Jump to content

இது கோலியின் தவறு மட்டுமல்ல... பி.சி.சி.ஐ மாறாதவரை தோல்வி தொடரும்! #ENGvIND


Recommended Posts

இது கோலியின் தவறு மட்டுமல்ல... பி.சி.சி.ஐ மாறாதவரை தோல்வி தொடரும்! #ENGvIND

 

டெஸ்ட் கிரிக்கெட்டையும், ஐ.பி.எல் தொடரையும் ஒரே தராசில் வைத்துக்கொண்டிருக்கிறது பி.சி.சி.ஐ. இது மிக மிகப் பெரிய தவறு. 

இது கோலியின் தவறு மட்டுமல்ல... பி.சி.சி.ஐ மாறாதவரை தோல்வி தொடரும்! #ENGvIND
 

கோலி தலைமையிலான இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோற்றுள்ளது. இந்திய பேட்ஸ்மேன்களின் செயல்பாடுகளும், கேப்டன் கோலியின் அணித்தேர்வும் கேள்விக்குள்ளாகியுள்ளன. "வீரர்களைத் தேர்வு செய்ததில் கொஞ்சம் தவறுகள் நிகழ்ந்துவிட்டன" என்று லார்ட்ஸ் தோல்விக்குப் பிறகு தன் தவறை ஓப்புக்கொண்டார் இந்தியக் கேப்டன் விராட் கோலி. அடுத்த போட்டிக்கு முன் அவர் மாற்றிக்கொள்ளவேண்டிய விஷயங்கள் நிறையவே இருக்கின்றன. ஆனால், மாற வேண்டியது அவரது அணுகுமுறை மட்டுமல்ல... பி.சி.சி.ஐ சமீப காலமாக செய்துவரும் செலக்ஷன் தவறுகளும்தான்!

கோலி - பி.சி.சி.ஐ

இந்திய பேட்ஸ்மேன்களில், இந்தத் தொடரில் ஆடியவர்களில் விஜய், புஜாரா மட்டுமே டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன்கள். கோலி, தவான், ராகுல் மூவரும் 3 ஃபார்மட்களிலுமே இங்கிலாந்தில் விளையாடியுள்ளனர். 'ஆல் ரவுண்டர்' ஹர்டிக் பாண்டியாவும் இதுவரை இங்கிலாந்தில் ஆடிய 8 போட்டிகளிலுமே ஆடிவிட்டார். இந்திய அணியைப் பொறுத்தவரை ஒரு ஃபார்மட்டில் நன்றாக ஆடினால் அவர்களால் எல்லா ஃபார்மட்களிலும் ஜொலிக்க முடியும் என்று நினைக்கிறார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டையும், ஐ.பி.எல் தொடரையும் ஒரே தராசில் வைத்துக்கொண்டிருக்கிறது பி.சி.சி.ஐ. இது மிக மிகப் பெரிய தவறு. 

 

 

இரண்டு ஆண்டுகளுக்கு முன், கே.எல்.ராகுல் இந்தியாவின் நம்பிக்கையான டெஸ்ட் ஓப்பனர். சிட்னி, கொழும்பு, கிங்ஸ்டன் என வெளிநாட்டு மண்ணில் சதங்கள் அடித்து ஒரே ஆண்டில் அணியில் முக்கிய இடம் பிடித்தார். புனே (vs ஆஸ்திரேலியா), கொல்கத்தா (vs இலங்கை) என உள்ளூரிலேயே இந்திய பேட்ஸ்மேன்கள் திணறியபோதெல்லாம் நிலைத்து நின்று நம்பிக்கை தந்தார். அதுவரை டெஸ்ட் பேட்ஸ்மேனாக இருந்தவரை, இரண்டு ஐ.பி.எல் சீசன்களில் ஜொலித்ததால் அனைத்து ஃபார்மட்களுக்கும் தேர்வு செய்தனர். விளைவு - கடைசி 10 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் அவர் அடித்திருப்பது 126 ரன்கள்!

