Jump to content

“ஓ.. மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்குத்தா” புகழ் யாழ்.ரமணன் காலமானார்!


Recommended Posts

“ஓ.. மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்குத்தா” புகழ் யாழ்.ரமணன் காலமானார்!

Yal-Ramanan.jpg?resize=800%2C590

 

 

யாழ்.மண்ணின் பிரபல இசையமைப்பாளரும் ஈழத்தின் அதிசிறந்த கிட்டார் வாத்தியக்கலைஞரும்  யாழ். ரமணன் இன்று காலமாகியுள்ளார். முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஈழத்து இசைத்துறையில் பிரபலம் பெற்றிருந்த யாழ் ரமணன் ஈழ விடுதலைப் புரட்சிப் பாடல்களுக்கும் இசையமைத்துள்ளார்.

ஈழத்தில் ஆயிரக்கணக்கான இசை அரங்குகள் ஊடாக இரசிகர்களை கவர்ந்த இவர் ஈழத்தின் மூத்த இசைத்துறைக் கலைஞர்கள் மற்றும் ஒளி, ஒலிபரப்புத் துறை கலைஞர்களுடன் இணைந்து இசைப் பணியாற்றியவர். காலத்திற்கு காலம் பல்வேறு இசைக்குழுக்களிலும் இவர் முக்கியத்துவமான கலைஞராக இயங்கியுள்ளார்.

இந்திய இராணுவக் காலப்பகுதியில் மக்களை எழுச்சிப் படுத்தும் பல பாடல்களைக்கு இவர் ராஜன் இசைக்குழுவுக்காக இசையமைத்தார். பலஸ்தீனம் உள்ளிட்ட போராட்ட நாடுகளின் கவிதைகளை தமிழில் மொழியாக்கம் செய்து அதற்கு இவர் இசையமைத்தார். அதில் ஓ.. மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்குத்தா.. உன் பாதணிகளை எனக்குத்தா.. என்ற பாடல் மிகவும் பிரபலமான பாடலாகும்.

இதுபோன்ற பல ஈழ விடுதலைப் போராட்டப் பாடல்களுக்கு இவர் இசையமைத்துள்ளார். பிஞ்சு மனம் ஈழத் திரைப் படத்திற்கு இவர் பின்னணி இசையமைத்தார். அத்துடன் அப் படத்தில் இடம்பெற்ற பூத்தகொடி பூக்களின்றி தவிக்கின்றது என்ற குமாரசாமி பாடிய பிரபலமான ஈழப் பாடலுக்கும் இவர் இமையமைத்தார். அத்துடன் நீரடித்து நீரங்கு விலகாது .. என்ற பாடலுக்கும் இசையமைத்துள்ளார்.

இதேவேளை கலை பண்பாண்டுக் கழகம் வெளியிட்ட ஈழத்தின் பெண்கள் விடுதலையுடன் தொடர்பான திசைகள் வெளிக்கும் என்ற திரைப்படத்திற்கு இசையமைத்த இவர் தமிழீழ பெண் போராளிகளுடன் இணைந்து இசை படைப்புக்களை வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. தமிழகத்தை சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் தேவாவுடனும் இணைந்து இவர் பணியாற்றியுள்ளார்.

ஈழத்தின் ஆரம்பாகால இசை முயற்சிகளுக்கு பெரும் பங்காற்றியுள்ள யாழ் ரமணன் பாட்டுக்குப்பாட்டு நிகழ்ச்சியில் தங்கள் கிற்றார் இசை ஒலித்து பிரபலம் பெற்றிருந்தார். இவருக்கு யாழ் ரமணன் என்ற பெயரை பிரபல அறிவிப்பாளர் அபி.எச்.அப்துல் ஹமீத் சூட்டினார். இவரது இறுதிக் கிரியைகள் யாழ்ப்பாணத்தில் உள்ள அவரின் இல்லத்தில் இறுதி நிகழ்வுகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

http://globaltamilnews.net/2018/91025/

Link to comment
Share on other sites

மிகவும் சிறப்பாக இசையமைக்கப் பட்ட எனக்கு மிகவும் பிடித்த பாடல். யாழ் ரமணனுக்கு இதய அஞ்சலிகள். 

Link to comment
Share on other sites


ஓ மரணித்த வீரனே பாடல் எப்ப கேட்டாலும் மனசுக்குள் கண்ணீரை கசிய வைக்கும் பாடல். மிகவும் கனதியான மனனிலைக்கு அழைத்துச் செல்லக் கூடிய பாட்டு

ஊரில் இருக்கும் போது  (சுண்டிக்குளி) ராஜன் இசைக்குழுவின் பல நிகழ்ச்சிகள் பலவற்றை ரசித்து இருக்கின்றேன். ரமணனின் கிட்டார் இசை அற்புதமாக இருக்கும்.  சினிமா பாடல்களில்  'மைனா மைனா மாமன் பிடிச்ச மைனா' வும் 'ராஜா ராஜாதி ராஜன் எங்கள் ராஜாவும்' இவர் குரலில் கேட்க அருமையாக இருக்கும்.

ரமணனுக்கு அஞ்சலிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் ரமணனுக்கு இதய அஞ்சலிகள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் ரமணனுக்கு இதய அஞ்சலிகள். 

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மறைந்த யாழ் மண்ணின் இசையமைப்பாளர் ரமணனுக்கு அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசையமைப்பாளர் ரமணனுக்கு அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ஓ மரணித்த வீரரே

உன் சீருடைகளை எனக்குத்தா

உன் பாதணிகளை எனக்குத்தா

உன் ஆயுதங்களை எனக்குத்தா

 

மழை பொழியும் ஓர் நாளில்

மலர் சூடும் கல்லறைகள்

உமைப் பிரிந்த உறவெல்லாம்

உமைத்தேடி வந்திருக்கும்

 

உமைத்தேடி அழுதழுது

உம்முன்னே உயிர் துடிக்கும்

உமக்கென்று ஏதேதோ

கொண்டு வந்து சேர்த்திருக்கும்

 

மணம் நிறைத்த மலராலே

மாலைகளும் அவை சூடும்

மனம் நிறைந்த வேதனையால்

விழி நீரை அவை சிந்தும்

 

அண்ணன் உரை தொடர்கையிலே

அமைதியாக செவிமடுக்கும்

மணியோசை ஓய்ந்த பின்னே

மௌனமாக அஞ்சலிக்கும்

 

வேளை வந்து சேர்ந்தவுடன்

விளக்கொன்றை அவை ஏற்றும்

மழைத்துளிகள் வீழ்கையிலும்

சுடர் ஒளிரும் கல்லறை முன்

 

சுடர் ஒளியின் நடுவினிலே

முகம் தெரியும் இரவினிலே

முகம் காணும் விழிகள் எல்லாம்

குளமாகும் நீராலே

 

நீர் வழிந்த முகங்கள் எல்லாம்

உமை நினைந்தே சிவந்திருக்கும்

நீர் வாழ்ந்த நாட்கள் எல்லாம்

வந்து வந்து போயிருக்கும்

 

நீர் நிறைத்த நினைவுகளோ

நெஞ்சில் வலி மூட்டியிருக்கும்

நீர் சுமந்த கனவதுவோ

நிமிர்ந்து நட என்றிருக்கும்

 

உங்கள் பணி தொடர்ந்திடவே

உறுதியெடு என்றிருக்கும்

விடை பெறும் வேளையிலே

விம்மி வெடிக்கும் நெஞ்சமெல்லாம்

உம்மைச் சுமந்தபடியே உறுதியெடுக்கும்

உம் பணி தொடர..

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.