Jump to content

இத்தாலியில் மேம்பாலம் இடிந்த பயங்கரம்! வேகநெடுஞ்சாலை வாகனங்கள் பாதாளத்தில்!!


Recommended Posts

இத்தாலியில் மேம்பாலம் இடிந்த பயங்கரம்! வேகநெடுஞ்சாலை வாகனங்கள் பாதாளத்தில்!!

.

இத்தாலியின் ஜெனோவா நகரில் அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் இதுவரை 22 பேருக்கு மேல் பலியாகியுள்ளனர். உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாமென அஞ்சப்படுகிறது.

முற்பகல் 11.30 மணியளவில் 100 மீற்றர் உயரத்தில் இருந்த இந்த மேம்பாலம் இடிந்து கீழே இருந்த தொடருந்து பாதையில் விழுந்துள்ளது. அப்போது மேம்பாலத்தால் அதிவேகமாக சென்று கொண்டிருந்த வாகனங்களும் கீழே விழுந்தன.இது ஒரு துன்பியல் விபத்து என இத்தாலி போக்குவரத்து அமைச்சர் அறிவித்துள்ளார்.

https://ibctamil.com/europe/80/104733?ref=home-imp-flag

Link to comment
Share on other sites

இத்தாலியில் பாரிய விபத்து: 22 பேர் உயிரிழப்பு – 8 பேர் படுகாயம் (2 ஆம் இணைப்பு)

 

 

Italy-bridge-collapse.jpg

இத்தாலி – ஜெனோவா பகுதியில் உள்ள பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 8 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெனோவாவிலுள்ள A10 நெடுஞ்சாலைப் பகுதியில், விமான நிலையத்திற்கு அருகே, ஆயிரத்து 100 மீட்டர் நீளமுடைய குறித்த பாலத்தின் 100 மீட்டர் பகுதியே இன்று (செவ்வாய்க்கிழமை) உடைந்து விழுந்துள்ளது.

இதன் காரணமாக அப்பகுதியில் நிறுத்திவைக்கப்பட்ட 20 க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்திருந்ததுடன், மக்கள் சிக்கியிருக்கலாம் என்ற நிலையில் 200 க்கும் மேற்பட்ட மீட்பு பணியாளர்கள், பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த விபத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 8 பேர் படு காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியில் 1100M பாலம் இடிந்து வீழ்ந்து நூற்றுக்கணக்கானவர்கள் பாதிப்பு!

இத்தாலி – ஜெனோவா பகுதியில் உள்ள பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில், நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்துள்ள நிலையில், பலர் உயிரிழந்திருக்கலாம் என அவசர பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

ஜெனோவாவிலுள்ள A10 நெடுஞ்சாலைப் பகுதியில், விமான நிலையத்திற்கு அருகே, ஆயிரத்து 100 மீட்டர் நீளமுடைய குறித்த பாலத்தின் 100 மீட்டர் பகுதியே இன்று (செவ்வாய்க்கிழமை) உடைந்து விழுந்துள்ளது.

இந்த விபத்தில், பல வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும், விபத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் பதிப்படைந்திருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் குறித்த பகுதிக்கு தீயணைப்பு வீரர்கள், பொலிஸார் மற்றும் அம்பியூலன்ஸ் விரைந்துள்ளதாகவும், அவர்கள் அங்கு இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த இடிபாடுகளில் பலர் சிக்கி இருக்கலாம் என்றும், மீட்பு பணிகளின் பின்னரே உயிரிழந்தவர்கள் தொடர்பில் அறிவிக்கமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1100 மீட்டர் நீளமுடைய குறித்த பாலமானது 1962 இல் ஆரம்பிக்கப்பட்டு அதன் நிர்மாணப்பணிகள் 1968 ஆம் ஆண்டு நிறைவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Italy-bridge-collapse1.jpg

http://athavannews.com/இத்தாலியில்-1100m-பாலம்-இடிந்/

Link to comment
Share on other sites

இத்தாலி பாலம் இடிந்து விபத்து: மீட்புப் பணி தீவிரம்

இத்தாலியின் வடமேற்கு பகுதியில் இருக்கும் ஜெனோவா நகரில் பாலம் ஒன்று இடிந்து விழுந்த விபத்தில் உயிர் பிழைத்தவர்களை தேடும் பணி தொடர்ந்து வருகிறது.

