுமைசாலி...யாரென்றால்....இவர் தான் என்று அடித்துக் கூறுவேன்!

Link to comment
Share on other sites

வாஜ்பாயின் இறுதிச்சடங்கில் சிறிலங்கா அமைச்சர்கள்

 

Atal-Bihari-Vajpayee-300x200.jpgஇந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் இறுதிச்சடங்கில் சிறிலங்கா அரசாங்கத்தின் சிறப்புப் பிரதிநிதிகளாக அமைச்சர்கள் லக்ஸ்மன் கிரியெல்லவும், ரிஷாட் பதியுதீனும் பங்கேற்கவுள்ளனர்.

மூன்று தடவைகள் இந்தியாவின் பிரதமராகப் பதவி வகித்த அடல் பிகாரி வாஜ்பாய்  நேற்று புதுடெல்லியில் காலமானார்.

அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை 4 மணியளவில் புதுடெல்லியில், யமுனை ஆற்றங்கரையில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் சிறிலங்கா அரசாங்கத்தின் சிறப்புப் பிரதிநிதிகளாக அமைச்சர்கள் லக்ஸ்மன் கிரியெல்லவும், ரிஷாட் பதியுதீனும் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, முன்னாள் இந்தியப் பிரதமர் வாஜ்பாயின் மரணத்துக்கு இரங்கல் தெரிவிக்கும் செய்தி ஒன்றை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்திய அரசுக்கு அனுப்பியுள்ளார்.

அதில், “வாய்ஜ்பாயின் மரணம் ஆழ்ந்த துக்கத்தை தந்துள்ளது. அவர் சிறிலங்காவின் உண்மையான நண்பனாக இருந்தவர்.

1975ஆம் ஆண்டு தொடக்கம் வாஜ்பாயை எனக்குத் தெரியும்.  நான் பிரதமராக இருந்த 2001 2004 காலப்பகுதியில் அவருடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்தது.

சிறிலங்காவில் உறுதியான நிலையை ஏற்படுத்துவதில் அவர் முக்கிய பங்கை வகித்தார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/08/17/news/32373

Link to comment
Share on other sites

மிகச்சிறந்த தலைவரை இந்தியா இழந்துள்ளது – த.தே.கூ. இரங்கல்

 

Vajpayee-1.jpeg

இந்தியா தனது மிகச்சிறந்த அரசியல் தலைவரை இழந்துள்ளது என முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் மறைவு குறித்த இரங்கல் செய்தியில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

சற்றுமுன்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “முன்னாள் பாரத பிரதமரும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவருமான வாஜ்பாய் அவர்கள் ஒரு மிகச்சிறந்த தலைவர் மட்டுமல்லாது அவரது தொலைநோக்கு தலைமைத்துவத்தின் கீழ் இந்தியா அநேக சாதனைகளை நிலைநாட்டுவதற்கும் வழிவகுத்தார்.

தனது நேர்மையான தாழ்மையுடன் கூடிய தலைமைத்துவத்தினால் இந்தியாவை வழிநடத்திய வாஜ்பாய் அவர்கள் உலகம் முழுவதுமுள்ள ஆயிரக்கணக்கான மக்களினால் நேசிக்கப்பட்ட மதிக்கப்பட்ட ஒரு தலைவராவார்.

இலங்கை வாழ் தமிழ் மக்களின் சார்பில், அவரது குடும்பத்தினருக்கும் , பாரதிய ஜனதா கட்சிக்கும், இந்திய அரசாங்கத்திற்கும் இந்திய மக்களிற்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

பெரும் தலைவரை இந்தியா இழந்து விட்டது: மஹிந்த இரங்கல்

 

mahinda-vajpayee.jpg

இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மரணத்திற்கு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ இரங்கல் தெரிவித்துள்ளார்.

அடல் பிஹாரி வாஜ்பாய் தனது 93 ஆவது வயதில் டெல்லி எய்மஸ் மருத்துவமனையில் இன்று மாலை 5 மணியளவில் காலமானார்.

அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர், மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், கலை உலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மஹிந்த ராஜபக்ஷவும் தனது டுவிட்டரில் இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார்.

“முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் என்னும் பெரும் தலைவரை இந்தியா இழந்து விட்டது. இந்திய மக்களுக்கும் அவரது குடும்பத்தவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன்” என அவரது கீச்சில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல், எய்ம்ஸ் வைத்தியசாலையில் இருந்து வீட்டுக்கு கொண்டுவரப்பட்டு குடும்பத்தினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

இலங்கையின் உண்மையான நண்பனை நாம் இழந்துவிட்டோம்: ஜனாதிபதி மைத்திரி

 

Maithripala-Sirisena-Vajpayee.jpg

இலங்கையின் உண்மையான நண்பனை நாம் இழந்துவிட்டோம் என, அடல் பிஹாரி வாஜ்பாய் மரணத்திற்கு இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தனது 93 ஆவது வயதில், டெல்லி எய்மஸ் மருத்துவமனையில் இன்று மாலை 5 மணியளவில் காலமானார்.

