Jump to content

விளக்கு ஏற்றி அஞ்சலி செய்வதற்கு மட்டுமே, முல்லைத்தீவு மாவட்டத்தை பயன்படுத்துகின்றனர்..


Recommended Posts

விளக்கு ஏற்றி அஞ்சலி செய்வதற்கு மட்டுமே, முல்லைத்தீவு மாவட்டத்தை பயன்படுத்துகின்றனர்..

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

Mullai-meeting1.jpg?resize=800%2C533

 

முல்லைத்தீவு மாவட்டத்தை விளக்கு ஏற்றி அஞ்சலி செய்வதற்கு மட்டுமே பலர் பயன்படுத்துவதாகவும்  எமது மாவட்டம் அபிவிருத்தி அடைவதை அவர்கள் விரும்பாது இருப்பதாகவும் முல்லைத்தீவு அபிவிருத்தி ஒன்றியம் குற்றம்சாட்டியுள்ளது.

வடமாகாண ஆளுநருக்கும் முல்லைதீவு அபிவிருத்தி ஒன்றிய பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று (10) முற்பகல் 11 மணியளவில் யாழ்ப்பாணம் சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இங்கு உரையாற்றும் போது ஒன்றியத்தின் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் சர்வதேச விளையாட்டு மைதானம், யாழ் பல்கலைக்கழகத்தின் மீன்பிடிப்பீடம், என்பனவற்றினை அமைப்பதற்கான முன்ஏற்பாடுகள் இடம்பெற்றபோதும் தமிழ் அரசியல் காற்புணர்ச்சி காரணமாக அது தாமதப்படுத்தப்படுவதாக விசனம் தெரிவித்துள்ளனர்.

பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டங்களின்போது தமது ஒன்றியத்தின் பிரதிநிதிகள் அழைக்கப்படுவது இல்லை என்றும். தமது ஒன்றியம் அதில் கலந்து கொண்டால் தவறுகளை நேரடியாக சுட்டிக்காட்டிவிடும் என்ற அச்சம் காரணமாக எம்மை அழைக்க வேண்டாம் என சில அரசியல்வாதிகள் அரச உயர் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் இதனால் தாம் மிகுந்த கவலையடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Mullai-meeting2.jpg?resize=800%2C533

முல்லைத்தீவு நகரில் வைத்தியசாலை ஒன்று இருக்கின்றபோதும் அதில் வைத்தியர்கள் வருவதில்லை பல கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கும் மாஞ்சோலை வைத்தியசாலைக்கு இரண்டு பேருந்துகளை பெற்று எமது மக்கள் தமது மருத்துவ தேவைகளை நிறைவு செய்து வருகின்றார்கள். அது மிகவும் வேதனைக்கு உரியது. ஒரு மனிதன் வாழ்வதற்கு மருத்துவம் இன்றி அமையாதது. எனவே முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள வைத்தியசாலையில் முன்னர் இருந்ததுபோல் வசதிகளை ஏற்படுத்தி மக்கள் பயன்பெற ஆளுநர் மத்திய அரசு ஊடாக ஆவண செய்ய வேண்டும்.

வட்டுவால் பாலம் பாரியளவில் பழுதடைந்துள்ளது அதனை உடனடியாக திருத்தி அமைத்து மக்கள் பாதுகாப்பாக பயணிப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட வேண்டும். வடக்கு கிழக்கை இணைக்கும் கொக்கிளாய் பாலம் அகலாமக்கப்பட்டு புதிதாக அமைப்பதன் மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்தி மேலும் வலுவடைய கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

இறுதி யுத்தத்தில் பாரிய அழிவினை சந்தித்த முல்லைத்தீவு மாவட்டம் இலங்கையில் இருக்கின்ற 25 மாவட்டங்களில் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது. இங்குள்ள மக்கள் யுத்தத்தில் பல இன்னல்களை அனுபவித்தவர்கள். அந்த மக்களின் அபிவிருத்தி, மாவட்டத்தின் அபிவிருத்தி என்பன எமது நாட்டில் இன்றய கட்டாய தேவையாக இருக்கின்றது என்று தெரிவித்தனர்.

