Jump to content

நாளிதழ்களில் இன்று:திமுகவுக்குள் மீண்டும் அழகிரி?


Recommended Posts

திமுகவுக்குள் மீண்டும் அழகிரி?

முக்கிய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகள் குறித்த ஒரு தொகுப்பை நேயர்களுக்கு வழங்குகிறோம்.

அழகிரிபடத்தின் காப்புரிமைHINDUSTAN TIMES

திமுகவுக்குள் மீண்டும் அழகிரி?

சென்னையில் ஆகஸ்ட் 14-ம் தேதி நடைபெறவுள்ள திமுக அவசர செயற்குழு கூட்டத்தில் அழகிரிக்கான பதவி உள்பட பிற முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன என தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டது போல திமுகவில் எவ்வித பிளவும் ஏற்படக்கூடாது என்பதில் கருணாநிதி குடும்பத்தினர் மிகவும் கவனத்துடன் உள்ளனர். இதனால் திமுகவில் மீண்டும் அழகிரி சேர்க்கப்படவுள்ளார். அதற்கு ஸ்டாலின் சம்மதம் தெரிவித்துள்ளார்.

அழகிரிக்கு தென் மண்டல செயலாளர் பதவியை தர ஸ்டாலின் முன் வருகிறார்.ஆனால் அழகிரி ஏற்க மறுக்கிறார். கனிமொழி கொள்கை பரப்புச் செயலாளர் பதவியை எதிர்பார்க்கிறார். திமுகவின் பொருளாளர் பதவியை கைப்பற்ற பலர் போட்டியில் இருக்கின்றனர். மேலும் திமுகவில் புதிதாக 4 மண்டலங்கள் பிரிக்கப்பட்டு பொறுப்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். அதற்கு மேற்பார்வையாளராக அழகிரியை நியமிக்குமாறு அழகிரி தரப்பு கேட்டு வருகிறது என செய்தி வெளியிட்டுள்ளது தினமணி நாளிதழ் (சென்னை பதிப்பு).

போராட்டத்தின் போது பொது சொத்தை சேதப்படுத்துவதை தடுக்க வேண்டும்

போராட்டங்களின் போது பொது மற்றும் தனியார் சொத்து சேதப்படுத்தப்பட்டால் அதற்கு போராட்டத்தை நடத்தியவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும் என உச்சநீதிமன்றம் 2009-ல் வழங்கிய ஒரு தீர்ப்பில் கூறியது.

இந்த உத்தரவை அமல்படுத்தக்கோரிய மனு மீதான விசாரணை நேற்று உச்சநீதிமன்றத்தில் தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் வந்தது.

போராட்டங்களின்போது பொதுச்சொத்துகளுக்கு சேதம் ஏற்படுவதை தடுக்க சட்ட திருத்தம் செய்வது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. இதற்கு நீதிமன்றம் அனுமதியளிக்க வேண்டும் என்றது மத்திய அரசு.

சட்டத்திருத்தம் நிறைவேற்றும் வரை பொறுத்திருக்க முடியாது. அரசு பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுவதை தடுக்க வேண்டும் எனக்கூறி மனு மீதான தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது நீதிமன்றம் என்கிறது தினமலர் செய்தி

Presentational grey line கருணாநிதி

கருணாநிதிக்கு பாரதரத்னா - மாநிலங்களவையில் கோரிக்கை

தினகரன்

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென மாநிலங்களவையில் திமுக கோரிக்கை வைத்துள்ளது. நேற்று திமுக எம்பிக்கள் மாநிலங்களவையில் இது தொடர்பாக வலியுறுத்தினர்.

''திமுக தலைவர் தனது 80 ஆண்டுகால பொது வாழ்க்கையில் ஏழைகள், அடித்தட்டு மக்கள், பின்தங்கியவர்கள் நலனுக்காக போராடியவர். கருணாநிதி மிகச்சிறந்த பேச்சளார், திறமைமிக்க எழுத்தாளர், நாவலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவர். வாழ்வின் அனைத்து தடங்களிலும் முத்திரை பதித்த ஈடு இணை இல்லாதவர். சமூக நீதிக்காகவும்,மதச்சார்பின்மைக்காகவும் சுய மரியாதைக்காகவும் போராடியவர். அவருக்கு பாரத ரத்னா வழங்குவதே அவரின் சேவைக்கு உண்மையான மரியாதை.'' என எம்.பி சிவா பேசினார்.

இதற்கு எதிர்க்கட்சி தலைவரான காங்கிரசின் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட பல்வேறு எம்பிக்களும் ஆமோதித்து வரவேற்றுள்ளர்.

கேரளாவில் பெரு மழைபடத்தின் காப்புரிமைAFP

கேரளாவில் 50 ஆண்டுகளாக இல்லாத பெரு மழை

கேரளாவில் கடந்த அரை நூற்றாண்டில் இல்லாத அளவுக்கு பெரு மழை பெய்திருக்கிறது. இதனால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. சில நாட்களாக ஓய்ந்திருந்த தென் மேற்கு பருவமழை, மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது என தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

இதுவரை வெள்ளம் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்திலுள்ள அனைத்து அணைகளிலும் நீர் நிரம்பியுள்ளது.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்காக மாநிலம் முழுவதும் 439 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மலைப்பிரதேசங்களுக்கு தற்போது சுற்றுலா செல்வதை சுற்றுலா பயணிகள் தவிர்க்க வேண்டும் என கேரள சுற்றுலா துறை தெரிவித்துள்ளது என தினத்தந்தியின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/india-45153792

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.