Jump to content

இங்கிலாந்தில் வெப்பநிலை மீண்டும் அதிகரிப்பு


Recommended Posts

இங்கிலாந்தில் வெப்பநிலை மீண்டும் அதிகரிப்பு

 

 

UK-heatwave-720x427.jpg

இங்கிலாந்தில் வெப்பநிலை கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து மிகக்கடுமையாக உள்ளது. வெள்ளிக்கிழமை லண்டனில் 33.C வெப்பநிலை பதிவாகியிருந்தது.  சனிக்கிழமை 29.C ஆகவும் நேற்றையதினம் 31.C ஆகவும் இன்று 33.C ஆகவும் வெப்பநிலை காணப்படுகின்றது.

நாளையதினம் 32.C ஆக  வெப்பநிலை உயர்வாக இருக்கும் என்றும் வானிலை அவதான நிலையத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை உயர்வாக இருப்பதனால் வீடுகளை விட்டு வெளியேறாது பாதுகாப்பாக இருக்குமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

எனினும் சில வாரங்களாக நாடுமுழுவதும் அண்ணளவாக வெப்பநிலை 30.C ஆக காணப்பட்டது. இந்த அதிகரித்த வெப்பநிலைக்கு காரணம் சகாரா பாலைவன வெப்பம் போர்த்துக்கல் வழியே இங்கிலாந்து நோக்கிவருவதாக கூறப்படுகின்றது.

இந்த உயர்ந்த வெப்பநிலையானது இன்னும் ஒரு மாதத்துக்கும் அதிகமான நாட்களுக்கு இருக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. மேலும் ஒக்டோபர் மாதம் வரைக்கும்  வெப்பநிலை உயர்வாகவே இருக்கும் என்றும்  கூறப்பட்டுள்ளது.

http://athavannews.com/இங்கிலாந்தில்-வெப்பநிலை/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர் ஒருவர் குடும்பத்துடன் சேர்ந்து கிரீஸில் கோடை விடுமுறையை படங்களாக முகப்புத்தகத்தில் போடுகிறார். இங்கு இன்று 33C . உள்ளூர் பார்க்கும் வீட்டு பின் வளவும் இப்ப பரவாயில்லை போல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியிலையும் பயங்கர வெக்கைதான்.......எல்லாரும் தண்ணியே தஞ்சமெண்டு திரியினம்.....

அரைக்களிசான்ரை அட்டகாசம் தாங்கேலாமல் கிடக்கு.....யூ நோ படு கிழவியை பாத்தாலும் ஒரு கிக்காய்த்தான் கிடக்கு....

அவ் :love:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Ahasthiyan said:

நண்பர் ஒருவர் குடும்பத்துடன் சேர்ந்து கிரீஸில் கோடை விடுமுறையை படங்களாக முகப்புத்தகத்தில் போடுகிறார். இங்கு இன்று 33C . உள்ளூர் பார்க்கும் வீட்டு பின் வளவும் இப்ப பரவாயில்லை போல. 

அகஸ்தியனுக்கு... விடுமுறைக்கு போக லீவு கிடைக்காமல்,
வயித்தெரிச்சலில் எழுதின மாதிரி இருக்கு. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

ஜேர்மனியிலையும் பயங்கர வெக்கைதான்.......எல்லாரும் தண்ணியே தஞ்சமெண்டு திரியினம்.....

அரைக்களிசான்ரை அட்டகாசம் தாங்கேலாமல் கிடக்கு.....யூ நோ படு கிழவியை பாத்தாலும் ஒரு கிக்காய்த்தான் கிடக்கு....

அவ் :love:

குமரியளை  விட... கிழவிகளின்  அட்டாகாசம் தாங்க ஏலாமல்  இருக்கப்பா..... :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

People in Helsinki, Finland took K-Supermarket up on their offer to allow customers to sleep in the aisles of their store which was furnished with cool refrigerators and air conditioning

K-Supermarket manager Marika Lindfors said the idea came from joking customers: 'We always try to respond to client feedback, so why not here, too?'

வெக்கை கூடி சனம் படுற பாடு ..

என்ன பெருமாள்.... கடைக்குள், படுத்து இருக்கின்றார்களா..... ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

ஜேர்மனியிலையும் பயங்கர வெக்கைதான்.......எல்லாரும் தண்ணியே தஞ்சமெண்டு திரியினம்.....

அரைக்களிசான்ரை அட்டகாசம் தாங்கேலாமல் கிடக்கு.....யூ நோ படு கிழவியை பாத்தாலும் ஒரு கிக்காய்த்தான் கிடக்கு....

அவ் :love:

 

52 minutes ago, தமிழ் சிறி said:

குமரியளை  விட... கிழவிகளின்  அட்டாகாசம் தாங்க ஏலாமல்  இருக்கப்பா..... :grin:

படம் போட்டால்த் தான் நம்புவம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ஈழப்பிரியன் said:

படம் போட்டால்த் தான் நம்புவம்.

Bildergebnis für sommer mode frauen ab 60

ஈழப்பிரியன்  இந்தாங்கோ படம்.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ஈழப்பிரியன் said:

 

படம் போட்டால்த் தான் நம்புவம்.

