Jump to content

யுத்­தத்­தின்­போது புலம்­பெ­யர்ந்த சக­லரும் நாடு திரும்­ப­ வேண்டும்


Recommended Posts

யுத்­தத்­தின்­போது புலம்­பெ­யர்ந்த சக­லரும் நாடு திரும்­ப­ வேண்டும்

 

(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

சபையில் பிர­தமர் ரணில் அழைப்பு

 யுத்த காலத்தில் நாட்டை விட்டு வெளி­யே­றிய சகல இலங்­கை­யர்­களும் மீண்டும் நாடு திரும்ப வேண்டும். அர­சாங்­க­மாக நாம் அனைத்து மக்­க­ளுக்கும் இந்த அழைப்பை விடுக்­கின்றோம். நாட்­டுக்கு திரும்பி வரும் மக்­க­ளுக்கு சகல உத­வி­க­ளையும் வாழ்­வா­தார நட­வ­டிக்­கை­க­ளையும் செய்­து­ கொ­டுக்க தயா­ராக உள்ளோம் என்று பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க சபையில் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை பிர­த­ம­ரி­டத்­தி­லான கேள்வி நேரத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் எம்.பி. சார்ள்ஸ் நிர்­ம­ல­நாதன், யுத்­தத்தின் போது நாட்டை விட்டு வெளி­யே­றிய அக­திகள் குறித்தும் இந்­தி­யாவில் உள்ள ஈழ தமிழ் அக­தி­களை மீண்டும் நாட்­டுக்கு வர­வ­ழைப்­பது குறித்தும் யுத்­தத்தின் பின்னர் தற்­போது வரையில் இலங்­கைக்கு திரும்­பி­யுள்ள அக­தி­களின் வாழ்­வா­தார நட­வ­டிக்­கைகள் தொடர்­பிலும் அர­சாங்கம் முன்­னெ­டுக்கும் வேலைத்­திட்டம் குறித்தும் எழுப்­பிய கேள்­விக்கு பதிலளிக்கும் போதே பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க இதனை குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்.

யுத்­தத்தின் பின்னர் கடந்த 2010 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரையில் இந்­தி­யாவில் இருந்து 9509 அக­திகள் நாடு திரும்­பி­யுள்­ளனர். ஐக்­கிய நாடு­களின் மனித உரி­மைகள் ஆணை­ய­கத்தின் உத­வி­யுடன் இவர்கள் இலங்­கைக்கு வர­வ­ழைக்­கப்­பட்­டுள்­ளனர். இவர்­க­ளுக்­கான இழப்­பீ­டுகள், வாழ்­வா­தார உத­விகள் என குறிப்­பிட்ட தொகை ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. 18 வய­துக்கு மேற்­பட்ட நபர்­க­ளுக்கு தலா 10 ஆயி­ரமும், 18 வய­துக்கு குறைந்த நபர்­க­ளுக்கு தலா 7500 ரூபா என்ற தொகையும், பிரத்­தி­யேக நிதி உத­வி­களும் அதேபோல் அவர்­க­ளுக்­கான தற்­கா­லிக வீடு­களை பெற்­றுக்­கொள்­ளவும் வாழ்­வா­தா­ரத்தை பார்த்­து கொள்­ளவும் 23 ஆயிரம் ரூபாய் என்ற அடிப்­ப­டையில் வழங்­கப்­பட்­டுள்­ளது. இவர்கள் உரிய பிர­தேச சபை­களில் தம்மை பதிவு செய்­து­ கொள்­ளவும் ஏற்­பா­டுகள் செய்­து ­கொ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

அதேபோல் யுத்­தத்தின் போது வடக்கு கிழக்கில் இருந்து இடம்­பெ­யர்ந்து இந்­தி­யாவில் வசித்து வரும் இலங்கை தமி­ழர்­களில் மேலும் 3815 பேர் நாடு திரும்ப விருப்பம் தெரி­வித்­துள்­ள­தாக இந்­திய அர­சாங்கம் எமக்கு அறி­வித்­துள்­ளது. வெளி­வி­வ­கார அமைச்சின் ஊடாக அவர்­களை நாட்­டுக்கு வர­வ­ழைக்கும் நட­வ­டிக்­கை­களை நாம் முன்­னெ­டுத்து வரு­கின்றோம். இவர்கள் கடல் மார்க்­க­மாக இலங்­கைக்கு வர முயற்­சி­களை எடுத்த போதிலும் இந்­திய அர­சாங்கம் இந்­திய விமா­னப்­படை உத­வி­யுடன் அவர்­களை இலங்­கைக்கு அழைத்­து­ வர நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தாக அறி­வித்­துள்­ளது. அவர்­க­ளுக்­கான இல­வச விமான பய­ணங்­களை முன்­னெ­டுப்­ப­துடன் அவர்­க­ளுக்­கான உத­வி­க­ளையும் செய்து கொடுக்­கவும் நட­வ­டிக்கை எடுப்­ப­தாக வாக்­கு­றுதி வழங்­கி­யுள்­ளனர்.

