Jump to content

படலையில் ஒரு மணி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

download.jpg

 

தண்ணிய குடியேன்டா நானும் எத்தின தடவையம்மா குடிச்சிட்டன் இந்த விக்கல் போகமாட்டேன் என்கிறது  இந்தா கொஞ்சம் சீனியை வாய்க்க போடு ம் தாங்கோ அப்பவும் நிக்காட்டி கொஞ்சம் நித்திரைய  கொள்ளு சரி சரி என கட்டிலில் சாய்ந்து படுக்க ஆரம்பித்தாலும் விக் இக் விக் என விக்கல் விடுவதாக இல்லை அப்படியே தலையணையை பிடித்து முகத்தை இறுக்கிய படி கண்களை மூட நித்திரை இறுக பிடித்துக்கொண்டது 

பல மணிநேரம் கழிந்த பிறகு எழுந்தேன் எல்லாம் இருட்டாக இருந்தது மின் ஆழியை அழுத்திய போது மின்சாரம் இருக்க வில்லை கும் இருட்டில் தட்டி   தடிவி  ஒரு சிமிழி விளக்கை கதவு மூலையில் இருந்து எடுத்து நேரத்தை பார்க்க நேரமோ நிற்காத மேகமாய் ஓடியோடி களைப்பில்லாத மூன்று கால் குதிரை போல மரதன் ஓடி இரவு பன்னிரண்டு முப்பதை காட்டியது மறைந்து போன விக்கலை நினைத்தேன் அது தொலைந்து போய்விட்டது சாப்பிடவும் இல்லை வயிறோ குடித்த தண்ணிரை இறைத்து விட்டு வந்து படு என மூளைக்கு கதவை திறந்து விட்டிருந்தது வெளியே போகவே தூரத்தில் மணி கட்டிய மாடுகள் ஊரை சல்லடை போட்டு தேடுதலில் இறங்கிருக்கும்  போல நாய்கள் நன்றியை வீட்டுக்கும் பகையை எதிரிக்கும் செலுத்திக்கொண்டிருப்பதில் தெரியவந்தது விளக்கு எரிவதை கண்டால் இந்த நேரத்தில் யாரோ எதோ அலுவல்களை பார்க்கிறான் என்று உள்ளே வந்து விடுவார்கள் என்று எண்ணி கடனை இறைத்து விட்டு எதிர்வீட்டில் ஏதும் மணியோசை கேச்கிறதா என காதை  விட்டு பார்த்தேன் எந்த சத்தமும் இல்லை மெதுவாக  வந்து மெல்ல அந்த சிமிழி விளைக்கை அணைத்து விட்டு தூங்க ஆரம்பிக்கிறேன் . வயிற்றில் இருந்த புழுக்களோ வயிற்றில் உணவில்லாமல் ஊளை இடுவது எனக்கு மட்டும் தெரியவே அணைந்த விளக்கோ என் அகத்தில் எரிய தொடங்குகிறது .

2009 யுத்தம் முடிவடைக்கிறது ஆர்ப்பரித்த கடல் போல போர் ஊரை சாம்பலாக்கி உயிர்களை காவு வாங்கி உடமைகளை உருக்குலைத்து உள்ளங்களை ஊமையாக்கி அங்கங்களை  கடன் வாங்கி தின்று  முடிந்து இருந்த வேளையது மழை ஓய்ந்தாலும் தூவானம் ஓயாத நிலையாக எனது ஊரில் தளம்பலிலிருந்தது  எங்கள் ஊருக்கு எந்தன் வீட்டுக்கு முன் உள்ள வீட்டில்  ஒரு குடும்பம் வருகிறது இடம்பெயர்ந்து அதை வீடு எனபதை விட ஒரு கொட்டில் போல இருக்கும் இருக்கலாம் வசிக்க முடியாது 

வந்தவர்கள் இருவரும் வயது போனவர்கள் வந்ததும் வீட்டை துப்பரவு செய்து வாசல்களை கூட்டி சுத்தமாக வைத்திருந்தார்கள் அடுத்த நாள் காலையில் அந்த வீட்டு வாசல் முன் படலையில் ஒரு மணி கட்டி தொங்க விட்டிருந்தார்கள் நானோ சிறுவயது 2009  எனக்கு 8 வயது மூன்றாம் வகுப்பு பள்ளி விட்டு வரும் போது அந்த மணியை ஆட்டிவிட்டு ஓடிவிடுவது வழமை அந்த மணி சத்ததிற்கெல்லாம் அந்த ஆச்சி ஓடி வந்து பார்ப்பாவு நானும் அந்த மணி ஆடு மாடுகள் உள்ளே வராமல் தடுக்கவே அந்த மணிகள் கட்டியிருக்கிறார் என நாள் தோறும் பாடசாலை விட்டு வரும் போது போகும் போது தட்டி விட்டு ஒளிந்து கொள்வது வழமை ஒரு நாள் என்னை பிடிக்க மனிசி ரெடியாக அதே நேரத்தில் எனக்கு பின்னால் ஒளிந்திருக்கிறார் என்று எனக்கு தெரியாது நானும் மணியை ஆட்டிவிட்டு ஓட எத்தனிக்கும் போது கையும் களவுமாக பிடித்து விட்டார் என்னை.

