Jump to content

தி தின் ரெட் லைன் - சினிமா ஒரு பார்வை


Recommended Posts

c

 

the thin red line

நிஜமாகவே ஒரு போரை நேரில் கண்டது போல உணர்ந்தேன்.

எதுவெல்லாம் வாழ்வென்று நினைக்கின்றோமோ அதற்கு எதிர் திசையில் நின்று ஒரு நிழலைப் போல தொடர்ந்து கொண்டிருக்கிறது வாழ்வின் எதிர் முனை. வேட்டை சமூகத்தின் ஆழ்மனம் இன்னமும் துப்பாக்கி தூக்கிக் கொண்டு வெறி பிடித்து அலைகிறது. தோட்டாக்களின் கணக்கும் எதிரிகளின் கணக்கும் சமன்செய்யும் ராட்சச  சமன்பாடுகளை போர் என்று சொல்லி நாமே வளர்த்தெடுப்பது நிச்சம் சர்வ நாசத்துக்கான இன்னொரு முயற்சி.

எத்தனை வீரம் பேசினாலும்.. துப்பாக்கியின் தோட்டா இடம் மாறி விட்டால் உயிர் போகும் படபடப்பு சொல்லி மாளாது. 

படத்தில்... ஆஸ்டென் மலை அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்கு அமெரிக்க ராணுவ C கம்பனி முன்னேறி செல்கிறது. ஒவ்வொரு அடிக்கும் ஒவ்வொரு புல்லட் வந்து வந்து பாய்கிறது. கொத்து கொத்தாய் அமெரிக்க வீரர்கள் செத்து விழுகிறார்கள். யாரெல்லாம் கதை நாயகன் போல தோன்றுகிறானோ அவனெல்லாம் அடுத்த நொடி எவ்வித  தனித்த ஷாட்களும் இன்றி குண்டடி பட்டு சரிகிறான். பார்க்க பார்க்க அமெரிக்கா பக்கம் பரிதாபம் ஏற்படும் காட்சி சடுதியில் மாறும் போது ஜப்பான் பரிதாபமாக மண்டியிட்டு அமர்கிறது. போரின் நயவஞ்சகமே இதுதான். ஒரு கை ஓங்குகையில் சரிந்த கையில் மானுடம் வீழ்ந்து கொண்டிருக்கும். மண்டியிட்ட வெற்றியின் கோப்பையில் யார் வேண்டுமானாலும் மூத்திரம் அடிக்கலாம்.

ஒரு கட்டத்தில் தலைமைக்கும் கேப்டனுக்கும் வாக்குவாதம் முற்றுகிறது. தலைமை இன்னும் முன்னேற சொல்கிறது. வெற்றி வேண்டும் பிசாசு மனம் அத்தனை சீக்கிரத்தில் சமாதானம் அடையாது. அது எட்டு திசைகளிலும் நா நீட்டி குருதி குடிக்கும். கேப்டன், "ஏற்கனவே நிறைய பேர் செத்து விட்டார்கள். இனியும் முன்னேறினால் அது தற்கொலைக்கு சமம்" என்று வாதிடுகிறான். அவன் பேச பேச, அவனருகே என்ன பேசுகிறார்கள்... பேச்சின் முடிவு என்னவாக இருக்கும் என்று உள்ளே பயந்து கொண்டு  கண்களால் ஆராய்ந்து கொண்டு நிற்கும் சக வீரர்கள்.... சிறுபிள்ளையின் தோல்வி சாயல்கள். ஒரு கட்டத்தில் முற்றிய மனநிலையில் 7 பேரைக் கூட்டிக் கொண்டு முன்னேறுகிறான் கேப்டன். க்ளைமாக்ஸ் சண்டையைப் போல அப்படி ஒரு யுத்தம். துப்பாக்கிகள் வெடித்துக் கொண்டேயிருக்கின்றன. புற்கள் கருகுகின்றன. புகை மண்டலம் பரவுகின்றது. மனிதர்கள்  நொடிக்கு நொடி வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே முள்ளாய் நகர்கிறார்கள். பார்க்க பார்க்கவே மூன்றாம் உலகப்போரின் கோர முகம் நமக்குள் வந்து வந்து போகிறது.

