Jump to content

Recommended Posts

பாதை - சிறுகதை

 
 
கவிதைக்காரன் இளங்கோ - ஓவியங்கள்: ஸ்யாம்

 

p52g_1533102201.jpg

திங்கட்கிழமை காலை நேரப் பரபரப்பைத் தவிர்க்க திட்டமெல்லாம் போட்டு ஒவ்வொரு வாரமும் தோற்றுதான்போகிறாள் ரம்யா. ஞாயிற்றுக்கிழமைகளின் அசமந்தக் காலையிலேயே அதை முடிவுசெய்வாள். ஆனாலும் முடிவதில்லை. ரயில்வே டிக்கெட் கவுன்ட்டரில் டிரெயின் நீளத்துக்கு ஒரு க்யூ நிற்கிறது. சனிக்கிழமையே மாதாந்திர பாஸை ரெனியூவல் செய்திருக்க வேண்டும். விட்டாச்சு.

p52a_1533102182.jpg

தாம்பரம் போகும் டிரெயின், மூன்றாவது நடைமேடையிலிருந்து கிளம்பக் காத்திருக்கிறது. ஏற்கெனவே லேடீஸ் ஸ்பெஷலைத் தவற விட்டுவிட்டாள். இது சூப்பர் ஃபாஸ்ட். `சட்டென மாம்பலம் ஸ்டேஷன் போய்விடலாம்’ என, மனக்கணக்கு வேகமாக ஓடியது. ஆனால், வரிசை மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கிறது.

இவளுடைய ரெனியூவல் பாஸுக்கு எக்ஸ்ட்ரா ஒன்றரை நிமிடம் ஆயிற்று. விருட்டென கவுன்ட்ட ரிலிருந்து திரும்பினாள். பக்கத்து வரிசையை ஊடுரு வினாள். வேகவேகமாக டிரெயினை நோக்கி விரைந்தாள். அறிவிப்பு ஒலிக்கத் தொடங்கியது.

தொலைவில் இருந்த மஞ்சள் சிக்னல் இன்னும் பச்சைக்கு மாறவில்லை. அதற்குள் லேடீஸ் கம்பார்ட்மென்ட்டைப் பிடித்துவிடலாமா என யோசிக்கும்போதே பச்சை விழுந்தது. இன்னும் இரண்டு பெட்டிகள்தான். `ஓடலாமா... வேண்டாமா? ஊஹும்.’ இன்னைக்குப் பார்த்து சேலை கட்டிக்கொண்டு வந்திருக்கிறாள். அப்போது, அவளுக்கு முன்னால் தத்தக்கா பித்தக்காவென ஓடிக்கொண்டிருந்த பள்ளிக்கூடச் சிறுமி ஒருத்தி, புத்தக மூட்டையின் கனச்சுமை தாளாமல் தடுமாறிக் கீழே விழுந்தாள்.

பதறிய ரம்யா, முன்னே இரண்டடி வேகமாக எட்டுவைத்து சிறுமியை விலுக்கெனத் தூக்கினாள். வடிவான முகம். அழுகின்ற பாவனைக்கு எக்கணம் வேண்டுமானாலும் மாறிவிடலாம்போல் இருந்தபோது, நீண்ட விசில் சத்தம் கேட்டது. சட்டென சிறுமியின் புத்தகப் பையைக் கழற்றி வாங்கி ஒரு கையில் வைத்துக்கொண்டு மறு கையில் அவளைப் பிடித்துக்கொண்டு அவசரமாகவும் உடனடியாகவும் பக்கவாட்டு கம்பார்ட்மென்ட் வாசலுக்குள் நுழைந்தாள்.

ஹாரன் அடித்து, டிரெயின் சிறு குலுங்கலுடன் நகரத் தொடங்கியது. ஏறிய பிறகுதான் உறைத்தது, அது `வெண்டார்’ எனச் சொல்லப்படும் சரக்குப் பொருள்களோடு பயணிப்பவர்களுக்கான கம்பார்ட்மென்ட். உள்ளே நடுவில் அகலமாக இடம் விடப்பட்டு பெஞ்ச்போல நீளவாக்கில் பக்கவாட்டு ஜன்னல்களையொட்டி இருக்கைகள் இருபுறமும் இருந்தன. அதற்கும் மேலே இரும்புப்பரண்கள்.