அதேபோல் இந்­தி­யாவில் இலங்கை அக­தி­க­ளுக்கு பிறந்த குழந்­தைகள் தற்­போது வரையில் கல்வி கற்கும் சிறு­வர்கள் குறித்தும் கவனம் செலுத்­தப்­பட்­டுள்­ளது. அவர்­களை இலங்கை பிர­ஜை­க­ளாக பதிவு செய்­யவும் அவர்­க­ளுக்­கான கல்வி சுகா­தார மற்றும் அடிப்­படை வச­தி­களை பெற்­றுக்­கொ­டுக்­கவும் மீள்­கு­டி­யேற்ற அமைச்சர் சுவா­மி­நாதன் தலை­மையில் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

எவ்­வாறிருப்­பினும் நல்­லி­ணக்­கத்தை உரு­வாக்க வேண்­டிய தேவை உள்­ளது. இலங்கை மக்கள் இலங்­கையில் சுதந்தி­ர­மாக வாழ வேண்டும். ஆகவே யுத்த காலத்தில் நாட்டை விட்டு வெளி­யே­றிய சகல இலங்­கை­யர்­களும் மீண்டும் இலங்­கைக்கு வர­ வேண்டும். அர­சாங்­க­மாக நாம் அனைத்து மக்­க­ளுக்கும் அழைப்பு விடுக்­கின்றோம். நாட்­டுக்கு திரும்பி வரும் மக்களுக்கு சகல உதவிகளையும் வாழ்வாதார நடவடிக்கைகளையும் செய்து கொடுக்க நாம் தயாராக உள்ளோம். அதேபோல் அகதிகளாக வெளியேறி இப்போது நாடு திரும்பியுள்ள மக்களின் நிலைமைகள் குறித்தும் நாம் ஆராய்ந்து அவர்களுக்கான அடுத்த கட்ட உதவிகளை செய்து கொடுப்பது குறித்தும் நாம் துரித நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-08-09#page-2

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அறிவிப்பை.. யுத்த காலத்தின் போது புலம்பெயர்ந்து.. பின்னர் எந்தச் சங்கடமும் இன்றி கொலிடே வந்து போகும்.. இரட்டைக் குடியுரிமை கொண்டவையை நோக்கியும் வைக்கலாம்... அசைலம் வழங்கின நாடுகளை நோக்கிக் கேட்கலாம். குறிப்பாக கனடா.. அவுஸி.. நியுஸி.. பிரிட்டன்.. பிரான்ஸ்.. ஜேர்மனி.. இத்தாலி.. சுவிஸ்.. டென்மார்க்.. சுவிடன்..பின்லாந்து.. நார்வே... அமெரிக்கா..

அப்படிக் கேட்டால்.. உங்க.. தமிழ் ஆக்கள் பலருக்கு வயிற்றில புளி பிரளும். புலி அடியோடு மறந்திடும். ?  இப்பவே கொலிடே போறதுக்கு.. புலியை மறந்தவை கனக்கப் பேர் இருக்கினம். ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒரு சந்தேகம் தெரிந்தவர்கள் விளங்கப்படுத்துங்கள்.

நான் இரண்டு இரட்டை குடியுரிமை பொற்றவன் என எப்படி  இல‌ங்கை குடியக‌ழ்வு திணைக்களத்திறிகு தெரியும்? 

உ+ம் நான் இங்கிலாந்தில் 12 வருடம் வ‌திக்கின்றேன். பிரித்தானிய கடவுச்சீட்டிற்கு விண்ண‌ப்பின்கிறேன் இந்த சந்தர்ப்பத்தில் :

1. பிரித்தானிய அரசின் நிபந்தனையின் படி நான் என்னுடைய தற்போதைய இலங்கை குடியுரிமையல் இரத்து செய்ய வேண்டுமா? அல்லது

2. நான் பிரித்தானிய குடியுரிமை பெற்றவுடன் தானகவே என்னுடைய இலங்கை குடியுரிமை இரத்தாகின்றதா? 

தெரிந்தவர்கள் விளங்கப்படுத்துவீர்களா?
  

Link to comment
Share on other sites

அதாவது நீங்கள் வெளிநாட்டு குடியுரிமை  பெறும்போது இலங்கை கடவுச்சீட்டை அவர்களிடம் கொடுக்கவேண்டும்.

அதை அவர்கள் இலங்கை தூதுவராலயத்துக்கு அனுப்புவார்கள். அந்த இலங்கை கடவுச்சீட்டு இலங்கையில் உள்ள குடியக‌ழ்வு திணைக்களத்திற்க்கு அனுப்பி வைக்கப்படும்.

