Jump to content

கரீபியன் பிரீமியர் லீக் டி20


Recommended Posts

நடுவிரல்களை காட்டிய சோஹைல் தன்விருக்கு 15 சதவிகித அபராதம்

 
அ-அ+

கரிபியன் பிரீமியர் லீக்கில் கயானா அணிக்காக விளையாடி வரும் பாகிஸ்தான் வீரர் சோஹைல் தன்விருக்கு 15 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. #CPL2018

 
 
 
 
நடுவிரல்களை காட்டிய சோஹைல் தன்விருக்கு 15 சதவிகித அபராதம்
 
வெஸ்ட் இண்டீஸில் கரிபியன் பிரீமியர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கயானா அமேசான் வாரியர்ஸ் - செயின்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின.

செயின்ட் கிட்ஸ் அணி பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது கயானா அணியின் வேகப்பந்து வீச்சாளரான பாகிஸ்தானின் சோஹைல் தன்விர் 17-வது ஓவரை வீசினார். இந்த ஓவரில் பென் கட்டிங் இமாலய சிக்ஸ் ஒன்று விளாசினார். சிக்ஸிற்கு அடுத்த பந்தில் களீன் போல்டானார்.

201808121536468149_1_tanvir003-s._L_styvpf.jpg

இதனால் தன்வீர் தனது இரண்டு கைகளின் நடுவிரல்களை நீட்டி சந்தோசத்தை வெளிப்படுத்தினார். பிறர் மனதை புண்படும் வகையில் அறுவறுக்கத்தக்க வகையில் சைகை காட்டிய தன்விருக்கு 15 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

https://www.maalaimalar.com/News/Sports/2018/08/12153646/1183405/Sohail-Tanvir-fined-15-percent-of-match-fee-after.vpf

Link to comment
Share on other sites

கெய்ரன் பொலார்டின் ஒரே ஓவரில் 5 சிக்சர்கள் விளாசல்: 36 பந்துகளில் 94 விளாசிய டேரன் பிராவோ

 

 
darren%20bravo

பொலார்டை சிக்சர் வெளுக்கும் டேரன் பிராவோ. | கெட்டி இமேஜஸ்

கரீபியன் பிரிமியர் லீக் டி20 போட்டியில் இடது கை வீரர் டேரன் பிராவோ, கெய்ரன் பொலார்டின் ஒரே ஓவரில் 5 சிக்சர்கள் விளாசியதையடுத்து ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி செய்ண்ட் லூசியா ஸ்டார்சை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

36 பந்துகளில் 94 ரன்களை டேரன் பிராவோ விளாசித்தள்ளியதையடுத்து 212 ரன்கள் இலக்கை பரபரப்பான முறையில் ஒரு பந்து மீதம் வைத்து வென்றது ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ். இந்த அதிரடியில் அவர் 6 பவுண்டரிகளையும் 10 சிக்சர்களையும் வெளுத்துக் கட்டினார்.

 

செயிண்ட் லூசியா ஸ்டார்ஸ் அணியின் கேப்டன் கெய்ரன் பொலார்ட் வீசிய ஒரே ஓவரில் 5 சிக்சர்களை விளாசினார் டேரன் பிராவோ.

4 சிக்சர்களை வரிசையாக பறக்க விட்ட டேரன் பிராவோ பிறகு ஒரு 2 ரன்களையும் 6வது பந்தை மீண்டும் சிக்சருக்கும் தூக்கி ஒரே ஓவரில் 32 ரன்களை விளாசியது ஆட்டத்தில் திருப்பு முனை ஏற்படுத்தியது.

செயிண்ட் லூசியா ஸ்டார்ஸ் முன்னதாக 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது. டேவிட் வார்னர் 55 பந்துகளில் 72 ரன்கள் எடுத்தார். ரக்கீம் கார்ன்வால் 53 ரன்களையும் கேப்டன் பொலார்ட் 65 நாட் அவுட்.

டேரன் பிராவோவுடன் பிரெண்டன் மெக்கல்லம் கூட்டணி மேற்கொண்டு 42 பந்துகளில் 68 ரன்கள் விளாசினார்.

ஒரே போட்டியில் 34 சிக்சர்கள் அடிக்கப்பட்டது, இது புதிய டி20 உலக சாதனையாகும்.

https://tamil.thehindu.com/sports/article24716961.ece

Link to comment
Share on other sites

தன் பந்துவீச்சை ஷாகித் அஃப்ரீடி போல் மாற்றிக் கொண்ட ஸ்டீவ் ஸ்மித்: ஆல்ரவுண்டராகவும் சோபித்தார்

 

 
Capture

கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட்டில் பார்பேடோஸ் ட்ரைடண்ட்ஸ் அணிக்கு ஆடிவரும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தனது லெக்ஸ்பின் பந்து வீச்சை ஷாகித் அஃப்ரீடி போல் மாற்றி அதில் விக்கெட்டுகளையும் கைப்பற்றி வெற்றி கண்டுள்ளார்.

