Jump to content

டெலோ என்ன செய்யப் போகிறது?


Recommended Posts

டெலோ என்ன செய்யப் போகிறது?

 

 
 

டெலோ என்ன செய்யப் போகிறது?

யதீந்திரா
கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்ல்தலுக்கான வேட்பாளர் தெரிவின் போது டெலோ கடுமையான அறிக்கைகளை வெளியிட்டிருந்தது. டெலோவின் அறிக்கைகளை உற்றுநோக்கியவர்கள் இதோ டெலோ கூட்டமைப்பிலிருந்து வெளியேறப்போகிறது என்று பேசிக் கொண்டனர். அந்தளவிற்கு காட்டமான அறிக்கைகள், காட்டமான பேச்சுக்கள், கடுமையான நிபந்தனைகள் ஆனால் இறுதியில் எல்லாமே புஸ்வானமாகியது. தமிழரசு கட்சி வழமைபோல் தாங்கள் நினைத்தவாறு விடயங்களை செய்து முடித்தது. முடிந்தவரை பேசிப்பார்த்த, ஏசிப்பார்த்த டெலோ இறுதியில் தமிழரசு கட்சியின் எதேச்சாதிகாரத்திற்குள் அடங்கி, ஒடுங்கிப் போனது.

டெலோ ஒரு காலத்தின் முன்னணி விடுதலை இயக்கங்களில் ஒன்று. அதில் உள்ளவர்களுக்கு ஒரு வரலாறுண்டு. குறிப்பாக அதன் செயலாளர் சிறிகாந்தா தனது அரசியல் வாழ்வை வி.என்.நவரட்ணத்தால் உருவாக்கப்பட்ட சுயாட்சிக் கழகத்திலிருந்து ஆரம்பித்தவர். தந்தை செல்வநாயகம் என்று அழைக்கப்படும் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் 1965இல் ஜக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ளும் முடிவை எடுத்தபோது, அதனை எதிர்த்து வெளியேறியவர்தான் இந்த நவரட்ணம். இவருடன்தான் சிறிகாந்தா தனது அரசியல் வாழ்வை ஆரம்பித்திருந்தார். இந்த சுயாட்சிக் கழகம் 1968இல் உருவாக்கப்பட்டது. அப்படிப்பார்த்தால் தற்போது கூட்டமைப்பின் தலைவராக அறியப்படும் இரா.சம்பந்தனுக்கு முன்பாகவே அரசியலுக்குள் பிரவேசித்தவர் சிறிகாந்தா. இப்படியான வரலாற்றைக் கொண்ட சிறிகாந்தா இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்? இதே போன்று, தற்போது டெலோவின் தலைவராக இருக்கின்ற செல்வம் அடைக்கலநாதனுக்கும் ஒரு வரலாறு உண்டு. செல்வம் சிறு வயதிலேயே ஆயுதப் போராட்டத்தில் இணைந்து கொண்ட ஒருவர். போராட்ட வாழ்வில் பல அனுபவங்களை கண்டவர். ஆனால் இன்று தமிழரசு கட்சிக்கு முன்னால் ஏன் இந்த வளைந்து போகும் நிலைமை?

