Jump to content

நேரில் சந்திப்போம் என பிரபாகரனிற்கு கடிதம் எழுதினேன்- மகிந்த


Recommended Posts

நேரில் சந்திப்போம் என பிரபாகரனிற்கு கடிதம் எழுதினேன்- மகிந்த

 

 
 

சமாதான தீர்வை காண்பதற்காக  விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் நான் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள முன்வந்தேன் ஆனால் அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை இதன் காரணமாக அவரை கொல்லவேண்டியநிலையேற்பட்டது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஐலன்டின் விசேட செய்தியாளர் எஸ் வெங்கட் நாரயணனிற்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாங்கள் தீர்வை காண்பதற்காக நேரடி சந்திப்பொன்றில் ஈடுபடுவோம்  நான் கிளிநொச்சி வருகின்றேன் அல்லது நீங்கள் கொழும்பு வரலாம் என தெரிவித்து பிரபாகரனிற்கு கடிதம்  எழுதினேன்  என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

2006 இல் விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் ஆரம்பமாவதற்கு முன்னர் பிரபாகரனிற்கு நான் செய்தியொன்றை அனுப்பினேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

mraugu.jpg

நாங்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவோம் அப்பாவிகளை கொல்லவேண்டாம்,படையினரை தாக்கவேண்டாம், நீங்கள் இதனை நிறுத்தாவிட்டால் உங்களை கொல்லவேண்டியிருக்கும் எனவும் தெரிவித்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு பிரபாகரனிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை கொலைகள் தற்கொலை தாக்குதல்கள் படையினர் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தன என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/38326

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த சொன்னதைச் செய்து காட்டிவிட்டார். ஆனால் அதிகார போதை தலைக்கேறி வாழ்நாள் ஜனாதிபதியாக இருக்கக்கூடிய வாய்ப்பை இழந்துவிட்டார்.

அவருடைய குடும்பத்தினர் மீண்டும் சிறிலங்கா அரச அதிகாரத்தைக் கைப்பற்றி தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒடுக்கத்தான் போகின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

அவருடைய குடும்பத்தினர் மீண்டும் சிறிலங்கா அரச அதிகாரத்தைக் கைப்பற்றி தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒடுக்கத்தான் போகின்றனர்.

மகிந்த வந்தால்த் தான் தமிழரின் பிரச்சனை எடுபடும்.வெளிநாடுகளுக்கு உள்நுழைய தமிரின் பிரச்சனை ஒன்றே தெரிவாக இருக்கும்.

தமக்கு விரும்பிய நல்லாட்சி அரசென்றால் என்ன வேணுமானாலும் செய்துவிட்டு போகட்டும் என்றிருப்பார்கள்.

Link to comment
Share on other sites

2 hours ago, ஈழப்பிரியன் said:

மகிந்த வந்தால் தான் தமிழரின் பிரச்சனை எடுபடும்.வெளிநாடுகளுக்கு உள்நுழைய தமிரின் பிரச்சனை ஒன்றே தெரிவாக இருக்கும்.

வெளிநாடுகளான சீனா, அமேரிக்கா, இந்தியா, ரஷ்சியா,ஐரோப்பா எல்லாம்:

  1. ஏதோ இலங்கைக்குள் உள்நுழைய ஆர்வத்துடன் காத்திருப்பது போலவும்,
  2.  அப்படி உள்நுழைய தமிழர் பிரச்சினை தவிர வேறு வழி அவர்களுக்கு இல்லை என்றும்,
  3. அப்படி உள்நுழைவது தமிழருக்கு நன்மை போலவும்

எழுதி இருக்கிறீர்கள். இந்தியாவும் தமிழ்நாடும் உதவும் என்று தொடங்கி, முள்ளிவாய்க்காலில் அமெரிக்காவுக்கு காத்திருந்தது போல தான் இதுவும். அடுத்தவர்கள் வந்து தீர்வு தருவார்கள், அல்லது இலங்கை அரசு தீர்வு தரவேண்டும் என்று எதிர்பார்க்கும் வரை இலங்கை தமிழர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிவது தொடரும். இதற்க்கு காரணம் மற்றவர்கள் எவரும் தீர்வு தரப் போவது இல்லை.

Link to comment
Share on other sites

2 hours ago, Jude said:

வெளிநாடுகளான சீனா, அமேரிக்கா, இந்தியா, ரஷ்சியா,ஐரோப்பா எல்லாம்:

  1. ஏதோ இலங்கைக்குள் உள்நுழைய ஆர்வத்துடன் காத்திருப்பது போலவும்,
  2.  அப்படி உள்நுழைய தமிழர் பிரச்சினை தவிர வேறு வழி அவர்களுக்கு இல்லை என்றும்,
  3. அப்படி உள்நுழைவது தமிழருக்கு நன்மை போலவும்

எழுதி இருக்கிறீர்கள். இந்தியாவும் தமிழ்நாடும் உதவும் என்று தொடங்கி, முள்ளிவாய்க்காலில் அமெரிக்காவுக்கு காத்திருந்தது போல தான் இதுவும். அடுத்தவர்கள் வந்து தீர்வு தருவார்கள், அல்லது இலங்கை அரசு தீர்வு தரவேண்டும் என்று எதிர்பார்க்கும் வரை இலங்கை தமிழர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிவது தொடரும். இதற்க்கு காரணம் மற்றவர்கள் எவரும் தீர்வு தரப் போவது இல்லை.

இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தின் பின்னர், அதாவது காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரமடைந்த நாடுகளில் உள்ள இனங்கள், அடுத்தவர்கள் உதவியின்றிப் போராடிச் சுதந்திரமடைந்தது பற்றிய விபரம் ஒன்றையேனும் அறியத் தருவீர்களா...? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை ஏன் இவர் அப்ப சொல்லேல்ல. இப்ப யாரும் கண்முன்ன இல்லை என்ற துணிவில்.. ஆளாளுக்கு கதையளந்து திரிகிறார். எங்களில் கொஞ்சப் பேர் தொடர்கள் எழுதிக் கொண்டு திரிவது போல. ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

மகிந்த சொன்னதைச் செய்து காட்டிவிட்டார்.

என்னப்பா ஆளாளுக்கு....நேரத்துக்கு நேரம் மாத்தி மாத்தி கதைக்கிறியள்?
ஒருங்கால் சொல்லிச்சினம்  பூகோள அரசியலின் படி இந்தியா ஒரு நாளும் தனிநாடு அமைக்க விடாது அதாலைதான் முள்ளிவாய்க்கால் முடிவு எண்டு..
பிறகு ராஜீவ் காந்தியை போட்டதாலைதான் முள்ளிவாய்க்கால் முடிவு எண்டுச்சினம்
பிறகு சர்வதேசம் தான் பயங்கரவாதிகளை அழிச்சது எண்டிச்சினம்
அங்காலை கொஞ்சச்சனம் சகோதரபடுகொலைதான் முள்ளிவாய்க்கால் முடிவு எண்டுச்சினம்.
இந்தியாதான் கெல்ப் பண்ணினது எண்டு கோத்தவாயர் எங்கையோ சொன்ன ஞாபகம்
இப்ப மகிந்த செய்து காட்டிட்டார் எண்டுறியள்.
எனக்கு ஒரு கோதாரியும் விளங்கேல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிறைய வியாக்கியானங்கள் சொல்லலாம். ஆனால் புலிகளின் முடிவு முள்ளிவாய்க்காலில் நடந்தது என்ற உண்மை ஒன்றுதானே. அது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி மகிந்த இருந்ததால்தான் மக்கள் பெருமளவில் கொல்லப்பட்டபோது மனிதாபிமானம் காட்டாமல் தொடர்ந்தும் முன்னேறி முழுவதுமாக முடித்தனர்.

Link to comment
Share on other sites

தமிழின படுகொலைகளை தொடர்ந்தது மட்டுமல்ல பல பில்லியன்களை கொள்ளையடித்த சிங்கள-பௌத்த பயங்கரவாதி மகிந்த ராஜபக்ச சொல்வதை இந்தக் கும்பல்களுக்கு வால்பிடிக்கும் எட்டப்பர்களைத் தவிர வேறு யார் தான் நம்பப் போகிறார்கள்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/12/2018 at 12:21 PM, Jude said:

வெளிநாடுகளான சீனா, அமேரிக்கா, இந்தியா, ரஷ்சியா,ஐரோப்பா எல்லாம்:

  1. ஏதோ இலங்கைக்குள் உள்நுழைய ஆர்வத்துடன் காத்திருப்பது போலவும்,
  2.  அப்படி உள்நுழைய தமிழர் பிரச்சினை தவிர வேறு வழி அவர்களுக்கு இல்லை என்றும்,
  3. அப்படி உள்நுழைவது தமிழருக்கு நன்மை போலவும்

எழுதி இருக்கிறீர்கள். இந்தியாவும் தமிழ்நாடும் உதவும் என்று தொடங்கி, முள்ளிவாய்க்காலில் அமெரிக்காவுக்கு காத்திருந்தது போல தான் இதுவும். அடுத்தவர்கள் வந்து தீர்வு தருவார்கள், அல்லது இலங்கை அரசு தீர்வு தரவேண்டும் என்று எதிர்பார்க்கும் வரை இலங்கை தமிழர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிவது தொடரும். இதற்க்கு காரணம் மற்றவர்கள் எவரும் தீர்வு தரப் போவது இல்லை.

தமிழ் மக்களுக்கு தேர்வு அல்லது தீர்வு  அவர்கள் தரமாட்ட்டார்கள் 
பிராந்திய அரசியல் ஆதிக்கம் என்றுவரும்போது 
யார் இலங்கை சார் நிலம் கடலை ஆளுமை கொள்ளவது என்ற 
போட்டி அவர்கள் இடத்தே வரும் 
அமேரிக்கா ... இந்தியா ... சீனா மூன்றும் 
ஒரு கோட்டில் இருக்க வாய்பில்லை இந்தியா அமெரிக்க 
சார்பு நிலைகொண்டு இந்தியாவை சுத்தி உள்ள அனைத்து நாடுகளுடனும் 
பகைமை காட்டி வருகிறது.

பாகிஸ்தான் சீன உறவு நாளும் நாலு பலம் அடைகிறது 
இப்போ திடீரென இம்ரான் கான் தேர்தலில் வெற்றி ஈட்டி உள்ளதால் 
அங்கும் சில சிக்கல்கள் வரப்போகின்றன.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.