Jump to content

ஈழப் போராட்டம் தொடர்பில் கருணாநிதி செய்தது என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப் போராட்டம் தொடர்பில் கருணாநிதி செய்தது என்ன?

on: August 08, 2018
ஈழப் போராட்டம் தொடர்பில் கருணாநிதி செய்தது என்ன?

ஈழப் போராட்டத்தில் கருணாநிதியின் பாத்திரம் துரோகத்துடன் தொடங்கி துரோகத்துடனேயே முடியப் போகிறது. தமிழகத்தில் போராளி இயக்கங்கள் தம்மை தயார்படுத்திக் கொண்டிருந்த காலம் அது.

இந்திய உளவுத்துறை இயக்கங்களை பிரித்து வைத்து கையாள சதிகளை முடுக்கி விட்டிருந்த போதும் அதற்குப் பலியாகாமல் இயக்கங்கள் ஓரளவு கருத்துடன்பாடுடன் இயங்கிய காலம் அது.

அந்த நேரத்தில் அப்போதைய தமிழக முதல்வர் எம்ஜிஆர் போராளி இயக்கங்களின் ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் நோக்கிலும் அவர்களுக்கு பொருளாதார உதவி வழங்கவும் ஒருமித்து எல்லோரும் தன்னை சந்திக்குமாறு ஒரு திகதியைக் குறிப்பிட்டு பகிரங்க அறிவித்தலை விடுக்கிறார்.

இந்திய புலனாய்வுத்துறை விழித்துக் கொள்கிறது. கருணாநிதியின் கபட சுயநல அரசியல் உணர்வை அவர்கள் தூண்டிவிட்டதன் விளைவாக எம்ஜிஆர் குறிப்பிட்ட நாளுக்கு முன்பாக தன்னைச் சந்திக்குமாறு இயக்கங்களுக்கு ஊடகங்கள் வழி கருணாநிதி கோரிக்கை விடுக்கிறார். போராளி இயக்கங்களுக்குள் குழப்பம். கருத்து மோதல்.

தலைவர் பிரபாகரன் கருணாநிதி வழியாக இயக்கங்களைப் பிளவு படுத்தும் இந்திய புலனாய்வுத் துறையின் சதியை உணர்ந்து எம்ஜிஆர் அவர்களைச் சந்தித்தபின் பின்பொரு நாளில் கருணாநிதியை சந்திப்பதுதான் சரியானது என்பதை வலியுறுத்துகிறார்.

ஏற்கனவே இந்திய சதிக்குள் மெல்ல மெல்ல தம்மை பலியாக்கிக் கொண்டிருந்த இயக்கங்களால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை.

விளைவு , மெல்ல மெல்ல துளிர் விடத் தொடங்கியிருந்த இயக்கங்களுக்கிடையேயான முரண்பாடு இதையொட்டி ஒரு கொதிநிலைக்கு சென்று ஒரு யுத்தமாக வெடிக்கிறது. இது வரலாறு.

இதன் வழி கருணாநிதி எந்த சகோதர யுத்தத்திற்கு தூபமிட்டு வளர்த்து விட்டாரோ பின்னாளில் அவரே புலிகள் மீது அதைப் பாரிய குற்றமாகத் திருப்பவும் தவறவில்லை.

அதன் பின் தமிழக – இந்திய அளவில் தொடர்ந்த ஒவ்வொரு நுட்பமான துரோகத்தின் பின்னும் அவர் இருந்தார். என்ன வேதனையென்றால் அவர் மரணப்படுக்கையில் சுய நினைவிழந்து கிடக்கும் போதும் அவரைக் குறியீடாக்கி ஈழப் போராட்டம் மீதான துரோகம் கட்டியெழுப்பப்படுவதுதான்.

பிராந்திய புவிசார் அரசியல் சார்ந்து தமிழகத்திலிருந்து “தமிழீழத்தை” முற்றாக நீக்கம் செய்ய வேண்டிய இக்கட்டில் இந்திய புலனாய்வுத் துறை இருக்கிறது.

அதன் ஒரு பகுதியாகவே ஜெயலலிதா “கொல்ல” ப்பட்டார். தமிழகத் தமிழர்களையும் தமிழீழத் தமிழர்களையும் எதிரெதிர் துருவங்களாக நிறுத்துவதனூடாகவே அதைச் சாதிக்க முடியும் என்பது வெளிப்படை.

அதுதான் இன்று கருணாநிதி யின் உடலை வைத்து அவருக்கு வெள்ளையடிக்க நுட்பமாக இறக்கி விடப்பட்டிருக்கும் கட்சி தலைவர்கள், அறிவுஜீவிகள், ஊடகவியலாளர்கள் என்ற போர்வையிலுள்ள இந்திய லொபி குழாம். அது இந்திய ஆளும் வர்க்கத்திற்கு கணிசமான வெற்றியாக குவிந்து கொண்டிருக்கிறது.

சாதாரண தமிழக மக்களும், தமிழீழ மக்களும் இதைப் புரிந்து கொண்டு செயற்பட்டாலொழிய இந்தப் பிளவு தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கும்.

முடிவாக தமிழீழ வரலாற்றைப் பொருத்தவரை,கருணாநிதி “செத்தும் கெடுத்தார்” என்பதாகவே இருக்கும் என்பதையே இன்றைய நிகழ்வுகள் எடுத்தியம்புகின்றன.

இதை வரலாற்று பொய்களாலும், புனைவுகளாலும், வாதிடும் தர்க்கங்களினாலும் தற்போது தற்காலிகமாக மறைக்கலாம். ஆனால் உண்மையான வரலாற்றின் மீது யாரும் இருளைப் பாய்ச்ச முடியாது.

ஓசோவின் புகழ் பெற்ற வாசகம் இது, “தர்க்கம் மிகச் சிறியது, ஆனால் உண்மை அதை விடப் பெரியது. எந்தப் பெரிய தர்க்கத்தினாலும் ஒரு சிறிய உண்மையைக் கூட உங்களால் மூட முடியாது”

தமிழ் தமிழ் என்று முழங்கும் கருணாநிதி மருந்து வாங்க வந்த போராளிகளையும் கைது செய்து பணத்தையும் ஆட்டையப் போட்டதை மனவருத்ததுடன் குறிப்பிட்டு அதை மீட்டுத் தருமாறு நெடுமாறன் ஐயாவிற்கு தலைவர் எழுதிய கடிதம் இது..

கருணாநிதி மீது இப்போது எமக்கு எந்த கோபமும் இல்லை. ஆனால் வரலாற்றில் அவருக்கான இடத்தைச் சரியாகப் பதிவு செய்ய வேண்டும். ஏனெனில் நீதி வேண்டி நிற்கும் எமக்கு அது முக்கியம்.

http://www.theevakam.com/2018/08/08/ஈழப்-போராட்டம்-தொடர்பில்/

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.