Jump to content

ஒரு நிமிடக் கதைகள்


Recommended Posts

ஒரு நிமிடக் கதைகள்

 

வல்லவன்

 

 

white_spacer.jpg
வல்லவன் white_spacer.jpg
title_horline.jpg
 
white_spacer.jpg

p237.jpg செ ல் ஒலித்தது. எடுத்துப் பார்த்தான் ஹரி. அவனது மேலதிகாரி.

“சார், சொல்லுங்க சார்!”

“ஹரி, என்னன்னு தெரியலே, திடீர்னு என் சிஸ்டம் ஹேங் ஆயிருச்சு. என்ன பண்றது?”

‘ஹூம்... இவருக்கெல்லாம் ஒரு கம்ப்யூட்டர்’ என்று மனசுக்குள் முனகிக்கொண்டு, “சார், கன்ட்ரோல் ஆல்ட் டெலிட் கீஸை பிரஸ் பண்ணுங்க. ஷட்டவுன் பண்ணிட்டு மறுபடியும் ஆன் பண்ணுங்க, சரியாயிடும்!” என்றான் ஹரி.

தனது ஸ்கூட்டரில் அமர்ந்து, ஸ்டார்ட் பட்டனை அமுக்கினான். வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை. மறுபடி மறுபடி முயற்சி செய்தான். பலனில்லை.

தூரத்திலிருந்து இதைப் பார்த்துக்கொண்டு இருந்த வாட்ச்மேன், ‘ஹூம்... இவருக்கெல்லாம் ஒரு ஸ்கூட்டர்!’ என்று முனகிக்கொண்டு, “சோக் போட்டு

 

வறுமை

 

 

white_spacer.jpg
வறுமை white_spacer.jpg
title_horline.jpg
 
கே.ஆனந்தன்
white_spacer.jpg

பி ரமாண்டமாகப் படம் எடுப்பதில் பேர் வாங்கியிருந்த அந்த இளம் டைரக்டர், முன்னணி படத் தயாரிப்பாளரிடம் கதை சொல்லிக்கொண்டு இருந்தார்... “நாம இப்போ எடுக்கப்போற படம், வறுமையைப் பத்தின படம் சார்!”

p221a.jpg

“சொல்லுங்க...”

“மக்களின் வறுமைக்கு என்ன காரணம், இதைப் போக்க என்ன செய்யணும்னு ஆக்கபூர்வமா

 

அலசப்போற படம்...”

“ம்...”

“ஹீரோ பரம ஏழை. சோத்துக்கே திண்டாடறான். நோயாளியான அம்மா, குடிகார அப்பா, கூடப் பொறந்த தங்கச்சிங்கன்னு எல்லாரையும் காப்பாத்தப் போராடறான். அவன் கடைசியில என்ன ஆகிறான்கிறதுதான் கதை!”

“சரி சரி... பட்ஜெட் எவ்ளோனு சொல்லவே இல்லியே?”

“அதிகம் இல்லே, ஐம்பது கோடி சார்!” என்றார் டைரக்டர்.

ஸ்டார்ட் பண்ணுங்க, சார்!” என்றான்.

 

 

திருவிளையாடல்.காம்

 

 

white_spacer.jpg
new .திருவிளையாடல். com white_spacer.jpg
title_horline.jpg
 
white_spacer.jpg

p231.jpg நா ரதர் ஒரு கம்ப்யூட்டருடன் கைலாயத்துக்குள் நுழைந்தார். வழக்கம் போல கணபதிக்கும் முருகனுக்கும் அது யாருக்கு என்று சண்டை. “என்ன நாரதா, நீ வந்த நோக்கம் நிறைவேறிவிட்டதல்லவா?” என்று சிவன் கேட்க, “நாராயணா... அபசாரம்! அபசாரம்!” என்று நாரதர் பதற, “வேறு வழியில்லை சுவாமி, வழக்கம் போல் நீங்களே ஒரு போட்டி வைத்து, அந்த கம்ப்யூட்டர் யாருக்கு என்று முடிவு செய்யுங்கள்” என்றாள் பார்வதி.

அதற்குள் முருகன் ‘ஓ’வென்று அழத் தொடங்கிவிட்டான். “கணபதி மவுஸை எடுத்துக்கொண்டு ஓடி விட்டான். எனக்கு ஒன்றும் இந்தக் கம்ப்யூட்டர் வேண்டாம். நான் பூவுலகம் சென்று, எனக்கென்று ஒரு வெப்ஸைட்

 

உருவாக்கிக்கொண்டு என் பக்தர்களுடன் ‘சாட்’ செய்யப்போகிறேன்” என்று கோபமாகச் சொல்லிவிட்டு, மயில் வாகனத்தில் கிளம்பி விட்டான் முருகன்.

ரவுசு பண்ணியபடி மவுஸுடன் ஓடும் கணபதியின் பின்னால் ‘பிரௌஸ்’ பண்ணிய படி ஓடினர் பரமசிவனும் பார்வதியும்.

நாரதர் ‘யாஹூ..!’ என்று துள்ளிக் குதித்தார்.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.