பால் கேன்கள், காய்கறிக் கூடைகள், வாய் இறுக்கிக் கட்டப்பட்ட இடுப்பு உயர வெள்ளை நிற பிளாஸ்டிக் பைகள். உடைமைகளுக்கு உரியவர்களின் சொற்ப அடைசல். இப்போதைக்கு இங்கே பெரிய கூட்டம் இல்லை. கைப்பற்றி நிற்பதற்கான வளையங்கள் உயரத்தில் தொங்கின. ரம்யா தன்னுடைய உயரத்தை எண்ணி நொந்துகொண்டாள். ஓரமாக நெட்டுக்குத்தலாக நிறுத்தப்பட்டிருந்த கம்பிகளில் ஒன்றை எட்டிப்பிடித்துக்கொண்டாள். இன்னும் உடல் நடுக்கத்திலிருந்து விடுபடாத அந்தச் சிறுமியும் கூடவே நின்றது, ஒருவிதப் பொறுப்பையும் லேசான எரிச்சலையும் ஒருசேர உண்டுபண்ணியது.

p52c_1533102235.jpg

`என்ன மாதிரியான பெற்றோர்... ஒரு சிறு குழந்தையை இத்தனை அசட்டையோடு தனியாக அனுப்பிவைத்திருக்கிறார்களே?’ என்று எண்ணியபடி,

``உன் பேர் என்ன பாப்பா?’’ என்றாள்.

``ப்ரியம்வதா.’’

``பேரு நல்லாருக்கே. அப்படின்னா என்னன்னு அர்த்தம் தெரியுமா பாப்பா?’’

அவள் முகத்தில் அதுவரை இருந்த கலவரம் காணாமல்போய் ஒரு வெட்கச் சிரிப்பு துளிர்த்தது. அவளுக்குத் தெரியவில்லை. இடவலதாகத் தலையசைத்தாள். சிவப்பு கலர் ரிப்பன் பட்டாம்பூச்சிகள் விடைத்த ஜடை இரண்டும் அப்படியும் இப்படியும் போய்வந்தது, வேடிக்கையாக இருந்தது.

``எங்க இறங்கணும் நீ?’’

``எக்மோர்.’’

``கூட யாரும் வரலியா, தனியா போறியே?’’

ப்ரியம்வதா தன் முட்டைக்கண்களால் ரம்யாவை அண்ணாந்து பார்த்தாள்.

``சுகந்தி அக்கா லேடிஸ் கம்பார்ட்மென்ட்ல இருக்கா ஆன்ட்டி.’

``உன் அக்காவா?’’

``ஆமா. அவ நைன்த் பி செக்‌ஷன். நான் தேர்டு ஏ செக்‌ஷன்.’’

``ஓஹோ... அவ மட்டும் எப்படி முன்னாடி போயிட்டா?’’

``அவ ஸ்பீடா ஓடிட்டா ஆன்ட்டி. அவ ஸ்மால் பேக் வெச்சிருக்கா. நான்தான் விழுந்துட்டேனே!’’

பாவமாக இருந்தது ரம்யாவுக்கு. அவளை, தன்னோடு நெருக்கமாக்கி நிறுத்திக்கொண்டாள். இது ஓர் அடைக்கலம். மிகவும் தற்காலிகமானது. ஆனால், மனம் ஏனோ நெகிழ்ந்தபடியே இருக்கத் தொடங்கியது. இதுமட்டும் திங்கட்கிழமை வழக்கத்தில் ஏற்பட்டதேயில்லை. ஒரு குழந்தையின் அண்மை அதை  உண்டுபண்ணுவதை அவள் உணரத் தொடங்கினாள்.

``இதுமட்டும் டிஃப்ரென்ட்டா இருக்குல்ல ஆன்ட்டி?’’

வெண்டார் கம்பார்ட்மென்ட் அவளுக்குப் புதிய அனுபவமாக இருக்கிறது. எல்லாவற்றையும் கிரகிக்கவும் கவனிக்கவும் பழக்கப்பட்ட குழந்தையாக அவள் தெரிகிறாள். புன்சிரிப்புடன் ரம்யா, பதில் சொல்லும்விதத்தில் அவளைப் பார்த்து ஆமோதித்து மையமாகத் தலையசைத்தாள்.