இத்தாலி பாலம் இடிந்து விபத்து: மீட்புப் பணியாளர்கள் தேடுதல் பணியில் தீவிரம்படத்தின் காப்புரிமைEPA

இந்த விபத்தில் 26 பேர் கொல்லப்பட்டனர் என்றும், 15 பேர் மோசமாக காயமடைந்துள்ளனர் என்றும் போலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் டஜன் கணக்கான வாகனங்கள் 45 மீட்டர் உயரத்தில் இருந்து கீழே விழுந்ததுள்ளது.

இடிபாடுகளில் சிக்கியவர்களின் அழுகை தொடர்ந்து கேட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதுவரை 12 பேரை காணவில்லை.

இத்தாலி முழுவதுதிலிருந்தும் வந்த 300 தீயணைப்பு வீரர்கள் மோப்ப நாய்களை கொண்டும், மலையேறும் கருவிகளை கொண்டும் காணாமல் போனவர்களை தேடி வருகின்றனர்.

பாலத்தின் பிற பகுதியும் இடிந்து விழலாம் என்ற அச்சத்தில் நூற்றுகணக்கானவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

அதிக மழைபெய்து கொண்டிருந்த சமயத்தில் பாலம் இடிந்து விழுந்துள்ளது. விபத்துக்கான காரணம் தெரியவில்லை என்று சொல்லப்படுகிறது; பாலத்தின் பாதுகாப்பு குறித்து கேள்விகளும் எழுந்துள்ளன.

இத்தாலிபடத்தின் காப்புரிமைREUTERS

இந்த பாலம் இடிந்து விழுந்ததற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என இத்தாலியின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

விபத்துக்குள்ளான மொரண்டி பாலம் 1960ல் கட்டப்பட்டது. ஏ10 என்னும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அந்த பாலம், உள்ளூர் துறைமுகங்களில் இருந்து சரக்குகளை கொண்டுவருவதற்கான முக்கிய வழியாக அமைந்துள்ளது.

பாலம் இடிந்த சமயத்தில் அதன் மேல் 30-35 கார்களும், மூன்று கனரக வாகனங்களும் இருந்தன.

பெரிய அடுக்குமாடி கட்டடம் மற்றும் பாலத்தின் சில பகுதிகள் சரிந்து ரயில்வே தண்டவாளங்கள், நதி மற்றும் சேமிப்பு கிடங்கு ஒன்றின் மீதும் விழுந்தது. தரையில் இருந்த யாரும் இதில் பலியாகவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன. சிலர் காயமடைந்துள்ளனர் என்று அறியப்படுகிறது.

இத்தாலியின் செஞ்சிலுவை சங்கத்தின் மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்கும் மார்சிலோ டே ஏஞ்சலிஸ், மீட்புப் பணியாளர்கள் இதை ஒரு நிலநடுக்கம் போன்று கருதி செயல்பட்டு வருவதாக பிபிசியிடம் தெரிவித்தார்.

"நிலநடுக்கத்தில் மீட்புப் பணி ஆற்றுபவர்களை இந்த விபத்து பகுதிக்கு அனுப்பியுள்ளோம். இதுவும் நிலநடுக்கம் போன்ற ஒரு சூழலே... மேலும் பிற இடங்களும் இடிந்து போகும் என்ற ஆபத்து இதிலும் உள்ளது என" மார்சிலோ டே ஏஞ்சலிஸ் என்றார்.

"மிகப்பெரிய முழக்கம் ஒன்று கேட்டது. முதலில் மின்னல் என்று நாங்கள் நினைத்தோம்" என இத்தாலி தொலைக்காட்சி ஒன்றில் சம்பவத்தை நேரில் பார்த்தவர் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

"நாங்கள் பாலத்திலிருந்து 5கிமீ தொலைவில் வசிக்கிறோம் இருப்பினும் எங்களுக்கு ஒரு மிகப்பெரிய சத்தம் கேட்டது…நாங்கள் பயந்துவிட்டோம்…கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது நகரமே ஸ்தம்பித்துவிட்டது." என்று அவர் மேலும் தெரிவித்தார்.

விபத்தில் பாதிப்படைந்த இத்தாலி மக்களுக்கு தனது அனுதாபங்களை தெரிவித்துள்ள ஃபிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மக்ரூங், தேவைப்பட்டால் ஃபிரான்ஸ் இத்தாலிக்கு உதவ தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/global-45191986

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.