Jump to content

இலங்கை - தென்னாபிரிக்க மோதும் இருபதுக்கு 20 போட்டி இன்று


Recommended Posts

இலங்கை - தென்னாபிரிக்க மோதும் இருபதுக்கு 20 போட்டி இன்று

 

 
 

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒரேயொரு இருபதுக்கு 20 போட்டி இன்று கொழும்பு, ஆர். பிரேமதாஸ விளையாட்டரங்களில் இரவு 7.00 மணிக்கு ஆரம்பகமாவுள்ளது.

sr.jpg

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணியானது இலங்கையுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு இருபதுக்கு 20 போட்டி ஆகியவற்றில் விளையாடி வருகிறது.

இதில் முதலாவதாக நடைபெற்று முடிந்த டெஸ்ட் போட்டித் தொடரினை இலங்கை அணி 2:0 என்ற கணக்கில் அபாரமாக வெற்றியீட்டி தொடரை கைப்பற்றியது. இதன் பின்னர் நடைபெற்ற ஐந்து ஒருநாள் போட்டித் தொடரை தென்னாபிரிக்க அணி 3:2 என்ற கணக்கில் வெற்றியீட்டி தொடரை கைப்பற்றியுள்ளது.

37629961_2679690285395495_34172028497365

cr.jpg

இந் நிலையில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு தொடரினை கைப்பற்றி சமநிலையில் இருக்க இன்று இடம்பெறப்போகும் மூன்வாதும் இறுதியுமான ஒரேயொரு பேட்டி கொண்ட இருபதுக்கு 20 தொடரை யார் கைப்பற்றுவாரகள் என்பது இன்றிரவு தெரியவரும்.

இதன்படி தென்னாபிரிக்க அணியுடன் இருபதுக்கு 20 தொடரில் களமிறங்கவுள்ள மெத்தியூஸ் தலைமையிலான இலங்கை அணியினை இலங்கை கிரக்கெட் தெரிவுக்குழுவானது கடந்த வாரம் அறிவித்தது.

இதற்கிணங்க இலங்கை அணியில் அஞ்சேலா மெத்தியூஸ், தசூன் சானக்க, குசல் ஜனித் பெரேரா, தனஞ்சய டிசில்வா, உபுல் தரங்க, குசல் மெண்டீஸ், திஸர பெரேரா, ஷெஹான் ஜயசூரிய, மதுசங்க, லஹிரு குமார, தினேஷ் சந்திமால், அகில தனஞ்சய, ஜெப்ரி வெண்டர்சே, சந்தகான் மற்றும் பினுர பெர்னாண்டோ ஆகிய 15 பேர் உள்ளடக்கப்பட்டிருந்தனர்.

எனினும் இலங்கை கிரிக்கெட் குழு நேற்று வெளியிட்ட தகவலுக்கிணங்க ஜெப்ரி வெண்டர்சே மற்றும் மதுசங்க ஆகியோர் இந்த குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களுக்கு பதிலாக கசூன் ராஜித மற்றும் இசுறு ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/38438

Link to comment
Share on other sites

இலங்கையின் பந்து வீச்சில் சின்னாபின்னமான தென்னாபிரிக்கா ; வெற்றியிலக்கு 99

 

 
 

இலங்கைக்கு எதிரான இருபதுக்கு 20 போட்டியில் தென்னாபிரிக்க அணி இலங்கையின் பந்து வீச்சுக்களை எதிர்கொள்ள முடியாது 16.4 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 98 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

sl_dfgd.jpg

கொழும்பு, ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி, முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது.

அதற்கிணங்க தென்னாபிரிக்க அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களாக அணித் தலைவர் டீகொக் மற்றும் அஸீம் அம்லா ஆகியோர் களமிறங்கி முதல் ஓவரிலேயே மூன்று நான்கு ஓட்டங்களை விளாசி இலங்கை அணிக்கு ஆட்டம் காட்ட ஆரம்பித்தனர்.

