Jump to content

அரசியலில் என்னுடன் நட்புகொள், இல்லையென்றால் எதிர்கொள்: நினைவேந்தலில் நடிகர் ரஜினிகாந்த்


Recommended Posts

அரசியலில் என்னுடன் நட்புகொள், இல்லையென்றால் எதிர்கொள்: நினைவேந்தலில் நடிகர் ரஜினிகாந்த்

 

 
rajini_stalin

 

சென்னையில் காமராஜர் அரங்கில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் கருணாநிதி உருவ படத்துக்கு, நடிகர் சங்க நிர்வாகிகள் நாசர், விஷால், கார்த்தி, பொன்வண்ணன், நடிகர்கள் விஜயகுமார், ராதாரவி, நடிகை குஷ்பு, இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், விக்கிரமன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் பங்கேற்றனர்.

பராசக்தி படம் மட்டும் வராமல் இருந்தால், தமிழ் சினிமா 20 ஆண்டுகள் பின்நோக்கி சென்றிருக்கும் எனறு நடிகர் சங்கத் தலைவர் நாசர் தெரிவித்தார்.

புதிதாக கட்டப்பட்டு வரும் நடிகர் சங்க கட்டடத்தில் மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதி பயன்படுத்திய பேனாவை காட்சிக்கு வைக்க வேண்டும். அது அடுத்த தலைமுறை கலைஞர்களுக்கு கருணாநிதியின் புகழை எடுத்துச் செல்லும் என்று நடிகர் சங்க செயலாளர் விஷால் பேசினார். 

rajini.jpg

இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:

திமுக தலைவர் கருணாநிதி இல்லாத தமிழ்நாட்டை என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை. தமிழ்நாட்டில் இனி பெரிய விழா என்றால் மு.க.ஸ்டாலின் யாரை கூப்பிட போகிறார் என்று தெரியவில்லை. 45 வயதில் திமுக-வின் தலைவராகி பல சூழ்ச்சிகள், துரோகங்கள் என அனைத்தையும் தாண்டி 50 ஆண்டுகாலம் திமுக-வின் தலைவராக சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

இந்த 50 ஆண்டுகளில் என்னுடன் நட்புகொள், இல்லையென்றால் என்னை எதிர்கொள் என்னும் ரீதியில் இந்த அரசியல் சதுரங்கத்தில் அவரது பயணமாக இருந்தது. அதிமுகவின் ஆண்டு விழாவில் எம்ஜிஆரின் புகைப்படத்தோடு திமுக தலைவர் கருணாநிதியின் புகைப்படத்தையும் வைக்க வேண்டும்.

இலக்கியத்தில் அவரது சாதனைகள் சாதாரணமானது கிடையாது. பாமரர் முதல் பண்டிதர் வரை அனைவருக்கும் தமிழை கொண்டு சேர்த்தவர். எம்ஜிஆர் மற்றும் சிவாஜியை சூப்பர்ஸ்டார் ஆக்கியது கருணாநிதி தான். அவரின் மறைவுக்கு பின் நினைவுகளால் மூழ்க்கிப் போனேன்.

முதலில் அவரது மறைவுக்கு கூடிய மக்களைக் கண்டு கோபம் கொண்டேன். இத்தனை பெரிய மனிதருக்கு இவ்வளவு தான் கூட்டமா என்று கலங்கினேன். ஆனால் பின்பு மக்கள் அலை அலையாய் கூடிய போது அவரின் மேல் அனைவரும் மரியாதை வைத்திருந்ததை நினைத்து உருகினேன். ஒட்டுமொத்த இந்தியாவும் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தியது.   

ஆனால் இதில் ஒரு குறை உள்ளது. அகில இந்திய அளவில் பிரதமர், எதிர்கட்சித் தலைவர் என அனைவரும் வந்திருந்த போது, திமுக தலைவர் கருணாநிதி இறுதி சடங்கின் போது ஏன் தமிழக முதல்வர் இல்லை? திமுக தலைவர் கருணாநிதி இறுதி அஞ்சலி செலுத்த முதல்வர் வர வேண்டாமா?  ஒட்டுமொத்த தமிழக அமைச்சரவையும் அங்கு கூடியிருக்க வேண்டும். மெரீனாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன்.