கே.எல்.ராகுல்

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ராகுல் இடம்பெற வேண்டுமென்று இங்கிலாந்து ஒருநாள் தொடர் முடிந்ததிலிருந்து விமர்சகர்கள் சொல்லி வருகிறார்கள். இங்கு ஒரு நல்ல டெஸ்ட் பேட்ஸ்மேனை இந்தியா இழந்திருக்கிறதே! இத்தனைக்கும் லிமிட்டெட் ஓவர் போட்டிகளில் விளையாட இந்திய அணியில் வீரர்கள் இல்லாமல் இல்லை. ஸ்ரேயாஸ் ஐயர், அம்பதி ராயுடு, மனீஷ் பாண்டே போன்ற வீரர்கள் சரியான வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும்போது, ஒரு நல்ல டி-20 சீசனைக் காரணமாக வைத்து ராகுலை எடுத்துள்ளனர். சரி, ஒருநாள் அணியில் எடுத்ததற்கும் டெஸ்ட், போட்டியில் சொதப்புவதற்கும் பி.சி.சி.ஐ என்ன செய்யும்? காரணம் இருக்கிறது!

ஒரு வீரர், டெஸ்ட், ஒருநாள், டி-20 என மூன்று ஃபார்மட்டிலும் விளையாடுமளவுக்கு மெச்சூரிட்டியுடன் இருக்கிறாரா என்பதை ஆராய வேண்டியது அவர்களின் பொறுப்புதான். ஒருநாள், டி-20 போட்டிகளில் தனக்கான இடத்தைப் பெற்றபிறகு ராகுலின் அணுகுமுறை முற்றிலுமாக மாறியிருக்கிறது. பௌலர்களை அட்டாக் செய்யவேண்டும் என்ற மனநிலையில்தான் டெஸ்ட் போட்டிகளிலும் களம் காண்கிறார். தவறான பந்துகளையும் அடிக்க முற்பட்டு வெளியேறுகிறார். லார்ட்ஸ் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் புஜாரா 25 பந்துகளில் 1 ரன்தான் அடித்தார். ஸ்டம்புக்கு வெளியே போகும் பந்துகளைத் தொடக்கூட இல்லை. அவ்வளவு நிதானமாக இருந்தார். ஆனால், ராகுல்..? தேவையில்லாமல் வெளியே போன பந்தைத் தொட, கேட்சாகி வெளியேறினார். ஒரு தேர்ந்த டெஸ்ட் பேட்ஸ்மேனுக்கு எந்த பந்தை அடிப்பது என்பதைவிட, எந்த பந்தை விடுவது என்று நன்றாகத் தெரிந்திருக்கவேண்டும். ஆனால், ராகுலின் புதிய அணுகுமுறை அவருக்குள் இருந்த டெஸ்ட் பேட்ஸ்மேனைத் தொலைத்திருக்கிறது.

கே.எல்.ராகுல் - பி.சி.சி.ஐ

இது ஒருபுறம் பிரச்னை என்றால், லிமிட்டெட் ஓவர் போட்டிகளில் நன்றாக விளையாடிவிட்டாலே அவர்களை டெஸ்ட் அணிக்கும் தேர்வு செய்வது எந்த வகையான லாஜிக் என்று தெரியவில்லை. ஹர்டிக் பாண்டியா... என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறார். அவர் எதிர்காலத்துக்கான மிகமுக்கிய வீரர்தான். ஆனால், அவர் முழுமையான கிரிக்கெட்டராக மாறுவதற்கு முன் டெஸ்ட் வாய்ப்பு கொடுப்பது எந்த வகையில் நியாயம்? கருண் நாயர் எந்த வகையிலும் பாண்டியாவை விட மோசமான பேட்ஸ்மேன் கிடையாது. சரி,  பாண்டியா ஆல் ரவுண்டர் என்றாலும், பௌலிங்கில் அவர் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறார் என்றும் தெரியவில்லை. கருண், ஜடேஜா என டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்களின் இடத்தை ஆக்கிரமித்து, இரண்டையும் பேலன்ஸ் இல்லாமல் செய்கிறது இவரது தேர்வு. இந்தத் தொடருக்கு முன்பாக, 24 முதல் தரப் போட்டிகளில் விளையாடியிருந்த ஹர்டிக் கைப்பற்றியது 31 விக்கெட்டுகள்தான். அவரது பேட்டிங் சராசரி வெறும் 30.10. அதேசமயம், கருண் நாயர் முதல் தரப் போட்டிகளில் வைத்திருக்கும் சராசரி 51.09. இந்த ரஞ்சி சீசனில் அவரது சராசரி 68.00 (7 போட்டிகளில் 612 ரன்கள்). ஆனால், பிளேயிங் லெவனில் விளையாடியது 'ஆல் ரவுண்டர்' ஹர்டிக்!

