Jump to content

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு சிபிஐக்கு மாற்றம்


Recommended Posts

தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 6 பேர் மீதான கைது நடவடிக்கை ரத்து; தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு சிபிஐக்கு மாற்றம்: விசாரணையை 4 மாதத்தில் முடிக்கவும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

 

 
high%20court%20maduraijpgjpgjpgjpg

உயர் நீதிமன்ற மதுரைக்கிளை வளாகம்: கோப்புப்படம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம் பவம் தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் உட்பட 6 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதையும் உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மே 22-ல் நடைபெற்ற போராட்டத்தின்போது கலவரம் மூண்டது. அப்போது, போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.

 

துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரிக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு நியமித்த ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசனும் தனியாக விசாரணை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்குகளை சிபிஐக்கு மாற்ற வேண்டும், துப்பாக் கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கும், காயமடைந்தவர் களுக்கும் இழப்பீட்டு தொகையை அதிகப்படுத்த வேண்டும், தலை மைச் செயலர், உள்துறை செயலர், ஆட்சியர், எஸ்பி ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும், சட்டவிரோத கைது நட வடிக்கைகளை கைவிட வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கை கள் தொடர்பாக 15 பொதுநல மனுக்கள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர்அகமது அமர்வு ஏற்கெனவே விசாரித்தது.

அப்போது அரசு தரப்பில், "ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 99 நாள் போராட்டம் அமைதியாக நடைபெற்றது. நூறாவது நாள் போராட்டத்தின்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதை மீறி போராட்டக்காரர்கள் கலவரம் செய்தனர். வேறுவழியின்றி துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டிய நிலைக்கு போலீஸார் தள்ளப்பட்ட னர். இந்த சம்பவத்தில் 72 போலீ ஸார் உட்பட 144 பேர் காயமடைந் தனர். 200 வாகனங்கள் சேதப்படுத் தப்பட்டன" என வாதிடப்பட்டது.

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான், ஷாஜிசெல்லன், இ.சுப்புமுத்துராம லிங்கம் ஏ.கண்ணன், பாஸ்கர் மதுரம், எஸ்.எம்.ஆனந்த முருகன், எழிலரசு உள்ளிட்டோர் வாதிட்டனர். இவர்கள் வாதிடும்போது, "துப்பாக் கிச்சூட்டின்போது போலீஸ் நிலை ஆணை பின்பற்றப்படவில்லை. திட்டமிட்டு துப்பாக்கிச்சூடு நடத்தப் பட்டுள்ளது. 99 நாள் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டவர்கள் அடை யாளம் காணப்பட்டு கொல்லப்பட் டுள்ளனர். இதனால் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும்" என வாதிட்டனர்.

இந்த வழக்கில் நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர்அகமது அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவு:

சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும். யாருடைய தவறாக இருந்தாலும் விசாரணை நியாய மாக நடைபெற வேண்டும். இங்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீ ஸார் மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட் டுள்ளன. அவ்வாறு இருக்கும்போது இந்த வழக்கை மாநில போலீஸாரே விசாரிப்பது சரியாக இருக்காது. இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர் வில் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது. துப்பாக்கிச்சூடு சம் பவம் குறித்து ஏன் சிபிஐ விசார ணைக்கு உத்தரவிடக் கூடாது என கேள்வி எழுப்பியது குறிப்பிடத் தக்கது.

மே 22-ல் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஒரே வழக்காக மாற்றி, சிப்காட் போலீஸார் பதிவு செய்த முதல் வழக்கின் குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 161 (3)-ன் கீழ் வாக்குமூலமாக கருதி விசாரிக்க வேண்டும் என கடந்த 2-ம் தேதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தற்போது சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வரும் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்படுகிறது. இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு விசா ரணைக் குழுவை டெல்லி சிபிஐ இயக்குநர் நியமிக்க வேண்டும். துப் பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் மட்டும் இல்லாமல், முழு பின்னணி குறித்தும் சிபிஐ விரிவாக விசாரித்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். விசா ரணையை சிபிஐ 4 மாதங்களில் முடிக்க வேண்டும்.

கூடுதல் இழப்பீடு கேட்டு தாக்கல் செய்த மனுக்கள் முடிக்கப்படுகின் றன. சிபிஐ விசாரணைக்கு பிறகு கூடு தல் இழப்பீடு கோரிக்கையை முன் வைக்க உரிமை வழங்கப்படுகிறது.

துப்பாக்கிச்சூடு தொடர்பான காவல்துறை நிலை ஆணை 703-ஐ போலீஸார் மீறியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. போலீஸ் நிலை ஆணை 703-ஐ தற்காலத் துக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க வேண்டியது அவசியம். இதற் காக டிஜிபி குழு ஒன்றை நியமிக்க வேண்டும். இக்குழு போலீஸார் மற்றும் ஆயுதங்களை பயன்படுத்துவது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை 1990-ல் தெரிவித்துள்ள கருத்துகள் மற்றும் சர்வதேச தரத்துக்கு ஏற்ப போலீஸ் நிலை ஆணையை மாற்றியமைக்க வேண்டும்.

தொலைத்தொடர்பு வசதியை தற்காலிகமாக முடக்கி வைக்கும் விவகாரத்தில் தெளிவாக வரை யறை இல்லை. இதற்காக கருத்துரிமை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ள கருத்துகளின் அடிப்படையில் புதிய விதிகளை வகுக்க உள்துறை செயலர் புதிய குழு அமைக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மக்கள் அதி காரம் அமைப்பைச் சே்ர்ந்த நெல்லை கடையநல்லூர் கலில் ரகுமான் (47), அவரது மகன்கள் முகமது அனாஸ் (22), முகமது இர் ஷாத் (20), ஆலங்குளம் வேல்முரு கன், கோவில்பட்டி சரவணன், உசிலம்பட்டி கோட்டையன் ஆகி யோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் முகமது அனாஸ் கன்னியாகுமரியில் ஹோமியோபதி மருத்துவப் படிப்பும் அவரது சகோ தரர் முகமது இர்ஷாத் நெல்லை பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பும் பயில்கின்றனர்.

பின்னர், 6 பேரும் தேசிய பாது காப்பு சட்டத்தில் கைது செய்யப் பட்டனர். இதை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர்அகமது அமர்வு, 6 பேர் மீதான தேசிய பாதுகாப்பு சட்ட உத்தரவை ரத்து செய்தது.

172 வழக்குகள் ஒன்றாக சேர்ப்பு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிப்காட் போலீஸார் முதல் வழக்கு (குற்ற எண்: 191/2018) பதிவு செய்தனர். பின்னர் இதே சம்பவம் தொடர்பாக சிப்காட், தூத்துக்குடி வடக்கு, தெற்கு, மத்திய காவல் நிலையங்களில் 172 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை ஒரே வழக்காக விசாரிக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டன.

இதை விசாரித்த உயர் நீதிமன்ற அமர்வு, ஒரே சம்பவத்துக்கு அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்வதை ஏற்க முடியாது. எனவே துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான 172 வழக்குகளையும் ஒரே வழக்காக சேர்த்து விசாரிக்க சிபிசிஐடிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்குதான் தற்போது சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது

https://tamil.thehindu.com/tamilnadu/article24695365.ece?utm_source=HP&utm_medium=hp-tslead

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.   தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.