Jump to content

மகன் மீதான அதீத நம்பிக்கை : மகனின் கைபேசியில் 300 ஆபாச வீடியோக்களை கண்டு மயங்கி விழுந்தத் தாய்


Recommended Posts

மகன் மீதான அதீத நம்பிக்கை : மகனின் கைபேசியில் 300 ஆபாச வீடியோக்களை கண்டு மயங்கி விழுந்தத் தாய்

 

 
 

மகனின் கைத்­தொ­லை­பே­சியில் காணப்­பட்ட ஆபாச காணொ­ளி­களைப் பார்த்த தாய் அதிர்ச்­சியில் மயக்­க­முற்று வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட சம்­பவம் பொலன்­ன­றுவை பிர­தே­சத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

பொல­ன்ன­று­வை­யி­லுள்ள பாட­சாலை ஒன்றின் உயர்­தர வகுப்பு மாண­வ­ரொ­ரு­வ­ரி­ட­மி­ருந்து பாட­சாலை ஒழுக்­காற்று குழு­வினர் கைத்­தொ­லை­பே­சி­யை கைப்­பற்றி சோத­னை­யிட்­ட­போது, அதில் சுமார் 300 க்கும் மேற்­பட்ட ஆபாச காணொ­ளிகள் சேமிக்­கப்­பட்­டி­ருந்­தமை கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

இத­னை­ய­டுத்து, பாட­சாலை ஒழுக்­காற்று குழு­வினர், மேற்­படி மாண­வனின் தாயாரை பாட­சா­லைக்கு வர­வ­ழைத்து அவ­ரது மகனின் செயற்­பா­டுகள் குறித்து தெரி­வித்­துள்­ளனர்.

அதன்­போது, குறித்த மாணவனின் தாயார், தனது மகன் மிகவும் கீழ்ப்­ப­டி­வா­னவர் எனவும் அவர் அவ்­வா­றான காரி­யங்­களை செய்­தி­ருக்­க­வாய்ப்­பில்லை எனவும் கூறி, மகன் மீதான குற்­றச்­சாட்டை மறுத்­துள்ளார்.

அதன்­போது, குறித்த மாண­வ­னி­ட­மி­ருந்து கைப்­பற்­றிய கைத்­தொ­லை­பே­சியை பாட­சாலை ஒழுக்­காற்று குழு­வினர், அவ­ரது தாயிடம் கொடுத்­துள்ள நிலையில், அவர் அதில் காணப்­பட்ட ஆபாசப் படக் காணொளிகளைக் கண்டு அல்­லது தனது மகனின் நடத்தை குறித்த அதிர்ச்­சியில் மயக்­க­ம­டைந்­துள்ளார்.

இத­னை­ய­டுத்து, ஆசி­ரி­யர்கள் அவ­ருக்கு முத­லு­தவி செய்தும் பய­ன­ளிக்­கா­மை­யினால் அவரை பொலன்­ன­றுவை பொது வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தித்­த­துடன், வைத்­தி­யர்­களின் ஊடாக இவ்­வி­டயம் தொடர்பில் வைத்­தி­ய­சாலை பொலிஸ் பிரி­வுக்கு அறி­விக்கப்பட்­டுள்­ளது.

பின்னர், மாண­வனின் தாய் மயக்­கத்­தி­லி­ருந்து தெளிந்­த­தை­ய­டுத்து பொலிஸார் அவ­ரிடம் வாக்­கு­மூ­லத்தை பதிவு செய்­த­போது, தனது கைத்­தொ­லை­பே­சி­யி­லி­ருந்தே மகன் குறித்த காணொ­ளி­களை பெற்­றுள்­ள­தாக தெரி­வித்­துள்ளார்.

தாயையும், மக­னையும் பொலிஸ் உய­ர­தி­கா­ரி­யொ­ருவர் முன்­னி­லையில் வைத்­தி­ய­சாலை பொலிஸார் ஆஜர்­ப­டுத்­தி­ய­தை­ய­டுத்து அவர்கள் இரு­வரும் கடு­மை­யாக எச்­ச­ரிக்­கப்­பட்டு விடு­விக்­கப்­பட்ட அதே­வேளை, ஆபாசக் காணொளி அடங்­கிய மெமரி கார்­டையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

http://www.virakesari.lk/article/38173

Link to comment
Share on other sites

1 hour ago, நவீனன் said:

 

.

