Jump to content

இலங்கை கிரிக்கெட் ரசிகர்களின் பெருமிதம் ; ஏனைய மக்களுக்கும் எடுத்துக்காட்டு !


Recommended Posts

இலங்கை கிரிக்கெட் ரசிகர்களின் பெருமிதம் ; ஏனைய மக்களுக்கும் எடுத்துக்காட்டு !

 

 
 

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின் போது இலங்கை கிரிக்கெட் ரசிகர்களின் செயல்கள் ஏனைய மக்களுக்கும் முன்னுதாரணமாகத் திகழ்ந்துள்ளது. 

a12.jpg

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஐந்தாவது ஒருநாள் போட்டி நேற்றைய தினம் கொழும்பு, ஆர்.பிரேமதாஸா விளையாட்டாரங்களில் இடம்பெற்றது. 

இந்தப் போட்டியில் இலங்கை அணி மெத்தியூஸின் அதிரடியினாலும் அகில தனஞ்சயவின் அசத்தலான  பந்து வீச்சின் காரணத்தினாலும் 178 ஓட்டங்களினால் தென்னாபிரிக்காவை மண்டியிட வைத்தது.

இதனையடுத்து போட்டியை காணவந்த இலங்கை அணியின் ரசிகர்கள் போட்டியின் நிறைவில் பிரேமதாஸ மைதானத்தில் இருக்கும் குப்பைகள் அனைத்தையும் சேகரித்து மைதானத்திலிருந்து அப்புறப்படுத்தியுள்ள நடவடிக்கையானது சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தையும் இலங்கை அணியின் ரசிகர்கள் பக்கம் திருப்புயுள்ளது.

dfd.jpg

pa2.jpg

pa1.jpg

அது மாத்திரமன்றி கடந்த 8 ஆம் திகதி கண்டி பல்லேகலவில் இடம்பெற்ற போட்டியின் போதும் இறுதியில் இலங்கை அணி ரசிகர்கள் மைதானத்தை துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டு மைதானத்தை சுத்தமாக்கினர். இந்த நடவடிக்கைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

இதனையடுத்தே நேற்று இடம்பெற்ற போட்டியின் போதும் இலங்கை ரசிகர்கள் இந்த நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுத்து செயற்பட்டமையானது ஏனைய நாட்டு  ரசிகர்களுக்கும்  எமது நாட்டு மக்களுக்கும் எடுத்துக் காட்டாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/38374

Link to comment
Share on other sites

புதிய பயணம்: ரஷ்யாவில் இருந்து கண்டிக்கு, கண்டியில் இருந்து கொழும்புக்கு

cover-phot0-696x392.jpg
 

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் நிறைவுக்கு வந்த ஒரு நாள் போட்டித் தொடரில் இறுதியாக நடைபெற்ற இரண்டு போட்டிகளின் முடிவில் பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு வருகை தந்த இலங்கை ரசிகர்கள், பார்வையாளர் அரங்கில் உள்ள குப்பைகளை அகற்றி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் உள்ளிட்ட பலரது கவனத்தையும், பாராட்டையும் பெற்றுக்கொண்டனர்.

இந்த நிலையில், இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நேற்று (12) நிறைவுக்குவந்த ஐந்தவாதும், இறுதியுமான ஒரு நாள் போட்டியின் முடிவில் போட்டியைப் பார்வையிட வந்த இலங்கை ரசிகர்கள் பார்வையாளர் அரங்கில் இருந்த குப்பைகளை சேகரித்து ஓரிடத்தில் குவித்து மீண்டும் முழு உலகின் கவனத்தையும் பெற்றுக்கொண்டனர்.

 

முன்னதாக கடந்த 05ஆம் திகதி நடைபெற்ற மூன்றாவது ஒரு நாள் போட்டியில், 78 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியிருந்த இலங்கை அணி, ஒரு நாள் தொடரையும் 0-3 என இழந்தது. எனினும், இலங்கை அணியின் தோல்வியால் மனமுடைந்த இலங்கை ரசிகர்கள் போட்டியின் பின்னர் பார்வையாளர் அரங்கில் வீசப்பட்டிருந்த குப்பைகளையெல்லாம் அகற்றி, ஓரிடத்தில் குவித்துவிட்டுச் சென்றனர். இலங்கை ரசிகர்கள் செய்த இந்த காரியம் அன்றைய தினம் இரவே சமுகவலைத்தளங்களில் வைரலாகப் பரவியது.