மேலே சென்றால் ஜப்பானிய ராணுவப் படை பதுங்கு குழிக்குள் பத்திரமாக நின்று கொண்டு நொடிக்கு பல தோட்டாக்கள் சிதறும் 5 துப்பாக்கிகளை நிறுத்தி வைத்து ஜம்மென்று அடித்து நொறுக்குவதைக் காண முடிகிறது. தட்டு தடுமாறி உயிர் போய் உயிர் கொண்டு மேலே சென்ற அமெரிக்க படை... கொலை வெறியோடு 

சுற்றி வளைக்கிறது. மாட்டிக் கொண்ட பின், துப்பாக்கி பிடுங்கப் பட்ட பின்........ இருந்த தைரியமும்....... இருந்த ஆவேசமும் பயமாக மாறி... நடுங்குகிறது. குத்த வைத்து அமர்ந்து கொண்டு, ஆடையின்றி அமர்ந்து கொண்டு, தியானம் செய்து கொண்டு, சரணாகதி ஆகிக் கொண்டு, மண்டியிட்டு பரிதாபமாக ஜப்பானிய வீரர்கள் இருக்கும் காட்சி பதற வைக்கிறது. பொதுவாகவே எதிரி படையிடம்  மாட்டிக் கொண்ட வீரர்கள் நிலை காண சகியாதது. பொறுத்து, விளையாடி கொல்வது வெற்றி கொண்ட படையின் பொழுது போக்கு. வக்கிர வடிகால். வஞ்சம் தீர்க்கும் முறை. பார்வையில் சுய கழிவிரக்கத்தோடு நகரும் காட்சிகள்......போர்க்களத்தின் முகமூடியை உரித்து போடுகிறது. நிஜ முகத்தில் வழியும் குருதியில் அரசியல் புழுக்கள்.

"இந்த நாடு வெற்றி வாகை சூடி விட்டது. அந்த நாடு அப்படி போரிட்டு வெற்றி கொண்டது", என்றெல்லாம் வரலாறு பேசுவதை நான் மறுபரிசீலனை செய்கிறேன். ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னும், முன்னால் நின்று போரிடும் வீரர்களின் மன உளைச்சலும்... தடுமாற்றவும்.. வெறி கொண்ட மனமாற்றமும்... வேறு வழியில்லாத இயலாமையும் இருக்கிறது. தோற்றுப் போன படைகளின் பின்னால் குமுறி அழுகும்... தசை நார்களின் சொத சொதத்த குடும்ப வாழ்வியலின் ரத்த நாளங்கள் வெடிக்கின்றன.

சண்டையிட்ட ஒவ்வொரு இடைவெளியின் போதும்... வீட்டு ஞாபகமும், மனைவி நினைவும், காதலியின் பிரிவும், அம்மா பாசமும், பர்ஸுக்குள் இருக்கும் ஏதோ ஒரு கருப்பு வெள்ளை புகைப்படம் காலத்தை நிறுத்தி கேள்வி கேட்கிறது. கசிந்து விட்ட வீரத்தின் பின்னால் கதவு பிடித்துக் கொண்டு எட்டிப் பார்க்கும் அன்பின் சுவடுகளைக் காண முடிகிறது. எதற்கு இத்தனை ஆயுதம்....?  எதற்கு இத்தனை போர்.....! எதற்கு இத்தனை குரூரம்....

யோசிக்க யோசிக்க பற்றிக் கொண்டு எரிகிறது பச்சைக்காடுகளின் வயிறு.

இந்த இயற்கை மிக குரூரமானது என்று ஒரு வசனம் கூட இடையே வருகிறது. ஆம்... இந்த மனிதர்கள் கூட தான் என்று இயற்கையும் மார் தட்டும். ஒரு ராணுவ வீர கதா பாத்திரத்தின் மனைவி ஒரு கட்டத்தில் இன்னொருவருடன் காதல் வந்தது குறித்தும்.......தனிமை தன்னை காவு வாங்கி விட்டது....என்றும்..... உன்னிடமிருந்து  விவாகரத்து வேண்டும்....... என்னை விடுவித்து எனக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் கடிதம் வருகிறது. படித்து விட்டு என்ன எதிர் வினை புரிவதென்று தெரியாமல் சோர்ந்து சிரிக்கும் அந்த வீரனைப் பார்க்கவே பயமாக இருந்தது. ஒவ்வொரு போர் வீரனின் மனநிலையும் கணிக்க முடியாதவை. அது எப்போது எதை செய்யும் என்று கணிக்க முடியாத அழுத்தங்களால் சூழ்ந்திருக்கிறது. எல்லாம் அறிந்த தவிப்புகளின் வசமே இருக்கிறது அவை. இடையே மனநலம் பிறழ்ந்து தடுமாறும் வீரன் ஒருவனைக் காணுகையில்... ராணுவ வாழ்வின் போராட்டமும், கொடூரமும் சம்மட்டியால் சுடுகிறது. 