அவ்வளவுதான்...இலங்கை குடியுரிமை இழந்து விடுவீர்கள். இதுதான் நடைமுறை.

9 minutes ago, colomban said:

எனக்கு ஒரு சந்தேகம் தெரிந்தவர்கள் விளங்கப்படுத்துங்கள்.

நான் இரண்டு இரட்டை குடியுரிமை பொற்றவன் என எப்படி  இல‌ங்கை குடியக‌ழ்வு திணைக்களத்திறிகு தெரியும்? 

உ+ம் நான் இங்கிலாந்தில் 12 வருடம் வ‌திக்கின்றேன். பிரித்தானிய கடவுச்சீட்டிற்கு விண்ண‌ப்பின்கிறேன் இந்த சந்தர்ப்பத்தில் :

1. பிரித்தானிய அரசின் நிபந்தனையின் படி நான் என்னுடைய தற்போதைய இலங்கை குடியுரிமையல் இரத்து செய்ய வேண்டுமா? அல்லது

2. நான் பிரித்தானிய குடியுரிமை பெற்றவுடன் தானகவே என்னுடைய இலங்கை குடியுரிமை இரத்தாகின்றதா? 

தெரிந்தவர்கள் விளங்கப்படுத்துவீர்களா?
  

 

 

 

 

 

புலம்பெயர்ந்தவர்களுக்கு சிறிலங்கா அரசாங்கத்தின் மகிழ்ச்சிச் செய்தி!

 

இலங்கையிலிருந்து புலம்பெயர் நாடுகளில் வாழ்பவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் ஒன்றை ஸ்ரீ லங்கா அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

இதன்படி இரட்டை பிரஜாவுரிமை வழங்காத நாடுகளில் இலங்கை குடியுரிமையை இழந்து வாழ்பவர்களுக்கு விசேட வீசா ஒன்றை அறிமுகப்படுத்திவைக்கும் நடவடிக்கையினை இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் உறுதி செய்துள்ளது.

ஜப்பான், இந்தியா உட்பட பல நாடுகளில் இலங்கைக் குடியுரிமையை இழந்தவர்களுக்கு இந்த விசேட சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.

நீண்ட காலமாக இந்த நடவடிக்கை உறுதி செய்யப்படாமல் இருந்த நிலையில் தற்போது இதனை துறைசார் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

நாட்டின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு உதவி பெற்றுக் கொள்ளும் நோக்கில் விசேட திறமை மற்றும் முதலீட்டு திறன் உள்ள இலங்கையர்களுக்காக இந்த விசா வெளியிட எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த விசா அனுமதிப் பத்திரம் ஊடாக நீண்ட காலங்கள் இலங்கையில் தங்கியிருப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.

இதேவேளை இந்த நடவடிக்கையினை அமுல்ப்படுத்துவதற்கு இன்னும் மூன்று மாதங்களாகும் என கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/104465?ref=home-imp-flag

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, நவீனன் said:

அதாவது நீங்கள் வெளிநாட்டு குடியுரிமை  பெறும்போது இலங்கை கடவுச்சீட்டை அவர்களிடம் கொடுக்கவேண்டும்.

அதை அவர்கள் இலங்கை தூதுவராலயத்துக்கு அனுப்புவார்கள். அந்த இலங்கை கடவுச்சீட்டு இலங்கையில் உள்ள குடியக‌ழ்வு திணைக்களத்திற்க்கு அனுப்பி வைக்கப்படும்.

அவ்வளவுதான்...இலங்கை குடியுரிமை இழந்து விடுவீர்கள். இதுதான் நடைமுறை.

 

 

நன்றி நவீனன்

ஆனால் நான் இந்த இலங்கை குடியுரிமையை இழக்காமல் இங்கிலந்து குடியுரிமையை பெறமுடியுமா? (retain my current citizenship)

நான் நினைக்கின்றேன் நீங்கள் குறிப்பிட்டது இரட்டை குடியுரிமையை ஏற்றுக்கொள்ளாத நாடுகளாக இருக்கும்.

(countries do not accept dual citizenship. Eg. Germany)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, நவீனன் said:

புலம்பெயர்ந்தவர்களுக்கு சிறிலங்கா அரசாங்கத்தின் மகிழ்ச்சிச் செய்தி!

ஏதோ  அங்கே  எல்லாம் முடிஞ்சு

சனம்  நிம்மதியா இருக்கிற  மாதிரியும்

இலங்கையில் எல்லோருக்கும்  எல்லாம்  சமனாக நடக்கிற  மாதிரியும்

கதை  விடுகிறார்  நரி.

முதல்ல பயங்கரவாத  சட்டத்தையாவது எடுக்க முயலுங்க  நரி சார்

Link to comment
Share on other sites

நான் எழுதியது ஜேர்மன் நடைமுறை.