இந்த இருவர் மட்டுமல்ல, தவான், குல்தீப் என்று எல்லா வீரர்களும் 3 வகையான போட்டிகளிலும் விளையாடுகின்றனர். தொடர்ந்து போட்டிகள் நடந்துகொண்டே இருக்கும் இந்தக் காலகட்டத்தில், அநேக வீரர்கள் 3 ஃபார்மட்களிலும் விளையாடுவது சரியான போக்கல்ல. இங்கிலாந்து அணியில் குக், மாலன், ஜென்னிங்ஸ், போப் என ஸ்பெஷலிஸ்ட்கள் அணிவகுக்கின்றனர். அவர்களுக்கு டி-20 அவசரம் கிடையாது. டெஸ்டை டெஸ்ட் போல் விளையாடுகின்றனர்.  3 ஃபார்மட்களிலும் ஆடும் ஜோஸ் பட்லர், பேர்ஸ்டோ போன்றோருக்கு ஒவ்வொரு ஃபார்மட்டிலும் ஒவ்வொரு ரோல். அதை அவர்களால் சரியாகச் செய்ய முடியும் என்பதை உறுதி செய்தபிறகே அந்த வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. அதனால்தான் டெஸ்ட் போட்டியில் மீண்டும் விளையாட பட்லர் இவ்வளவு காலம் காத்திருக்கவேண்டியிருந்தது. ஆனால், இதுவே இந்தியாவாக இருந்தால், ஒரு நல்ல ஒருநாள் தொடர் போதும், உடனே டெஸ்ட் அணிக்குள் வந்துவிடுவார்கள். 

பேர்ஸ்டோ

மூன்று ஃபார்மட்களிலும் ஆடும்போது வீரர்களால் சீராக விளையாட முடியாது. அந்தந்த ஃபார்மட்டுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ள முடியாது. அப்படி விளையாட வேண்டுமெனில் அவர்கள் கோலி, டேவிட் வார்னர் போல அதீத முதிர்ச்சி அடைந்திருக்கவேண்டும். இவ்வளவு ஏன், டி-20 போட்டிக்கு செட் ஆகாததால், ஜோ ரூட் கூட கடைசி போட்டியில் கழட்டிவிடப்பட்டாரே! ஒரு சீனியர் வீரருக்கே அந்தப் பிரச்னை இருக்கும்போது, பாண்டியா, குல்தீப், ராகுல் போன்ற வீரர்களை அனைத்து ஃபார்மட்களிலும் ஆடவைத்து அவர்களின் தனித்துவத்தைக் கெடுத்துக்கொண்டிருக்கிறது பி.சி.சி.ஐ. 

இங்கு பி.சி.சி.ஐ டெஸ்ட் போட்டிகளை எப்படிப் பார்க்கிறது என்ற கேள்வி எழுகிறது. டி-20 போட்டிகளில் சோபித்துவிட்டாலே இந்திய டெஸ்ட் அணிக்கு இடம் கிடைத்துவிடுகிறது. ஐ.பி.எல் தொடர்தான் இந்திய அணிக்குள் வருவதற்கான நுழைவு வாயில் என்றாகிவிட்டது. ஆனால், அதுதான் 3 ஃபார்மட்களுக்குமான பொது வாயில் என்பதில்தான் சிக்கல். ஏனெனில், 85 ஆண்டுகளாக ரஞ்சி டிராஃபி நடந்துகொண்டிருக்கிறது. தொடர்ந்து நடந்துகொண்டிருப்பதற்கான காரணம் வேண்டுமல்லவா! இந்தியாவின் பிரதான தொடரான ரஞ்சிக்கே அணித் தேர்வில் வேலையில்லையெனில் துலீப் டிராஃபி, விஜய் ஹசாரே எல்லாம் எதற்காகவோ? அதில் ஜொலித்தால் ஐபிஎல் வாய்ப்புகள் கூட அரிதாகத்தான் கிடைக்கிறது.

