Jump to content

பென் ஸ்டோக்ஸ் மீது நீதிமன்றில் கடும் குற்றச்சாட்டுகள்


Recommended Posts

பென் ஸ்டோக்ஸ் மீது நீதிமன்றில் கடும் குற்றச்சாட்டுகள்

 

 
 

இங்கிலாந்தின் சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ் இரவுவிடுதியொன்றில் மோதலில் ஈடுபட்டமை தொடர்பான வழக்கு இன்று ஆரம்பமாகியுள்ளது.

இதன் போது அரசதரப்பு சட்டத்தரணிகள் பென்ஸ்டோக்ஸ் தற்பாதுகாப்பு என்ற எல்லையை மீறி செயற்பட்டார் என தெரிவித்துள்ளனர்.

பென்ஸ்டோக்ஸ் தன்னிலை இழந்து பழிவாங்கும் நோக்கில் தாக்க தொடங்கினார், எனதெரிவித்துள்ள சட்டத்தரணிகள் பென்ஸ்டோக்சும் அவருடன் இருந்தவர்களும் தாங்கள் தாக்கப்பட்டனர் என கருதியதை தொடர்ந்து இந்த வன்முறையில் ஈடுபட்டனர் என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் பென்ஸ்டோக்ஸ் எம்பார்கோ இரவுவிடுதிக்குள்  நுழைய முயன்ற வேளை இடம்பெற்ற மோதல்கள் தொடர்பிலேயே அவர் நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்டுள்ளார். ஸ்டோக்சுடன் அவ்வேளை அலெக்ஸ் ஹேலும் காணப்பட்டார்.

ben_stokes.jpg

குறிப்பிட்ட விடுதியின் வாயில்காவலாளி பென்ஸ்டோக்சை உள்ளே அனுமதிக்க மறுத்த வேளை  ஸ்டோக்ஸ் சீற்றமடைந்து ஹோட்டலில் இருந்து வெளியே சென்று கொண்டிருந்த ஓரினச்சேர்க்கையாளர்கள் இருவரை தாக்கியுள்ளார் என அதிகாரிகள் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர்..

மேலும் பென்ஸ்டோக்ஸ் சிகரெட்டினால்  ஒருவரை சுட்டார் எனவும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இந்த வன்முறைகள் எப்படி ஆரம்பித்தன என்பது  சம்பந்தப்பட்டவர்களுக்கே தெரியும் எனினும் இந்த வன்முறையை இலகுவாக ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தியிருக்கலாம் என அரச தரப்பு சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

இந்த வழக்குகளில் ஆஜராக வேண்டும் என்பதால் இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்டிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.

http://www.virakesari.lk/article/37940

thumb_large_ben_st3.jpg

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பென் ஸ்டோக்ஸை விடுவித்தது நீதிமன்றம்

Ben-Stokes-3-696x435.jpg Image Courtesy - PA
 

பொது இடத்தில் கைகலப்பில் ஈடுபட்ட விவகாரத்தில் இங்கிலாந்து சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ் மற்றும் உடன் குற்றம் சாட்டப்பட்ட ரியான் அலி இருவரும் பிரிஸ்டல் கிரௌன் நீதிமன்றத்தின் நீதிபதிகள் குழுவால் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டரை மணி நேரம் இடம்பெற்ற விசாரணைகளுக்குப் பின் ஆறு ஆண் மற்றும் ஆறு பெண்கள் கொண்ட நீதிபதிகள் குழுவால் ஏகமனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டது. 

கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 25 ஆம் திகதி தென்மேற்கு இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரில் அதிகாலை வேளையில் ஸ்டோக்ஸ் மற்றும் அலி இருவரும் கைகலப்பில் ஈடுபட்டது தொடர்பிலேயே இந்த வழக்கு விசாரணை இடம்பெற்று வந்தது.  