ஆனால் நீங்கள் கேட்பது போல இங்கிலாந்தில் அப்படி ஒரு நடைமுறை இருக்கிறதா என்று எனக்கு தெரியாது. யாராவது இங்கிலாந்துகாரர்தான் பதில் தரவேண்டும்.

ஜேர்மனி  இரட்டை குடியுரிமையை அங்கீகரிப்பது இல்லை. ஆனாலும் 2000ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்தின் படி இங்கு பிறந்த பிள்ளைகள் விரும்பினால் இரட்டை குடியுரிமை எடுக்கலாம். (இது எல்லோருக்கும் பொதுவானது அல்ல. அதில் பல சட்ட நுணுக்கங்கள் இருக்கிறது.)

24 minutes ago, colomban said:

நன்றி நவீனன்

ஆனால் நான் இந்த இலங்கை குடியுரிமையை இழக்காமல் இங்கிலந்து குடியுரிமையை பெறமுடியுமா? (retain my current citizenship)

நான் நினைக்கின்றேன் நீங்கள் குறிப்பிட்டது இரட்டை குடியுரிமையை ஏற்றுக்கொள்ளாத நாடுகளாக இருக்கும்.

(countries do not accept dual citizenship. Eg. Germany)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி வார ஆட்கள் கையை உயர்த்துங்க காரணங்களை (சாட்டு சொல்லாம) நெறைய வேலை கெடக்கு எனக்கு :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

சரி வார ஆட்கள் கையை உயர்த்துங்க காரணங்களை (சாட்டு சொல்லாம) நெறைய வேலை கெடக்கு எனக்கு :grin:

வாராவன் எல்லாம் துரோகி ஆக்கப்படுவான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

சரி வார ஆட்கள் கையை உயர்த்துங்க காரணங்களை (சாட்டு சொல்லாம) நெறைய வேலை கெடக்கு எனக்கு :grin:

 

நான் வருவேன்

அதற்கு முன்  

கெட்டவற்றை கேட்காமல் பார்க்காமல்

கேட்டால்  பார்த்தால்

அதை  தட்டிக்கேட்காமல்

வாயை  பொத்திக்கொண்டு இருக்கும் வலிமையை  நான் பெறணும்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நவீனன் said:

யுத்­தத்­தின்­போது புலம்­பெ­யர்ந்த சக­லரும் நாடு திரும்­ப­ வேண்டும்

சபையில் பிர­தமர் ரணில் அழைப்பு

 ...

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-08-09#page-2

 

ஓரளவிற்கு வசதியும், உயிருக்கு மதிப்பும் இருக்கும் புலம்பெயர் நாட்டில் வசித்துவிட்டு இலங்கை திரும்பிச் செல்ல விசரா பிடித்திருக்கு..? இலங்கையில் பிணத்தைக்கூட விட்டுவைக்காத அந்நாட்டில் தமிழருக்கு இருக்கும் பெறுமதியை உலகமே அறியுமே!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, colomban said:

நன்றி நவீனன்

ஆனால் நான் இந்த இலங்கை குடியுரிமையை இழக்காமல் இங்கிலந்து குடியுரிமையை பெறமுடியுமா? (retain my current citizenship)

நான் நினைக்கின்றேன் நீங்கள் குறிப்பிட்டது இரட்டை குடியுரிமையை ஏற்றுக்கொள்ளாத நாடுகளாக இருக்கும்.

(countries do not accept dual citizenship. Eg. Germany)

ஊருக்கு போய் சாரத்தை மடிச்சுச் கட்டிக்கொண்டு, விதானையாரட்டை போய் நில்லுங்கோ. சவூதில இருந்து வந்தனான். துழைவார், ஏர்போட்டில எல்லாத்தையும் பறிச்சுப்போட்டு, போலீசில சொன்னா வெள்ளவான் அனுப்புவம் எண்டு திரத்திப்போட்டாங்கள். 

ஜயா நீங்கள் தான் தெய்வம் எண்டு பிறப்புச் சான்றிதலையும் கொடுத்து கொஞ்சம் காசும் வெட்டினால், புது அடையாள அட்டை.

நீங்கள் வெளிநாட்டவர் எண்டு சொன்னா, உனககென்ன தம்பி விசரே எண்டுவினம்.

பிறகென்ன, இரண்டு பாஸ்போட்டோட, திரியலாம். இரண்டையும் ஒரே நேரத்தில வைச்சிராதீங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

ஊருக்கு போய் சாரத்தை மடிச்சுச் கட்டிக்கொண்டு, விதானையாரட்டை போய் நில்லுங்கோ. சவூதில இருந்து வந்தனான். துழைவார், ஏர்போட்டில எல்லாத்தையும் பறிச்சுப்போட்டு, போலீசில சொன்னா வெள்ளவான் அனுப்புவம் எண்டு திரத்திப்போட்டாங்கள். 