அவர் வீட்டுக்குள் அழைத்து சென்றார் வாடா வடுவா உன்ற புடுக்கை இண்டைக்கு நான் வெட்டுற என்று சொல்லி இழுத்துக்கொண்டு போன அவ இரும் இவ்விடத்தில் இரும் என்றா நானும் உன்மையாகத்தான் அறுக்க போகிறாறோ என நினைத்து காற்சட்டை பைக்குள் இருந்து கையை எடுக்கல. அறுத்து விடுவாவோ என்ற பயத்தில 

 

தொடரும் ..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ள போனவ நிறைய இனிப்புக்களையும் டொபியையும் இன்னும் சில பிஸ்கட்களையும் தந்தார் இனி அந்த மணியை ஆட்டக்கூடாது சரியா. ம்ம் உனக்கு சொக்கா வேணுமென்றால் இங்க வா அப்பச்சியும்  நானும் தான் இருக்கிறம். இங்க எங்கட பிள்ளை ஒன்றை தேடி வந்திருக்கிறம் இங்க சரியா ம்ம் வாங்கின அத்தனை இனிப்பு பொருட்களையும் சந்தோஷத்தில வீட்டுக்கு எடுத்து வந்தால். அம்மாவோ உனக்கு ஏது இவ்வளவு பொருட்கள் என கேட்டு காதை திருக அந்த எதிர்வீட்டு ஆச்சியோ ஓடி வந்து  நடந்ததை சொல்ல மீண்டும் அம்மா காதை திருகினா.

அந்த இனிப்பை வாங்கியற்கு அல்ல அந்த மணியை இனி தட்டுவையா என்று கேட்டு இல்ல இல்ல என்று  நானும் கத்த. விடுங்க பிள்ள சின்ன பொடியந்தானே என்ன தெரிய போகிறது என்று அந்த ஆச்சி  சொல்ல அம்மா காதிலிருந்து கையை எடுத்தா அன்று ஆரம்பமாகிறாது அம்மாக்களின் நட்பு. 

நானும் அவர் வீட்டுக்கு அடிக்கடி  செல்வேன் அந்த நேரம் எல்லாம் அந்த வீட்டுக்கார ஆச்சியின் கணவரோ இருக்கமாட்டார். இந்த ஆச்சியோ யாரையோ நினைத்து அழுதுகொண்டிருக்கும் நான் வீட்டுக்குள் போகும் போது சேலையால் கண்களை துடைத்து விட்டு ஓடி வா ராசா என்ன சாப்பிட்டயா நானும் சாப்பிட்டாலும் இல்லையென்பேன் ஏதாவது கள்ள தீன் கிடைக்குமே என்ற எண்ணத்தில்  உடனே கொதிக்க கொதிக்க பிளேன் டீயும் கடிக்க எதாவது தந்துவிட்டு என்னை தடவிகொண்டிருக்கும் அந்த கைகள் .

ஏன் டா நாங்க செத்தா கொள்ளி போடுவையா ? அடுப்பிலதானே ஓம் போடுவன் சிரித்த கிளவி அடுப்புக்கு இல்லையடா எனக்கும் அவருக்கும்.  ஏன்ஆச்சி உங்களுக்கு பிள்ளைகள் இல்லையாகண்களில்   நீர் கரை தேடி ஓடுவதை போல நிலத்தில் விழ ஆரம்பக்கிறது அழாதீங்க அழாதீங்க என்றேன் நான். அவவோ  என்ற பிள்ளையை  பிடிச்சிட்டு போயிட்டாங்கடா பொலிஸ்காரங்க  அவனைத்  தேடித்தான் இந்த ஊருக்கு வந்தன் ரெண்டு பெண்   வேற நாட்டுக்கு போயிட்டாங்க எந்த நாட்டில் இருக்கிறாங்கள் எங்கு இருக்கிறாங்கள் என்று தெரியல. நானும் என்ற கடைசி மகனை தேடி தேடி ஊர் ஊராக திரியுறோம் இன்னும் அவன் கிடைக்கல என்று அழுது முடித்தார்

அந்த படலை மணி அவனுக்குத்தான் கட்டியது வெளியே போகும் அப்பச்சி அவனை கூட்டிக்கொண்டு வரமாட்டாரா? என்ற ஏக்கத்தில் அந்த மணியோசை காதில் கேட்க காத்திருப்பேன் என்றார் அன்றிலிருந்து அந்த மணியை நான் தட்டுவதும் கிடையாது யாரையும் தட்ட விட்டதும்  கிடையாது .

