Jump to content

விஸ்வரூபம் 2 விமர்சனம்


Recommended Posts

கமலுக்கு மட்டுமே இது சாத்தியம் : விஸ்வரூபம்2 டிவிட்டர் விமர்சனம்

1533874851-0294.jpg
 
 
நடிகர் கமல்ஹாசன் நடித்து, இயக்கியுள்ள விஸ்வரூபம் 2 படத்தை பற்றி ஏராளமான நெட்டிசன்கள் டிவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.
 

 
2013ம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தை கமல்ஹாசன் இயக்கி, நடித்துள்ளார். இப்படத்தில் முதல் பாகத்தில் நடித்த ஆண்டிரியா, பூஜா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படம் நேற்று வெளிநாடுகளில் வெளியானது. அதேபோல், இன்று காலை தமிழகத்திலும் வெளியானது.
 
இந்நிலையில், தியேட்டரில் படம் பார்த்துக்கொண்டிருக்கும் நெட்டிசன்கள் முதல் பாகம் பற்றியும், பார்த்து முடித்தவர்கள் படத்தை பற்றி கருத்துகளை டிவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.
1533874911-8947.jpg

 
விஸ்வரூபம் 2 பட இடைவேளையில் இருக்கிறேன். இந்த படம் பாம்பு போல உங்களை சுற்றிக்கொள்ளும், இருக்கையின் நுனியிலேயே உங்களை வைத்திருக்கும். செம ஆக்‌ஷன் என ஒருவர் பதிவிட்டுள்ளர்.
 
முதல் பாகம் நன்றாக இருக்கிறது. நகைச்சுவையும், ஆக்‌ஷனும் சூப்பராக இருக்கிறது என ஒருவர் பதிவிட்டுள்ளார்.
1533874998-2889.jpg

 
விஸ்வரூபம் படம் உலக அளவில் இருக்கிறது. ரா ஆக்‌ஷன் மற்றும் சண்டை காட்சிகளும், திரைக்கதையும் அருமை. கமல்ஹாசன் ரசிகர் அல்லாதாருக்கும் இப்படம் மிகவும் பிடிக்கும். இந்த படத்தை மிஸ் பண்ணாமல் பாருங்கள் என ஒருவர் பதிவிட்டுள்ளார்.
 
கமல்ஹாசனால் மட்டுமே இதுபோன்ற திரைப்படத்தை எடுக்க முடியும். சில காட்சிகள் நீளமானதாக இருந்தாலும் சொல்ல வந்த கருத்தை தெளிவாக சொல்லியிருக்கிறார்கள். இப்படத்தில் நடித்துள்ள பூஜாகுமார் உங்கள் இதயத்தை வெல்வார் என ஒருவர் பதிவிட்டுள்ளார்.
 
குறிப்பாக, இப்படத்தில் இடம்பெற்றுள்ள தண்ணீருக்கு அடியில் நடக்கும் காட்சிகள் அருமையாக இருக்கிறது. படத்தின் திரைக்கதை ஹாலிவுட் படம் போல் அமைக்கப்பட்டுள்ளது என பலரும் கூறி வருகின்றனர்.

http://tamil.webdunia.com/article/movie-review-in-tamil/vishwaroopam2-twitter-reivew-118081000008_1.html

 

Link to comment
Share on other sites

விஸ்வரூபம் 2

 
அ-அ+
விஸ்வரூபம் 2
நடிகர் கமல்ஹாசன்
நடிகை பூஜா குமார்
இயக்குனர் கமலஹாசன்
இசை ஜிப்ரான்
ஓளிப்பதிவு சனு ஜான் வர்கீஸ், சம்தத் சய்னதீன்
 
 
 
 
இந்திய ராணுவத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் கமல்ஹாசனிடம் பயிற்சி பெறுகிறார் ஆண்ட்ரியா. இராணுவ பகுதியை விட்டு வெளியே சென்ற குற்றத்திற்காக கமல்ஹாசன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். சிறையில் இருந்து தப்பிக்கும் கமல்ஹாசன், ரகசியமாக தனது வேலைகளில் ஈடுபடுகிறார். இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கச் செல்கிறார். 
 
