Jump to content

கோத்தாவை தடுக்குமா அமெரிக்கா?


Recommended Posts

கோத்தாவை தடுக்குமா அமெரிக்கா?

03-0ea073e4d45f520034ae0d6066cc2a40d81a1913.jpg

 

-என்.க­ண்ணன்

மஹிந்­தவைப் பொறுத்­த­வ­ரையில், கோத்­தா­பய ராஜபக் ஷவை ஏற்றுக் கொள்­வ­திலும், அவரை இல்­லை­யென்று வெட்டி விடு­வ­திலும் பிரச்­சி­னைகள் உள்­ளன.

அதா­வது, மஹிந்த தரப்பில் உள்­ள­வர்­களில் கோத்­தாவைப் பிடிக்­கா­த­வர்கள் இருப்­பது போலவே, மஹிந்­தவைப் பிடிக்­காத கோத்தா ஆத­ர­வா­ளர்­களும் இருக்­கி­றார்கள். அவ்­வா­றா­ன­வர்­களின் எதிர்ப்­பையோ காழ்ப்­பையோ அவர் குறைத்து மதிப்­பி­ட­மாட்டார்.

கோத்­தா­பய ராஜபக் ஷவின் அர­சியல் பய­ணத்­துக்­கான பாதையை உரு­வாக்­கு­வ­தற்­காக- தோற்­று­விக்­கப்­பட்ட அமைப்­பு­களை, வடக்­கிலும் நிறு­வு­வ­தற்­கான முயற்­சிகள் தீவி­ர­மாக நடந்து கொண்­டி­ருப்­ப­தாக செய்­திகள் வந்து கொண்­டி­ருக்­கின்­றன.

விரைவில் அவர் வடக்கு, கிழக்கில் இந்த அமைப்­பு­களின் செய­ல­கங்­களை நிறுவி, அத­னூ­டாக பிர­சா­ரங்­களை முன்­னெ­டுக்கத் திட்­ட­மிட்­டி­ருப்­ப­தா­கவும், கூறப்­ப­டு­கி­றது.

மஹிந்த ராஜபக் ஷ தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்பின் கீழ் அடுத்த ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிடத் தகை­மை­யற்­றவர் என்­ப­தாலும், அவ­ருக்கு அடுத்த நிலையில் ராஜபக் ஷவி­னரில், அதிகம் செல்­வாக்குப் பெற்­றவர் என்­ப­தாலும், கோத்­தா­பய ராஜபக் ஷவைச் சுற்றி ஒரு விம்பம் உரு­வாக்­கப்­பட்டு வரு­கி­றது.

அவரே அடுத்த ஜனா­தி­பதி வேட்­பாளர் என்று வெளிப்­ப­டை­யாக கூறப்­ப­டாமல் – ஆனால் அதற்­கான முன்­த­யா­ரிப்­பு­களை மேற்­கொண்டு, உள­வியல் ரீதி­யாக அவரை ஏற்­றுக்­கொள்ள வைக்கும் ஒரு­வித உத்­தியை ராஜபக் ஷவினர் கையாளத் தொடங்­கி­யுள்­ளனர்.

தெற்கில் அவரை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக ஏற்­றுக்­கொள்ளல் என்­பது கடி­ன­மான காரி­ய­மன்று. போர் வெற்­றியில் அவர் வகித்த பங்கு தெற்­கி­லுள்ள சிங்­கள மக்­களில் கணி­ச­மானோர் அவரை கதா­நா­ய­க­னா­கவே போற்றும் நிலையைத் தோற்­று­வித்­தி­ருக்­கி­றது.

ஆனால், அது­மட்டும் ஒரு ஜனா­தி­பதி வேட்­பா­ள­ருக்குப் போது­மான தகை­மை­யாக இல்லை. சிங்­கள மக்­களின் வாக்­கு­களால் மாத்­திரம், ஜனா­தி­ப­தி­யாகி விட முடியும் என்ற எதிர்­பார்ப்­பு­ட­னேயே ராஜபக் ஷவினர் ஆரம்­பத்தில் காய்­களை நகர்த்­தினர்.