மு.க.ஸ்டாலின் கண்ணீர் சிந்தியது என்னால் தாங்க முடியவில்லை. கருணாநிதியின் ஆன்மா நிச்சயம் சாந்தி அடையட்டும் என்று பேசினார்.

நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நடைபெற்ற இந்த நினைவேந்தலில் முன்னணி நடிகர்கள் கமல்ஹாசன், விஜய், அஜித் உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.dinamani.com/cinema/cinema-news/2018/aug/13/அரசியலில்-என்னுடன்-நட்புகொள்-இல்லையென்றால்-எதிர்கொள்-நினைவேந்தலில்-நடிகர்-ரஜினிகாந்த்-2979865.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

அரசியலில் என்னுடன் நட்புகொள், இல்லையென்றால் எதிர்கொள்: நினைவேந்தலில் நடிகர் ரஜினிகாந்த்

 

 
rajini_stalin

 

சென்னையில் காமராஜர் அரங்கில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் கருணாநிதி உருவ படத்துக்கு, நடிகர் சங்க நிர்வாகிகள் நாசர், விஷால், கார்த்தி, பொன்வண்ணன், நடிகர்கள் விஜயகுமார், ராதாரவி, நடிகை குஷ்பு, இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், விக்கிரமன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் பங்கேற்றனர்.

பராசக்தி படம் மட்டும் வராமல் இருந்தால், தமிழ் சினிமா 20 ஆண்டுகள் பின்நோக்கி சென்றிருக்கும் எனறு நடிகர் சங்கத் தலைவர் நாசர் தெரிவித்தார்.

புதிதாக கட்டப்பட்டு வரும் நடிகர் சங்க கட்டடத்தில் மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதி பயன்படுத்திய பேனாவை காட்சிக்கு வைக்க வேண்டும். அது அடுத்த தலைமுறை கலைஞர்களுக்கு கருணாநிதியின் புகழை எடுத்துச் செல்லும் என்று நடிகர் சங்க செயலாளர் விஷால் பேசினார். 

rajini.jpg

இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:

திமுக தலைவர் கருணாநிதி இல்லாத தமிழ்நாட்டை என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை. தமிழ்நாட்டில் இனி பெரிய விழா என்றால் மு.க.ஸ்டாலின் யாரை கூப்பிட போகிறார் என்று தெரியவில்லை. 45 வயதில் திமுக-வின் தலைவராகி பல சூழ்ச்சிகள், துரோகங்கள் என அனைத்தையும் தாண்டி 50 ஆண்டுகாலம் திமுக-வின் தலைவராக சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

இந்த 50 ஆண்டுகளில் என்னுடன் நட்புகொள், இல்லையென்றால் என்னை எதிர்கொள் என்னும் ரீதியில் இந்த அரசியல் சதுரங்கத்தில் அவரது பயணமாக இருந்தது. அதிமுகவின் ஆண்டு விழாவில் எம்ஜிஆரின் புகைப்படத்தோடு திமுக தலைவர் கருணாநிதியின் புகைப்படத்தையும் வைக்க வேண்டும்.

இலக்கியத்தில் அவரது சாதனைகள் சாதாரணமானது கிடையாது. பாமரர் முதல் பண்டிதர் வரை அனைவருக்கும் தமிழை கொண்டு சேர்த்தவர். எம்ஜிஆர் மற்றும் சிவாஜியை சூப்பர்ஸ்டார் ஆக்கியது கருணாநிதி தான். அவரின் மறைவுக்கு பின் நினைவுகளால் மூழ்க்கிப் போனேன்.

