Jump to content

ஆதாரத்தைத் திரட்டும் அதிகாரிகள் ! - தி.மு.கவுக்குப் பா.ஜ.க-வின் அடுத்த செக்?


Recommended Posts

ஆதாரத்தைத் திரட்டும் அதிகாரிகள் ! - தி.மு.கவுக்குப் பா.ஜ.க-வின் அடுத்த செக்?

7_thumb.jpg
 
 

தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., இரண்டு பெரிய கட்சிகளின் ஆதிக்கத்தை உடைக்க வேண்டும். இதுதான் பி.ஜே.பி-யின் தேசிய கட்சித்தலைவர் அமித் ஷாவின் திட்டம். அவருக்கு கை கொடுத்தது போலவே, ஜெயலலிதா மறைந்தார். அ.தி.மு.க. சில்லுச் சில்லாக உடைந்தது. இப்போது, கருணாநிதி காலமாகிவிட்டார்.

அமித்ஷா
 

தி.மு.க-வுக்குள் ஊடுருவி என்னென்ன அரசியல் மாயஜாலம் செய்யலாம் என்பது பற்றி தீவிரமாக இறங்கிவிட்டார் அமித்ஷா. இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. பி.ஜே.பி-யுடன் கூட்டணி இல்லை என்கிற கொள்கையில் உறுதியாக இருக்கிறார் தி.மு.க-வின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்.

காங்கிரஸுடன் கைகுலுக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார். இது அமித் ஷாவுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. ஆனால், கனிமொழி, அழகிரி... இருவருக்கும் பி.ஜே.பி. மீது அதிருப்தி இல்லை. இந்தக் கோணத்தில் திறமையாகக் கையாளும் ஒரு சீனியர் அதிகாரியை மத்திய அரசு தமிழகத்துக்கு அனுப்பி வைத்துள்ளது. தமிழக அரசியல் நன்றாகத் தெரிந்த மத்திய உளவுத்துறை அதிகாரி அந்த அதிகாரி. கருணாநிதி உடல்நிலை சிகிச்சைக்கு அட்மிட் ஆன நாள் முதல், கடந்த பத்து நாள்களாக சென்னையில் முகாமிட்டிருக்கிறார். மு.க.ஸ்டாலின் மீது அதிருப்தியில் இருக்கும் தி.மு.க. தலைமைக்கழக நிர்வாகிகள் யார், யார். மாவட்டச் செயலாளர்கள் யார். சமீபத்தில் கட்சியில் களை எடுக்கப்பட்ட விவகாரத்தில் பதவி இழந்தவர்கள் யார் என்கிற லிஸ்ட்டை மின்னல் வேகத்தில் ரெடி பண்ணி வருகிறார்கள். தி.மு.க-வுக்குள் இருக்கும் பி.ஜே.பி. அனுதாபிகள் மற்றும் பி.ஜே.பி-யில் இருக்கும் தி.மு.க அனுதாபிகள்...இரு தரப்பினரையும் உளவுத்துறையின் தூதுவர்கள் பேசி வருகிறார்கள். 

 

 

ஸ்டாலின்
 

முதல்கட்டமாக, அடுத்த சில நாள்களில் மு.க.ஸ்டாலினை கட்சியின் தலைவராக நியமிக்கச் சொல்லி ஸ்டாலின் ஆதரவாளர்கள் கோரிக்கை வைக்கப்போகிறார்கள். அப்போதுதான் எதிர்ப்பு கிளம்பும். எதிர்கோஷ்டியினர்,  சில கோரிக்கைகளைக் கிளப்புவார்கள் என்று தெரிகிறது. அதற்கு ஸ்டாலின் எப்படி ரியாக்ட் செய்யப்போகிறார் என்பதைப் பொறுத்துதான் தி.மு.க-வின் எதிர்காலம் இருக்கும். 