பின்னர், அமெரிக்காவில் டர்ட்டி பாமை செயழிலக்கச் செய்ய செல்லும் கமல், பூஜா குமாரை திருமணம் செய்து கொள்கிறார். அவளது உதவியுடன் டர்ட்டி பாமை செயழிலக்கச் செய்கிறார். முதலில் கமல் மீது அதீத அன்பு இல்லாமல் இருக்கும் பூஜா குமார், கமல் பாமை செயழிலக்கச் செய்யவே தன்னை திருமணம் செய்து கொண்டார் என்பதை அறிந்து வருத்தப்படுகிறார். இருப்பினும் உள்ளுக்குள் கமலை காதலிக்கிறார்.
 
201808101354361609_1_Vishwaroopam-2-Revi
 
இதற்கிடையே கமல் தனது குழுவினருடன் இந்தியா மற்றும் லண்டனில் வைக்கப்பட்டுள்ள மற்ற இரண்டு டர்ட்டி பாம்களை செயழிலக்கச் செய்யும் முயற்சியில் இறங்க, அல்கொய்தா தலைவனான உமர், கமல்ஹாசனை கொல்வதற்காக தேடி வருகிறார். 
 
கடைசியில், கமல் டர்ட்டி பாம்களை செயழிலக்கச் செய்தாரா? உமரை கொன்றாரா? அவரது முந்தைய வாழ்க்கையில் நடந்தது என்ன? அம்மாவுடனான சந்திப்பு, அதன் பின்னணியில் நடப்பது படத்தின் மீதிக்கதை. 
 
201808101354361609_2_Vishwaroopam-2-Revi
 
கமல்ஹாசன் ஒரு நடிகராக தனது நடிப்பால் அனைவரையும் கட்டிப்போட்டிருக்கிறார். தனது ஒவ்வொரு அசைவுக்கும் ஒரு நுணுக்கம் உண்டு என்பதற்கு ஏற்ப, அவரது நடிப்பே படத்தின் கதையை ஓட்டிச் செல்கிறது. முதல் பாகத்தை விட, இந்த பாகத்தில் பூஜா குமார் நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார். காதல், கவர்ச்சி என அனைத்திலும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். ராணுவத்தில் பணிபுரியும் ஆண்ட்ரியா அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை பூர்த்தி செய்திருக்கிறார். குறிப்பாக ஸ்டன்ட் காட்சிகளில் மிரள வைத்திருக்கிறார்.
 
முதல் பாகத்தில் தனது அமைதியான வில்லத்தனத்தால் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த ராகுல் போஸ், இந்த பாகத்திலும் அனைவரையும் கவர்ந்திருக்கிறார். மற்றபடி சேகர் கபூர், ராகுல் போஸ், ஆனந்த் மகாதேவன் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் அவரவருக்கு கொடுத்த வேலையை சிறப்பாக பூர்த்தி செய்திருக்கின்றனர்.
 
201808101354361609_3_Vishwaroopam-2-Revi
 
கமல்ஹாசன் ஒரு இயக்குநராக வழக்கமான அவரது பாணியை பின்பற்றியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். விஸ்வரூபம் படத்தின் தொடர்ச்சி, நீட்சி என அடுத்தடுத்த காட்சிகள் வேகமாக நகர்வது சற்றே குழப்பத்தை ஏற்படுத்தும்படியாக இருக்கிறது. வசனங்கள், பேச்சில் ஆங்காங்கே அரசியல் வசனத்தையும் நுழைத்திருக்கிறார். நியூயார்க்கில் வாழும் கதக் நடனக் கலைஞர், இந்தியாவின் ரகசிய உளவாளி, அல்கொய்தா தீவிரவாதிகளின் பயிற்சியாளர், என பல்வேறு கதாபாத்திரங்களுடன் முதல் பாகத்தில் கலக்கிய கமல்ஹாசனின் அடுத்த ரூபங்கள் என்னென்ன என்பதையே விஸ்வரூபம் 2 படமாக உருவாக்கி இருக்கிறார்.
 
ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். பாடல்களும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. சனு ஜான் வர்கீஸ், சம்தத் சய்னதீன் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.
 
மொத்தத்தில் `விஸ்வரூபம் 2' ரூபங்கள் குறைவு. #Vishwaroopam2Review #PoojaKumar #AndreaJeremiah

https://cinema.maalaimalar.com/Cinema/Review/2018/08/10135436/1182932/Vishwaroopam-2-Movie-Review.vpf

Link to comment
Share on other sites

சினிமா விமர்சனம்: விஸ்வரூபம் - 2

விஸ்வரூபம் - 2 Image captionவிஸ்வரூபம் - 2

2013ல் வெளியான விஸ்வரூபம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம். முந்தைய படத்தில் வரும் சம்பவங்களுக்கு முன்னும் பின்னுமாக நகர்கிறது இந்தப் பாகம்.