இருந்தபோதும் இரண்டாவது ஓவரை வீசுவதற்கு தனஞ்சய டிசில்வா பந்தை எடுத்ததும் தென்னாபிரிக்க அணியின் தலை எழுத்தினை மாற்றி அமைத்தார். அதற்கிணங்க அஸீம் அம்லா எதுவித ஓட்டங்களையும் பெறாது தனஞ்சயவின் பந்தில் சானக்கவிடம் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார்.

இதன் பின்னர் ஹெண்ட்ரிக்ஸின் ஜோடி சேர்ந்து ஆட ஆரம்பித்த அணித் தலைவர் டீகொக்கும் 20 ஒட்டங்களுடன் 3.4 ஆவது ஓவரில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்து வெளியேற இலங்கை அணியின் ரசிகர்களின் உற்சாகம் அதிகரித்தது. 

டீகொக்கைத் தொடர்ந்து ஹெண்ட்ரிக்ஸும் அகில தனஞ்சயவின் சுழலில் சிக்கி 19 ஓட்டங்களுடன் போல்ட் முறையில் வெளியேறினார். இதையடுத்து தென்னாபிரிக்க‍ அணியினர் ஓட்டங்களை குவிப்பதற்கு பதிலாக விக்கெட்டுக்களை இழந்து தடுமாறினர்.

அந்த வகையில் டூமினி 3 ஓட்டங்களுடனும் கிளேசன் 18 ஓட்டங்களுடனும் டெவிட் மில்லர் 14 ஓட்டங்களுடனும் பெலக்கொய்யோ  மற்றும் ரபடா ஆகியோர் ஓட்டம் ஏதும் பெறாது டக்கவுட் முறையிலும் ஆட்டமிழந்து வெளியேற, தென்னாபிரிக்க அணி 16 ஆவது ஓவர் நிறைவின் போது ஒன்பது விக்கெட்டுக்களை பறிகொடுத்து 93 ஒட்டங்களை பெற்றுக் கொண்டது.

இதையடுத்து தென்னாபிரிக்க அணி 100 ஓட்டங்களை தாண்டுமா என்ற சந்தேகம் இலங்கை ரசிகர்களின் மனதில் உதிக்க ஆரம்பித்தது, அந்த சந்தேகத்தை இலங்கை  அணியின் இசுறு உதான தீர்த்து வைத்தார்.

இதன்படி தென்னாபிரிக்க 16.4 ஓவர்களுக்கு இலங்கை அணியின் பந்து வீச்சில் சின்னாபின்னமாகி 98 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 98 ஓட்டங்களை மாத்திரம் பெற்று இலங்கைக்கு வெற்றியிலக்காக 99 ஓட்டங்களை நிர்ணயித்தது.

இலங்கை அணி சார்பாக லக்ஷான் சந்தகன் 19 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுக்களையும் தனஞ்சய டிசில்வா 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் அகில தனஞ்சய 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் கசூசன் ராஜித 27 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினையும் இசுறு உதான 9 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

http://www.virakesari.lk/article/38483

Link to comment
Share on other sites

Only T20 - SLvSA: தென்னாபிரிக்கா 98 ஓட்டங்களுக்கு ஆட்டமிழப்பு (UPDATE)

 
 Only T20 - SLvSA: தென்னாபிரிக்கா துடுப்பெடுத்தாட தீர்மானம்- Only T20 - SLvSA-South Africa won the toss and elected to bat first


சுற்றுலா தென்னாபிரிக்க அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான, கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இடம்பெறும் (14) ரி20 கிரிக்கெட் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி  சகல விக்கெட்டுகளையும் இழந்து 98 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணியின் பந்து வீச்சுக்கு முகம் கொடுக்க முடியாமல் தடுமாறிய தென்னாபிரிக்க அணி, 98 எனும் மிகக் குறைவான ஓட்டங்களையே பெற்றுக் கொண்டது.