selvam and srikantha

ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட இயக்கங்கள் தொடர்பில் விமர்சனங்களை முன்வைப்போர் உண்டு. ஆனால் அதனை இப்போது உயர்த்திப்பிடிப்பதில் ஒரு பயனுமில்லை. ஒரு கற்றலுக்காக சில விடயங்களை பார்ப்பது முக்கியம்தான். ஆனால் அந்த கற்றல் கூட, கடந்த காலத்தை ஒரு உசாத்துணையாகக் கொண்டு முன்நோக்கி நகர்வதற்குத்தானேயன்றி, ஒருவரை ஒருவர் சுரண்டி சுகம் காண்பதற்கல்ல. ஆனால் ஆயுத விடுதலைப் போராட்டத்தில் பங்குகொண்ட ஒவ்வொரு இயக்கத்திற்கும் ஏதேவொரு வகையில் ஒரு பங்களிப்பு உண்டுதான். இன்று வடக்கின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று விவாதிக்க முடிகிறதென்றால் அதுவும் அன்றைய அயுதப் போராட்டத்தின் விளைவுதான். மாகாண சபையென்று ஒன்று இல்லாதிருந்திருந்தால்! அப்படிப் பார்த்தால் தமிழரசு கட்சி, பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய மிதவாத கட்சிகள் எவையுமே, அரசியலில் காண்பிக்கக் கூடியளவிற்கு இதுவரை எதனையும் சாதித்தித்திருக்கவில்லை. நிலைமை இப்படியிருக்க, இயக்கங்களை பார்த்து நீங்கள் இரத்தக்கறை படிந்தவர்கள் ஆனால் நாங்களோ தூய வேட்டிக்காரர்கள் என்று சொல்வதில் எந்தவிதமான அரசியல் தர்க்கமுமில்லை. ஆயுதப் போராட்டத்தின் போது விடுகளுக்குள் ஒழிந்துகிடந்தால் பின்னர் எப்படி வேட்டியில் கறைபடியும்? வெளியில் வந்து மக்களோடு மக்களாக நின்றிருந்தாலல்லவா வேட்டியில் ஏதும் பட்டிருக்கும். பிரச்சினை என்றவுடன் கொழும்பிற்கும் இந்தியாவிற்கும் ஓடிப் போனவர்கள், களத்தில் போராடியவர்களைப் பார்த்து நீங்கள் எங்களுக்குக் கீழானவர்கள் என்று கூறுவதில் என்ன நியாயமுண்டு?

ஆனால் ஒருவருக்கான நியாயங்கள் எல்லா நேரங்களிலும் மற்றவர்களிடமிருந்து கிடைக்கும் என்றில்லை. நியாயங்கள் அப்படி இலகுவாக கிடைத்துவிடுமென்றால் ஒடுக்கப்பட்டவர்கள் எதிர்ப்பு அரசியலை கையில் எடுக்க வேண்டிய தேவையும் ஏற்படாது. இப்போதுள்ள பிரச்சினை என்னவென்றால் தமிழ் அரசியல் பரப்பில் தமிழரசு கட்சிக்கு எதிரான ஒரு உள்ளக எதிர்ப்பு அரசியல் தேவைப்படுகிறது. அதனை முன்னெடுப்பதில் அனைத்து தரப்பினரும் ஓரணியில் நிற்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. அரசியல் கூட்டுக்கள் அல்லது ஜக்கிய முன்னணிகள் அவ்வப்போது ஏற்படும் தேவைகளிலிருந்துதான் உருவாக்கின்றன. அவ்வாறானதொரு தேவை இப்போது எழுந்திருக்கிறது. ஆனால் அந்த தேவையை டெலோ புரிந்து கொண்டிருக்கிறதா?

விடுதலைப் புலிகள் தவிர்ந்த பிரதான இயங்கங்களான டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் புளொட் ஆகியவை 1990களுக்கு பின்னர் முற்றிலுமாக தங்களை ஜனநாயக நீரோட்டத்திற்குள் இணைத்துக் கொண்டன. ஆனால்; ஒரு ஜனநாயக அரசியல் கட்சிக்கான கட்டமைப்புக்கள் இவர்களிடம் எப்போதுமே வலுவாக இருந்ததில்லை. இப்போதும் அவ்வாறானதொரு நிலைமைதான் நீடிக்கின்றது. ஒப்பீட்டடிப்படையில் தமிழரசு கட்சியிடம் ஒரு குறிப்பிட்டளவான கட்சிக் கட்டமைப்புண்டு ஆனால் அதனை ஒரு ஜனநாயக கட்டமைப்பு என்று முற்றிலுமாகக் கூறிவிட முடியாது. இன்றிருக்கும் எந்தவொரு தமிழ் அரசியல் கட்சியிடமும் தீர்மானங்களை எடுப்பதில் கீழிருந்து மேல்நோக்கிச் செல்லும் நடைமுறையில்லை. அனைத்து தீர்மானங்களும் மேலிருந்து கீழ் நோக்கியே திணிக்கப்படுகின்றன. பெருமளவிற்கு தமிழ் தேசிய கட்சிகளாக இயங்கிவரும் அனைத்து கட்சிகளுமே நபராதிக்க கட்சிகள்தான். டெலோவும் இவ்வாறான பலவீனங்களுக்கு ஊடாக பயணிக்கும் ஒரு கட்சிதான். ஆனால் ஆயுதப் போராட்டத்திலிருந்து ஜனநாயகத்திற்கு திரும்பிய கட்சிகளில் ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் மற்றும் ஈ.பி.டி.பி ஆகிய கட்சிகளுடன் ஒப்பிட்டால் வடக்கு கிழக்கு முழுவதும் தங்களுக்கான கிளைகளுடன் இயங்கிவரும் ஒரேயொரு கட்சியென்றால் அது டெலோ மட்டும்தான்.