 

 

இதுபற்றி டெல்லியில் உள்ள உளவுத்துறை அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, ` தி.மு.க-வில் ஸ்டாலின், அழகிரி, கனிமொழி...என்கிற பெரிய கோஷ்டிகள் இருப்பது எங்களுக்குத் தெரியும். கருணாநிதிக்குப் பிறகு கச்சேரியை வைத்துக்கொள்ளலாம் என்றுதான் கோஷ்டியினர் காத்திருந்தனர். இப்போது, ஸ்டாலினுக்கு எதிராக சில பிரச்னைகளை கிளப்பப்போகிறார்கள். குறிப்பாக, கட்சியின் சீனியர்களை புறக்கணித்துவிட்டு, அவரின் மருமகன் சபரீசன் கையில் கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தைக் கொடுத்தது பலருக்கும் பிடிக்கவில்லை. ஸ்டாலின் தலைமையில் இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்கள், இரண்டு சட்டமன்றத் தேர்தல்கள் நடந்தன. அனைத்திலும் தோல்வியே மிஞ்சியது. 88 எம்.எல்.ஏ-களை வைத்துக்கொண்டு ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் ஸ்டாலின் இறங்காதது கட்சியினரிடையே எரிச்சலை உண்டாக்கியுள்ளது. இந்த அதிருப்தியாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் பி.ஜே.பி. சில நடவடிக்கைகளை எடுக்கப்போகிறது. பொறுத்திருந்துப் பாருங்கள்' என்கிறார்.

https://www.vikatan.com/news/tamilnadu/133441-bjp-targets-dmk.html

Link to comment
Share on other sites

தி.மு.கவில் கருணாநிதி இனி இல்லை... களமிறங்கிய டெல்லி ஸ்பெஷல் தூதுவர்கள்!

7_thumb.jpg
 

தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., ஆகிய இரண்டு திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை உடைக்கவேண்டும் என்பதுதான் தேசியக் கட்சிகளின் திட்டமாக இருந்தது. ஆனால், சமீபமாக காங்கிரஸ் அதில் சுணங்கியிருக்க, பி.ஜே.பி. இந்த எண்ணத்தில் தீவிரமாகச் செயல்படுகிறது. 2016- ஜெயலலிதா மறைய, இப்போது கருணாநிதியும் இயற்கை எய்த, பெரும் தலைவர்கள் இல்லாத சூழ்நிலையை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ள மாநில கட்சிகளே பரபரக்கும்போது, மத்திய பி.ஜே.பி. அமைதியாக இருக்குமா?! அமித் ஷாவின் ஸ்கெட்ச்சில் காய் நகர்த்தத் துவங்கிவிட்டது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். 

அமித்ஷா
 

போதாக்குறைக்கு பி.ஜே.பி.-யுடன் கூட்டணி இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறார் தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின். நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுடன் தி.மு.க. கூட்டணி வைக்கவே விரும்புகிறது என்றும் சமிக்ஞைகள் வெளியாகிறது. இதில் கனிமொழி, அழகிரி இருவருக்கும் அவ்வளவாக விருப்பம் இல்லை என்றும் முணுமுணுக்கின்றனர் அத்தரப்பினர்.  இந்த சூழ்நிலையைத்தான் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ள திட்டமிட்டிருக்கிறாராம் அமித் ஷா.  

ஒரு சீனியர் அதிகாரி ஸ்பெஷல் டாஸ்க் எனச் சொல்லி தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தமிழக அரசியல் நன்றாகத் தெரிந்த மத்திய உளவுத்துறை அதிகாரி அவர். கருணாநிதி உடல்நலமில்லாமல் சிகிச்சைக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல், சென்னையில் முகாமிட்டிருக்கிறார். மு.க.ஸ்டாலின் மீது அதிருப்தியில் இருக்கும் தி.மு.க. தலைமைக்கழக நிர்வாகிகள் யார், மாவட்டச் செயலாளர்கள் யார், சமீபத்தில் கட்சியில் களை எடுக்கப்பட்டவர்கள் இருப்பவர்கள் யார் என பலவிதமான அதிருப்தி பட்டியலை தயாரித்துக் கொண்டிருக்கிறாராம். தி.மு.க-விற்குள் இருக்கும் பி.ஜே.பி. அனுதாபிகள் மற்றும் பி.ஜே.பி-யில் இருக்கும் தி.மு.க அனுதாபிகள் என இரு தரப்பினரையும் உளவுத்துறை தூதுவர்கள் சந்தித்து வருகிறார்கள். இதெல்லாம் ஏன்? 