தென்னாபிரிக்க அணி சார்பில், விக்கெட் காப்பாளர் குயின்டன் டி கொக் 20 ஓட்டங்களையும், றீஷா ஹென்ரிக்ஸ் 19 ஓட்டங்களையும், ஹென்ரிக் க்ளசென் 18 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

இலங்கை அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய, லக்ஷான் சந்தகன் 3 விக்கெட்டுகளையும், அகில தனஞ்சய, தனஞ்சய டி சில்வா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கசுன் ராஜித, இசுரு உதான ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இலங்கை அணி வெற்றி பெற 20 ஓவர்களில் 99 ஓட்டங்களை பெறவேண்டியுள்ளது.

தென்னாபிரிக்கா 98/10 (16.4)
குயின்டன் டி கொக் 20 (11)
றீஷா ஹென்ரிக்ஸ் 19 (16)
ஹென்ரிக் க்ளசென் 18 (16)

லக்ஷான் சந்தகன் 3/19 (4.0 ov)
அகில தனஞ்சய 2/15 (4.0 ov)
தனஞ்சய டி சில்வா 2/22 (4.0 ov)

Only T20 - SLvSA: தென்னாபிரிக்கா துடுப்பெடுத்தாட தீர்மானம் 6.51pm

 

 
 

சுற்றுலா தென்னாபிரிக்க அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான, ஒரேயொரு ரி20 கிரிக்கெட் போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று (14) இடம்பெறுகின்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்துள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை, இலங்கை அணி 2 - 0 என்ற வெற்றி கொண்டதோடு, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை, தென்னாபிரிக்க அணி 3 - 2 என வெற்றி கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், இன்று இடம்பெறும் ஒரேயொரு ரி20 போட்டியில் வெற்றி பெற  இரு அணிகளும் தங்களது திறமைகளை வெளிக்காட்டும் என நம்பப்படுகிறது.

இலங்கை அணி: அஞ்சலோ மெத்திவ்ஸ், குசல் ஜனித் பெரேரா, குசல் மெண்டிஸ், தினேஷ் சந்திமால், தசுன் சானக, தனஞ்சய டி சில்வா, அகில தனஞ்சய, திசர பெரேரா, லக்ஷான் சந்தகன், இசுரு உதான

தென்னாபிரிக்கா அணி: ஹஷிம் அம்லா, குயின்டன் டி கொக் (வி.கா), றீஸா ஹென்ட்ரிக்ஸ், ஹென்ரிக் க்ளசென், ஜீன்-போல் டுமினி, டேவிட் மில்லர், அன்டைல் பெஹலுக்வாயோ, ககிசோ ரபடா, ஜூனியர் டலா, லுங்கி கிடி, தப்ரீஸ் ஷம்ஸி

http://www.thinakaran.lk/2018/08/14/விளையாட்டு/26186/only-t20-slvsa-தென்னாபிரிக்கா-98-ஓட்டங்களுக்கு-ஆட்டமிழப்பு-update

Link to comment
Share on other sites

அடக்க நினைத்தாலும் அடித்துக் காட்டினார் சந்திமால் ; இருபதுக்கு 20 தொடர் இலங்கை வசம்

 

 

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி சந்திமாலின் துணையுடன் மூன்று விக்கெட்டுக்களினால் வெற்றியீட்டி ஒரேயொரு போட்டிய‍ை கொண்ட இருபதுக்கு 20 தொடரை கைப்பற்றியுள்ளது.

fsdfdf.jpg

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணியானது இலங்கையுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு இருபதுக்கு 20 போட்டி ஆகியவற்றில் விளையாடி வந்தது.