பின்னர், மாண­வனின் தாய் மயக்­கத்­தி­லி­ருந்து தெளிந்­த­தை­ய­டுத்து பொலிஸார் அவ­ரிடம் வாக்­கு­மூ­லத்தை பதிவு செய்­த­போது, தனது கைத்­தொ­லை­பே­சி­யி­லி­ருந்தே மகன் குறித்த காணொ­ளி­களை பெற்­றுள்­ள­தாக தெரி­வித்­துள்ளார்.

 

மொக்கு மனுசி, பார்த்து போட்டு உடனே அழிக்காமல் வைச்சு இருக்கு, மகனும் அதில் இருந்து எடுத்து தன் கை தொலைபேசிக்கு அனுப்பி இருக்கார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

மொக்கு மனுசி, பார்த்து போட்டு உடனே அழிக்காமல் வைச்சு இருக்கு, மகனும் அதில் இருந்து எடுத்து தன் கை தொலைபேசிக்கு அனுப்பி இருக்கார்.

பிள்ளைகள் 16 அடி  பாய்வார்கள்  என்று  தெரியவில்லைப்போலும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

பிள்ளைகள் 16 அடி  பாய்வார்கள்  என்று  தெரியவில்லைப்போலும்

நிச்சயமாக 15 அடி பாய்ந்துளார்.

16 ஆவது அடி பாய்ந்தாரா என்பது தெரியவில்லை.

ஆபாசம் என்ற படியால், அப்படி பரிசோதனை செய்து அதைவிட ஆபத்தான தோற்று வருத்தமோ, வன்புணர்வோ ஏற்படத  வரை  16 ஆவது பாயமால் இருப்பது நன்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நிழலி said:

மொக்கு மனுசி, பார்த்து போட்டு உடனே அழிக்காமல் வைச்சு இருக்கு, மகனும் அதில் இருந்து எடுத்து தன் கை தொலைபேசிக்கு அனுப்பி இருக்கார்.

சில படங்களை....நாம் எதற்காகத் திரும்பத் திரும்ப....பார்க்க விழைகிறோம் ?

படத்திலிருக்கும்....பல நுணுக்கங்கள்....ஒரு முறை...அல்லது இரு முறை மட்டும் பார்ப்பதால்....முழுமையாகப் புரிந்து விடுவதில்லை!

இந்தத் தாய்.....ஒரு ஆராய்ச்சி மாணவியாக...இருக்கலாம்!?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kadancha said:

நிச்சயமாக 15 அடி பாய்ந்துளார்.

16 ஆவது அடி பாய்ந்தாரா என்பது தெரியவில்லை.

ஆபாசம் என்ற படியால், அப்படி பரிசோதனை செய்து அதைவிட ஆபத்தான தோற்று வருத்தமோ, வன்புணர்வோ ஏற்படத  வரை  16 ஆவது பாயமால் இருப்பது நன்று.

அதற்கு  முதல்  தடுத்துவிட்டார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, நிழலி said:

மொக்கு மனுசி, பார்த்து போட்டு உடனே அழிக்காமல் வைச்சு இருக்கு, மகனும் அதில் இருந்து எடுத்து தன் கை தொலைபேசிக்கு அனுப்பி இருக்கார்.

பல பேரின் போண் கிஸ்றியை பார்த்தால் மிக மிக ஆர்வமாக தேடிய பொக்கிஷங்கள் இருக்கு அவர்களுக்கு போண் மட்டும் தான் தெரியும் அதன் வரலாறு தெரிய வாய்ப்பில்லை அங்க தான் இருக்கு வில்லங்கம்:)

16 hours ago, விசுகு said:

பிள்ளைகள் 16 அடி  பாய்வார்கள்  என்று  தெரியவில்லைப்போலும்

நாங்கெல்லாம் 32 அடி :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நாங்கெல்லாம் 32 அடி :grin:

ஒரு ஆதாரம்???:D:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயும் பிள்ளையும் ஆனாலும், உணவு என்ற பேரில் வாயும் வயிறும் வேறு,,, என்ற ஒரு பழமொழி போல...

உடம்பு நரம்பு என்றவகையில் உணர்வுகளும் வேறுதான்...

ஆபாச படங்களை தாய் சேமித்து வைத்தது தப்பல்ல, மகன் அதனை தெரிந்துகொள்ளூம் அளவிற்கு வைத்திருந்ததுதான் தப்பு....

அவரவர் உணர்ச்சிகளுக்கு அனைவருக்கும் உரிமையுண்டு என்ற தேசங்களில் வாழ்வதால் பல லட்சம்பேர்போல எனக்கும் வந்த ஞானோதயம் அது!

ஆபாசங்கள் ஒன்றும் அருவருப்பானதல்ல...