ஜயா நீங்கள் தான் தெய்வம் எண்டு பிறப்புச் சான்றிதலையும் கொடுத்து கொஞ்சம் காசும் வெட்டினால், புது அடையாள அட்டை.

நீங்கள் வெளிநாட்டவர் எண்டு சொன்னா, உனககென்ன தம்பி விசரே எண்டுவினம்.

பிறகென்ன, இரண்டு பாஸ்போட்டோட, திரியலாம். இரண்டையும் ஒரே நேரத்தில வைச்சிராதீங்கோ.

 

இது உண்மை நாதமுனி குறுக்கு வழி.

ஆனால் உண்மையில் ஒருவருக்கு அப்படி தன்னுடய இலங்கை குடியுரிமையை இழக்காமல் இருக்கவும் முடியுமா?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நவீனன் said:

அதாவது நீங்கள் வெளிநாட்டு குடியுரிமை  பெறும்போது இலங்கை கடவுச்சீட்டை அவர்களிடம் கொடுக்கவேண்டும்.

அதை அவர்கள் இலங்கை தூதுவராலயத்துக்கு அனுப்புவார்கள். அந்த இலங்கை கடவுச்சீட்டு இலங்கையில் உள்ள குடியக‌ழ்வு திணைக்களத்திற்க்கு அனுப்பி வைக்கப்படும்.

அவ்வளவுதான்...இலங்கை குடியுரிமை இழந்து விடுவீர்கள். இதுதான் நடைமுறை.

இது சட்டபூர்வமான குடியேறிகளுக்கானது.

அகதிகள் குடியுரிமை பெறும் விடயத்தில் பொருந்தாது. 

அகதிளாக வந்து குடியுரிமை பெறுபவர் விடயம் இலங்கை அரசுக்கு தெரியாது. தெரிவிக்கவும் கூடாது. இதனால் தான் காணாமல் போன பலர் வெளிநாடுகளில் வாழ்கின்றனர் என சொல்லித் தப்ப முயல்கிறது இலங்கை அரசு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் கொஞ்சம் கொலிடே போறவேண்ட முஞ்சிப் புத்தகத்தை பாத்துட்டு ஒரு அறிவிப்பை விட்டால் நல்லா இருக்கும்..இல்ல முஞ்சிப்பு புத்தகத்தில தான் உள்ள அலப்பரை முளுக்க போடுறவே....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன ஒருநேரம் நீங்களும், உங்கள் அமைச்சர்கள் சிலரும் புலம்பெயர்ந்த சமூகம் இலங்கையின் அபிவிருத்திக்கு உதவவேண்டும் என்று பேசுறது,நேற்றுகூட உங்கள் ராணுவ தளபதி ஒருவர் ஹெல்ப் கேட்டிருந்தார் புலம்பெயர் தமிழர்களிடம்....

 பிறகு அதே வாயால எல்லாரும் நாட்டுக்கு வாங்கோ எண்டுறது?

யுத்தம்தான் முடிவுக்கு வந்தது, யுத்தம் ஏற்பட்டதற்கான காரணங்களில் எதையாவது ஒன்றை தீர்த்து வைத்திருக்கிறீர்களா  ரணில் ஐயா?

புலம் பெயர்ந்தவர்களை திரும்பி வரசொல்லி அழைக்கும் உங்கள் சிறுபான்மையின பாசம், உள்நாட்டில் உள்ள அதே யுத்தத்தால் தமது வாழ்வாதாரங்கள் அனைத்தையும் இழந்து நிற்கும் சிறுபான்மை தமிழினம்மீது காட்டப்படுகிறதா?

யுத்தம் முடிந்த பத்தாண்டுகளில் தமிழர் பகுதிகளில் விகாரைகளை கட்டியெழுப்புவதில் காட்டப்படும் வேகம் வீடுகளை கட்டி கொடுப்பதில் காட்டப்பட்டிருக்கிறதா?

தாயகத்தில் உள்ள தமிழனை நீங்கள் விரும்பியவாறு இருத்தி எழுப்பும் அளவிற்கு  கொண்டுவந்த உங்களுக்கு, காலம் காலமாய் உறுத்தலாய் இருப்பது, புலம்பெயர்ந்து பொருளாதாரம்,கல்வி,வெள்ளைக்காரனுக்கே வேலை கொடுக்கும் அளவிற்கு தொழில் முயற்சிகள் என்று விஸ்வரூபம் எடுத்து நிற்கும் லட்சம் லட்சமாய்  புலம்பெயந்ர்து வாழும் தமிழர்கள்தான்.