selvam-adaikalanathan-at-kalmunai-local-election

டெலோ வடக்கு கிழக்கு மகாணங்களிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் சிறியளவிலாவது கட்சிக் கட்டமைப்பொன்றை பேணிவருகிறது. மத்திய குழுவின் தீர்மானங்களுக்கு ஏற்பவே முடிவுகள் எடுக்கப்படுகிறது. ஆனால் அண்மைக்காலத்தில் டெலோவின் முடிவுகள் முன்னுக்கு பின் முரணாக இருக்கின்றன. அறிக்கைகள் முன்னுக்கு பின் முரணாக இருக்கின்றன. சில வாரங்களுக்கு முன்னர் செல்வம் அடைக்கலநாதன் வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரனை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தளத்தில் சந்தித்திருந்தார். இதன் போது தங்களது ஆதரவு எப்போதும் உங்களுக்கே என்றும் குறிப்பிட்டிருந்தார். அதன் பின்னர் டெலோவின் மத்திய குழுவிலும் விக்கினேஸ்வரனா மாவையா என்றால் டெலோவின் ஆதரவு விக்கினேஸ்வரனுக்குத்தான் என்றும் முடிவானது. மத்திய குழுவின் முடிவு இவ்வாறிருக்க, டெலோவின் செயலாளர் சிறிகாந்தா, அடுத்த வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர்களாக இருவரது பெயர்களை சம்பந்தனிடம் சிபார்சு செய்திருக்கிறாராம். ஒருவர் எழுந்து நடக்க முடியாமல் இருக்கின்ற உடுப்பிட்டி சிவசிதம்பரத்தின் சகோதரர் மற்றையவர், செல்வநாயகத்தின் மகனும் நீண்டகாலமாக இந்தியாவில் வசித்துவருபருமான சந்திரகாசன். அப்படியானால் டெலோவின் உத்தியோகபூர்வமான நிலைப்பாடு என்ன? உண்மையிலேயே டெலோவின் நிலைப்பாடு விக்கினேஸ்வரனை எதிர்ப்பதுதானா?

டெலோவின் உறுதியற்ற நிலைப்பாடுகள்தான் மறுவளமாக தமிழரசு கட்சிக்கு சாதகமாக இருக்கிறது. டெலோவின் உறுதியற்ற முடிவுகளை எதிர்த்து அதன் மூத்த உறுப்பினர் கணேஸ் வேலாயுதம் கட்சியைவிட்டு வெளியேறியிருக்கின்றார். தனித்து இயங்கவும் முடிவு செய்திருக்கின்றார். டெலோவின் பலவீனம்தான் தமிழசு கட்சியின் பலம். இன்றைய நிலையில் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட போதிருந்த கட்சிகளில் டெலோ ஒன்றுதான் தற்போதும் கூட்டமைப்புக்குள் இருக்கிறது. தமிழரசு கட்சியால் கூட்டமைப்பு என்று இப்போதும் கூற முடிகிறதென்றால், அதற்கு டெலோவின் அங்கத்துவம்தான் காரணம். டெலோ வெளியேறுமாக இருந்தால் கூட்டமைப்பு என்னும் பெயரை தமிழரசு கட்சியால் பிரயோகிக்க முடியாது போகும். ஆனால் யானை தன் பலமறியாது தனது தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக்கொள்வது போன்று, டெலோவிற்கும் தன்பலம் விளங்கமால் தமிழரசு கட்சியின் ஆதிக்கத்திற்குள் தடுமாறிக் கொண்டிருக்கிறது. டெலோவின் தலைவர்கள் முதலில் தங்களின் பலம் என்ன பலவீனம் என்ன என்பதை நன்கு புரிந்துகொள்ள வேண்டும். அப்படிப் புரிந்து கொண்டால் நிகழவுள்ள அரசியல் மாற்றத்தின் அஸ்திபாரமாக டெலோவே திகழும். காலம் புதியதொரு அரசியல் கூட்டுக்கான தேவையை உணர்த்திநிற்கிறது. ஆனால் கட்சிகளோ புதிய சூழலுக்கு ஏற்ப தங்களை தயார்படுத்திக் கொள்ளத் தயாரில்லை. டெலோ புதிய சூழலை விளங்கிக்கொள்ளாது விட்டால், டெலோ 2020 தேர்தலில் படுமோசமான வீழ்சியை சந்திக்க நேரிடும். தாங்களே தமிழரசு கட்சிக்கு அடுத்த நிலையில் என்னும் கற்பனையும் கலைந்துபோக நேரிடும். ஏனெனில் தமிழரசு கட்சி கொஞ்சம் கொஞ்சமாக டெலோவை உள்வைத்தே அழித்துவருகிறது. இதுவே முன்னர் ஈ.பி.ஆர்.எல்.எப் இற்கும் நிகழ்ந்தது.