இதில் முதலாவதாக நடைபெற்று முடிந்த டெஸ்ட் போட்டித் தொடரினை இலங்கை அணி 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதன் பின்னர் நடைபெற்ற ஐந்து ஒருநாள் போட்டித் தொடரை தென்னாபிரிக்க அணி 3:2 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

அதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கிடையேயான இருபதுக்கு 20 போட்டி கொழும்பு, ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இரவு 7.00 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

mathiws.jpg

இதன் பிரகாரம் தென்னாபிரிக்க, இலங்க‍ை அணியின் பந்து வீச்சுக்களை எதிர்கொள்ள முடியாது 16.4 ஓவர்களிலேயே சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 98 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

1.jpg

தென்னாபிரிக்க அணி சார்பாக அணித் தலைவர் டீகொக் 20 ஓட்டங்களையும் ஹெண்ட்ரிக்ஸ் 19 ஓட்டங்களையும் கிளேசன் 18 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றுக் கொண்டனர்.

வெற்றியிலக்கு 99 தான் என்ற இலகுவாக எண்ணி களமிறங்கிய இலங்கை அணிக்கு முதல் ஓவரிலேயே ரபடா அதிர்ச்சி வைத்தியம் அளிதார். இதன்படி இலங்கை அணி நான்கு ஓட்டங்களை பெற்றிருந்தவேளை மூன்று ஓட்டங்களுடன் குசல் பெரேரா சம்ஸியிடம் பிடிகொடுத்து ஆட்டமிழக்க அடுத்து வந்த குசல் மெண்டீஸும் ரபடாவின் ஆறாவது பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதர்ச்சியை ஏற்படுத்தினார்.

அதன்படி இலங்கை அணி முதல் ஓவரில் இரண்டு விக்கெட்டுக்களை இழந்து 6 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தடுமாற ஆரம்பிக்க அடுத்தடுத்து களம்புகுந்த தினேஷ் சந்திமால் மற்றும் தனஞ்சய டிசில்வா அதிரடி ஆட்டத்துக்கு அஸ்திபாரம் இட்டனர்.

தனஞ்சய டிசில்வா நான்காவது ஓவரில் ஒரு 6 ஓட்டமும் 2 நான்கு ஓட்டங்களையும் விளாச மறுமுனையில் தினேஷ் சந்திமாலும் தனது பங்கிற்கு ஆறாவது ஓவரில் அடுத்தடுத்து ஒரு நான்கு ஓட்டத்தையும் ஒரு ஆறு ஒட்டத்தையும் பெற்றுக் கொடுக்க ஆட்டம் சூடு பிடிக்க ஆரம்பித்தது.

ஒரு கட்டத்தில் இலங்கை அணி 6.3 ஆவது ஓவருக்கு 50 ஓட்டங்களை கடந்தது. இதையடுத்து இவர்கள் இருவம் இணைந்து 40 பந்துகளுக்கு 50 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக் கொண்டனர். அதைத் தொடர்ந்து அதிரடியாக ஆடிய தனஞ்சய டிசில்வா 4 நான்கு ஓட்டங்களுடனும் 2 ஆறு ஓட்டங்கள் அடங்களாக 31 ஓட்டங்களை பெற்று ஜூனியர் டாலாவின் பந்தில் பெலக்கொய்யோவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய அணித் தலைவர் மெத்தியூஸும் எவ்வித ஓட்டங்களையும் பெறாது சம்ஸியின் பந்து வீச்சில் கிளேசனின் அற்புத பிடியெடுப்பு காரணமாக ஆட்மிழந்து வெளியேறினார். 

அடுத்து களமிறங்கி ஆடிவந்த தசூன் சானக்கவும் 11 ஆவது ஓவரில் சம்ஸியினுடைய பந்தில் அடுத்தடுத்து மூன்று நான்கு ஓட்டங்களை விளாசி 11.5 ஆவது ஓவரில் 16 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க திஸர பெரேராவுட் டக்கவுட் முறையில் சம்ஸியினுடைய பந்தில் போல்ட் ஆனார்.