உங்களுக்கு ஒரு துணிவு புலம்பெயர் தமிழர்கள் மொத்தமாய் திரும்பி வந்தால்கூட சிங்கள மக்களின்  சனத்தொகையை தாண்டி தமிழர் சனதொகை அதிகரிக்காது,வேண்டுமென்றால் முஸ்லிம்களைவிட இன்னும் பல லட்சம் தமிழர்களின் தொகை அதிகரிக்கலாம்.

இந்த இருவரின் மக்கள்தொகை எப்படிபோனாலும் உங்களுக்கு ஒன்றுதான், தப்பித்தவறி புலம்பெயர் தமிழர்கள் திரும்பி வந்தால் சிங்கள மக்களைவிட தமிழர்களின் தொகை அதிகரிக்கும் என்ற நிலையிருந்தால், நீங்கள்தான் திருப்பி அழைப்பீர்களா..

அல்லது திருப்பி அழைக்கும் உங்கள் அறிக்கை வந்த மறுநாளே,சிங்கள தேசதுரோகி என்று பட்டமும் உங்கள் மக்களால் உங்களுக்கு வழங்கப்பட்டு சிங்கள தேசத்தில் பெரும் கலகம் ஏற்பட்டு உங்கள் ஆட்சி கவுழாதா?

சொந்தகுடி மக்களை அந்நியர்கள்போல் நடத்தி உயிர் உடமை உரிமை என்று அனைத்தையும் பறித்து நாட்டைவிட்டு ஓடவைத்த உங்களைவிட...

அந்நிய மக்களாய் நாமிருந்தாலும் சொந்தகுடிமக்கள்போல், உயிர்,உடமை,உயிர் என அனைத்தும் தந்து நிம்மதியான வாழ்வும் தந்த புலம்பெயர் தேசங்களின் கால் தூசிக்குகூட நீங்கள் சமானம் இல்லை.

தனக்கு வாழ்வும் வளமும் வளமான எதிர்காலமும் தந்த புலம்பெயர்நாடுகளுக்கு அனைத்துவிதமானவகையிலும் விசுவாசமாக இருக்கவேண்டியது ஒவ்வொரு தமிழனதும் கடமை,அதனை எத்தனை தலைமுறைகள் நீங்கள் வாழும் நாடுகளில் வாழ்ந்தாலும் அந்த விசுவாசத்திலிருந்து துளியளவுகூட விலகிநிற்காது வாழவேண்டியது ஒவ்வொரு புலம்பெயர்தமிழனதும் செஞ்சோற்றுக்கடன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, colomban said:

நன்றி நவீனன்

ஆனால் நான் இந்த இலங்கை குடியுரிமையை இழக்காமல் இங்கிலந்து குடியுரிமையை பெறமுடியுமா? (retain my current citizenship)

நான் நினைக்கின்றேன் நீங்கள் குறிப்பிட்டது இரட்டை குடியுரிமையை ஏற்றுக்கொள்ளாத நாடுகளாக இருக்கும்.

(countries do not accept dual citizenship. Eg. Germany)

 

9 hours ago, colomban said:

ஆனால் உண்மையில் ஒருவருக்கு அப்படி தன்னுடய இலங்கை குடியுரிமையை இழக்காமல் இருக்கவும் முடியுமா?

இதில் முதலில் பிரசாவுரிமை, குடியுரிமை, வதிவிடவுரிமை  வேறுபாடுகள் பற்றிய தெளிவு வேண்டும்.   

பிறப்பினால் ஏற்ப்படும் பிரசாவுரிமையை, இறையாண்மை மக்களிடம் அளித்த (உ.ம். பாராளுமன்றம்)  ஓர் அரசு நீக்கமுடியாது என்பது, மக்களிடம் இருந்தே அந்த அரசின் இறையாண்மை பிறக்கிறது என்பதால், இறையாண்மை உள்ள அப்படியான அரசால் பிரசாஉரிமையை பறிக்க முடியாது.

இந்தப் பிரச்னை, பிரித்தானியாவில் பிறந்து  ISIS இற்க்கு ஈராக் சென்று பயிற்சி எடுத்தவர்கள் பிரித்தானியாவிடற்கு திரும்பி வருவதை தடுப்பதத்ற்கு அரசு பிரசவுரிமையை பறிப்பதற்கு முயன்ற போது, சட்டமா அதிபர் அரசு  நீதி மன்றம் செல்வதையே தடுத்துவிட்டார்.    

இதன் காரணமாக, இப்படிப்பட்டவர்கல் திரும்பி வருவதை தடுப்பதத்திற்கு, பிரித்தானியா தனது SAS ஐ ISIS உடன் சண்டை பிடிப்பவர்களுக்கு பயிச்சி அளிக்கும் போர்வையில் இராக் மாற்றம் சிரியாவிற்கு அனுப்பியது என்பது அநேகமாக வெளியில் செய்தியாக வரவில்லை.
 