ஹர்டிக் பாண்டியா - பி.சி.சி.ஐ

ஹர்டிக் பாண்டியா, ஜஸ்ப்ரீத் பும்ரா, குல்தீப் என கடைசியாக இந்திய டெஸ்ட் அணிக்குள் நுழைந்தவர்களின் ரஞ்சி செயல்பாடு என்ன? இதோ தொடர்ச்சியாக விளையாடி பும்ரா காயத்தால் அவதிப்படுகிறார். கோலியும் கூட லார்ட்ஸ் டெஸ்ட் முடிந்த பின், "தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக  ஓய்வில்லாமல் போட்டிகளில் விளையாடி வருவதால்கூட முதுகுவலி ஏற்பட்டிருக்கலாம்" என பகிரங்கமாக அறிவித்திருக்கிறார். ஒருநாள், டி-20, ஐ.பி.எல் என தொடர்ந்து ஆடியவர், இங்கிலாந்து மண்ணில், இங்கிலாந்து வேகங்களை தனி ஆளாக சமாளித்தவர் இன்று, மிகமுக்கியமான டெஸ்ட் போட்டியில் ஆடுவது சந்தேகமாகியுள்ளது. குல்தீப்பின் தேர்வு அவரது மூன்றாவது டெஸ்ட் போட்டியிலேயே கேள்விக்குறியாகிவிட்டது. டெஸ்ட் என்பது கிரிக்கெட்டின் கிளாசிக்கல் ஃபார்மட். இங்கு வெறும் சிக்ஸர்கள் அடிப்பவர்களாலும், கூக்லியாலும், வேகத்தாலும் விக்கெட் எடுப்பவர்களாலும் மட்டும் வெல்ல முடியாது. சரி, அப்போது இந்தியாவில் எத்தனை டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்கள் இருக்கிறார்கள்?

இங்கிலாந்துக்குச் சென்ற 18 பேர் கொண்ட இந்திய அணியில் கே.எல்.ராகுல், இஷாந்த் ஷர்மா, முரளி விஜய், புஜாரா தவிர்த்து அத்தனை பேரும் லிமிட்டெட் ஓவர்களில் ஜொலித்து இந்திய டெஸ்ட் அணிக்குள் நுழைந்தவர்கள்தான். ரஹானே, அஷ்வின், பும்ரா, ஷமி என இன்றைய சீனியர் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்ததும் கூட, ஐ.பி.எல் தொடர்தான்! இப்படி இருக்கையில், எங்கிருந்து டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்கள் வருவார்கள்? ரஞ்சி பெர்ஃபாமன்ஸ் என்பது கொஞ்சநாள் செய்தித்தாள்களில் இடம்பெற மட்டுமே! இந்திய சீனியர் அணிக்கான தேர்வில்தான் ஐ.பி.எல் தொடரின் பங்களிப்பு அதிகம் என்று நினைத்தால், இந்தியா - ஏ அணிக்குள் நுழைவதற்கும் அதுவே நுழைவுவாயிலாய் இருக்கிறது. 

மயாங்க் அகர்வால் - பி.சி.சி.ஐ

மயாங்க் அகர்வால் - காலம்காலமாக உள்ளூர் கிரிக்கெட்டில் ரன் எடுத்து வருகிறார். கடந்த ரஞ்சி சீசனில் கூட 1,160 ரன்கள் எடுத்திருந்தார். ஆனால், ஐ.பி.எல் தொடர் வந்தால் மட்டும் சொதப்பிவிடுவார். அதன் விளைவு - இன்னும் இந்தியா - ஏ அணிக்குத்தான் விளையாடி வருகிறார்.  'இந்திய அணியில் ஏற்கெனவே 3 ஓப்பனர்கள் இருக்கிறார்கள். அகர்வாலும் ஓப்பனர். அதனால் இடமில்லை' என்ற பதில் வரும். புஜாராவை உட்கார வைத்து ராகுலை 3-ம் இடத்தில் இறக்கி விடுபவர்கள், அகர்வாலையும் பயன்படுத்திப் பார்க்கலாமே! இவருக்காவது நிரந்தரமாக இந்திய ஏ அணியில் இடம் இருக்கிறது. இன்னும் சிலருக்கு அதுவும் இல்லை. 

இந்த ரஞ்சி சீசனில் 9 போட்டிகளில் 775 ரன்கள் (சராசரி : 64.58) குவித்திருந்த விதர்பா வீரர் சஞ்சய் ராமசாமி, தற்போது நடந்து வரும் தென்னாப்பிரிக்கா - ஏ அணிக்கு எதிரான `இந்தியா ஏ’  டெஸ்ட் அணியில் இல்லை. ரஞ்சி கோப்பையில் மட்டுமல்ல, இரானி கோப்பை ( 53, 27*) போட்டியிலும், போர்ட் பிரஸிடன்ட் அணிக்காக ஆடிய போட்டியிலும் (87) மிகச் சிறப்பாக விளையாடினார். ஆனால், அவருக்கு இந்தியா - ஏ அணியில் இடமில்லை. அதேபோல் 20 வயது பஞ்சாப் வீரர் அன்மோல்ப்ரீத் சிங். 5 ரஞ்சி போட்டிகளில் 2 இரட்டைச் சதங்கள் உள்பட 753 ரன்கள் (சராசரி : 125.50 ) குவித்திருந்தார். அவருக்கும் இந்தியா ஏ அணியில் இடமில்லை. 