அதனைத்தொடர்ந்து கடந்த 08ஆம் திகதி அதே மைதானத்தில் நடைபெற்ற 4ஆவது ஒருநாள் போட்டி மழை காரணமாக அவ்வப்போது தடைப்பட்டது. எனினும், திஸர பெரேரா மற்றும் தசுன் சானக்கவின் அபார ஆட்டத்தின் உதவியுடன் குறித்த போட்டியில் 3 ஓட்டங்களால் இலங்கை அணி த்ரில் வெற்றி பெற்றது.

kandy-3-1024x682.jpg

 

பல்லேகலையில் குப்பைகளை அகற்றிய பல்கலைக்கழக மாணவர்கள்

நள்ளிரவு கடந்து முடிவுக்கு வந்த இந்தப் போட்டியின் பிறகும் இலங்கை ரசிகர்கள் மைதானத்தில் வீசப்பட்ட உணவு பொதிகள், பிளாஸ்டிக் போத்தல்கள், காகிதங்கள் மற்றும் ஏனைய குப்பைகளை சேகரித்து ஓரிடத்தில் குவித்து தாம் இருந்த பிரதேசத்தை சுத்தம் செய்துவிட்டுச் சென்றனர்.

இவ்வாறு பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 3ஆவது மற்றும் 4ஆவது ஒரு நாள் போட்டிகளின் முடிவில் குப்பைகள் அகற்ற முக்கிய காரணமான, போட்டியை பார்வையிட வந்த தென்கிழக்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்களே, முன்னோடிகளாகச் செயற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

இந்த நிலையில், இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் நேற்று நடைபெற்ற ஐந்தாவது ஒருநாள் போட்டிக்குப் பின்னரும் கொழும்பு வந்த கிரிக்கெட் ரசிகர்களும் குப்பைகளை ஒழுங்குபடுத்திவிட்டுச் சென்றுள்ளனர்.

எதுஎவ்வாறாயினும், ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரை 3-2 என இலங்கை அணி இழந்த போதிலும், கடைசியாக நடைபெற்ற மூன்று போட்டிகளும் முடிவடைந்த பிறகு ரசிகர்கள் மைதானத்தை இவ்வாறு சுத்தம் செய்த விடயம் கிரிக்கெட் உலகில் தலைப்பு செய்தியாகவும் மாறியுள்ளது.

இவ்வாறு, இலங்கை இரசிகர்கள் நடந்துகொண்ட விதம் தொடர்பாக, சர்வதேச கிரிக்கெட் பேரவை, இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்கார உள்ளிட்ட பலரும் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

1-151.jpg

பிரேமதாஸ மைதானத்தில் குப்பைகளை ஓரப்படுத்தியிருந்த கிரிக்கெட் ரசிகர்கள்

 

 

  • 1-151.jpg
    பிரேமதாஸ மைதானத்தில் குப்பைகளை ஓரப்படுத்தியிருந்த கிரிக்கெட் ரசிகர்கள்
  • 2-110.jpg
    பிரேமதாஸ மைதானத்தில் குப்பைகளை ஓரப்படுத்தியிருந்த கிரிக்கெட் ரசிகர்கள்

இதேவேளை, இலங்கை ரசிகர்களின் இந்த நடவடிக்கைக்கு இலங்கையையும், ஏனைய நாடுகளையும் சேர்ந்

தவர்கள் சமூகவலைத்தளங்கள் ஊடாக தமது பாராட்டுக்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இலங்கை இரசிகர்களின் இந்த செயற்பாட்டை வெகுவாக பாராட்டியுள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனம், குறும்படமொன்றையும் பிரத்தியேகமாக தயாரித்து வெளியிட்டுள்ளது.

 

 

கடந்த ஜுன் மாதம் ரஷ்யாவில் ஆரம்பமாகிய பிஃபா உலகக் கிண்ணத் தொடரில் குழு நிலைப் போட்டியில் செனகல் மற்றும் ஜப்பான் ரசிகர்கள், போட்டியின் பின்னர் மைதானத்திலிருந்த குப்பைகளை சுத்தம் செய்து, உலக மக்களின் கவனத்தை ஈர்த்திருந்தனர்.

இதனையடுத்து, பலமிக்க பெல்ஜியம் அணியை ஜப்பான் எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் ஐரோப்பாவின் பிரபல நாடான பெல்ஜியத்தை ஆசிய நாடான ஜப்பான் வீழ்த்துவதற்கு அதிக வாய்ப்பு இருந்தது.

முதல் இரண்டு கோல்கள் அடித்து முன்னிலை பெற்றிருந்த ஜப்பான், அதன்பின் 3 கோல்களை விட்டுக்கொடுத்து மயிரிழையில் வெற்றியை பறிகொடுத்தது. இந்த தோல்வியை தாங்க முடியாத ஜப்பான் வீரர்கள் கதறி அழுதனர். மேலும் போட்டியை நேரில் பார்வையிட வந்த ரசிகர்களும் அழுதார்கள்.