கவலைப்படாதீங்க ஆச்சி நான் இருக்கன், எங்க அம்மா இருக்காவு, அப்பா இருக்கிறார், என்ற அக்கா இருக்காவு இனி நீங்கள் எங்கவும் போக வேண்டாம் இந்த இந்த ஊரில் இருங்க எங்களோட  இருங்கள் நான் இருக்கிறன் சரியா அவர் கண்ணை துடைத்த என் கைகளை கொஞ்சி விடுகிறார் அப்பச்சியும் வருகிறார்.

என்ன அப்பச்சி அண்ணனை தேடுன நீங்களோ? ஓமடா உன்னைப்பத்தித்தான் மனிசி சொல்லிச்சி இண்டைக்குத்தான் பார்க்க முடிஞ்சிது.  என்ற அவர் சொக்கை திருகிவிட்டு உள்ளே சென்றார்  உள்ளே சென்ற அவர் மனிசியிடம் காதில் புறு புறுப்பது   எனக்கும் கேட்க மனிசியோ தேம்பி தேம்பி அழுவது எனக்கு சஞ்சலத்தை உண்டாக்க நாளை வருகிறேன் என நான் படலைக்கு கீழாக புகுந்து வெளியே வந்து விட்டேன் .

இப்படி நாள் தோறும் இருவரும் அடிக்கடி வீட்டை பூட்டிக்கொண்டுமனுக்கள் கொடுப்பது போட்டோவை காண்பித்தும் கேட்பதும் அவர்கள் நாளாந்த நடவடிக்கை ஆகிவிட்டது காலம் பதில் சொல்ல மறுத்தது !!!!

32452593_244747826289728_490025245429517

 இப்படி நாட்களும் வருடங்களும் கிழித்த கலண்டர்களும் வருடங்களை கணக்கிட்டது. இப்போ 2018 எனக்கு வயது 18 இருவரும் உள்ளே தினம் தினம் செத்து இருக்கிறார்கள் அவனை தேடி. கொடுக்காத கடிதங்கள் அல்ல பார்க்காத இடங்கள் இல்லை ஆனால் கொண்டு போனவர்களுக்கு மட்டுமே தெரியும் அவர்கள் என்ன ஆனார்கள் என்று.  மனிசியும்  என்னை அடிக்கடி கூப்பிட்டு என்னை மறந்திராதடா இல்லை ஆச்சி நான் மறக்க மாட்டன் என சொன்ன எனக்கு அடுத்த நாள் ஆச்சி படுக்கையிலே இறந்து போன செய்தி கேட்டு யாருக்குமே இந்த நிலை வரக்கூடாது இறைவா என இல்லாத கடவுளை வேண்டியவன் போல அந்த ஆச்சி  சொன்னது போலவே அவருக்கு  கொள்ளி வைக்க என்னைத்தான் கூப்பிட்டார்கள். அந்த அப்பச்சிக்கும் எங்கள்குடும்பத்துக்கும் இந்த செய்தியை தாங்க சக்தியில்லாமல் அங்கே கிடந்தோம் அழுதழுது.

ஒருவரை கொன்று விட்டால் நிம்மதியாக வாழ்ந்திடலாம் நினைப்போடு ஆனால் ஒருவரை கைதாக்கி கொண்டு போனவருக்கு   என்ன நடந்திருக்கும்! ஏது நடந்திருக்கும் ! என்று வாழ்வது  யாருக்கும் வரக்கூடாது என்ற நினைவுகள்  அந்த சிமிழி விளக்கின் ஒளியில்  அணைந்த நினைவுகள் அவை.

நாட்கள் கழிந்தன அப்பச்சியின் பெண் பிள்ளைகள் மட்டும் கன இடங்கள் தேடி கண்டு பிடித்து பேர பிள்ளைகளுடன் வரவே அப்பச்சியும் அளவிலா சந்தோஷத்தில் மகிழ்கிறார். ஒரு துன்பம் ஒரு இன்பம் இது வாழ்வியலின் பக்கம்.  அப்பச்சியும் தேடி   கொடுத்த அனைவரிடமும் அந்த வீட்டு முகவரியை மட்டும் என்னிடம் தந்து விட்டும் கடிதங்களோ  யாரும் தேடிக்கீடி வந்தாலோ என்னை தொடர்பு கொள்ளு மகன். என்று சொல்லி  கொள்ளி வைத்த கதையை மகள்களிடன் சொல்லி விட்டு அந்த நினைவுகளிலிருந்து நாடு விட்டு கடந்து சென்றுவிட்டார்.  நானோ அந்த படலை மணி சத்தம் கேட்காதோ ஆச்சியின் ஆத்தாமாவும் சாந்தி பெறாத என்ற நினைப்பில் தினம் தினம் படலையை நோக்கியவாறு பயணிக்கிறேன் .