கோத்­தா­பய ராஜபக் ஷவும் கூட எலிய, வியத் மக போன்ற அமைப்­பு­களை உரு­வாக்கி ஒரு வரு­டத்­துக்கு மேலா­கியும், அவற்றை வடக்கு, கிழக்­கிற்கு கொண்டு செல்­வ­தற்கு முயற்­சிக்­க­வில்லை. தனியே சிங்­கள வாக்­கா­ளர்­களை மாத்­திரம் நம்பி கள­மி­றங்­கலாம் என்ற, மனோ­நி­லையை அதுவே தெளி­வாக காட்­டி­யி­ருந்­தது.

ஆனால், இந்த உத்தி பெரும்­பா­லான மாவட்­டங்­களில் பாரா­ளு­மன்றத் தேர்­தலில், அவர் போட்­டி­யி­டு­வ­தற்கு வேண்­டு­மானால் கைகொ­டுக்­கலாம்.

தனக்கு எல்லா இடங்­க­ளிலும் செல்­வாக்கு இருக்­கி­றது என்று நிரூ­பிக்க அம்­பாந்­தோட்­டையை விட்டு, குரு­நா­க­லுக்கு சென்று மஹிந்த ராஜபக் ஷ போட்­டி­யிட்­டது போல, வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய மாவட்­டங்­களில் தனிச் சிங்­கள வாக்­கா­ளர்­களை மையப்­ப­டுத்தி போட்­டி­யி­டு­வதில் கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கும் சிக்கல் இல்லை.

ஆனால், ஜனா­தி­பதித் தேர்தல் அவ்­வா­றா­ன­தொன்று அல்ல. ஜனா­தி­பதித் தேர்­தலில் சிங்­கள மக்­களின் வாக்­குகள் தீர்­மா­ன­க­ர­மா­ன­தாக இருந்­தாலும், அது­மாத்­தி­ரமே வெற்­றியைத் தந்து விடாது என்­பது ஏற்­க­னவே நிரூ­ப­ண­மா­கி­யி­ருக்­கி­றது.

சிங்­கள மக்கள் அடிப்­படைப் பலத்தைக் கொடுக்­கலாம். ஆனால், சிறு­பான்­மை­யி­ன­ரான தமி­ழர்­களும், முஸ்­லிம்­களும் தான், பெரும்­பாலும், இறுதி முடிவைத் தீர்­மா­னிக்­கின்ற வாக்­கு­களைக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

முன்­னரே இது தெரிந்த விடயம் தான் என்­றாலும், கடந்த சில மாதங்கள் வரை- சிறு­பான்­மை­யி­னரின் வாக்­குகள் இல்­லா­ம­லேயே- தனித்துச் சிங்­கள வாக்­கா­ளர்­களின் மூலமே வெற்­றியைப் பெற்று விடலாம் என்ற நம்­பிக்கை ராஜபக் ஷவி­ன­ரிடம் இருந்­தது என்­பதை மறுப்­ப­தற்­கில்லை.

அதனால் தான், அடுத்த ஜனா­தி­பதித் தேர்­தலில் வெற்­றியைப் பெறு­வ­தற்­கான தேர்­த­லுக்­கான ஏற்­பா­டு­களை அவர்கள் ஆரம்­பித்து சுமார் ஒன்­றரை ஆண்­டு­க­ளா­கியும், சிறு­பான்­மை­யினர் அவர்­களின் கண்­க­ளுக்குத் தெரி­யா­ம­லேயே இருந்து வந்­தனர்.

ஆனால், இப்­போது முஸ்­லிம்­களை நோக்­கியும், மலை­யகத் தமி­ழர்­களை நோக்­கியும் கோத்­தா­பய ராஜபக் ஷவி­னது கவனம் திரும்­பி­யி­ருக்­கி­றது. வடக்கு, கிழக்கை நோக்­கியும் அவ­ரது பிர­சார இயந்­திரம் திருப்பி விடப்­ப­ட­வுள்­ளது.