லாடர்ஹில்லில் நேற்று நடைபெற்ற சிபிஎல் டி20 போட்டியில் ஜேசன் ஹோல்டர் தலைமை பார்பேடோஸ் டிரைடண்ட்ஸ் அணி முதலில் பேட் செய்த பொது ஸ்டீவ் ஸ்மித் 44 பந்துகளில் 5 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 63 ரன்கள் எடுக்க, இவருடன் கூட்டணி அமைத்த ஷேய் ஹோப் 2 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 35 பந்துகளில் 43 ரன்களையும் எடுக்க பார்பேடோஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது.

 
Capture2PNG
 

தொடர்ந்து ஆடிய ஜமைக்கா தல்லவாஸ் 9 ஓவர்களில் 80 ரன்கள் என்று அபாரமாக வெற்றியை நோக்கி உறுதியாகச் சென்று கொண்டிருந்தது. அப்போது ஸ்டீவ் ஸ்மித் தனது மாற்றியமைத்த, ஷாகித் அஃப்ரீடி போன்ற ஆக்‌ஷனில் லெக் ஸ்பின் வீசி தொடக்க வீரர்களான ஜான்சன் சார்லஸ், கிளென் பிலிப்ஸ் ஆகியோரை வீழ்த்தினார்.

5 பந்துகள் இடைவெளியில் இருவரையும் ஸ்மித் வீழ்த்த திருப்பு முனை ஏற்பட்டது. ஷாகித் அஃப்ரீடி போல் தன் லெக்ஸ்பின் பந்து வீச்சு ஆக்‌ஷனை மாற்றியிருக்கிறார் ஸ்டீவ் ஸ்மித், இதனையடுத்து பந்து வீச்சில் பெரிய அளவுக்கு சோபிக்காத ஸ்மித் 3 ஓவர்களில் 19 ரன்கள் 2 விக்கெட் என்று அசத்தினார்.

ஜமைக்கா தல்லவாஸ் அணி 20 ஓவர்கள் ஆடி 3 விக்கெட்டுகளையே இழந்தாலும் இலக்கை எட்ட முடியாமல் 154/3 என்று தோல்வி தழுவியது ஒரு வேளை உஷ் கண்டுக்காதீங்கவாக இருக்க வாய்ப்புண்டு.

இத்தனைக்கும் ராஸ் டெய்லர் 26 ரன்களிலும் அதிரடி இடது கை வீரர் டி.ஏ.மில்லர் 25 ரன்களுடனும்  நாட் அவுட்டாக இருக்கின்றனர், பின்னால் அதிரடி மன்னன் ஆந்த்ரே ரஸல் இருக்கிறார், போவெல் இருக்கிறார் ஆனால் அவர்களெல்லாம் இறங்க முடியாமலேயே ஜமைக்கா தோல்வி அடைந்தது.

ஸ்மித் தனது 18 பந்துகளில் 10 பந்துகளை டாட் பால்களாக வீசினார். 2 சிக்சர்களைக் கொடுத்தார்.

ஆல்ரவுண்ட் திறமைக்காக ஸ்டீவ் ஸ்மித் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

https://tamil.thehindu.com/sports/article24760283.ece

Link to comment
Share on other sites

கரிபியன் பிரீமியர் லீக்- செயின்ட் கிட்ஸ், ஜமைக்கா அணிகள் வெற்றி

 
அ-அ+

கரிபியன் பிரீமியர் லீக் டி20 தொடரில் செயின்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ், ஜமைக்கா தல்லாவாஸ் அணிகள் வெற்றி பெற்றன. #CPL2018

 
 
 
 
கரிபியன் பிரீமியர் லீக்- செயின்ட் கிட்ஸ், ஜமைக்கா அணிகள் வெற்றி
 
கரிபியன் பிரீமியர் லீக் டி20 தொடரில் நேற்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. ஒரு ஆட்டத்தில் பார்படோஸ் டிரிடென்ட்ஸ் - செயின்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற செயின்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி பார்படோஸ் டிரிடென்ட்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. கேப்டன் ஜேசன் ஹோல்டர் 35 பந்தில் 54 ரன்கள் அடிக்க 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் சேர்த்தது.