யாவும் கற்பனை என்று சொல்ல முடியல     படங்கள் இணையத்தில் எடுத்தவை 

 

 

 

Link to comment
Share on other sites

சிறிய கதையாகினும் நல்லதொரு கதை.  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெற்றோர்களின் துயரம் கொடுமையானது. ஒவ்வொரு வேளை உண்ணும் போதும் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள் சாப்பிட்டு இருப்பார்களா என நினைத்து கவலைப்பட வைக்கும்.

தனி, எழுதும் போது முற்றுப் புள்ளிகள், கமா என்பனவற்றை அதற்கேற்ற இடங்களில் பயன்படுத்தலாமே. முற்றுப்புள்ளிகள் இல்லாமல் வாசிப்பது கொஞ்சம் கடினமாகவும் கதையின் ஆழத்தை உணர்வதற்கு இடைஞ்ச்சலாகவும் இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, தனிக்காட்டு ராஜா said:

வாடா வடுவா உன்ற புடுக்கை இண்டைக்கு நான் வெட்டுற என்று சொல்லி

நீண்ட நாளுக்குப் பின் கேட்கும் சம்பாசணை மிகவும் சிரிப்பாக இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

யாவும் கற்பனை ன்று சொல்ல முடியல     படங்கள் இணையத்தில் எடுத்தவை 

உண்மை தான் கற்பனை என்று கடந்து செல்ல முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/9/2018 at 8:21 PM, நிழலி said:

சிறிய கதையாகினும் நல்லதொரு கதை.  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெற்றோர்களின் துயரம் கொடுமையானது. ஒவ்வொரு வேளை உண்ணும் போதும் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள் சாப்பிட்டு இருப்பார்களா என நினைத்து கவலைப்பட வைக்கும்.

தனி, எழுதும் போது முற்றுப் புள்ளிகள், கமா என்பனவற்றை அதற்கேற்ற இடங்களில் பயன்படுத்தலாமே. முற்றுப்புள்ளிகள் இல்லாமல் வாசிப்பது கொஞ்சம் கடினமாகவும் கதையின் ஆழத்தை உணர்வதற்கு இடைஞ்ச்சலாகவும் இருக்கு.

நன்றி சில எண்ணங்களை கதையாக்க நினைக்கும் போது முற்றுப்புள்ளி கமாக்களை மறந்து அதை எழுதிவிட தோன்றும் அந்த நினைப்பில் அவைகளை மறந்து விடுகிறேன் இனி எதாவது எழுத நினைக்கையில் சரி பார்க்கிறேன் 

கருத்துக்கும் நன்றி இழந்தவர்களின் சோகங்களை சொல்ல  வார்த்தைகள் இல்லை 

On 8/9/2018 at 9:13 PM, ஈழப்பிரியன் said:

நீண்ட நாளுக்குப் பின் கேட்கும் சம்பாசணை மிகவும் சிரிப்பாக இருந்தது.

கிழக்கில் பேச்சு வழக்கில் இருக்கும் சிறு குழந்தைகளிடம் பெரியவர்கள் அன்பாக பேசிக்கொள்வது தான் இந்த சம்பாசணை 

 

On 8/9/2018 at 9:21 PM, ஈழப்பிரியன் said:

உண்மை தான் கற்பனை என்று கடந்து செல்ல முடியவில்லை.

ம்ம் நிட்சயமாக உண்மைதான் அண்ணை கருத்துக்கு மிக்க நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறப்பைவிட காணாமல் போவது மிகவும் கொடுமையானது. நம்பிக்கையும் அவநம்பிக்கையும் மாறிமாறி வாழ்வை அலைக்கழிக்கும். 

சிறிய கதை ஆனாலும் நடப்பில் உள்ள அனுபவம் இப்படித்தான் காணாமல் போனவர்கள் பலரின் உறவுகளுக்கு உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/11/2018 at 7:47 PM, கிருபன் said:

இறப்பைவிட காணாமல் போவது மிகவும் கொடுமையானது. நம்பிக்கையும் அவநம்பிக்கையும் மாறிமாறி வாழ்வை அலைக்கழிக்கும். 

சிறிய கதை ஆனாலும் நடப்பில் உள்ள அனுபவம் இப்படித்தான் காணாமல் போனவர்கள் பலரின் உறவுகளுக்கு உள்ளது.