புதிதாக சேர்ந்த வீரன் ஒருவன் குண்டடி பட்டு இறக்கும் தருவாயில் வாய்விட்டு அழுவது கனத்த டாங்கிகளை சில் சில்லாக உடைத்து விடும் போர்க்கள நிஜம். வலி பொறுக்காமல் விஷம் கேட்டு அருந்தும் காட்சிகளும் உண்டு. "என்னால் நகர கூட முடியாது. விட்டு விட்டு முன்னேறுங்கள்" என்று சொல்லி... "பாய்.... என்னை மறந்துடாத" என்று முனங்கி அழும் மரணங்கள் கொடூரங்கள். நாய்களும் மற்ற மிருகங்களும் பிணங்களை கடித்து தின்னும் காட்சி போரின் கோரப் பற்கள் கொண்டு கண்ணைக் கிழிக்கிறது.

இரு நாடும் சேர்ந்து ஒன்றை ஒன்று அடித்துக் கொள்வதாக இரு நாட்டு வீரர்களையும் அழித்துக் கொல்கிறது. அந்தக்காட்டைப் போலவே போரிடும் மனங்களும் பற்றி எரிகின்றன. அமைதியின்றி அலைகின்றன. "என் வயதான பெண்மணிக்கு எழுதுங்கள்......என் இறப்பைப் பற்றிய செய்தியை எப்படியாவது கொண்டு சேர்த்து விடுங்கள்" என்று  கெஞ்சும் ஒரு வயதான வீரனின் இறுதி கெஞ்சல்கள் அருகில் இருக்கும் வீரர்களையும் குலை நடுங்க செய்பவை. "வாக்கை எப்படி காப்பாற்றுவது..... அந்த பெண்மணி யாரென்றே எனக்குத் தெரியாதே" என்று மனம் உழலும் சக வீரனின் நெஞ்சுக்குள் இனம் புரியாத தோட்டாக்கள் பாய்வதை வெளிப்படுத்தும் முகத்தை நாம் அத்தனை சீக்கிரம் மறந்து விட இயலாது. இத்தனை பலிகள் கொடுத்து இறுதியில் ஜெயிப்பவரின் வெற்றிக்கு பின்னால் இருப்பது அத்தனையும் வியாபரம். சந்தை. 

இவ்வுலகம் மிக மோசமான வியாபாரத்தால் பீடிக்கப்பட்டிருக்கிறது. இப்படம் கூட ஓர் ஆக்கிரமிப்பின்... ஓர் அதிகாரத்தின் ஓர் அரசியலின் மையத்தையே மீண்டும் மீண்டும் நடுகிறது.

ஜப்பான் படை சுற்றி வளைத்து விட... ஏற்கனவே குண்டடி பட்டு கத்தவும் முடியாத வேவு பார்க்க வந்த அமெரிக்க வீரன் எதிரிகளிடமும் மாட்டாமல் ஆற்றில் அடித்துக் கொண்டு செல்லும் காட்சி...யாருமறியா மரணம். ஒரு தனிமனிதனின் மரணம் யாருக்கும் தெரியாமல் இருக்கவே கூடாது. கடைசியில் அவன் மரணித்ததாவது தெரிய வேண்டும். காலத்தில் இம்மாதிரி மரணங்களை எச்சில் தொட்டு அழிக்கிறது போர். இருப்பதிலேயே கொடுமையான மறைவு காணா பிணம் ஆவது. அந்த வீரனின் வீட்டுக்கு அவன் என்னாவாகிறான் என்ற கேள்வி அந்த ஆற்றிலிருந்து விழும் அருவியாக கொட்டிக் கொண்டே இருக்கிறது. 