முதல் பாகத்தில் விஷ் என்ற மாறுவேடத்தில் அமெரிக்காவில் வசிக்கும் விஸாம் அகமது கஷ்மீரி, நியூயார்க் நகரில் நிகழவிருந்த வெடிகுண்டு தாக்குதலைத் தடுக்கிறார். அந்தத் தாக்குதலைத் திட்டமிட்ட ஒமர் தப்பிவிடுகிறார். இந்த இரண்டாம் பாகம் அதிலிருந்து துவங்குகிறது.

   
திரைப்படம் விஸ்வரூபம் - 2
   
நடிகர்கள் கமல்ஹாசன், பூஜாகுமார், ஆண்ட்ரியா, சேகர் கபூர், ராகுல் போஸ், ஆனந்த் மகாதேவன், வஹீதா ரெஹ்மான்
   
இசை கிப்ரான்
   
ஒளிப்பதிவு ஷானு வர்கீஸ்
   
கதை - இயக்கம் கமல்ஹாசன்
   
   

இந்தப் பாகத்தின் கதைச் சுருக்கத்தை சுருக்கமாக இப்படிச் சொல்லலாம்: அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பும் வாசிம் (கமல்ஹாசன்), லண்டனிலும் இந்தியாவிலும் நடக்கவிருக்கும் இரண்டு மாபெரும் குண்டுவெடிப்புகளைத் தடுத்து நிறுத்துகிறார். முடிவில் வில்லனான ஒமர் (ராகுல் போஸ்) கொல்லப்படுகிறார்.

இந்த மோதல்களில், சக 'ரா' ஏஜென்ட்டான அஸ்மிதாவும் (ஆண்ட்ரியா) கொல்லப்படுகிறார். வாசிமை தவறாப் புரிந்துகொண்டிருக்கும் நிரூபமா (பூஜா குமார்), அவரை நேசிக்க ஆரம்பிக்கிறார்.

இந்தக் கதை தவிர, முந்தைய பாகத்தின் சில சம்பவங்களுக்கு முன்னும் பின்னுமான வேறு சில காட்சிகளும் படத்தில் உண்டு.

விஸ்வரூபம் - 2 Image captionவிஸ்வரூபம் - 2

முதல் பாகத்தில் ஒமர் தப்பிவிட, அவரை நாயகன் எப்படி துரத்திப் பிடிக்கிறார் என்பதுதான் இந்த இரண்டாம் பாகமாக இருக்கக்கூடும் என ஒருவர் எதிர்பார்க்கலாம். ஆனால், அப்படி எந்த ஒரு குறிப்பிட்ட இலக்கையும் நோக்கி படம் செல்வதில்லை.

அதனாலேயே, படம் முழுவதும் பிரதான கதை எப்போது ஆரம்பிக்கும் - எப்போது முடியும் என்ற அச்சம் இருந்துகொண்டே இருக்கிறது. ஆனால், நல்ல வேளையாக சுமார் 2 மணி நேரத்தில் முடிந்துவிடுகிறது படம்.

படத்தின் முதல் பாகத்தில் இருந்த விறுவிறுப்போ, தெளிவான கதையோட்டமோ இந்த இரண்டாம் பாகத்தில் இல்லை. துண்டு துண்டாக, தெளிவற்ற தொடர்ச்சியோடு கடந்து போகின்றன காட்சிகள்.

சினிமா விமர்சனம்: விஸ்வரூபம் - 2சினிமா விமர்சனம்: விஸ்வரூபம் - 2

முதல் படத்தில் மிகப் பெரிய ஆக்ஷன் காட்சியாக அமைந்து அசரவைத்த ஆஃப்கானிஸ்தான் தாக்குதல் காட்சிகள், இந்தப் படத்தில் பல இடங்களில் திரும்பத் திரும்ப வருகின்றன.

முதல் பாதியில் அமெரிக்காவிலிருந்து லண்டன் வரும் வாசிம், இங்கிலாந்தில் நடக்கும் ஒரு குண்டுவெடிப்பைத் தடுக்கிறார். ஆனால், அது தொடர்பான காட்சிகள் எல்லாமே நீளமாக, போரடிக்கும் வகையில் இருக்கின்றன.

