Jump to content

கனடாவில் மீண்டும் பயங்கரம்! துப்பாக்கித்தாக்குதலில் இதுவரை நால்வர் பலி!!


Recommended Posts

கனடாவில் மீண்டும் பயங்கரம்! துப்பாக்கித்தாக்குதலில் இதுவரை நால்வர் பலி!!

 
 
 
 

கனடாவின் கிழக்குப்பிராந்தியத்தின் நியூபிரண்ஸ்விக் பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச்சம்பவத்தில் இதுவரை நால்வர் பலியானதாக அறிவிக்கபட்டுள்ளது.

தொடர்ந்தும் துப்பாக்கி சமர் இடம்பெற்றுவருவதால் அந்த இடத்தில் வாழும் மக்களை வீடுகளை விட்டு வெளியேறவேண்டாமென காவற்துறை அறிவித்துள்ளது.

https://www.ibctamil.com/canada/80/104537?ref=imp-news

 

 

 

Canada shooting: Several dead in Fredericton, New Brunswick

 
 
 
Emergency vehicles are seen at the Brookside Drive area in FrederictonImage copyright Kev Bourque/via Reuters Image caption Emergency vehicles pictured near the scene in Fredericton, New Brunswick

Canadian police say at least four people have been killed in a shooting in the eastern city of Fredericton, New Brunswick.

They have advised residents of Brookside Drive to "stay in their homes with doors locked at this time for their safety".

The public should avoid the area, they said. "We will provide more details as soon as we can," city police tweeted.

Authorities described the shooting as an "active incident".

A local TV reporter said he heard four gunshots just after 07:00 (11:00 GMT).

Nick Moore, a journalist from CTV Atlantic, posted video footage of the scene on Twitter, showing emergency vehicles outside a house.

Map of Canada showing Fredericton in the east

https://www.bbc.com/news/world-us-canada-45146056

Link to comment
Share on other sites

கனடாவில் துப்பாக்கிச் சூடு: நால்வர் உயிரிழப்பு

 

canada-2-720x450.jpg

கிழக்கு கனடாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

பிரடெரிக்டான் நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ளுார் நேரப்படி காலை 7 மணியளில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது உயிரிழந்தவர்களில் இரண்டு பொலிஸாருக்கும் அடங்குவதாக நியுவ் ப்ரவுன்ஸ்விக் மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இதுவரையில் துப்பாக்கி பிரயோகம் தொடர்பான முழுமையான தகவல்கள் எவையும்  வெளியாகாத  நிலையில் விசாரணைகள் இடம்பெற்ற வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

துப்பாக்கி பிரயோகத்தினால் குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், மக்களை வெளியில் நடமாட வேண்டாம் எனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ  ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் கூர்ந்து அவதானித்து வருவதாக பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

கனடாவில் தனிநபர் துப்பாக்கிகளை வைத்திருக்கும் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்பட்டு வரும் நிலையில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/கனடாவில்-துப்பாக்கிச்-ச-3/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.