இறையாண்மை என்பதே 16ம் நூற்றாண்டில் ஓர் தேச-அரசு (nation state) என்பத்தின் தோற்றத்திலேயே பிறந்து, நிலப்புல ஒருமைப்படுள்ள இறையாண்மை ஆக Clausewitz இன் காலத்தில் கூர்ப்படைந்து பரிணாம முதிர்ச்சி அடைந்தது.       

முடியாட்சியில், பிரசாவுரிமை பறிக்கப்படலாம். ஏனெனில்,  இறையாண்மை முடிக்குரிய வம்சத்தின் உரிமையும் சொத்தும் ஆகும். மேலும், ஒரு நபர் முடியாட்சிக்கு உட்பட்டவர் / உட்பட்டது  (அதாவது subject) ஆகும்.     

சொறி லங்கா அரசு என்பது, பிரித்தானிய பாராளுமன்றத்திலேயே பிறந்தது என்பதால், சொறி லங்கா நிச்சயமாக பிரசவுரிமையை பறிக்கமுடியாது.

ஆயினும், சொறி சிங்களம்  பறிப்பது  குடியுரிமை என்றே சொல்கிறது. சிங்களத்தில் எப்படி  உள்ளது என்பது தெரியவில்லை.

நடைமுறையில் சிங்களம் பறிப்பது (இலங்கைத் தீவில் பிறந்தவர்களின்) குடியுரிமையை ஆகும்.

சொறி லங்கா  குடியரசு என்ற  வாதம், ஈழத்தமிழ் தேசம் தமது இறையாண்மையை தாரை வார்த்துக் கொடுத்து சொறி லங்கா குடியரசாக பரிணமிக்காத படியால், ஈழத்தமிழ் பூர்விகம் உள்ள, இலங்கைத் தீவில் பிறந்த ஒருவரின் பிரசவுரிமையை நிச்சயமாக சொறி லங்கா  குடியரசு பறிக்க முடியாது.

இது வரலாறும், சட்டமும் தெரிந்தவர்களுடன் பலாகும் பொது எனக்குப்  புரிந்தது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, colomban said:

நன்றி நவீனன்

ஆனால் நான் இந்த இலங்கை குடியுரிமையை இழக்காமல் இங்கிலந்து குடியுரிமையை பெறமுடியுமா? (retain my current citizenship)

நான் நினைக்கின்றேன் நீங்கள் குறிப்பிட்டது இரட்டை குடியுரிமையை ஏற்றுக்கொள்ளாத நாடுகளாக இருக்கும்.

(countries do not accept dual citizenship. Eg. Germany)

பிரித்தானிய பிரஜாவுரிமை பெற்ற நாள் தொடங்கி சொறீலங்கா பிரஜாவுரிமை ரத்தாகிவிடும். ஆனால் பிரித்தானியா இரட்டை பிரஜாவுரிமையை ஏற்றுக் கொள்ளும் நாடு என்ற வகையில்.. இன்னொரு நாட்டில் அது வழங்கும் பட்சத்தில்.. பிரஜாவுரிமையை பேண முடியும்.

ஒரு சொறீலங்கா பிரஜை பிரித்தானிய பிரஜா உரிமை பெற்றதும்.. அவரின் சொறிலங்கா பிரஜா உரிமை ரத்தாகி விடும். மீண்டும்.. அதற்கு விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ள பிரித்தானியா தடை போடாது. 

அந்த வகையில் தான் பிரித்தானிய பாஸ்போட் வைச்சிருக்கும் எம்மவர்கள் சொறீலங்கா பிரஜா உரிமைக்கும் விண்ணப்பித்து அதனைப் பெற்றுக் கொள்கின்றனர்.

சொறீலங்கா பிரஜா உரிமை ரத்தானாலும்.. அதன் கடவுச்சீட்டை கையளிக்கனும் என்ற அவசியம் இப்போதில்லை. அது தானாகவே ரத்தாக்கப்பட்டு விடும். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, விசுகு said:

ஏதோ  அங்கே  எல்லாம் முடிஞ்சு

சனம்  நிம்மதியா இருக்கிற  மாதிரியும்

இலங்கையில் எல்லோருக்கும்  எல்லாம்  சமனாக நடக்கிற  மாதிரியும்

கதை  விடுகிறார்  நரி.

முதல்ல பயங்கரவாத  சட்டத்தையாவது எடுக்க முயலுங்க  நரி சார்

அவையவையின்ரை சனம் நல்லாய்த்தான் இருக்கினம்....
போற ஆக்களிட்டை வவுனியாவுக்கு அங்காலை ஏ9 வீதியை விலத்தி உள் ஒழுங்கைகளுக்காலை வானை விடச்சொல்லுங்கோ....... 
அங்கை தெரியும் வேதனகளும் அவலங்களும்...

இனியும் சம்சும் கொம்பனியை ஆரும் தூக்கி கதைச்சால் இழுத்துப்போட்டு குத்துவன் சொல்லிப்போட்டன்.