மஹிந்த ராஜபக் ஷ போருக்கு அர­சியல் ரீதி­யாகத் தலைமை தாங்­கி­யவர் என்ற போதும், அந்தப் போர் கொடூ­ர­மான முறையில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தற்­கான தலை­மைத்­து­வத்தை வழங்­கி­யவர் தான் கோத்­தா­பய ராஜபக் ஷ.

சிறு­பான்­மை­யின மக்­க­ளான தமி­ழர்கள் மத்­தி­யிலும், முஸ்­லிம்கள் மத்­தி­யிலும் அவர் மீது வெவ்­வேறு வித­மான எதிர்ப்­புகள் உள்­ளன.

தமி­ழர்­களைப் பொறுத்­த­வ­ரையில் கோத்­தா­பய ராஜபக் ஷ மீது கொண்­டுள்ள வெறுப்­புக்கு, அவரால் முன்­னெ­டுக்­கப்­பட்ட போரும், அதன் முடிவும், அதில் நிகழ்ந்த நிகழ்த்­தப்­பட்ட கொடூ­ரங்­களும் தான் காரணம்.

முஸ்லிம் மக்­களைப் பொறுத்­த­வ­ரையில் அந்தக் காரணம் பொருத்­த­மன்று. ஏனென்றால், போரின்­போது அவர்­களும் கோத்­தா­பய ராஜபக் ஷவுடன் கைகோர்த்து நின்­ற­வர்கள். அதற்கு ஆத­ர­வாக போராட்­டங்­க­ளையும் நடத்­தி­ய­வர்கள்.

கோத்­தா­பய ராஜபக் ஷவின் பின்­புல ஆத­ர­வுடன் தான், பொது பல­சேனா போன்ற பௌத்த சிங்­கள அடிப்­ப­டை­வாத அமைப்­புகள், முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­களை கட்­ட­விழ்த்து விட்­டன என்று முஸ்­லிம்கள் வலு­வாக நம்­பு­கின்­றனர். அது தான் அவர்­க­ளுக்குப் பிரச்­சினை.

ஆனால், இப்­போது முஸ்­லிம்­களை சமா­தா­னப்­ப­டுத்த முயற்­சிக்­கிறார் கோத்­தா­பய ராஜபக் ஷ.

அதே­போன்று வடக்­கிலும் தனது செல்­வாக்கை உறு­திப்­ப­டுத்தக் கள­மி­றங்கப் போகிறார். வடக்கு மக்கள் மத்­தி­யிலும் தனக்கு ஆத­ரவு இருக்­கி­றது என்று காண்­பிக்க வேண்­டிய தேவை ஒன்றும், அவ­ருக்கு இருப்­ப­தாக தெரி­கி­றது.

கோத்­தா­பய ராஜபக் ஷ ஜனா­தி­பதித் தேர்­தலில் கள­மி­றக்­கப்­ப­டு­வதை அமெ­ரிக்கா விரும்­ப­வில்லை என்ற பேச்சு ஓரிரு மாதங்­க­ளா­கவே ஊட­கங்­களில் அடி­பட்டு வரு­கி­றது.

அமெ­ரிக்கா அவரை விரும்­பா­த­மைக்கு, எல்லா இன மக்­க­ளாலும் ஏற்­றுக்­கொள்­ளப்­படக் கூடிய ஒரு தலை­வ­ராக அவர் இல்லை என்ற காரணம் அமெ­ரிக்கத் தரப்பில் சொல்­லப்­பட்­டி­ருந்­தாலும் ஆச்­ச­ரி­ய­மில்லை.

சிங்­கள மக்கள் அவரை ஏற்றுக் கொண்­டாலும், முஸ்­லிம்­களும் தமி­ழர்­களும் அவரை வெறுக்­கி­றார்கள், அவரை போட்­டியில் நிறுத்த வேண்டாம் என்று அமெ­ரிக்கா கூறி­யி­ருக்­கலாம். இதனை அவர்கள் நேர­டி­யாக அன்றி, நாசூக்­கா­கவோ இரா­ஜ­தந்­திர மொழி­க­ளிலோ இந்த தக­வலை பரி­மா­றி­யி­ருக்க வாய்ப்­புகள் உள்­ளன.