ஓம் ஓம் பல ஆயிரம் பேர் இருக்கிறார்கள் மனதில் இறக்கிவைக்க முடியாத மனபாரத்தில் கிருபன் tw_cold_sweat:

நன்றி கருத்துக்கு 

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

தனி படலையில் அடித்த மணி எம் மனங்களை கனக்க வைத்து விட்டது. இழப்பு என்பது எவராலும் ஏற்றுக்கொள்ள கஸ்ரமாக இருந்தாலும் நாளடைவில் மனம் ஏற்றுக்கொள்ளப் பழகி விடும். ஆனால் இப்படி வாழ்வா சாவா என்ற போராட்டத்துடன் வாழ்வது மிகவும் சிரமமான ஒன்று. இன்னும் எத்தனை ஆயிரம் உறவுகள் இப்படியான போராட்டத்துடன் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். நல்லதொரு ஆக்கம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் கற்பனையானால் என்ன, இது போன்ற பல நிஜங்கள் எம் மனங்களை ஈரம் வற்றிய கல்லாக மாற்றி விட்டன.மனம் கனத்து நிக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள் தனி....! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/14/2018 at 4:55 AM, Kavallur Kanmani said:

தனி படலையில் அடித்த மணி எம் மனங்களை கனக்க வைத்து விட்டது. இழப்பு என்பது எவராலும் ஏற்றுக்கொள்ள கஸ்ரமாக இருந்தாலும் நாளடைவில் மனம் ஏற்றுக்கொள்ளப் பழகி விடும். ஆனால் இப்படி வாழ்வா சாவா என்ற போராட்டத்துடன் வாழ்வது மிகவும் சிரமமான ஒன்று. இன்னும் எத்தனை ஆயிரம் உறவுகள் இப்படியான போராட்டத்துடன் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். நல்லதொரு ஆக்கம்

நன்றி கண்மணி அக்கா 

 

19 hours ago, suvy said:

இதில் கற்பனையானால் என்ன, இது போன்ற பல நிஜங்கள் எம் மனங்களை ஈரம் வற்றிய கல்லாக மாற்றி விட்டன.மனம் கனத்து நிக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள் தனி....! 

நன்றி சுவி அண்ணன் மீண்டும் உங்களை நிரந்தரமாக ஊரில் இருக்க காணவும் ஆசை 

கல்லாகிறது மனது சில சம்பவங்களால் சாம்பலும் ஆகிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனம் கனத்துப் போனது உங்கள் கதைவாசித்து. இறந்துவிட்டால் ஒரு துன்பம். இருக்கிறாரா இல்லையா என்று தெரியாமல் இருப்பது கொடுமையினுச்சம். இன்னும் எத்தனை பேர்கள் இப்படி????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/22/2018 at 2:04 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மனம் கனத்துப் போனது உங்கள் கதைவாசித்து. இறந்துவிட்டால் ஒரு துன்பம். இருக்கிறாரா இல்லையா என்று தெரியாமல் இருப்பது கொடுமையினுச்சம். இன்னும் எத்தனை பேர்கள் இப்படி????

அது யாரும் அறியார் ........................