அவர்களின் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்கும் முகமாக கருத்து தெரிவித்த ஆளுனர் , ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன அவர்களின் வடக்கு அபிவிருத்தி செயலணியின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் நான் உறுப்பினராக இருப்பதன் காரணமாக முல்லைத்தீவு ஒன்றியம் விடுத்த கோரிக்கைக்கு செவி சாய்த்து உங்களின் ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்படுவேன் என்று ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்தார்.

அத்துடன் ஏற்கனவே செயலணியின் செயலாளர் சிவஞானசோதி அவர்கள் முல்லைத்தீவு வீதிகள் பாலங்கள் பலவற்றினை அபிவிருத்தி திட்டத்தில் உள்ளடக்கியிருப்பதாகவும் அதற்கு மேலதிகமாக தங்களின் சர்வதேச விளையாட்டு மைதானம் மீன்பிடித்துறை பீடம் என்பனவற்றினை அமைப்பதற்கு ஜனாதிபதியுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.

குறித்த சந்திப்பில், ஆளுநரின் செயலர் எல்.இளங்கோவன், உதவிச் செயலாளர் ஏ.எக்ஸ் செல்வநாயகம், இணைப்பு செயலாளர் சுந்தரம் டிவகல்லாலா, உட்பட முல்லை அபிவிருத்தி ஒன்றியத்தின் பிரதிநிதிகளான எம்.டி.விக்டர், எஸ்.ராஜேஸ்வரன், ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் அன்டனி குறூஸ், ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Mullai-meeting3.jpg?resize=800%2C533

http://globaltamilnews.net/2018/91127/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நவீனன் said:

பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டங்களின்போது தமது ஒன்றியத்தின் பிரதிநிதிகள் அழைக்கப்படுவது இல்லை என்றும். தமது ஒன்றியம் அதில் கலந்து கொண்டால் தவறுகளை நேரடியாக சுட்டிக்காட்டிவிடும் என்ற அச்சம் காரணமாக எம்மை அழைக்க வேண்டாம் என சில அரசியல்வாதிகள் அரச உயர் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் இதனால் தாம் மிகுந்த கவலையடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இங்கும் தென்னமரவாடி யில் பாரிய அபிவிருத்தியை செய்கிறம் என்று தமிழரசு ஆள் கனடாவில் இருந்து வருபவர் சொல்லி கருத்தாடல் செய்தவர் அப்ப வாயால் வடை சுட்டு இருக்கிறார் போல் இருக்கிறது .இவையளை சொல்லி குற்றமில்லை  டிசைன் அப்படி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பெருமாள் said:

இங்கும் தென்னமரவாடி யில் பாரிய அபிவிருத்தியை செய்கிறம் என்று தமிழரசு ஆள் கனடாவில் இருந்து வருபவர் சொல்லி கருத்தாடல் செய்தவர் அப்ப வாயால் வடை சுட்டு இருக்கிறார் போல் இருக்கிறது .இவையளை சொல்லி குற்றமில்லை  டிசைன் அப்படி .

எல்லாரும்... சம்பந்தனின்  பாசறையில், வளர்ந்தவர்கள் என்றால்... "டிசைன்" ஒரே மாதிரி தானே... இருக்கும்.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைதீவு மட்டுமில்லை....வடகிழக்கு மாகாணங்கள் இப்ப ஆகா ஓகோ எண்டு இருக்குது எண்டு ஆரும் இஞ்சைவந்து புலுடா விட்டால் முகத்திலை காறித்துப்புவன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2009க்கு பிறகு அரசியலாய் வெட்டுவம் புடுங்குவம் எண்ட ஆக்களை காணேல்லை....... ஆயுதத்திலையிருந்து வழுக்கி அரசியலக்கு விழுந்த கட்சிகளும் ஒரு மண்ணாங்கட்டியும் செய்ததாய் தெரியேல்லை....எல்லாரும் பெரிய பெரிய வாகனங்களிலை ஓடிக்கொண்டு திரியுறாங்கள். கேள்வி கேட்டால் வாள்வெட்டு தம்பிமார் அடுத்தநிமிசம்  வேலையை பிரிச்சுக்கொண்டு வந்து நிப்பினம்.

சிங்களம் எமக்கு துரோகம் செய்வதை நிறுத்தி விட்டார்கள். எம்மவர்களே எமக்கு துரோகம் செய்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.