http://www.samakalam.com/blog/டெலோ-என்ன-செய்யப்-போகிறத/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளை அழித்தால் அரசியல் ரீதியாக பேசித்தீர்த்து வெற்றியடைவோம் என கூக்குரலிட்டவர்கள் 2009க்கு பின் இன்றுவரை எதனை சாதித்தார்கள்?

வீதிகளை புனருத்தாரணம் செய்வதற்கு  கூட  திரணியற்றவர்களாக இருக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன துவக்கில்லாமல் போச்சுது.. இல்லை இன்னொரு பொபி.. தாஸ் சண்டை நடந்து முடிஞ்சிருக்கும். இடையில புலியும் இல்லாமல் போயிட்டு.. இல்ல.. பழியை தூக்கி புலில போட்டிட்டு.. சிங்களவனிடமும்.. ஹிந்தியனிடமும்.. போய் அடைக்கலம் புகுந்திடலாம். 

இதைத் தவிர.. உந்த ஒட்டுண்ணி ஆயுத அரசியல் காட்சிகளுக்கு வேற காட்சி அமைக்க வரவே வராது. ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அண்ணை எல்லாம் அந்த அக்கரைப்பற்று அங்கிள்(63) தந்த உசார் தான் காரணமோ?!
    • சுகாதார அமைச்சுக்கு சொந்தமான 679 வாகனங்கள் மாயம்! ”சுகாதார அமைச்சுக்கு சொந்தமான 679 வாகனங்கள் காணாமற்போன விடயம் தொடர்பாக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படும்”என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 157 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், ஹம்பாந்தோட்டை, கிரிந்த முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாஸ இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” சுகாதாரத்துறையில் இடம்பெற்ற மருந்துப் பொருள் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் இலஞ்ச மோசடிகள் தொடர்பில் வெளியான அம்பலத்தினால் நாடாளுமன்றுக்கு உள்ளேயும் வெளியேயும் பல சவால்களுக்கு நாம் முகம் கொடுத்தோம். ஐக்கிய மக்கள் சக்தி பெரும் போராட்டங்களை இன்று நடத்தி திருடர்களை நீதிமன்றில் முன் நிறுத்தியுள்ளது. மருந்துப்பொருள் மோசடி குறித்து பலர் பேசுகிறார்கள். ஆனால், சுகாதார அமைச்சுக்குச் சொந்தமான 679 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. இதில் 240 வாகனங்கள் குறித்த சில தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் சுகாதார அமைச்சு மேலதிக தகவல்களை கணக்காய்வு அலுவலகத்திற்கு ஒப்படைக்கவில்லை. மேலும் 439 வாகனங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை. வங்குரோத்து அடைந்துள்ள இந்த நாட்டில்இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் போது பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அரச நிறுவனங்களில் இவ்வாறான பல முறைகேடுகள் காணப்படுவதால், இந்த மோசடிகள் மற்றும் திருட்டுகள் ஒவ்வொன்றும் தெளிவாக விசாரிக்கப்படும். இதுதொடர்பாக நீதிமன்றில் வழக்கும் தொடுக்கப்படும். இதற்கான நடவடிக்கைகளை எமது ஆட்சியில் முன்னெடுப்போம்” இவ்வாறு சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378433
    • இது தான் நான், யாழ் அத்தியடி வீட்டில்  நீங்களே வயதை தீர்மானித்து, உங்கள் ஊகம் சரியா பிழையா  என்பதை சரிபாருங்கள். கட்டாயம் நான் ஓய்வு வயதை தாண்டிய ஒருவன் !           