 

 

ஸ்டாலின்
 

தி.மு.கவில் அடுத்த சில நாட்களில் மு.க.ஸ்டாலினை கட்சியின் தலைவராக நியமிக்கச் சொல்லி ஸ்டாலின் ஆதரவாளர்கள் கோரிக்கை வைக்கப்போகிறார்கள். அப்போது அதை எதிர்க்காமல், அதே சமயம்  சில கோரிக்கைகளை முன்வைத்து அதையும் இப்போது அமல்படுத்த வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பதற்கான முயற்சி எனத் தெரிகிறது. இவற்றுக்கு ஸ்டாலினின் ரியாக்ஷன் என்ன என்பதைப் பொறுத்துதான் தி.மு.க. மீதான பி.ஜே.பி-யின் அணுகுமுறை தீர்மானிக்கப்படுமாம். 

இதுபற்றி டெல்லியில் உள்ள உளவுத்துறை அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, ’’தி.மு.க.-வில் ஸ்டாலின், அழகிரி, கனிமொழி எனப் பல கோஷ்டிகள் இருப்பது அ.தி.மு.க., பி.ஜே.பி. ஆகிய கட்சிகளுக்குச் சாதகம். கருணாநிதி இல்லாத இந்தச் சூழ்நிலையில் ஸ்டாலினுக்கு எதிராகப் பல பிரச்னைகளை கிளப்பப்போகிறார்கள். குறிப்பாக, கட்சியின் சீனியர்களை புறக்கணித்துவிட்டு, அவரது மருமகன் சபரீசன் கையில் கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை கொடுத்தது பலருக்கும் பிடிக்கவில்லை. ஸ்டாலின் தலைமையில் இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்கள், இரண்டு சட்டமன்றத் தேர்தல்கள் நடந்தன. அதன் முடிவுகள் தி.மு.கவை பெரிதும் உற்சாகப்படுத்தவில்லை.

88 எம்.எல்.ஏ-க்கள் கொண்ட எதிர்க்கட்சியாக இருந்துகொண்டு, தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியைக் கலைக்கவும் ஸ்டாலின் முயற்சிக்கவில்லை. இதெல்லாம் கட்சியினரிடையே அதிருப்தி மற்றும் சோர்வை ஏற்படுத்தியுள்ளது. இதனால் எதிரி கட்சிகளான அ.தி.மு.க. மற்றும் பி.ஜே.பியின் வியூகங்களுக்கு தி.மு.க. உறுப்பினர்கள் எளிதில் இரையாகக் கூடும். அவற்றைச் சமாளித்து கட்சியை வலுப்படுத்தி நெருப்பாற்றில் கரை சேர்க்க வேண்டிய பெரும்பொறுப்பு ஸ்டாலினிடம் இருக்கிறது. இப்படியான சூழல்களை அநாயாசமாக சமாளித்தவர் கருணாநிதி. அப்படியே ஸ்டாலினும் சமாளிப்பாரா எனப் பார்க்கலாம்!’’ என்றார்.

https://www.vikatan.com/news/tamilnadu/133441-bjp-targets-dmk.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீக்கிரம் சீக்கிரம் என்ன வெடி சரை வெடியா ஒத்தை வெடியா ?

(ஒரு கூட்டம் தலிவர் மணடையை போட்டதுக்கு அழவில்லை என்று குறைபடுனம் திமுக உடையுற நிகழ்வுக்கு சந்தோசபட்டாலும் கோபப்படுவான்களோ?)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, பெருமாள் said:

சீக்கிரம் சீக்கிரம் என்ன வெடி சரை வெடியா ஒத்தை வெடியா ?

(ஒரு கூட்டம் தலிவர் மணடையை போட்டதுக்கு அழவில்லை என்று குறைபடுனம் திமுக உடையுற நிகழ்வுக்கு சந்தோசபட்டாலும் கோபப்படுவான்களோ?)

தோழர் ..  க.தி.மு.க . இந்த பெயர் வாஸ்து சாத்திரபடி நன்றாக உள்ளது ..  மற்றும்படி  மாவட்ட செயலாளர் பதவிதான் எனக்கு வேண்டும் ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.