சஹால் - பி.சி.சி.ஐ

'ஒரு சீசனில் நன்றாக ஆடிவிட்டால் உடனே இடம் கிடைத்துவிடுமா' என்ற கேள்வி எழும். ஆனால், இவர்கள் இடத்தில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிக்கொண்டிருப்பது பிரித்வி ஷா, சஹால், அக்சர் படேல் போன்ற லிமிடட் ஓவர் வீரர்கள் எனும்போது எப்படி கேள்வி கேட்காமல் இருக்க முடியும்? 6 ரஞ்சி போட்டிகளில் 34 விக்கெட்டுகள் (ஸ்டிரைக் ரேட் : 40.9) வீழ்த்திய தர்மேந்திரசிங் ஜடேஜாவுக்கு போர்ட் பிரெஸிடன்ட் அணிதான். ஆனால், சுழலுக்குச் சாதகமான இந்திய ஆடுகளத்தில், முதல் தரப் போட்டிகளில் 68.8 என்ற பௌலிங் ஸ்டிரைக் ரேட் எடுத்திருக்கும் சஹால் `ஏ’ அணியில் விளையாடிக்கொண்டிருக்கிறார். இதுதான் இந்தியாவில் ரஞ்சிப் போட்டிக்கும், அதில் ஜொலிப்பவர்களுக்குமான மரியாதை.

இந்திய அணிக்குள் வருபவர்களெல்லாம் ஐ.பி.எல் தொடர்களிலிருந்துதான் வருகிறார்கள். பி.சி.சி.ஐ அதைத்தான் தங்களின் செலக்ஷன் பாலிசியாக வைத்திருக்கிறது. அப்படியிருக்கையில் நிச்சயம் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்கள் உருவாகப் போவதில்லை. அப்படி உருவானாலும், கே.எல்.ராகுலுக்கு நடந்ததுபோல், ஒரு ஐ.பி.எல் சீசன், அவர்களுக்குள்ளிருக்கும் டெஸ்ட் பேட்ஸ்மேனைக் கொன்றுவிடும். எந்த ஃபார்மட்டுக்கு, எந்தத் தொடரிலிருந்து வீரர்களை எடுக்கவேண்டும் என்பதை பி.சி.சி.ஐ தெளிவுபடுத்தவேண்டும். இல்லையேல், இந்தியாவுக்கு வெளியே எங்கு போனாலும் தோல்விகள் துரத்திக்கொண்டுதான் இருக்கும்.