அத்­த­கைய கட்­டத்தில் இருந்தே, எல்லா இன மக்கள் மத்­தி­யிலும் கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு ஆத­ரவு உள்­ளது என்று காண்­பிக்க முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கலாம். அதை­விட ஜனா­தி­பதித் தேர்­தலில், சிறு­பான்­மை­யின மக்­களின் வாக்­கு­களும், வெற்றி தோல்­வியை தீர்­மா­னிக்கக் கூடி­யவை என்­பதை மறுப்­ப­தற்­கில்லை.

எது­எவ்­வா­றா­யினும், கோத்­தா­பய ராஜபக் ஷ இப்­போது வடக்கை நோக்கித் திரும்ப எத்­த­னிக்கும் நிலையில், வடக்­கி­லுள்ள மக்கள் அவ­ருக்கு அர­சியல் ரீதி­யாக எவ்­வாறு எதிர்­வி­னை­யாற்றப் போகி­றார்கள் என்ற கேள்வி உள்­ளது.

அத்­த­கைய எதிர்­வி­னையை தேர்தல் ஒன்றின் மூலம் தான் தெளி­வாக மதிப்­பிட முடியும். அதற்கு இன்­னமும் காலம் இருக்­கி­றது.

அதற்கு முன்­ன­தாக, அவர் தான் வேட்­பாளர் என்­பது உறு­தி­யாக வேண்டும்.

மஹிந்த ராஜபக் ஷவைப் பொறுத்­த­வ­ரையில் இன்­னமும் அவர், எந்த முடி­வையும் அறி­விக்­க­வில்லை. அதற்­காக அவர் யாரை நிறுத்­து­வது என்று இன்னும் முடி­வெ­டுக்­காமல் இருக்­கிறார் என்று அர்த்­த­மில்லை.

மஹிந்­தவைப் பொறுத்­த­வ­ரையில், கோத்­தா­பய ராஜபக் ஷவை ஏற்றுக் கொள்­வ­திலும், அவரை இல்­லை­யென்று வெட்டி விடு­வ­திலும் பிரச்­சி­னைகள் உள்­ளன.

அதா­வது, மஹிந்த தரப்பில் உள்­ள­வர்­களில் கோத்­தாவைப் பிடிக்­கா­த­வர்கள் இருப்­பது போலவே, மஹிந்­தவைப் பிடிக்­காத கோத்தா ஆத­ர­வா­ளர்­களும் இருக்­கி­றார்கள். அவ்­வா­றா­ன­வர்­களின் எதிர்ப்­பையோ காழ்ப்­பையோ அவர் குறைத்து மதிப்­பி­ட­மாட்டார்.

அதே­வேளை, கோத்­தா­பய ராஜபக் ஷ அர­சி­யலில் இறங்­கு­வதை குறிப்­பாக ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­டு­வதை அமெ­ரிக்கா விரும்­ப­வில்லை என்றும், அதனைத் தடுப்­ப­தற்கு அவ­ருக்கு எதி­ராக போர்க்­குற்ற ஆயு­தத்தை கையில் எடுக்கப் போவ­தா­கவும் ஒரு மாயை உரு­வாக்­கப்­பட்டு வரு­கி­றது.

சிங்­கள ஊட­கங்கள், இப்­போது. கோத்­தா­பய ராஜபக் ஷவை ‘ஹீரோ’ நிலையில் வைத்­தி­ருக்­கின்­றன.

கோத்­தா­பய ராஜபக் ஷ ஒரு அமெ­ரிக்க குடி­மகன் என்ற வகையில், அந்த நாடு சில விருப்பு வெறுப்­பு­களை கொண்­டி­ருக்­கலாம். கோத்­தா­பய ராஜபக் ஷ இலங்­கையில் ஆட்­சிக்கு வரும் சூழல் ஏற்­பட்டால், தமது நலன்­க­ளுக்குப் பாதிப்பை ஏற்­ப­டுத்தக் கூடும் என்றும் அமெ­ரிக்கா சிந்­திக்­கலாம்.