கீழ் படியாத கேப்டனை போரின் ஒரு கட்ட முடிவில் வீட்டுக்கு அனுப்பும் வேலையையும்..........வெற்றி மட்டுமே விதி என்று நம்பும் அகோரா பசிக்கு ஆளான தலைமை செய்கிறது. சில வெற்றி மோசமான மனநிலையை படைக்கும் என்பதற்கு சான்று இது.

நிஜம் ஒரு பக்கம் சுட... இந்த படம் மறுபக்கம் ஆச்சரியத்தில் என்னை அசைத்துப் பாக்கிறது. எப்படி இப்படி ஒரு படத்தை எடுக்க முடிந்தது. ஒவ்வொரு ஷாட்க்கும் எத்தனை செலவு செய்தார்கள் என்று தெரியவில்லை. மொத்த செலவு 52 மில்லியன் என்று இணையம் சொல்கிறது. எத்தனை நாள் படப் பிடிப்பு நடத்தினார்கள் என்றும் தெரியவில்லை. ஒருவேளை அனுமதி வாங்கிக் கொண்டு நிஜமான ஒரு போர் சூழலில் படம் பிடித்தார்களா என்று கூட சந்தேகம் வருகிறது.

நிறைய விருதுகளை வாங்கிய இந்த படம் எச்சரிக்கை மணியை அடிக்கிறது. யானை வரும் ஓசை அது. மோசமான மனித சிந்தனையின் விளைவு தான் போர் என்ற தத்துவத்தை துப்பாக்கியில் மாட்டிக் கொண்டு பூமியை வலம் வருகிறது. இவ்வேளையில்"சீமான்" கூறிய வசனம் ஒன்று தான் நினைவுக்கு வருகிறது.

"ஆயுதம் வாங்கின காசுக்கெல்லாம் அரிசி வாங்கியிருந்தா எம்மக்கள் பசிங்கிற வார்த்தையே கேட்ருக்க மாட்டாங்கள்ல....."

மாற்றி மாற்றி சண்டையிட்டுக் கொள்ளும் இடத்தில் பழங்குடி கூட்டம் ஒன்று வாழ்கிறது. இதுதான் நிஜத்தை யானைக்கால்கள் கொண்டு மிதிப்பது என்பது. விழும் நிழலில்... படியும் ரத்தத்துக்கு யார் பதில் தேடுவது என்று நியாயம் வியர்க்க பார்த்துக் கொண்டிருக்கும் இந்த "தி தின் ரெட் லைன்" படத்தில் நான் அறிந்து கொண்ட புரிந்து கொண்ட... உணர்ந்து கொண்ட எல்லாவற்றுக்கும் அழுகையோ.... அமைதியோ... பயமோ.. படபடப்போ.... எல்லாவற்றையும் தாண்டி உயிர்கள் கொல்லப்பட படைக்கப்படவில்லை.... என்பதும்......... இந்த உலகம் வாழும் அனைத்து உயிரினங்களுக்குமானது என்பதும். இங்கே ஏகாதிபத்தியம் தான் இத்தனையும் செய்கிறது. தனிமனித தன்முனைப்புக்கு 

பழியாவதில் ஆரம்பிக்கிறது போர். போரின் கைகளில் விரல்கள் ஒருபோதும் கிடையாது. அத்தனையும் துப்பாக்கிகளே.  துப்பாக்கிகள் எப்போதும் எதிரே தான் நீளும் என்பதற்கு எப்போதும் உத்திரவாதம் கிடையாது என்பது தான் வரலாறு சொல்லும் நிஜம்.

படத்தொகுப்பு......இசை.... நடிப்பு.... கேமரா எல்லாவற்றையும் மீறி போரே முன்னால் நிற்கிறது. அத்தனை தத்ரூபம்.அத்தனை நிஜம். அது, எட்டிப் பார்க்கும் கண்களை  "தி தின்  ரெட் லைன்-ஜாக்கிரதை " என பதைபதைக்க வைக்கிறது. படம் முடிந்த பிறகு மூளையில் எங்கோ ஒரு தோட்டா ஒட்டிக் கொண்டிருப்பதாக நம்புகிறது மனம். 

அது பயங்கரம்.

Film: The Thin Red Line (1998)

Director : Terrance Malick

Language: English

http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-58/35235-2018-06-01-03-42-09

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.