எனினும் தன்னிலை மாறாது நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தினேஷ் சந்திமால் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இறுதியாக இலங்கை அணி 16 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து தென்னாபிரிக்க அணி நிர்ணயித்த 99 ஓட்டங்களை தொட்டது.

fdff.jpg

வெற்றிக்கு வழிவகுத்த தினேஷ் சந்திமல் 36 ஓட்டங்களுடனும் இசுறு உதான ஐந்து ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். 

பந்து வீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பில் ரபடா, சம்ஸி மற்றும் ஜூனியர் டலா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் டூமினி ஒரு விக்கெடடினையும் கைப்பற்றினர்.

அத்துடன் தென்னாபிரிக்க அணி இருபதுக்கு 20 ‍போட்டிகளில் பெற்றுக் கொண்ட குறைந்த ஓட்ட எண்ணிக்கை இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/38489

Link to comment
Share on other sites

இறுதி தருணங்களில் கலக்கமடைந்தேன்- மத்தியுஸ்

 

 

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ரி20 போட்டியின் இறுதி தருணங்களில்  நான் கலக்கமடைந்தேன் என இலங்கை அணியின் தலைவர் மத்தியுஸ் தெரிவித்துள்ளார்.

போட்டியின் இறுதி ஓவர்களில் நான் அச்சமடைந்தேன் இலக்கை எட்டுவது கடினமாக விளங்கியதற்கு நாங்களே காரணம் என மத்தியுஸ் தெரிவித்துள்ளார்.

இதற்காக  எங்களையே குறைசொல்லவேண்டும்  நாங்கள் தொடர்ந்தும் விக்கெட்களை இழந்துகொண்டிருந்ததால் இலக்கு கடினமாகியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

துடுப்பாட்டம் பந்துவீச்சு களத்தடுப்பு என மூன்று விடயங்களிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது இந்த உத்வேகத்தை ஆசிய கிண்ணப்போட்டிகளிற்கு கொண்டு செல்ல முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

rabada_au14.jpg

நான் இரசிகர்களிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன் ஒரு நாள் போட்டிகளில் நாங்கள் அவர்களை ஏமாற்றினோம் ஆனால் அவர்கள் எங்களை ஆதரித்தார்கள் இன்று நாங்கள் அவர்களிற்கு வெற்றியை வழங்கியுள்ளோம் எனவும் மத்தியுஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தென்னாபிரிக்கா முப்பது நாற்பது ஓட்டங்களை அதிகமாக பெற்றிருந்தால் போட்டியின் முடிவு மாறியிருக்கும் என அணித்தலைவர் ஜேபி டுமினி தெரிவித்துள்ளார்.

எங்களுடைய வேகப்பந்து வீச்சாளர்கள் எங்களிற்கு சிறப்பான ஆரம்பத்தை கொடுத்தனர் எனினும் நாங்கள் முப்பது நாற்பது ஓட்டங்கள் குறைவாக பெற்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தொடர் மூலம் தென்னாபிரிக்காவிற்கு பல சாதகமான விடயங்கள் கிடைத்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.virakesari.lk/article/38519