அதற்­காக, அமெ­ரிக்கா அவ­ருக்கு எதி­ராக போர்க்­குற்­றச்­சாட்­டு­களை தீவி­ரப்­ப­டுத்தும் என்று எதிர்­பார்ப்­பது மிகை­யா­ன­தொன்­றா­கவே தென்­ப­டு­கி­றது.

போர் முடிந்து ஒன்­பது ஆண்­டு­க­ளா­கியும், கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு எதி­ரான போர்க்­குற்­றச்­சாட்டு பற்றி அமெ­ரிக்கா எந்த நட­வ­டிக்­கை­யிலும் இறங்­கி­ய­தில்லை.

அவர் அமெ­ரிக்கா சென்ற போது சில சம்­ப­வங்கள் தொடர்­பாக, விசா­ர­ணையை முன்­னெ­டுத்­ததை தவிர, வேறெந்த நட­வ­டிக்­கை­யிலும் ஈடு­பட்­ட­தில்லை. அவர் மீது குற்­றச்­சாட்­டையும் முன்­வைத்­த­தில்லை.

திடீ­ரென அவ­ருக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டு­களைப் பற்­றிய அமெ­ரிக்கா தகவல் திரட்ட ஆரம்­பித்­துள்­ள­தா­கவும், அதற்கு காணாமல் போனோர் குறித்து ஆராய்ந்த ஆணைக்­கு­ழுவின் தலைவர் மக்ஸ்வெல் பர­ண­க­ம­விடம் தக­வல்­களை அமெ­ரிக்க திரட்­டி­ய­தா­கவும் தக­வல்கள் வெளி­யா­கின்­றன.

இலங்­கையில் நடந்த போர்க்­குற்­றங்கள் தொடர்­பான அதி­க­ளவு தக­வல்­களைக் கொண்­டி­ருக்கும் நாடு அமெ­ரிக்­கா­வா­கவே இருக்கும். அத­னிடம் போர்க்­குற்­றங்கள் தொடர்­பான ஏரா­ள­மான ஆதா­ரங்­களும் சாட்­சி­யங்­களும் உள்­ளன.

அதை­விட, கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு எதி­ராக சாட்­சி­யங்­களைத் திரட்ட மக்ஸ்வெல் பர­ண­கம ஒரு­போதும் உத­வ­மாட்டார். அவர் ஒரு முன்னாள் நீதி­பதி. உள்­நாட்டு சட்­ட­வ­ரம்­பு­களை அறிந்­தவர். வெளி­நாட்டு நீதித் தலை­யீ­டு­களை எதிர்ப்­பவர்.

அவ­ரிடம் போய், கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு எதி­ராக அமெ­ரிக்கா ஆதாரம் கேட்­டது என்­பது மிகை­யான கற்­ப­னை­யா­கவே தோன்­று­கி­றது.

கோத்­தா­பய ராஜபக் ஷவின் அர­சியல் பிர­வே­சத்தை தடுக்க அமெ­ரிக்கா முடிவு செய்தால் அதனை கொழும்பில் இருந்து ஆரம்­பிப்­பதை விட வொஷிங்­டனில் இருந்து தொடங்­கு­வது இல­கு­வா­னது.

அவ்­வா­றான ஒரு கதவைத் திறக்­காத அமெ­ரிக்கா, கொழும்பில் அதற்­கான நகர்­வு­களை முன்­னெ­டுக்­கி­றது என்­பது வேடிக்­கை­யா­ன­தா­கவே தெரி­கி­றது.

எவ்­வா­றா­யினும், வடக்கின் மீது கவனம் செலுத்த ஆரம்­பிக்கும் கோத்­தா­வுக்கு, அது தெற்கில் ஏற்­ப­டுத்தக் கூடிய தாக்­கங்­களைச் சம­நி­லைப்­ப­டுத்த வேண்­டிய தேவையும் உள்­ளது.

அதற்கு அமெரிக்காவையும், போர்க்குற்றங்களையும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதா என்றே சந்தேகிக்க வேண்டியுள்ளது.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-08-12#page-2

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.