https://www.vikatan.com/news/sports/133916-unless-bcci-change-its-selection-policy-india-will-not-succeed-in-overseas-tests.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Respondents were asked if they think Israel should respond to the Iranian attack on Saturday night, to which 52% answered that it is better not to respond to end the current round of conflict. In comparison,  48% answered that Israel should respond, even if it means that the price would be an extension of the current conflict.   இதில் யாருக்கு விளக்கமில்லை?? இன்னுமொன்று புரிகிறதா? கூட்டுநாடுகள் இல்லையென்றால் இஸ்ரேல் பாடு அதோகதிதான்!!
    • "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" - பாடல் - 2 / second poem of my own eulogy / உயிர் எழுத்து வரிசையில்     "அன்னையின் தாலாட்டில் அப்பாவின் பாசத்தில் அக்காவின் கண்காணிப்பில் அண்ணையின் வழிகாட்டலில் அனைவரையும் அணைத்து தம்பியின் நண்பனாக அத்தியடியில் மலர்ந்து மணம் வீசியவனே!"   "ஆசை அடக்கி எளிமையாக வாழ்ந்தவனே ஆடை அணிகளை அளவோடு உடுத்து ஆரவாரம் செய்யாமல் அடக்கமாக இருந்தவனே ஆனந்த கண்ணீரை எதற்காக பறித்தாய்?"   "இறைவனை அன்பில் சிரிப்பில் காண்பவனே இல்லாளை ஈன்றவளை காண போனாயோ ? இன்பம் துன்பம் சமனாக கருத்துபவனே இடுகாடு போய் உறங்குவது எனோ ?"   "ஈன இரக்கமின்றி கொரோனா வாட்டி ஈரக்கண் பலரை நனைக்கும் வேளையில் ஈறிலியை நியாயம் கேட்கப் போனாயோ ஈன்ற பிள்ளைகளின் ஞாபகம் இல்லையோ?"   "உடன்பிறப்பாய் மகனாய் மருமகனாய் தந்தையாய் உறவாய் எத்தனை பரிணாமம் நீர்கொண்டீர் ? உதிரியாய் உன்நினைவுகள் நாம் கொண்டோம் உன்உயிர் என்றும் வாழ்திடும் திண்ணம்!"   "ஊடல் கொண்டு சென்ற மனைவியால் ஊன்றுகோல் தொலைத்து அவதி பட்டவனே ஊமையாய் இன்று உறங்கி கிடைப்பதேனோ ஊழித்தீயாய் கொழுந்துவிட்டு எரிந்தது எனோ ?"   "எல்லாமும் நீயாய் எவருக்கும் நண்பனாய் எதிரியையும் அணைக்கும் நட்பு கொண்டவனே எதிர்மறை எண்ணம் எப்படி வந்தது எரிவனம் போக எப்படி துணிந்தாய்?"   "ஏக்கம் கொண்டு நாம் தவிக்கிறோம் ஏங்கி கேட்கிறோம் எழுந்து வாராயோ ஏராள பேரர்கள் உனக்காக காத்திருக்கினம் ஏமாற்றாமல் பதில் ஒன்று சொல்லாயோ?"   "ஐங்கரனை விலத்தி உண்மையை நாடி ஐயம் தெளிந்து மகிழ்ச்சியில் மிதந்தவனே ஐதிகம் கொண்டாலும் சிந்தித்து ஆற்றுபவனே ஐயனே உன்னை நாம் என்றும் மறவோம்!"   "ஒள்ளியனை என்றும் எங்கும் மதித்து ஒழுங்காக தினம் செயல்கள் செய்து ஒப்பில்லா தாய் தந்தையரை மதித்தவனே ஒதுங்கி தனித்து சென்றது எனோ ?"   "ஓலாட்டு நீபாடியது இன்னும் மறக்கவில்லை ஓலம்பாட என்னை வைத்தது எனோ? ஓசை இல்லாமல் மௌனம் சாதித்து ஓய்ந்தது சரியோ? உண்மையை சொல்லு?"   "ஔவை வாக்கை மருந்தாக கொண்டு ஔதாரியமாக வாழ என்றும் முயற்சித்தவனே ஔரசனே தமிழ் தாயின் புதல்வனே? ஔடதம் உண்டோ உன் பிரிதலுக்கு ?"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     ஈறிலி - கடவுள் எரிவனம் - சுடுகாடு ஐதிகம் - தொன்று தொட்டு வரும் நம்பிக்கை ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன், மேன்மையானவன் ஓலாட்டு - தாலாட்டு ஔதாரியம் - பெருந்தன்மை ஔரசன் - உரிமை மகன் ஔடதம் - மருந்து     
    • சிறி அண்ணா 50% சரி. ரணில் தன் மினியை பார்க் பண்ணுவது, உதவியாளராக இருக்கும் ஒரு பையனின் வீட்டு கொல்லை புறத்தில்🤣.