நன்றி கருத்துக்கு சுமேரி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம்   ஆனால் படம். இலக்கம்  சின்னம்   கட்சி பெயர்   என்பன  வெவ்வேறு  .....இதில் ஒருவர் நன்கு அறியப்பட்டவர்.    அவருக்கு அவ்வளவு பதிப்பு இல்லை.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • இந்தியாவின் விருப்பத்தின்படி யுத்த நிறுத்ததிற்கு இணங்குங்கள் அல்லது இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் - போராளிகளை எச்சரித்த ப சிதம்பரம் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கான யோசனைகளை பரிசீலிக்க  ஏற்றுக்கொள்வதென்று முடிவெடுத்தனர்.  ஆனால், இந்தியாவின் வெளியுறவுத்துறை அதனுடன் மட்டுமே நின்றுவிடவில்லை. எம்.ஜி.ஆர் உடன் தொடர்புகொண்டு, அவர் பங்கிற்கும் போராளித் தலைவர்கள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தது. ஆகவே, போராளித் தலைவர்களுடன் பேசுவதற்காக தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், 1983 ஆம் ஆண்டு ஆடி இனக்கொலை குறித்து ஐ.நா வில் இந்திரா பேசும்போது உடனிருந்தவருமான பண்ருட்டி ராமச்சந்திரனை எம்.ஜி.ஆர் அனுப்பிவைத்தார். போராளித் தலைவர்களுடன் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்," சமாதானத்திற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.    ரஜீவுடன் சிதம்பரம்  பின்னர், இந்திய உள்நாட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான ப சிதம்பரத்தைப் போராளித் தலைவர்களுடன் பேசுவதற்கு ரஜீவ் காந்தி அனுப்பி வைத்தார். சிதம்பரத்துடனான போராளித் தலைவர்களின் கூட்டத்தினை ரோ ஒழுங்குசெய்திருந்தது. சென்னையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புலிகள் சார்பாக பிரபாகரன், பாலசிங்கம் ஆகியோரும், டெலோ சார்பில் சிறீசபாரட்ணம், மதி ஆகியோரும், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் பத்மநாபா, வரதராஜப்பெருமாள், ரமேஷ் ஆகியோரும், ஈரோஸ் சார்பில் பாலக்குமார், சங்கர் ராஜி மற்றும் முகிலன் ஆகியோரும் கலந்துகொண்டனர். போராளித் தலைவர்களுடன் பேசிய சிதம்பரம், தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வொன்றினைக் காண்பதில் ரஜீவ் காந்தி உறுதியாக இருப்பதாகக் கூறினார். தமிழர்கள் தமது நலன்களைக் காத்துக்கொள்ள ரஜீவ் காந்தி மீது நம்பிக்கை வைக்கலாம் என்றும் அவர் கூறினார். போராளிகளுடன் நேரடியாகப் பேசுவதற்கு ஜெயவர்த்தனவை சம்மதிக்க வைத்திருக்கிறார் ரஜீவ் என்றும், இதன் மூலம் போராளிகளுக்கு அங்கீகாரமும், மதிப்பும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் சிதம்பரம் மேலும் கூறினார். ஆகவே, இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதற்கு போராளித் தலைவர்கள் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும். பேச்சுக்கள் ஆரம்பிப்பதற்கு யுத்தநிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்தியா யுத்த நிறுத்தத்திற்கான யோசனையினை முன்வைத்திருக்கிறது, ஆகவே போராளி அமைப்புக்கள் அனைத்தும் அதனை ஏற்றுக்கொண்டு ஒழுக வேண்டும் என்று சிதம்பரம் கூறினார். பின்னர் போராளித் தலைவர்களை நோக்கி அச்சுருத்தும் தொனியில் இப்படிக் கூறினார் சிதம்பரம், " யுத்த நிறுத்தத்திற்கு நீங்கள் சம்மதித்தால் நீங்கள் தொடர்ந்தும் இந்தியாவில் இருக்கலாம், இல்லையென்றால், இப்போதே வெளியேறி விடவேண்டும்". சிதம்பரத்தின் எச்சரிக்கையினைக் கேட்ட போராளித் தலைவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். பிரபாகரன் பாலசிங்கத்தை நோக்கித் தனது முகத்தினைத் திருப்ப, பாலசிங்கம் சிதம்பரத்தைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார், " நாம் இதுகுறித்து எமக்குள் பேசி முடிவெடுக்க வேண்டும். அப்படிக் கலந்தாலோசித்த பின்னர் எமது முடிவினை உங்களுக்கு நாம் அறியத் தருவோம்".  "நீங்கள் எடுக்கப்போகும் முடிவு நல்ல முடிவாக இருக்கட்டும்" என்று கூறிவிட்டு எழுந்து சென்றார் சிதம்பரம். சிதம்பரத்தினுடனான சந்திப்பினையடுத்து உடனடியாக போராளித் தலைவர்கள் தமக்குள் சந்திப்பொன்றினை நடத்தினர். அச்சந்திப்பில் எவரும் எதிர்பாராத வகையில் பத்மநாபா, "நாம் யுத்த நிறுத்தத்தை முற்றாக ஏற்றுக்கொள்கிறோம்" என்று அறிவிக்கவும், பிரபாகரனும், சிறீசபாரட்ணமும் அதிர்ந்து போனார்கள். அங்கு பேசிய பாலசிங்கம், "எமது இறுதிச் சந்திப்பில் கூட்டாக நாம் முடிவெடுக்க இணங்கிவிட்டு, இப்போது உங்கள் பாட்டில் வேறு எதனையோ கூறுகிறீர்களே?" என்று கேட்டார். பத்மாநாபா பேசுவதற்கு முன் அவர் சார்பாக சங்கர் ராஜி பாலசிங்கத்திற்குப் பதிலளித்தார். "நாங்களும் அதேபோன்றதொரு முடிவினையே எடுத்திருக்கிறோம். எம்மை அனைத்தையும் மூடிக் கட்டிக்கொண்டு வெளியேறுமாறு கூறுகிறார்கள். இலங்கைக்குச் சென்று நாம் என்ன செய்வது?" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கேட்டார் சங்கர் ராஜி. அப்படிக் கேட்கும்போது கேவலமான வார்த்தைப் பிரயோகத்தையும் சங்கர் ராஜி மேற்கொண்டார். பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தின் முன்னாள்த் தலைவர் யாசீர் அரபாத்துடன் ஈரோஸின் சங்கர் ராஜீ சங்கர் ராஜியின் வார்த்தைத் துஷ்பிரயோகத்தினையடுத்து கோபமடைந்த பாலசிங்கம் அதனைக் கடிந்துகொள்ள, இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இத்தர்க்கங்களின்போது பாலசிங்கம் ரோ பற்றியும் குறிப்பிட்டார். இது அன்று நடைபெற்ற வாக்குவாதத்தினை மேலும் தீவிரமாக்கியது. வாக்குவாதத்தினை நிறுத்த பிரபாகரன் முயன்றார், "அண்ணை, தயவுசெய்து நிப்பாட்டுங்கோ" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கூறினார். "அண்ணை சார்பாக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நாங்கள் இங்கே தர்க்கிக்க வரவில்லை. முன்னணி யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாக முடிவெடுத்தால், நானும் அதனை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதனை உடனடியாக நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. நாம் அப்படிச் செய்தால் எம்மை எவரும் மதிக்கப்போவதில்லை. ஒரு தாய் தனது பிள்ளையை அதட்டி சோறூட்டும் வரையில் அப்பிள்ளை உட்கொள்வதில்லை. சிறிதுகாலத்திற்கு யுத்தநிறுத்ததை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறிவிட்டு இறுதியாக ஏற்றுக்கொள்ளலாம்" என்று அவர் கூறினார். பின்னர் யுத்த நிறுத்தத்தை எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான தனது காரணங்களை முன்வைத்தார் பிரபாகரன்,  1. யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்குப் பாதகமாக அமையலாம். யுத்த நிறுத்தத்தை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவின் அனுதாபத்தினையும், ஆதரவையும் இழக்க வேண்டி வரும். அப்படி நடக்கும் பட்சத்தில் ஜெயவர்த்தனவே வெற்றி பெறுவார். நாம் அதனை அனுமதிக்க முடியாது.  2. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் சர்வதேசத்தின் ஆதரவினை இழக்கும்.  3. போராளிகள் பயங்கரவாதத்தின் மீது காதல் கொண்டவர்கள் என்கிற அவப்பெயர் ஏற்படுத்தப்படும். அதன்பின்னர் சர்வதேசம் எம்மை சுதந்திர விடுதலைப் போராளிகள் என்று பார்ப்பதை நிறுத்திவிடும்.  4. தன்னையொரு சமாதான விரும்பி என்று சர்வதேசத்திற்குக் காட்ட முயலும் ஜெயவர்த்தன தனது முயற்சியில் வெற்றி பெறுவார். யுத்த நிறுத்ததினை ஏற்றுக்கொள்வதற்கான இன்னொரு காரணத்தையும் பிரபாகரன் முன்வைத்தார். அதுவரை காலமும், "பொடியள் சண்டை பிடிப்பார்கள், கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடும்" என்று தமிழ் மக்கள் கருதிவந்த நிலையினை மாற்றுவதற்கான சந்தர்ப்பமாகவும் இதனைப் பாவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதேவிதமான கருத்தினையே அக்காலத்தில் டிக் ஷிட்டும் தொண்டைமானும் என்னிடம் கூறியிருந்தார்கள். போராளி அமைப்புக்கள் போரிடட்டும், அனுபவம் நிறைந்த கூட்டணியின் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடட்டும் என்று அவர்கள் கூறினார்கள். டிக் ஷிட் என்னிடம் பேசும்போது, " அரசியல் அமைப்பில் பாவிக்கப்படும் சூட்சுமம் நிறைந்த, சிக்கலான, சட்ட ரீதியான வார்த்தைப் பிரயோகங்களை புரிந்துகொண்டு பேசும் அறிவோ, திறமையோ போராளிகளிடம் இருக்கப்போவதில்லை" என்று கூறினார். பிரபாகரன் மேலும் பேசும்போது, தமிழர்களை வீழ்த்த ஜெயவர்த்தன வைத்த சமாதானப் பொறியிலேயே அவரை வீழ்த்த வேண்டும் என்று கூறினார். ஆகவே, யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதற்கு சில நிபந்தனைகளை நாம் முன்வைக்க வேண்டும் என்று அவர் கூறினார். தாம் முன்வைக்கும் நிபந்தனைகள், தான் வைத்த பொறியிலேயே ஜெயாரை வீழ்த்துவதாக அமையவேண்டும் என்றும் அவர் கூறினார். "யுத்த நிறுத்தக் காலத்தில் இராணுவம் முகாம்களை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலையினை முதலில் நாம் ஏற்படுத்த வேண்டும். அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, நாம் எமது