எமக்கு எதிரே வரும் ஒவ்வொரு மனிதனும் இருவரின் எச்சில் படுத்தபட்ட இரவுகளின் ஆபாசத்தில் பிறந்தவர்களே...

உங்கள் பிள்ளைகள் பார்த்துவிடும் அளவிற்கு ஆசாபாசங்களை வைத்து கொள்ளாதீர்கள் பெற்றோர்களே...

உங்கள் பெற்றோர்கள் பார்த்துவிடும் அளவிற்கு ஆபாசங்களை பொதுவானதாக வைத்து கொள்ளாதீர்கள் பிள்ளைகளே..

அவ்வளவுதான் என் மனசுக்கு சரியென படுவது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

ஒரு ஆதாரம்???:D:

ஆதாரம் இருந்தால் நான் ஏன் இங்க மெனக்கெடுவான் :34_rolling_eyes:

 

3 hours ago, valavan said:

தாயும் பிள்ளையும் ஆனாலும், உணவு என்ற பேரில் வாயும் வயிறும் வேறு,,, என்ற ஒரு பழமொழி போல...

உடம்பு நரம்பு என்றவகையில் உணர்வுகளும் வேறுதான்...

ஆபாச படங்களை தாய் சேமித்து வைத்தது தப்பல்ல, மகன் அதனை தெரிந்துகொள்ளூம் அளவிற்கு வைத்திருந்ததுதான் தப்பு....

அவரவர் உணர்ச்சிகளுக்கு அனைவருக்கும் உரிமையுண்டு என்ற தேசங்களில் வாழ்வதால் பல லட்சம்பேர்போல எனக்கும் வந்த ஞானோதயம் அது!

ஆபாசங்கள் ஒன்றும் அருவருப்பானதல்ல...

எமக்கு எதிரே வரும் ஒவ்வொரு மனிதனும் இருவரின் எச்சில் படுத்தபட்ட இரவுகளின் ஆபாசத்தில் பிறந்தவர்களே...

உங்கள் பிள்ளைகள் பார்த்துவிடும் அளவிற்கு ஆசாபாசங்களை வைத்து கொள்ளாதீர்கள் பெற்றோர்களே...

உங்கள் பெற்றோர்கள் பார்த்துவிடும் அளவிற்கு ஆபாசங்களை பொதுவானதாக வைத்து கொள்ளாதீர்கள் பிள்ளைகளே..

அவ்வளவுதான் என் மனசுக்கு சரியென படுவது..

ம்ம் இதுதான் ஜதார்த்தம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, valavan said:

உங்கள் பிள்ளைகள் பார்த்துவிடும் அளவிற்கு ஆசாபாசங்களை வைத்து கொள்ளாதீர்கள் பெற்றோர்களே...

வாட்ஸ் அப்பிலை வந்த அவ்வளவையும் அழிக்கத்தான் இருக்கு.....பேரப்பிள்ளையளின்ரை கண்ணிலை சிக்கீட்டால் பெரிய கரைச்சல் tw_glasses:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/9/2018 at 1:04 PM, நவீனன் said:

பின்னர், மாண­வனின் தாய் மயக்­கத்­தி­லி­ருந்து தெளிந்­த­தை­ய­டுத்து பொலிஸார் அவ­ரிடம் வாக்­கு­மூ­லத்தை பதிவு செய்­த­போது, தனது கைத்­தொ­லை­பே­சி­யி­லி­ருந்தே மகன் குறித்த காணொ­ளி­களை பெற்­றுள்­ள­தாக தெரி­வித்­துள்ளார்.

வயதுகட்டுப்பாட்டு பிரச்சினையால் தாயின் போனின் மூலம் தரவிறக்கி இருக்கலாம் பின்பு தடயம் இல்லாமல் அழித்து இருக்கலாம் தரவிறக்கியதை தன்னுடைய போனுக்கு இலகுவாக பகிர்ந்துகொண்டு சேமித்து இருக்கலாம் . ஆனலும் தரவிறக்கிய நேரம்  கொஞ்சம் போனின் history யையும் சரியாக கவனிக்கணும் ஏனென்றால் உண்மையிலே அந்த மாணவன்தான் தரவிறக்கி உள்ளானா என்றும் பார்க்கணும் இந்த மொபைல் உலகில் இலகுவாக யாரின் மொபைல் லும் வேண்டாத பைல் ஒன்றை வைத்து குற்றவாளியாக்கலாம் . அதே போல் ஒராளின் மொபைல் போனை வைத்து கிட்டதட்ட  70 வீதம்  ஆள் எப்படி ஜாதகம் சொல்லலாம் . 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.