ஆர்ஜென்டீனா, ஜேர்மனி அணிகள் போட்டியில் இருந்து விலகியதும் அப்படியே மைதானத்தில் இருந்து விமான நிலையம் சென்று சொந்த நாடு திரும்பினார்கள். ஆனால், ஜப்பான் அணி வீரர்கள் அப்படி செய்யவில்லை. இம்முறை உலகக் கிண்ணத்தில் பிரபல அணியாக விளங்கிய பெல்ஜியத்திற்கு கடும் சவால் கொடுத்து கால்பந்து ரசிகர்களின் அன்பை பெற்ற ஜப்பான் வீரர்கள், தங்களுக்கு ஒதுக்கிய அறைக்குச் சென்று, அந்த அறையை சுத்தம் செய்தனர். அதன்பின் ரஷ்ய மொழியில்நன்றி” என்று ஒரு காகிதத்தில் எழுதி வைத்துவிட்டு சென்றனர்.

japan-fans-1024x683.jpg

 

மைதானத்தில் விளையாட்டால் மக்களை தங்கள் பக்கம் ஈர்த்த ஜப்பான் வீரர்கள், இந்த செயலால் ஒட்டுமொத்த மக்களையும் நெகிழ வைத்தனர். இதேபோல், போட்டி முடிந்த பின்னர் ஜப்பான் ரசிகர்களும் தோல்வியின் விரக்தியில் இருந்தாலும், பார்வையாளர் அரங்கை சுத்தம் செய்த பின்னரே அங்கிருந்து வெளியேறினர்.

இவ்வாறு ஜப்பான் ரசிகர்களும், வீரர்களும் முன்மாதிரியாக நடந்துகொண்ட சம்பவம் உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்களை, ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருந்ததுடன், அவர்களும் அதே முன்மாதிரியை மைதானங்களுக்குச் சென்று செய்வதற்கு கடைபிடிக்க ஆரம்பித்தார்கள்

 

 

எனவே, முழு உலகத்தையே கவர்ந்த இவ்வாறான முன்மாதிரியை இலங்கை வீரர்களும் கடந்த மாதம் செய்து காட்டினார்கள். இலங்கை அணி வீரர்கள், அண்மையில் பங்களாதேஷுக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்த போது, சில்ஹெட்டில் நடைபெற்ற இறுதி ஒரு நாள் போட்டியின் பிறகு வீரர்களுக்கான அறையை முழுவதுமாக சுத்தம் செய்துவிட்டு ஆங்கிலத்தில் நன்றி என தெரிவித்து விட்டு நாடு திரும்பியிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இறுதியாக, மைதானங்களுக்குச் சென்று குப்பைகளை ஒழுங்குபடுத்திச் செல்வதை தற்போது வழக்கத்திற்கு கொண்டுள்ள இலங்கை ரசிகர்கள், தத்தமது வீடுகளில் உள்ள குப்பைகளையும் இவ்வாறு ஒழுங்குபடுத்தி, உரிய இடங்களில் போடுவதற்கான வழக்கத்தையும் கொண்டுவர வேண்டும் என்பதுதான் சுற்றாடலை நேசிக்கும் ஆர்வலளர்களின் எதிர்பார்ப்பாகும்.

இலங்கையில் அண்மைக்காலமாக முக்கிய பிரச்சினையாக மாறியுள்ள குப்பை பிரச்சினைக்கு இதுவரை எந்தவொரு வேலைத்திட்டமும் அரசாங்கத்தினாலோ, தனியார் அமைப்புகளினாலோ முன்வைக்கப்படவில்லை. இதன் காரணமாக குப்பைகளை பாதைகளிலும், மருங்குகளிலும் போடுவதை மக்கள் காலம் காலமாக செய்து வருகின்றார்கள்.

எனவே, இந்த நடைமுறையினை மாற்றுவதற்கு, மைதானத்தில் இலங்கை ரசிகர்கள் எவ்வாறு முன்மாதிரியாக இருந்தார்களோ, அதேபோன்றதொரு தீர்வு திட்டமொன்றை அரசாங்கம் பெற்றுக்கொடுக்குமாயின் இலங்கையின் குப்பை பிரச்சினைக்கு தீர்வு கிடைப்பதுடன், உலகில் உள்ள அழகிய நாடுகளில் ஒன்றாகவும் இலங்கை மாறும் என்பதில் சந்தேகம் இல்லை.  

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌த்தை ஆயுத‌ங்க‌ளை ப‌ற்றி நூற்றுக்கு நூறு உங்க‌ளுக்கு தெரியுமா இல்லை தானே நான் ஒரு ஆய்வில் தெரிந்து கொண்டேன் இந்த வ‌ருட‌ம்.................. அதை ஈரானே வெளிப்ப‌டையா அறிவித்த‌து😏............................. அவ‌ங்க‌ யாழுக்கு அதிக‌ம் வ‌ராட்டியும் அத‌தூற‌ ப‌ரப்ப வ‌ருவ‌தில்லை......................... அவாக்கும் குடும்ப‌ம் பிள்ளைக‌ள் வேலைக‌ள் என்று அதிக‌ம் இருக்கு உங்க‌ளை மாதிரி யாழுக்கை 24ம‌ணித்தியால‌ம் கும்பி அடிக்க‌ முடியாது தான் அவவாள்😁..........................
    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.