டிரெயின், மெதுவாக ஊர்ந்தபடி முதல் வளைவைத் தொட்டுத் திரும்பிக்கொண்டி ருக்கிறது. இடதுபக்கம், ரிசர்வ் வங்கி பார்வையில் பட்டது. அதற்கு எதிர்ப்பக்கக் கட்டடத்தின் உச்சியில் மிகப்பெரிய கால்பந்து வடிவில் வெள்ளை நிறத் தண்ணீர் டேங்க் ஒன்று உண்டு. வலதுபக்கம் உயர் நீதிமன்றத்தின் நெடிய காம்பவுண்ட், ஒரு சகபயணியைப்போல கூடவே வருகிறது.

ரம்யாவிடமிருந்து பெருமூச்சு ஒன்று வெளிப்பட்டது.

``எவ்ளோ பெரிய பால் பாருங்களேன்! இதை எட்டி உதைச்சா எங்க போய் விழும் ஆன்ட்டி?’’

வெள்ளரிக்காய்ப் பிஞ்சுகள் நிறைந்த கூடை ஒன்றின் பக்கத்தில் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்த மூதாட்டி, பொதுவாக ஒரு சிரிப்பை உதிர்த்தாள்.

``அது எனக்குத் தெரியாது. இப்போ நாம ஒரு செல்ஃபி எடுத்துப்போமா?’’

அவள் உற்சாகமாக ரெடியானாள். அவளுக்காகக் கொஞ்சம் குனிந்தவாக்கில் மொபைலை உயர்த்திப் பிடித்துக்கொண்டபோது ப்ரியம்வதாவின் முட்டைக்கண்கள் மேலும் அழகுற விரிந்து, உதடு பிளக்காமல் சிரித்தபடி இரண்டு விரல்களைக் கத்தரிக்கோல்போலப் பிரித்துக் காட்டி போஸ் கொடுத்தாள்.

டிரெயின், கோட்டை ரயில்நிலையத்துக்குள் மெள்ள நுழைந்து நின்றது.

``வா... வா... அடுத்த கம்பார்ட்மென்ட்டுக்கு ஓடியே போயிரலாம்.’’

இருவரும் வேகவேகமாக இறங்கி, உடனே அடுத்ததில் ஏறிக்கொண்டார்கள்.

``நாம சுகந்தி அக்காகிட்டயே போயிருக்கலாமே ஆன்ட்டி.’’

``அதுக்குள்ள எடுத்துருவான் பாப்பா.’’

சொல்லிக்கொண்டிருக்கும்போதே டிரெயின் கிளம்பியது. அரைமனதாக வெளியே பார்த்தபடி ஒப்புக்கொள்ளும் பாவனையோடு தலையை ஆட்டிக்கொண்டாள்.

``ஏய்... குட்டிச்சாத்தான், சீக்கிரம் ஓடியான்னு சொன்னேன்ல. லொடுக்குன்னு விழுந்துட்ட?’’

பக்கவாட்டிலிருந்து திடீரென ஒலித்த குரலை நோக்கி இருவரும் திரும்பிப் பார்த்தார்கள். இதே யூனிஃபார்மில் உயரமாக இருந்த பெண், மூச்சிரைக்க கோபத்தில் நின்றுகொண்டிருந்தாள். ஓடிவந்து ஏறியிருக்கிறாள். இவள்தான் சுகந்தியாக இருக்கவேண்டும். அவளுடைய முகத்தில் பதற்றம் இருந்தது. விட்டால் அடித்துவிடுவாள்போல ஒரு கடுப்பும் இருந்தது. அதற்கும் முன்னே, அச்சத்தில் ப்ரியம்வதாவுக்கு உதடுகள் துடிக்கத் தொடங்கின.

p52f_1533102268.jpg

``ஏம்மா... உன் தங்கைதான? அவ பேகை நீ வாங்கி வெச்சிருந்திருக்கலாம்ல? எல்லா நாளும் ஒண்ணுபோல இருக்குமா?’’

``கேட்டாலும் கொடுக்க மாட்டா ஆன்ட்டி. அவசரத்துக்கு ரப்பர்கூட ஷேர் பண்ண மாட்டா, தெரியுமா?’’

புகார் கூர்மையாக இருக்கிறது. ஸோ, நம்மாளிடம்தான் கோளாறா? ரம்யாவுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. சட்டென மடங்கி அவள் உயரத்துக்கு இறங்கி உட்கார்ந்துகொண்டு ப்ரியம்வதாவின் கண்களை நேருக்குநேர் சந்தித்தாள். குண்டு குண்டுவென்ற பளிங்குக் கண்கள்.