அவரது மறைவுக்கு இந்திய ஜனாதிபதி, பிரதமர், மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், கலை உலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்ற நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதன் படி அவரது உத்தியோகப்பூர்வ டுவிட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“இன்று, நாம் ஒரு பெரிய மனிதநேயமுடையவரையும், இலங்கையின் உண்மையான நண்பனையும் இழந்துள்ளோம். முன்னாள் இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் ஒரு தொலைநோக்கு தலைவர் மற்றும் ஜனநாயகத்தின் ஒரு தீவிர பாதுகாவலராவார்.

இந்நிலையில் அவரது குடும்பத்தினர் மற்றும் மில்லியன் கணக்கான மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.

 

http://athavannews.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

2009 இல் பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தால் ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் மாற்றம் வரக்கூடும் என்று பலர் நம்பியிருந்தார்கள். ஆனால் இந்தியாவின் போரைத்தானே மகிந்த நடாத்திக்கொண்டிருந்தார் என்பதால் குறுகிய இடைவெளியில் எந்த மாற்றமும் நிகழ்ந்திருக்காது.

Link to comment
Share on other sites

யமுனை நதிக்கரையில் வாஜ்பேயி சிதைக்கு தீவைப்பு

வியாழக்கிழமை உயிரிழந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயி-யின் இறுதிச் சடங்குகள் தலைநகர் டெல்லியில் நடந்து வருகிறது.

அடல் பிஹாரி வாஜ்பேயி Image captionஅடல் பிஹாரி வாஜ்பேயி

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, பிரதமர் நரேந்திர மோதி, பூடான் மன்னர், ஆப்கன் முன்னாள் அதிபர் அமீர் கர்சாய் உள்ளிட்ட பல தலைவர்கள் இறுதி இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

பாஜக தலைவர் அமித் ஷா, அத்வானி, இன்னாள் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர்கள், தேசியத் தலைவர்கள், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பல தலைவர்களும் மூன்று முறை இந்திய பிரதமராக பதவி வகித்த பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பேயி-யின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

டெல்லியில் யமுனை நதிக்கரையில் ஸ்மிரித் ஸ்தல் என்ற இடத்தில் பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பேயியின் இறுதிச் சடங்குகள் நடைபெற்று வருகின்றன. முப்படை வீரர்கள் அன்னாருக்கு மரியாதை செலுத்தினார்கள். முன்னாள் பிரதமர் வாஜ்பேயியின் உடலில் போர்த்தப்பட்டிருந்த தேசியக் கொடி அவரது குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது. தேசியக் கொடியை வாஜ்பேயியின் பேத்தி நிகாரிகா பெற்றுக் கொண்டார்.

வாஜ்பேயி Image captionவாஜ்பேயியின் இறுதி அஞ்சலி செலுத்த கூடிய மக்கள்

யமுனை நதிக்கரையில் எரியூட்டப்படும் அன்னாரின் உடலுக்கு முப்படைதளபதிகள், பல்வேறு மாநில முதலமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, தமிழகத் தலைவர்கள், தம்பிதுரை, திமுக சார்பில் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாக்வத், ஆகியோரும் இறுதிச்சடங்குகளில் கலந்துக் கொண்டுள்ளனர்.

வாஜ்பேயியின் குடும்ப உறுப்பினர்கள் குடும்ப முறைப்படி இறுதிச்சடங்குகள் செய்யப்படுகிறது. டெல்லியில் யமுனை நதிக்கரையில் ராஷ்ட்ரிய ஸ்ம்ருதி ஸ்தல் என்ற இடத்தில் இந்து மத முறைப்படி இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன.

21 ராணுவ குண்டுகள் முழங்க அடல் பிஹாரி வாஜ்பேயியின் உடலுக்கு மரியாதை வழங்கப்பட்டது. பிறகு, இந்து மத சம்பிரதாயப்படி வேத மந்திரங்கள் முழங்க சிதையூட்டப்பட்டது.

https://www.bbc.com/tamil/india-45223545

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, புங்கையூரன் said:

மரணித்த பிரதமருக்கு....எனது ஆழ்ந்த அஞ்சலிகள்!

இவரைப் பற்றிய ஒரு சுவாரசியமான கதை ஒன்றும் அப்போது உலாவியது!

இவர் தனக்குப் பிடித்துப் போன....பெண்ணைத் திருமணம் செய்யப்போவதாகத் தந்தையிடம் கூறினார்!

அப்போது தந்தையார்....கொஞ்சம் பொறுத்திரு...என்று கூறுவாராம்!

இவர் எப்போது தந்தையைக் கேட்டாலும்....அதே பதில் தான் வந்ததாம்!

அவ்வாறே....இவருக்குத் திருமணம்...நடக்காமலே போய் விட்டதாம்!

மிகச் சிறந்த பொறுமைசாலி...யாரென்றால்....இவர் தான் என்று அடித்துக் கூறுவேன்!

வாஜ்பாய் அவர்கள் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்தார் என்ற கதையும் உண்டு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.