இன்றைய இலங்கை நிலமையில் இங்கே இன்னுமொரு விடயத்தை சொல்ல விரும்புகின்றேன்.
சிங்கள மக்களிடமோ அல்லது சிங்கள அரசிடமோ யாருமே கோபப்படத்தேவையில்லை. அவர்கள் தாங்கள் தங்கள் இனம் நாடு அதை கட்டிக்காக்கவேண்டும் என நினைக்கின்றார்கள். எமது அரசியல் நாதாரிகள் தான் கைநிறைய காசு வந்தவுடன் தூங்கிவிடுகின்றார்கள். எமது சோம்பேறி/நயவஞ்சக அரசியல்வாதிகளை வைத்துக்கொண்டு சிங்கள மக்களையும் அரசையும் எதிர்ப்பதில் நியாயமில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நவீனன் said:

அதாவது நீங்கள் வெளிநாட்டு குடியுரிமை  பெறும்போது இலங்கை கடவுச்சீட்டை அவர்களிடம் கொடுக்கவேண்டும்.

அதை அவர்கள் இலங்கை தூதுவராலயத்துக்கு அனுப்புவார்கள். அந்த இலங்கை கடவுச்சீட்டு இலங்கையில் உள்ள குடியக‌ழ்வு திணைக்களத்திற்க்கு அனுப்பி வைக்கப்படும்.

அவ்வளவுதான்...இலங்கை குடியுரிமை இழந்து விடுவீர்கள். இதுதான் நடைமுறை.

அப்ப பாஸ் போர்ட் கிழித்துவிட்டு இறங்கியவர்கள் ,பாஸ் போர்ட் அப்படி ஒரு சாமனே கண்ணால் கானவில்ல்லை இடையில் முகவர் பறித்துக்கொண்டு போய் விட்டான் என்பவர்கள் எப்படி சிற்றிசன் எடுத்து இருப்பினம் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

அவையவையின்ரை சனம் நல்லாய்த்தான் இருக்கினம்....
போற ஆக்களிட்டை வவுனியாவுக்கு அங்காலை ஏ9 வீதியை விலத்தி உள் ஒழுங்கைகளுக்காலை வானை விடச்சொல்லுங்கோ....... 
அங்கை தெரியும் வேதனகளும் அவலங்களும்...

இனியும் சம்சும் கொம்பனியை ஆரும் தூக்கி கதைச்சால் இழுத்துப்போட்டு குத்துவன் சொல்லிப்போட்டன்.

இன்றைய இலங்கை நிலமையில் இங்கே இன்னுமொரு விடயத்தை சொல்ல விரும்புகின்றேன்.
சிங்கள மக்களிடமோ அல்லது சிங்கள அரசிடமோ யாருமே கோபப்படத்தேவையில்லை. அவர்கள் தாங்கள் தங்கள் இனம் நாடு அதை கட்டிக்காக்கவேண்டும் என நினைக்கின்றார்கள். எமது அரசியல் நாதாரிகள் தான் கைநிறைய காசு வந்தவுடன் தூங்கிவிடுகின்றார்கள். எமது சோம்பேறி/நயவஞ்சக அரசியல்வாதிகளை வைத்துக்கொண்டு சிங்கள மக்களையும் அரசையும் எதிர்ப்பதில் நியாயமில்லை

இதில  இன்னொன்றையும் சேர்க்கலாம் அண்ணை

இவையளுக்குத்தான்  கருணாநிதியை  பேசினால் கோபம் வருகுது

வரும் தானே?

கற்றது அங்க தானே???

முன்பே எழுதியது தான்

இன்னும் சில  வருடங்களில்  உலக கோடிசுவரர்  வரிசையில் எம்  அரசியல்வாதிகளும் இருப்பார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

இதில  இன்னொன்றையும் சேர்க்கலாம் அண்ணை

இவையளுக்குத்தான்  கருணாநிதியை  பேசினால் கோபம் வருகுது

வரும் தானே?

கற்றது அங்க தானே???

முன்பே எழுதியது தான்

இன்னும் சில  வருடங்களில்  உலக கோடிசுவரர்  வரிசையில் எம்  அரசியல்வாதிகளும் இருப்பார்கள்

புலம் பெயர்ந்த சிலர் இன்னும் இவங்களுக்கு செம்படிக்கிறார்களே நாட்டில் இல்லாமலே என்ன செய்வது :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

புலம் பெயர்ந்த சிலர் இன்னும் இவங்களுக்கு செம்படிக்கிறார்களே நாட்டில் இல்லாமலே என்ன செய்வது :unsure:

தவணைகள் பல தாண்டிய போதும் கற்பனையில்  இருக்கிறார்கள்

கச்சையும் போன  பின்  தான்..??

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.