``அப்போ நான் உன் பேகைக் கையில எடுத்துக்கிட்டப்ப மட்டும் ஒண்ணும் சொல்லாம கொடுத்துட்டியே, ஏனாம்?’’

``டிரெயினை மிஸ்பண்ணிட்டா, கேட்டுக்கு வெளியே தனியா நிக்கணும் ஆன்ட்டி.’’

``அடேங்கப்பா... செம கில்லாடியா நீ?’’

ப்ரியம்வதா, அக்காவைத் திரும்பிப் பார்த்தாள்.

``நடிக்காதடி. இந்த ஆன்ட்டி ஹெல்ப் பண்ண லைன்னா உன்கூடவே நானும் கேட்லதான் நின்னிருப்பேன். இனிமேயாச்சும் பேகை என்கிட்டே கொடுக்கச் சொல்லுங்க ஆன்ட்டி.’’

``நான் சொல்லிட்டா கேட்டுப்பாளா பெரிய மனுஷி?’’

``யார்கூடவும் ஒட்ட மாட்டா ஆன்ட்டி இவ. என் ஃப்ரெண்ட்ஸ் யாரையும் பிடிக்காது இவளுக்கு. உர்ருன்னுதான் உட்கார்ந்தி ருப்பா. பயந்துபோயிருக்கா பாருங்க. நீங்க ஹெல்ப் பண்ணவும் உங்ககிட்ட க்ளோஸாயிட்டான்னு நினைக்கிறேன்.’’
டிரெயின், பூங்காநகர் நிலையத்தில் நின்றது. மேலும் கூட்டத்தை ஏற்றிக்கொண்டு கிளம்பியது.

``அப்படியா பாப்பா?’’

பதில் சொல்லாமல் சிரித்தாள்.

``ஓகே. இனிமே உன்னோட பேகை அக்காகிட்ட கொடுத்துடு. அவ அதை பத்திரமா வெச்சுக்குவா. நீ சூப்பரா எல்லாத்தையும் வேடிக்கை பார்த்துக்கிட்டே வருவியாம். என்னை மாதிரி.’’

சரியென்று அழகாய்ச் சிரித்து, தன்னுடைய சம்மதத்தை வெளிப்படுத்தினாள். சுகந்தி, ரம்யாவிடம் இருந்த தங்கையின் பேகை வாங்கிக்கொண்டாள்.

அடுத்த ஸ்டேஷன் எக்மோர். அவர்கள் இருவரும் இறங்குவதற்குத் தயாராகிக்கொண்டார்கள்.

``நீங்க எங்க இறங்குவீங்க ஆன்ட்டி?’’

``மாம்பலம்.’’

கூட்டத்தினிடையே உட்புகுந்த சொற்பக் காற்று, சுகந்தியின் தலைமுடியை லேசாகக் கலைத்தது.

``இவ, அம்மா செல்லமா... அப்பா செல்லமா சுகந்தி?’’

``எங்களுக்கு அம்மா கிடையாது ஆன்ட்டி. அத்தைதான் எங்களைப் பார்த்துக்கிறாங்க. ஆனா, இவ அப்பா செல்லம் இல்லை.’’

உள்ளுக்குள் ஏதோ பட்டென உடைந்தது. ப்ரியம்வதாவை ஒருமுறை அணைத்துக்கொண்டாள். நெஞ்சு பொங்கியது. சிக்குண்ட கைகளுக்குள்ளிருந்து பதிலுக்கு அவளும் ரம்யாவை இறுக அணைத்து, அவளுடைய கன்னத்தில் பச்சென்று எதிர்பாராமல் முத்தமிட்டாள்.

பிஞ்சு மனத்தின் ஈரம் கன்னத்திலிருந்து காயும் முன் டிரெயின் நின்றது.

``தேங்ஸ் ஆன்ட்டி.’’

இறங்கிய பிறகும் பிளாட்பாரத்தில் நின்றபடி இருவரும் கையசைத்த காட்சி, ரம்யாவின் மனதுக்குள் உருண்டுகொண்டே இருந்தது. இரக்கமில்லாத டிரெயின் நகர்ந்து வேகமெடுத்தது. அடுத்து நேரே மாம்பலத்தில்தான் நிற்கும்.