இந்த வழக்கு விசாரணை காரணமாக ஸ்டோக்ஸுக்கு இங்கிலாந்து அணிக்கு விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவர் இந்தியாவுக்கு எதிராக லோட்ஸில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை. எதிர்வரும் சனிக்கிழமை (18) ஆரம்பமாகவிருக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணி 4-0 என தோல்வியை சந்தித்த 2017-18 பருவத்தின் அவுஸ்திரேலியாவுக்கான இங்கிலாந்து சுற்றுப்பயணமும் ஸ்டோக்ஸுக்கு கிடைக்கவில்லை என்பதோடு அதனைத் தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிரான போட்டிகளில் அவர் அணிக்கு திரும்பினார்.

பிரிஸ்டலில் இடம்பெற்ற இந்த சம்பவத்தால் ஸ்டோக்ஸுக்கு இங்கிலாந்துக்காக மொத்தம் ஆறு டெஸ்ட் போட்டிகள், ஏழு ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் நான்கு டி-20 போட்டிகளில் விளையாட முடியாமல் போயுள்ளது.   

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை (ECB) வெளியிட்டிருக்கும் சுருக்கமான ஊடக அறிவிப்பொன்றில், இந்த வழக்கு விசாரணையின் முடிவை அடுத்து ஸ்டோக்ஸ் தொடர்பான தமது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யப்போவதாக குறிப்பிட்டுள்ளது.

கைகலப்பு தொடர்பில் ஸ்டோக்ஸின் வழக்கு முடிவுற்றிருக்கும் நிலையில் அவர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் கிரிக்கெட் ஒழுக்காற்று குழுவின் விசாரணைக்கு முகம்கொடுக்கவுள்ளனர்.  

சட்ட செயல்முறைகள் முடிவுற்ற 48 மணி நேரத்திற்குள் இந்த கிரிக்கெட் ஒழுக்காற்றுக் குழு கூடி ஒரு வாரத்திற்குள் தனது தீர்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபையில் இருந்து கிரிக்கெட் ஒழுக்காற்று குழு சுயாதீனமாக செயற்படுவதோடு அதற்கான நிதியை கிரிக்கெட் சபை வழங்குகிறது.

 

 

பிரிஸ்டல் நகரின் மெர்குகோ இரவு கேளிக்கை விடுதிக்கு வெளியில் ரியான் ஹேல்ஸ் மீது கையால் குத்தி தரையில் வீழ்த்தியதாகவும் தொடர்ந்து ரியான் அலியை தாக்கி வீழ்த்தியதாகவும் பென் ஸ்டோக்ஸ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  

குறித்த கேளிக்கை விடுதியின் வாயில் காவலர் உள்ளே நுழைய அனுமதி மறுத்ததை அடுத்து ஸ்டோக்ஸ் கோபமடைந்திருந்ததாக நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது. பிரிஸ்டலில் நடந்த ஒருநாள் சர்வதேச போட்டியில் மேற்கிந்திய தீவுகளை, இங்கிலாந்து அணி வீழ்த்திய சில மணி நேரத்திற்கு பின்னர் ஸ்டோக்ஸ் சக வீரர் அலெக்ஸ் ஹேல்ஸுடன் இந்த கேளிக்கை விடுதிக்கு சென்றபோதே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.     

வீதியில் வைத்து அலி மற்றும் ஹேல்ஸ் இருவர் மீதும் நினைவிழக்கும் வகையில் தாக்கியது குறித்து ஸ்டோக்ஸிடம் பிரிஸ்டல் கிரௌன் நீதிமன்றத்தில் கேட்கப்பட்டது.