    • இந்த ஒலிநாடாவை நான் கேட்கவில்லை நெடுக்ஸ். நீங்கள் கேட்டீர்களா? ஏன் என்றால் அதன் சிறு விபரிப்பில் Hundreds of South Asians are fighting Russia’s war on Ukraine, including from India, Nepal, and Sri Lanka.  என உள்ளது. இதன் அர்த்தம் நூற்றுக்கணக்கான தென்னாசியர்கள் உக்ரேனில் நடக்கும் ரஸ்யாவின் போரில் பங்குறுகிறனர் என்பதல்லாவா?
    • லைக்கா தொடர்பான அவதூறுகளை வெளியிடக் கூடாது : சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! லைக்கா தொடர்பான எந்த ஒரு அவதூறுகளையும் வெளியிடக் கூடாதென சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த பங்குனி ( (March)  மாதம் 19 ஆம் திகதி  சென்னை உயர் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட சிவில் வழக்கில் (Civil Suit) இந்த அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் இது தொடர்பான அறிவிப்பை You Tube LLC நிறுவனத்திற்கு அறிவித்ததோடு உடனடியாக அதுசம்பந்தமான காணொளிகளை (வீடியோக்களை) நீக்குமாறு உத்தரவிட்டதுடன், இதனூடாக சவுக்கு சங்கர் பெற்றுக்கொண்ட வருமானம் அனைத்தையும்  நீதிமன்றில் வைப்பிலிடுமாறும் உத்தரவிடப்பட்டது. தனது சவுக்கு மீடியா You Tube  பக்கத்தில்,  லைகா நிறுவனத்தை தொடர்புபடுத்தி சவுக்கு சங்கர் அவதூறாக பேசியுள்ளதாக குற்றம்சாட்டி, அந்நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், தமிழக திரை உலகிலும், உலகளவிலும் நற்பெயரை கொண்டுள்ள லைகா நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கும் விளைவிக்கும் வகையில் சவுக்கு சங்கரின் பேச்சு அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன், ஒரு கோடியே ஆயிரம் ரூபாய் மான நஷ்ட ஈடாக வழங்கவும், அந்த காணொளி மூலம் கிடைத்த தொகையை வைப்பிலிட உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டது. மேலும், YouTube பக்கத்தில் உள்ள காணொளியை ( வீடியோவை) நீக்க உத்தரவிடவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி என். சதீஷ்குமார், லைகா நிறுவனத்தின்  மீது எந்தவிதமான இழிவான/ அவதூறான குற்றச்சாட்டுகளை நேரடியாகவோ அல்லது வேறு எந்த வகையிலும் சவுக்கு மீடியா வெளியிடக்கூடாது என மார்ச் 19 அன்று இடைக்காலத் தடை விதித்தார். மேலும்  இந்த காணொளிகள்  மூலம் கிடைத்த வருமான தொகையை நீதிமன்றத்தில் வைப்பிலிட  YouTube  LLC  நிறுவனத்துக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்னிலையில் கடந்த ஏப்ரல் 12ஆம் திகதி  மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, லைகாவிற்கு எதிராகச் சவுக்கு சங்கர்  பேசிய காணொளி (வீடியோ) முடக்கப்பட்டதாகத் YouTube  LLC  தரப்பில்,  தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு தொடர்பாக, ஜூன் 13ஆம் திகதிக்கு முன்  சவுக்கு சங்கர் பதிலளிக்க வேண்டும் எனவும், சவுக்கு சங்கருக்கு எதிரான இடைக்கால உத்தரவை வரை நீட்டித்தும் உத்தரவிடப்பட்டது. அத்துடன் YouTube  LLC  சார்பில் முன்னியைான சட்டத்தரணியின் வாய்மூல பதில்கள் எழுத்துபூர்வமாக ஜூன் 13ஆம் திகதிக்கு முன்   சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி,   விசாரணையை நீதிபதி சி.வி.  கார்த்திகேயன் ஒத்திவைத்துள்ளார். https://athavannews.com/2024/1378369
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.