இடைவேளைக்குப் பிறகு, இந்தியாவில் நடக்கும் குண்டுவெடிப்பைத் தடுக்கிறார். இதிலும் அதே பிரச்சனை. இடைவேளைக்கு முன்பு ஒரு க்ளைமாக்ஸ், இடைவேளைக்குப் பின்பாக ஒரு க்ளைமாக்ஸ் என அமைந்திருந்தாலும் எதிர்பார்ப்பையோ, த்ரில்லையோ இந்தக் காட்சிகள் ஏற்படுத்தவில்லை.

விஸ்வரூபம் - 2 Image captionவிஸ்வரூபம் - 2

ஹெலிகாப்டர்கள் பறக்கின்றன, ஏவுகணைகளை வீசுகிறார்கள், கத்தியாலோ, துப்பாக்கியாலோ யாராவது யாரையாவது கொலை செய்கிறார்கள், கை - கால்களை ஒடிக்கிறார்கள், சக பெண் அதிகாரி நாயகனுடன் தொடர்ந்து சரசமாடிக்கொண்டேயிருக்கிறார்,

எதிர்பாரா இடங்களில் இருந்து துரோகிகள் முளைக்கிறார்கள் என முதல் பாகத்தில் இருந்த எல்லாமும் இந்த பாகத்திலும் இருக்கின்றன. ஆனால், தாங்கவே முடியாத விதத்தில்.

 

உளவாளிகளை மையமாகக் கொண்ட ஒரு ஆக்ஷன் படம் எத்தனை இடங்களில் நம்மை சீட் நுனிக்கு தள்ளியிருக்க வேண்டும்?

துரதிர்ஷ்டவசமாக ஒரு காட்சிகூட அப்படி அமையவில்லை. ஒற்றைக் கண்ணோடும், பேசமுடியாமலும் வரும் வில்லனான ஒமர், பல இடங்களில் அச்சத்திற்குப் பதிலாக சிரிப்பையே ஏற்படுத்துகிறார்.

முதல் பாகத்தில் பாடல் காட்சிகளிலும் சண்டைக் காட்சிகளிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய கமல், இந்த பாகத்தில் 'நம்பி படம் பார்க்க வந்தவர்களை இப்படிச் செய்யலாமா?' என்று கேட்க வைக்கிறார்.

ஒட்டுமொத்தப் படத்திலும் ஆனந்த் மகாதேவனுடனான ஓர் உரையாடல் காட்சிகளில் மட்டுமே பழைய கமலைப் பார்க்க முடிகிறது.

விஸ்வரூபம் - 2 Image captionவிஸ்வரூபம் - 2

நிரூபமாவாக வரும் பூஜாவுக்கு ஆண்ட்ரியா - கமல் உறவைப் பார்த்துப் பொறாமைப்படுவதே முக்கியப் பணி. ஒரே ஒரு காட்சியில் கடலடியில் மூழ்கி வெடிகுண்டை செயலிலக்கச் செய்கிறார். ரா ஏஜென்ட் அஸ்மிதாவாக வரும் ஆண்ட்ரியா, ரசிகர்களை வெகுவாகக் கவர்கிறார்.

1972ல் எம்.ஜி. ராமச்சந்திரன் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகி, அ.தி.மு.க. என்ற கட்சியை துவங்கி சில மாதங்களில் அவர் இயக்கி நடித்த உலகம் சுற்றும் வாலிபன் வெளியானது.

வெளியானபோது பெரும் வெற்றிபெற்ற இந்தப் படம், தொடர்ச்சியற்ற, சம்பந்தமில்லாத திரைக்கதையையும் காட்சிகளையும் கொண்டிருந்தது.

கமல்ஹாசனும் புதிய கட்சியைத் துவங்கியிருக்கும் நிலையில், தனக்கான உலகம் சுற்றும் வாலிபனாக இந்தப் படத்தைக் கருதியிருக்கக்கூடும். அதற்கேற்றபடியே படத்தின் துவக்கத்தில் மக்கள் நீதி மய்ய பிரசாரக் காட்சிகளையும் இணைத்திருக்கிறார்.

ஆனால், விஸ்வரூபம் - 2 ரசிகர்களை குழப்பத்திலும் ஏமாற்றத்திலும் தள்ளியிருக்கிறது.

https://www.bbc.com/tamil/india-45142841

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரிய அகன்ற திரையில் பார்த்தேன். 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டதாலும்  விறுவிறுப்பு இல்லாத த்ரில்லர் என்பதாலும் இன்னும் 20 பேரே தியேட்டரில் இருந்தனர்.

மொத்தத்தில் ஏமாற்றிய கமல் படம்?☹️

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.