190983d1357854744-dsc05100.jpg

190984d1357854751-dsc05098.jpg

ஜெர்மனியின் ஆறு குளம் எல்லாம் 
செந்தாமரைகள் மலர்ந்துகொண்டே 
இருப்பதாகத்தான் உலக செய்திகளும் சொல்கின்றன 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

Bildergebnis für sommer mode frauen ab 60

ஈழப்பிரியன்  இந்தாங்கோ படம்.  :grin:

தமிழ் சிறி அண்ணோய்.....!

எங்கட ஊரில .....சொப்பிங் எண்டால் அனேகமாக இப்படித் தான் இருக்கும்! இது மிகவும் சாதாரணம்!

உங்கட படங்களைப் பார்த்தால்... பனையைக் காணாதவன்....கித்துள் கள்ளைக் குடிக்கிற மாதிரிக் கிடக்குது!

நாங்கள் எதிர்பார்க்கிற படங்கள்.....பின்வரும் படங்களைப் போல...!

 

nzh_bikini_2-c1xxpjz9xx6x1q8lmm2_t460.JP

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் சனம் ஊருக்கு படையெடுக்கிறார்கள் போல 

மருதர் மெனக்கட்டு எடுத்திருக்கிறார் இருந்தாலும் இந்த படத்தை 

Link to comment
Share on other sites

பட்டினத்தார் இன்றிருந்தால்.... பிறந்த இடத்தையும், கறந்த இடத்தையும் நாடுதே கண் என்று பாடியிருப்பார். ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

என்ன பெருமாள்.... கடைக்குள், படுத்து இருக்கின்றார்களா..... ?

அது சுப்பர்மார்க்கட் மனேஜரினால் பகிடிக்கு உயர்ந்து வரும் வெப்ப நிலையை எப்படி தங்கள் வாடிக்கையாளர் சமாளிப்பது என்பதுக்கு போடப்பட்டது ஆனால் உண்மையிலும் கொஞ்சம் வெக்கை கூடி கிறுக்கு பிடிச்சுக்கொண்டு திரியிதுகள் .

பின்லாந்து நாட்டில் எடுக்கபட்ட படம்கள் அவை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இங்கு 50சீ. நெருப்பு அனல் வீசும். 

ஆனால் எங்கட உடுப்ப அடிக்க ஏலாதுவா

 

Related image

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

ஈழப்பிரியன்  இந்தாங்கோ படம்.  :grin:

 

9 hours ago, Maruthankerny said:

ஜெர்மனியின் ஆறு குளம் எல்லாம் 
செந்தாமரைகள் மலர்ந்துகொண்டே 
இருப்பதாகத்தான் உலக செய்திகளும் சொல்கின்றன 

படங்கள் இணைப்புக்கு நன்றி.

எனக்கு கொழும்பான் இணைத்த படங்கள் தான் பிடித்திருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் வேடிக்கை என்னெவென்றால், ஆசியாவை பூர்விகமாக கொண்டவர்களே, குறிப்பாக இலங்கையை பூர்விகமாக கொண்டோரே, ஏதோ வெக்கை எகிறி அனல் வீசுவதாகவும், அதை தங்களால்  தாங்க முடியாது இருப்பதாகவும் சதா புறுபுறுத்துக் கொண்டும், கண்டவர்களிடம் குறையிடுவார்களாகவும் இருக்கிறார்கள்.

பரம்பரையாக வளர்ந்து, வாழ்ந்து வரும் வெள்ளை இனத்தோர் (caucasians), ஆங்கிலேயர் உட்பட, இந்த காலநிலையை வரவேற்கிறார்கள். இந்த காலநிலை சிறிது அசௌகரியத்தை தந்தாலும், உறை குளிர் காலநிலையை விட இது உவப்பான காலநிலை என்பது.     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழ் சிறி said:

அகஸ்தியனுக்கு... விடுமுறைக்கு போக லீவு கிடைக்காமல்,
வயித்தெரிச்சலில் எழுதின மாதிரி இருக்கு. :grin:

தமிழ் சிறி, நாங்கள் அடுத்த கிழமை டென்மார்க் போகிறோம். அங்கேயும் இதே நிலைமைதான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

இதில் வேடிக்கை என்னெவென்றால், ஆசியாவை பூர்விகமாக கொண்டவர்களே, குறிப்பாக இலங்கையை பூர்விகமாக கொண்டோரே, ஏதோ வெக்கை எகிறி அனல் வீசுவதாகவும், அதை தங்களால்  தாங்க முடியாது இருப்பதாகவும் சதா புறுபுறுத்துக் கொண்டும், கண்டவர்களிடம் குறையிடுவார்களாகவும் இருக்கிறார்கள்.

பரம்பரையாக வளர்ந்து, வாழ்ந்து வரும் வெள்ளை இனத்தோர் (caucasians), ஆங்கிலேயர் உட்பட, இந்த காலநிலையை வரவேற்கிறார்கள். இந்த காலநிலை சிறிது அசௌகரியத்தை தந்தாலும், உறை குளிர் காலநிலையை விட இது உவப்பான காலநிலை என்பது.     