முதலில் அவரது மறைவுக்கு கூடிய மக்களைக் கண்டு கோபம் கொண்டேன். இத்தனை பெரிய மனிதருக்கு இவ்வளவு தான் கூட்டமா என்று கலங்கினேன். ஆனால் பின்பு மக்கள் அலை அலையாய் கூடிய போது அவரின் மேல் அனைவரும் மரியாதை வைத்திருந்ததை நினைத்து உருகினேன். ஒட்டுமொத்த இந்தியாவும் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தியது.   

ஆனால் இதில் ஒரு குறை உள்ளது. அகில இந்திய அளவில் பிரதமர், எதிர்கட்சித் தலைவர் என அனைவரும் வந்திருந்த போது, திமுக தலைவர் கருணாநிதி இறுதி சடங்கின் போது ஏன் தமிழக முதல்வர் இல்லை? திமுக தலைவர் கருணாநிதி இறுதி அஞ்சலி செலுத்த முதல்வர் வர வேண்டாமா?  ஒட்டுமொத்த தமிழக அமைச்சரவையும் அங்கு கூடியிருக்க வேண்டும். மெரீனாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன்.

மு.க.ஸ்டாலின் கண்ணீர் சிந்தியது என்னால் தாங்க முடியவில்லை. கருணாநிதியின் ஆன்மா நிச்சயம் சாந்தி அடையட்டும் என்று பேசினார்.

நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நடைபெற்ற இந்த நினைவேந்தலில் முன்னணி நடிகர்கள் கமல்ஹாசன், விஜய், அஜித் உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.dinamani.com/cinema/cinema-news/2018/aug/13/அரசியலில்-என்னுடன்-நட்புகொள்-இல்லையென்றால்-எதிர்கொள்-நினைவேந்தலில்-நடிகர்-ரஜினிகாந்த்-2979865.html

 

என்ன தலைப்பு 
என்ன செய்தி ?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நவீனன் said:

எம்ஜிஆர் மற்றும் சிவாஜியை சூப்பர்ஸ்டார் ஆக்கியது கருணாநிதி தான்.

எம்ஜிஆர் இல்லையெண்ட தைரியத்திலை கனக்க கதைக்கிறார்......அவர் இருந்திருந்தால் இன்னுமொருக்கால் காதாவடியைப்பொத்தி வாங்கியிருப்பீர் ரசனி.:grin:

பொறுத்த தலைகள் இல்லையெண்டவுடனை கொஞ்சப்பேருக்கு தலைகனத்த கதை கூடீட்டுது கண்டியளோ..:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

"மெரீனாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன்.

மு.க.ஸ்டாலின் கண்ணீர் சிந்தியது என்னால் தாங்க முடியவில்லை"

 

சீரியசான இடத்திலும் சிரிக்காமல் பகிடி  செய்வதில் ரசுனிக்கு நிகர் ரசுனிதான் . அதனால்தான் அவர் அகில உலக சூப்பர் ஸ்டார் ?

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
    • இவர்கள் student visaவில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், நீதிமன்றத்துக்கு போனால் இவர்களின் விசாவிற்கு பிரச்சனை வரலாம், record இல் வந்தால் பிற்காலத்தில் green card எடுக்கும்போது பிரச்சனை வரும், தேவையற்ற சில்லறைக்கு ஆசைப்பட்டு பெரிய பிரச்சனையை சந்திக்கிறார்கள் 
    • அண்ணை சத்திர சிகிச்சை அறைக்கு வெளியில் இருந்திருப்பார்கள் என நினைக்கிறேன். அடுத்த சிகிச்சையாளரைக் கூட தயார்படுத்தல் அறையில் தான் இருக்க விடுவார்கள் என நினைக்கிறேன்.
    • அண்ணை வேலைக்கு போய் உழைக்காமல் விளையாடிக் கொண்டிருந்து தானே கொலை செய்யும் அளவிற்கு போனவர்.  உள்ள இருந்தால் உணவு இலவசமாகக் கிடைக்கும் தானே?!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.