    • @goshan_che கேட்ட கேள்விக்கு... நான் பதில் சொல்லி விட்டேன்.  விசுகர், உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். 😂
    • "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" [பாடல் - 1 / உயிர் எழுத்து வரிசையில் எழுதப்பட்டது]     "அன்புக்கு அடிமையாக பண்பை மதிப்பவனாக அறிவிற்கு சுமாராக குடும்பத்தின் இளையவனாக அனைவருக்கும் நண்பனாக என்றும் தனிவழியில் அத்தியடியில் பிறந்து வளர்ந்த சாமானியனே!"   "ஆசாரம் மறந்து தன்போக்கில் வளர்ந்தவனே ஆத்திரம் கொண்டு நடைமுறையை அலசுபவனே ஆலாத்தி எடுத்து ஆண்டவனை வழிபடாதவனே ஆராய்ந்து அறிந்து எதையும் ஏற்பவனே!"   "இராவணன் வாழ்ந்த செழிப்பு இலங்கையில் இறுமாப்புடன் தலை நிமிர்ந்து வாழ்ந்தவனே இங்கிதம் தெரிந்தாலும் இடித்துரைக்கவும் மறக்காதவனே இயமன் வலையில் ஏன் விழுந்தாய்?"   "ஈடணம் விரும்பா சாதாரண மகனே ஈடிகை எடுத்து உன்மனதை வடிப்பவனே ஈமக்கிரியையை எதற்கு எமக்கு தந்தாய் ஈமத்தாடி குடி கொண்ட சுடலையில்?"   "உலகத்தில் பரந்து வாழும் பலரின் உண்மை இல்லா பற்றில் பாசத்தில் உடன்பாட்டிற்கு வர முடியாமல் உணக்கம் தரையில் விதை ஆனாயோ?"   "ஊரார் கதைகளை அப்படியே ஏற்காமல் ஊக்கம் கொண்டு சிந்தித்து செயல்படுவானே ஊறு விளைக்காது நல்லிணக்கம் காப்பவனே ஊனம் கொண்டு இளைத்து போனாயோ?"   "எய்யாமை அகற்றிட விளக்கங்கள் கொடுத்து எழுதுகோல் எடுத்து உலகை காட்டி எள்ளளவு வெறுப்போ ஏற்றத்தாழ்வோ இல்லாமல் என்றும் வாழ்ந்த உன்னை மறப்போமா?"   "ஏழைஎளியவர் என்று பிரித்து பார்க்காமல் ஏகாகாரமாய் எல்லோரையும் உற்று நோக்குபவனே ஏட்டுப் படிப்புடன் அனுபவத்தையும் சொன்னவனே ஏகாந்த உலகிற்கு எதைத்தேடி போனாய்?"   "ஐம்புலனை அறிவோடு தெரிந்து பயன்படுத்தி ஐங்கணைக்கிழவனின் அம்பில் அகப்படாமல் இருந்து ஐவகை ஒழுக்கத்தை இறுதிவரை கடைப்பிடித்தவனே ஐயகோ, எம்மை மறக்க மனம்வந்ததோ?"   "ஒழுக்கமாக பொறியியல் வேலை பார்த்து ஒழிக்காமல் வெளிப்படையாக நடவடிக்கை எடுத்து ஒள்ளியனாக பலரும் உன்னை போற்ற ஒற்றுமையாக என்றும் வாழ எண்ணியவனே!"   "ஓரமாய் ஒதுங்கி மற்றவர்களுக்கும் வழிவிட்டு ஓடும் உலகுடன் சேர்ந்து பயணித்தவனே ஓங்காரநாதம் போல் உன்ஓசை கேட்டவனை ஓதி உன்நினைவு கூற ஏன்வைத்தாய்?"   "ஔவியம் அற்றவனே சமரசம் பேசுபவனே ஔடதவாதி போல் ஏதாவதை பிதற்றாதவனே ஔரப்பிரகம் போல் பின்னல் செல்லாதவனே ஒளசரம் போல் உன்நடுகல் ஒளிரட்டுமே!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     ஈடணம் - புகழ் ஈடிகை - எழுதுகோல் ஈமத்தாடி - சிவன் உணக்கம் - உலர்ந்ததன்மை ஊறு - இடையூறு ஊனம் - உடல் குறை, இயலாமை எய்யாமை - அறியாமை ஏகாகாரம் - சீரான முறை ஏட்டுப் படிப்பு - புத்தாக படிப்பு ஏகாந்தம் - தனிமை ஐங்கணைக்கிழவன் - மன்மதன். ஐவகை ஒழுக்கம் - கொல்லாமை, களவு செய்யாமை, காமவெறியின்மை, பொய்யாமை, கள்ளுண்ணாமை ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன்; மேன்மையானவன் ஓகை - உவகை, மகிழ்ச்சி ஔவியம் - பொறாமை, அழுக்காறு ஔடதவாதி - ஒருமதக்காரன், மூலிகையிலிருந்து ஜீவன் உற்பத்தியாயிற்றென்று கூறுவோன் ஔரப்பிரகம் - ஆட்டுமந்தை. ஒளசரம் - கோடாங்கல் / உயரத்தில் இருக்கும் கூர்மையான கல் அல்லது உச்சக்கல்   [my own eulogy / A tribute written by myself to my death]        
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.