போராளிகளை ஒவ்வொரு முகாமைச் சுற்றியும் நிலைவைக்க வேண்டும். சிலவேளை யுத்த நிறுத்தம் முறிவடைந்தால், இராணுவத்தினர் தமது முகாம்களுக்குள் இருந்து வெளியே வருவதை இதன்மூலம் நாம் தடுத்துவிடலாம்"   என்கிற  பிரபாகரனின் யோசனையினை ஏனைய தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். பிரபாகரனின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை நான் 1985 வைகாசியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது கண்டேன். யாழ்ப்பாணக் கோட்டைக்கும், நாவட்குழி முகாமிற்கும் நான் சென்றேன். கிட்டுவே நடவடிக்கைகளுப் பொறுப்பாகவிருந்தார். நான்கு போராளி அமைப்புக்களைச் சேர்ந்த போராளிகள் முகாம்களைச் சூழ காவலிருப்பதை நான் கண்டேன். "இராணுவத்தினர் வெளியே வந்தால், அவர்களை சிதறடிப்போம்" என்று அவர்கள் கூறினார்கள்.   போராளிகளால் சூழப்பட்டிருந்த இந்த முகாம்களுக்கு உலங்குவானூர்திகளூடாக உணவுப்பொருட்களும் ஏனைய பொருட்களும் கொண்டுவந்து இறக்கப்படுவதை நான் கண்டேன். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருக்கும் ஏனைய முகாம்களின் நிலையும் இதுதான் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது.  அதன்பின்னர் யுத்தநிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதற்காக தாம் முன்வைக்கவிருக்கும் நிபந்தனைகள் குறித்துப் போராளித் தலைவர்கள் கலந்தாலோசித்தார்கள். ஆறு விடயங்கள் குறித்து அவர்கள் பேசினார்கள். 1. இராணுவம் தமது முகாம்களுக்குப் பின்வாங்கிச் செல்ல வேண்டும். 2. வாகனப் போக்குவரத்தின் மேல் இருக்கும் தடைகள் நீக்கப்பட வேண்டும். 3. அவசரகாலச் சட்டமும், ஊரடங்கு உத்தரவும் மீளப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். 4. கடற்கண்காணிப்பும், தடைசெய்யப்பட்ட வலயங்களும் அகற்றப்பட வேண்டும். 5. அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும். 6. அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். தமது கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள்ப்படுமிடத்து, தாம் 12 வார கால யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதாக இந்தியாவிடம் போராளித் தலைவர்கள் அறிவித்தனர். மேலும், இந்த 12 வார காலத்திற்குள் தமிழர்களுக்கு தான் லொடுக்கப்போவதாகக் கூறும் தீர்வினை இலங்கையரசாங்கம் போராளிகளின் பரிசீலினைக்காக முன்வைக்க வேண்டும் என்றும் கோரினர். அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு தமக்குத் திருப்தி தராத பட்சத்து, தாம் பேச்சுக்களில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவிப்பது என்று அவர்கள் முடிவெடுத்தனர். மேலும், யுத்த நிறுத்தத்தினை மேலும் நீடிப்பதில்லையென்றும், 12 வாரகால யுத்த நிறுத்தம் முடிவிற்கு வரும்வேளை தமிழ் மக்களின் விடுதலைக்கான தமது போராட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதென்றும் அவர்கள் முடிவெடுத்தனர். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தமது ஒருமித்த முடிவினை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சிடம் அறிவித்தனர். இதனையடுத்து, பாலசிங்கத்திடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட சந்திரசேகரன், தனது கடுமையான அதிருப்தியினைத் தெரிவித்தார். ஆனால், இந்த விடயம் செய்தி ஊடகங்களுக்குக் கசிந்ததோடு, பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இதேவேளை, யுத்த நிறுத்தத்திற்கான இந்தியாவின் ஆலோசனைகளையும், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான கால அட்டவணையினையும் கொழும்பிற்குத் தெரிவிப்பதற்காக பண்டாரி கொழும்பு நோக்கிப் பயணமானார். 
    • வாக்கு இயந்திரத்தைப் பற்றி சீமான் மட்டுமல்ல வேறுபல ஆய்வாளர்களும் பத்திரிகையாளர்களும் தான் எப்போதிருந்தோ சொல்கிறார்கள். அமெரிக்காவான அமெரிக்காவிலேயே பேப்பரில் புள்ளடியிட்டு ஸ்கானரில் போட்டு சரி என்றபின் தான் அந்த இடத்தை விட்டு விலகுவோம். இந்தியாவிலுள்ள வாக்கு இயந்திரத்தில் அரசு வெல்லக் கூடாது என்பவர்களின் அடையாளங்களை தெளிவில்லாமல் வைக்கிறது நீங்கள் அழுத்தும் வாக்கு யாருக்குப் போகுது என்றே தெரியாது. பல இடங்களில் தொழில் நுட்ப பிரச்சனை என்கிறார்கள். இப்படி பல்வேறு பிரச்சனைகள் உள்ளதாக சொல்கிறார்கள்.
    • மனசை தளரவிட வேண்டாம் என அவருக்கு சொல்லவும்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.