Jump to content

பார்சிலோனா அணியின் முழுநேர கேப்டனாக மெஸ்ஸி நியமனம்!


Recommended Posts

பார்சிலோனா அணியின் முழுநேர கேப்டனாக மெஸ்ஸி நியமனம்!

 

பார்சிலோனா அணியின் கேப்டனாக லயோனல் மெஸ்ஸி நியமிக்கப்பட்டுள்ளார். 

பார்சிலோனா

கால்பந்து உலகின் நாயகனாக வலம் வருபவர் லயோனல் மெஸ்ஸி. இவர் ஸ்பெயினின் பார்சிலோனா கிளப் அணிக்காக கடந்த 2005ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார்.  கடந்த 2015-ம் ஆண்டிலிருந்து, இந்த  அணியின் கேப்டனாக  இருந்து வருபவர் ஆன்ட்ரே இனியஸ்டா.  இந்த அணியின் துணை கேப்டனாக லயோனால் மெஸ்ஸி செயல்பட்டு வந்தார். இந்நிலையில் இனியஸ்டா கடந்தாண்டு பார்சிலோனா அணியிலிருந்து 2017-18 சீசனுடன் விலகுவதாக அறிவித்திருந்தார். அவர் ஜப்பானின் வெசல் கோப் அணிக்காக விளையாட இருக்கிறார். இதையடுத்து, துணை கேப்டனாக இருந்த லயோனால் மெஸ்ஸி தற்போது பார்சிலோனா அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

 

 

இந்த தகவலை பார்சிலோனா கால்பந்து நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், அணியின் துணை கேப்டனாக நடுகள வீரர் செர்ஜியோ புஸ்கட்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை, பார்சிலோனா அணிக்காக 637 போட்டிகளில் விளையாடியுள்ள மெஸ்ஸி, 552 கோல்களை அடித்திருக்கிறார். மெஸ்ஸி, ஏற்கெனவே அர்ஜெண்டினா தேசிய கால்பந்து அணியின் கேப்டனாகச் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

https://www.vikatan.com/news/sports/133699-messi-appointed-as-barcelonas-fulltime-captain.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.