அந்த சம்பவத்தின்போதுதான் அச்சுறுத்தலுக்கு முகம்கொடுத்ததாக உணர்ந்தேன் என ஸ்டோக்ஸ் நீதிபதிகள் குழுவிடம் குறிப்பிட்டுள்ளார். அலி மற்றும் ஹேல்ஸ் ஓரினச் சேர்க்கை ஆடவர்களான வில்லியம் ஓ கோனர் மற்றும் கெய் பெரியை தூற்றி கூச்சலிட்டதை கேட்டே தான் செயற்பட ஆரம்பித்ததாகவும் ஸ்டோக்ஸ் வாக்குமூலம் அளித்துள்ளார். ஆனால் அதற்கான ஆதாரங்களை அவர் முன்வைக்கவில்லை.  

இந்த சண்டையின்போது அலி போத்தல் ஒன்றை பயன்படுத்தி ஹேல்ஸை அச்சுறுத்தியதாகவும் பெரியின் தோள்பட்டையை தாக்கியதாகவும் வழக்குத்தொடுனர்கள் குற்றம்சாட்டினர்.  

ஸ்டோக்ஸுடனான கைகலப்பு காரணமாக அலியின் கண் இமைப்பகுதியில் காயம் ஏற்பட்டதோடு ஹேல்ஸ் நினைவற்றுக் கிடந்தார்.

இந்த காயங்கள் இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர் ஹேல்ஸின் பாதணியால் வந்திருக்கலாம் என்று ஸ்டோக்ஸின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த சண்டையின் போது ஹேல்ஸ் உதைவது CCTV காட்சிகளில் தெரிந்தபோதும் அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்படவில்லை.

நீதிபதிகளிடம் அலி அளித்த வாக்குமூலத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ”யாருடனாவது சண்டையிட அதிக கோபத்தில் இருந்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தலையில் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட காயம் காரணமாக அன்று இரவு என்ன நடந்தது என்ற ஞாபகம் ‘தெளிவில்லாமல்’ இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.   

ஓகோனர் மற்றும் பெரி மீது கூச்சலிட்டதாக கூறியதை மறுத்த அலி, ஹேல்ஸ் அவர்கள் மீது ‘எரிச்சல்’ அடைந்தார் என்று தெரிவித்தார்.

போத்தலை ஒரு ஆயுதமாக பயன்படுத்தியது, தான் எடுத்த கடினமாக முடிவு என்று அவர் கூறினார்.

”அதிக அச்சுறுத்தலை உணர்ந்ததாலேயே நான் அதனைச் செய்தேன். விலகிப்போ என்று நான் கூறியது ஞாபகமிருக்கிறது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
    • முற்றிலும் உண்மை ஆனால் மீசாலையில் வ‌சிக்கும் என‌து அத்தை வ‌ய‌தான‌ கால‌த்திலும் சிங்க‌ள‌வ‌னின் அட‌க்கு முறைய‌ தாண்டி த‌மிழ் தேசிய‌ கூட்ட‌மைப்புக்கு தொட‌ர்ந்து ஓட்டு போடுகிறா அதோட‌ அத்தைய‌ ஏதோ ஒரு ச‌ம்ப‌வ‌த்தில் சாலையில் வைச்சு மிர‌ட்டினார்க‌ள் அத்தை அவேன்ட‌ கைய‌ த‌ள்ளி விட்டு வீட்டுக்கு ந‌ட‌ந்து வ‌ந்த‌வா 2009க‌ட‌சியில் ட‌க்கிள‌ஸ்சின் ஆட்க‌ள் வீடு புகுந்து நெஞ்சில் துப்பாக்கிய‌ வைச்சு மிர‌ட்டின‌வை ஆனால் அவ‌ன் ப‌ய‌ப்பிட‌ வில்லை பிற‌க்கு உற‌வுக‌ள் சொல்ல‌ அர‌சிய‌லில் இருந்து முற்றிலுமாய் வில‌கி விட்டான் என‌து ம‌ச்சான் ..............................
    • "ஊசிப் போன வடை" என்று, யாரோ... உருட்டிக் கொண்டு திரிந்தார்கள். 😂 எல்லாம், பொய்யா... கோப்பால். 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.