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்கச் சென்ற வயதான வாக்காளரின் பெயர், இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாமல் அதிர்ச்சியடைந்து திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.   ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார்.         வாக்குப்பதிவு மையம் உ.பாண்டி     வாக்குச்சாவடி உ.பாண்டி வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார். `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! | name in the dead voters list ramanathapuram woman failed to cast her vote - Vikatan
    • ஓமண்ணை…. பெரிய அநியாயம்….எனக்கெல்லாம் வாழ்க்கையின் பேக்ரவுண்ட் மியூசிக் அது. 70% க்கு மேல இப்ப wok style தாச்சிதான்.
    • மத்திய அரசுக்குச் சொந்தமான ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, தனது இந்திச் செய்தி சேனலான 'டிடி நியூஸ்'-இன் பிராண்டிங், செட் டிசைன், போன்றவற்றில் மாற்றம் செய்துள்ளதாகக் கடந்த 16ம் தேதி அன்று சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அதன் லோகோவை சிவப்பு நிறத்திலிருந்து காவி நிறுத்துக்கு மாற்றியிருக்கிறது.    டிடி நியூஸ் பா.ஜ.க. அரசு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் தனது கட்சி நிறமான காவியைப் புகுத்தி வருவதற்கு ஏற்கெனவே எதிர்க்கட்சிகள் கண்டனங்களைத் தெரிவித்து வரும் நிலையில் டிடி நியூஸ் சேனலின் லோகோவையும் காவி நிறத்துக்கு மாற்றியுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக வலைதளப் பயனாளர்கள் பலரும் கடும் அதிருப்தியும், கண்டனங்களும் தெரிவித்து வருகின்றனர். கடந்த 2012 முதல் 2016 வரை பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஜாஹர் சிர்கார், டிடி நியூஸ் சேனல் லோகோ மாற்றம் குறித்து கூறுகையில், “இது பிரச்சார் பாரதி அல்ல. பிரசார பாரதி. அனைத்து மத்திய அரசு நிறுவனங்களையும் காவி மயமாக்கும் நடவடிக்கை நடந்துவருகிறது.   டிடி நியூஸ் புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்குள் நுழைந்தால், அதன் நிறங்கள் காவி நிறமாக மாற்றப்பட்டுள்ளன. மக்களவை, மாநிலங்களவை ஊழியர்களில் பாதி பேர் இப்போது காவி நிற சீருடைகளை அணிந்துள்ளனர்" என்று விமர்சித்திருக்கிறார். Doordarshan: காவி நிறத்துக்கு மாறிய தூர்தர்ஷன் லோகோ; வலுக்கும் கண்டனங்கள்! பின்னணி என்ன? | DD News logo changes to saffron colour (vikatan.com)
    • கொத்து என்றால்.... தகரத்தில் அடிக்கும் கொத்துதான் கெத்து. 😂 அந்தச் சத்தமே.... வாயில் இருந்து உணவுக் குழாய் வரை குதூகலிக்கும் சத்தம் அது. தாச்சியில்... அதுகும்  இலங்கையில்  கொத்து செய்வதை இப்போதான் கேள்விப்படுகின்றேன்.
    • 🤣 இந்த நுளம்பு கூட்டத்தை அவர்கள் பாணியில் சில ஒபாமாக்கள், விஜி களை ஏவி எதிர்கொள்ளுவதுதான் புத்திசாலித்தனம். அல்லது நீர்யோக நகரம், கொஸ்டரீக்கா போன்றனவற்றையும் கையில் எடுக்கலாம். சீரியசாக எடுத்தால் எமக்கு மண்டை காய்ந்து விடும். ————— உண்மையில் ஓரளவுக்கு சாத்தியமான எடுகோள், பலூசிஸ்தான் போலான் கணவாய் வழி மேற்கே இருந்து ஈயுரேசியர், பேர்சியன்ஸும், வடக்கே கைபர் கணவாய் வழி வந்த மத்திய ஆசியர், மங்கோலியர், பிராமணரும் (வேதங்களை நம்பியோர்)….. சிந்து சமவெளியில் இருந்த திராவிட/தொன் தமிழ் நாகரீகத்தை பிரதியீடு செய்ய, திராவிட/தொல் தமிழர் விந்திய மலைக்கு தெற்கே ஒதுங்கினர். இங்கே திராவிடம் எனப்படுவது தொல் தமிழையே.  இன்று தென்னிந்தியாவில் காணப்படும் மக்களின், மொழிகளின், பண்பாடுகளின் தோற்றுவாய். அலர்ஜி உபாதைகள் இருப்போர் திராவிட என்பதற்கு பதில் தொந்தமிழ் என்றோ அல்லது X நாகரீகம் எனவோ அழைத்துக்கொள்ளலாம். ஆனால் X பெர்சியாவில் இருந்து வந்தது என்பது - சந்தேகமே இல்லாமல் - product of Costa Rica தான்🤣.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.