பின்னர் 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் செயின்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணி களம் இறங்கியது. கிறிஸ் கெய்ல் டக்அவுட்டிலும், எவின் லெவிஸ் 1 ரன்னில் வெளியேறினாலும், பிராண்டன் கிங் 60 ரன்களும், டேவன் தாமஸ் 32 ரன்களும், பென் கட்டிங் 29 ரன்களும் அடிக்க 18.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முகமது இர்பான் 4 ஓவரில் 1 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தாலும் மற்ற பவுலர்கள் அதிக ரன்கள் கொடுத்ததால் பார்படோஸ் அணி வெற்றியை இழந்தது.

201808261649170024_1_simmons-s._L_styvpf.jpg
க்ளீன் போல்டாகும் லென்டில் சிம்மன்ஸ்

மற்றொரு ஆட்டத்தில் செயின்ட் லூசியா ஸ்டார்ஸ் - ஜமைக்கா தல்லாவாஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஜமைக்கா தல்லாவாஸ் ரோவ்மன் பொவேல் (64), டேவிட் மில்லர் (13 பந்தில் 32 ரன்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் குவித்தது.

பின்னர் 205 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் செயின்ட் லூசியா ஸ்டார்ஸ் அணி களம் இறங்கியது. வார்னர் 42 ரன்னும், பொல்லார்டு 46 ரன்னும், லென்டில் சிம்மன்ஸ் 45 ரன்னும் அடித்தாலும் செயின்ட் லூசியாவில் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் ஜமைக்கா தல்லாவாஸ் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

https://www.maalaimalar.com/News/Sports/2018/08/26164917/1186710/Caribbean-Premier-League-2018-st-kitts-Jamaica-Tallawahs.vpf

Link to comment
Share on other sites

 

#CPL18 Match Highlights M24: Barbados Tridents v St. Lucia Stars

 

#CPL18 Match Highlights M25: St. Kitts & Nevis Patriots v Jamaica Tallawahs

 

#CPL18 Match Highlights M26: St. Kitts & Nevis Patriots v Barbados Tridents

Link to comment
Share on other sites

கரிபியன் பிரீமியர் லீக்: சாம்பியன் பட்டத்தை வென்றது ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ்

 
அ-அ+

கரிபியன் பிரீமியர் லீக் இறுதி போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. #CPLFinal #GAWvTKR

 
 
கரிபியன் பிரீமியர் லீக்: சாம்பியன் பட்டத்தை வென்றது ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ்
 
டிரினிடாட்:
 
கரிபியன் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டி டிரினிடாடில் உள்ள பிரையன் லாரா விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணியும், ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.
 
டாஸ் வென்ற ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களம் கண்ட கயானா அமேசான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் குவித்தது. கயானா சார்பில் லூக் ரோன்சி அதிகபட்சமாக 44 (35) ரன்களை குவித்தார். ட்ரின்பகோ சார்பில் கரி பியர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
 
201809170807581899_1_Guyana-Amazon-Warriors-vs-Trinbago-Knight-Riders-Final2._L_styvpf.jpg
 
148 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ட்ரின்பகோ அணியின் சார்பில் தொடக்க வீரர்களாக தெனேஷ் ராம்டின், பிரண்டன் மிக்கல்லம் களமிறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 52 ரன்களை குவித்திருந்த நிலையில், 7-வது ஓவரை கிறிஸ் கிரீன் வீசினார். அதை எதிர்கொண்ட மெக்கல்லம் பந்தை தூக்கி அடிக்க டெல்போர்ட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
 
அடுத்ததாக களமிறங்கிய கொலின் முன்ரோ தொடக்கம் முதலே அதிரடியை வெளிப்படுத்தினார். ஆட்டத்தின் 12-வது ஓவரை ரொமாரியோ ஷெப்பர்டு வீச 24 (30) ரன்களுடன் தெனேஷ் ராம்டின் வெளியேறினார். அதிரடியாக விளையாடி கடைசி வரை ஆட்டத்தின் இறுதிவரை களத்தில் நின்ற கொலின் முன்ரோ 6 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 68 (39) ரன்களை சேர்த்தார். டேரன் பிராவோ காயம் காரணமாக 4 ரன்களில் ஆட்டத்தின் பாதியில் வெளியேறினார்.

Played
Fought
Won

REPEAT???#PlayFightWinRepeat#TimeForARepeat#GAWvTKR#CPL18#CPLFinalpic.twitter.com/gW8UjkToyS

— TrinbagoKnightRiders (@TKRiders) September 17, 2018
கடைசியில் 17.3 வெற்றி இலக்கை எட்டிய ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தையும் வென்றது. #CPLFinal #CPL2018 #GAWvTKR 

https://www.maalaimalar.com/News/Sports/2018/09/17080758/1191805/.vpf

 

#CPL18 Match Highlights Playoff 1 : TKRvGAW

 

#CPL18 Match Highlights Playoff 2: JTvSKP

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.