அதிலும் வேடிக்கை என்னவென்றால், அங்கே எண்ணை தடவி திரிந்த எனக்கிட சனம், இஞ்சை சன் கிறீமை அளவுக்கு அதிகமா தடவி, அதிலும் கான்செர் வருதென்று ஒரு சேதி. இதிலே வேறை, வெயிலிக்கை போனால் கறுத்தும் போய் விடுவினமாம்.:innocent:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kadancha said:

இதில் வேடிக்கை என்னெவென்றால், ஆசியாவை பூர்விகமாக கொண்டவர்களே, குறிப்பாக இலங்கையை பூர்விகமாக கொண்டோரே, ஏதோ வெக்கை எகிறி அனல் வீசுவதாகவும், அதை தங்களால்  தாங்க முடியாது இருப்பதாகவும் சதா புறுபுறுத்துக் கொண்டும், கண்டவர்களிடம் குறையிடுவார்களாகவும் இருக்கிறார்கள்.

பரம்பரையாக வளர்ந்து, வாழ்ந்து வரும் வெள்ளை இனத்தோர் (caucasians), ஆங்கிலேயர் உட்பட, இந்த காலநிலையை வரவேற்கிறார்கள். இந்த காலநிலை சிறிது அசௌகரியத்தை தந்தாலும், உறை குளிர் காலநிலையை விட இது உவப்பான காலநிலை என்பது.     

பொதுவாக இங்குள்ள வீடுகள் குளிரை தாக்கு பிடிப்பதுக்கு ஏற்றமாதிரி கட்டபட்டவை அதிலும் நம்ம சனம் வீட்டை வேண்டி போட்டு வீட்டுக்குள் வெப்பநிலையை சரிபடுத்தும் சிமிளியை இடம் வேணும் எனும் காரணத்துக்கு உடைத்து போட்டு விடுவினம் பிறகென்ன பாண் போறணை போல் வீட்டுக்குள் வெப்பநிலை இருக்கும் அதிலும் சில ஏரியா கள்ளர் பயம் காரணமாக யன்னல்கள் துறப்பது கிடையாது இந்த வெக்கையிலும் .

ஆனால் ஊர் வீடுகள் அப்படியா மலைப்பாம்பு நுழையும் அளவுக்கு ஓட்டைகள் வைத்து காத்தோட்டமாய் வீடுகள் இருக்கும் . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kadancha said:

இதில் வேடிக்கை என்னெவென்றால், ஆசியாவை பூர்விகமாக கொண்டவர்களே, குறிப்பாக இலங்கையை பூர்விகமாக கொண்டோரே, ஏதோ வெக்கை எகிறி அனல் வீசுவதாகவும், அதை தங்களால்  தாங்க முடியாது இருப்பதாகவும் சதா புறுபுறுத்துக் கொண்டும், கண்டவர்களிடம் குறையிடுவார்களாகவும் இருக்கிறார்கள்.

பரம்பரையாக வளர்ந்து, வாழ்ந்து வரும் வெள்ளை இனத்தோர் (caucasians), ஆங்கிலேயர் உட்பட, இந்த காலநிலையை வரவேற்கிறார்கள். இந்த காலநிலை சிறிது அசௌகரியத்தை தந்தாலும், உறை குளிர் காலநிலையை விட இது உவப்பான காலநிலை என்பது.     

பூர்வீகம் ஏனோ உண்மைதான்.....:grin:

ஆனால் மைனஸ் 20,30 பாகை குளிருக்குள் 6 மாதம் இருந்து விட்டு பிளஸ் 30,40ற்கு வரும் போது உடம்பு கொஞ்சம் ஜீரணிக்க மறுப்பது சாதாரணம் என நான் நினைக்கின்றேன். அத்துடன் பூர்வீக இலங்கையிலும் கடந்த 40வருடங்களை விட வெப்பம் அதிகமாகியுள்ளதாகவும் பலர் கூறுகின்றனர்.
பரம்பரையாக வாழும் வெள்ளையர்களும் இந்த வருட வெப்பம் கொஞ்சம் அதிகமாகிவிட்டதெனவும் தொடர்ந்து மழையில்லாமல் வெய்யிலாக இருக்கின்றது என புலம்புவதும் காதோரம் விழுகின்றது. சிறிய ஆறுகள் வரண்டு விட்டது. காடுகள் எரிகின்றது.....சில நகரங்களில் தண்ணீரை சேமிக்குமாறு வேண்டப்படுகின்றனர். பூமரங்களுக்கு தண்ணீர் ஊற்றவேண்டாம் என ஆலோசனை வழங்கப்படுகின்றது. ஒருசில மாதங்கள் வெய்யில் என்றாலே திக்குமுக்காடும் வெள்ளையர்கள் நிரந்தர வெய்யில் என்றால் சுருகி சுருங்கி விடுவார்கள். அவ்வப்போது வெய்யிலை ரசிக்கவும் அனுபவிக்கவும் தான் சரியானவர்கள்.☀️

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.