அத்தனை கூட்டத்துக்கும் நடுவே சட்டெனத் தனித்துவிடப்பட்டவளாகத் தன்னை உணர்ந்தாள்.

ஹேண்ட் பேகுக்குள் கிடந்த செல்போன் ஒலித்தது. அவசரமாக அதன் ஜிப்பைப் பிரித்து வெளியில் எடுத்தாள்.

செல்வராஜ், அட்வகேட்.

``ஹலோ... சொல்லுங்க சார். ஆமா, ஆபீஸ் போயிட்டிருக்கேன். ஹலோ... ஆமா சார்... டிரெயின்ல... ஹலோ... ஹலோ... வாய்ஸ் பிரேக் ஆகுது சார்... ஹலோ...’’

காதிலிருந்து செல்போனை விலக்கி, ஸ்க்ரீனை உற்றுப்பார்த்தாள். இன்னும் கால் கட்டாகவில்லை. ஆனால், சிக்னல் டவர் ஒற்றைப்புள்ளியைக் காட்டி அணைந்து அணைந்து மீண்டுகொண்டிருந்தது.

``ச்சை!’’ என்றபடி துண்டித்துவிட்டாள். காற்றில் புரளும் புத்தகப் பக்கங்கள்போல மனத்தின் நுனி பட படத்துக்கொண்டிருந்தது.

பொருந்தா இடத்தில் மனக்கசப்பை வெளிப்படுத்தும் ஒரு சொல் பதம் தப்பினால், அது விவாகரத்து வரை இழுத்துப்போய் கோர்ட்டில் நிறுத்திவிடும் என்பதை அவள் நினைத்துப்பார்த்திருக்கவில்லை.

பொருந்தாத உறவைப் பற்றிய அபிப்பிராயங்களை உட்கார்ந்து பேசி பரஸ்பரம் அதிலாவது இணங்கி, சச்சரவுகள் இல்லாமல் பிரிந்து வாழ்தல் சாத்தியமில்லாத சூழல்தான், படித்த மனிதர்கள் நிறைந்த நகரங்களிலும் பரவலாய் இருக்கிறது. ரம்யாமீதான வழக்கை வலுப்படுத்த கருணாகரனால் ஜோடிக்கப்பட்ட அவதூறின் கொச்சைத்தனம், இனி மீதமுள்ள வாழ்க்கை முழுவதும் ஏதாவது ஒரு ரூபத்தில் தன்னைத் தொடரப்போகிறது என்பதை நன்கு உணர்ந்த நிமிடத்திலிருந்து அழுவதை முதலில் நிறுத்தினாள். வழக்கை எதிர்கொள்ளத் துணிந்தாள். ஃபிளாட்டில் அவள் மட்டுமே தனித்து வாழ நேர்ந்த தலையெழுத்தை மாற்றி எழுத, அவளுடைய வக்கீல் கடந்த மூன்று ஆண்டுகளாகப் போராடுகிறார்.

அவளுடைய அனுபவத்தில், குடும்பநல நீதிமன்றங்களில் முண்டியடிக்கும் கூட்டத்துக்குள் வியர்வை கசகசக்க நின்றபடி நிமிடத்துக்கு ஒருமுறை கைக்கடிகாரத்தைப் பார்த்துக்கொள்வதில் எந்தவோர் அர்த்தமும் மிஞ்சுவதில்லை.

தன் தரப்புக்கென வக்காலத்தாக நீதிமன்றத்தில் கவுன்ட்டர் ஃபைல் பண்ணியிருப்பதோடு, அதில் ஒரு கோரிக்கையும் இருந்தது. அது, மகள் சம்யுக்தா தன்னிடம்தான் வளரவேண்டும் என்கிற உரிமைகோரலான சைல்டு கஸ்டடி.

சம்யுக்தாவுக்கு ஐந்து வயது பூர்த்தியாகப்போகிறது. அடுத்து அவளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப வேண்டும்.

மீண்டும் போன் கால் வந்தது.

``சார்... சொல்லுங்க சார். சம்யுவோட போட்டோவா? வாட்ஸ்அப் பண்றேன் சார். அடுத்த ஹியரிங்கா? ஓகே சார்... ஓகே சார். நான் ரிமைண்ட் பண்றேன் சார். பாப்பாவ எப்படியாவது என்கிட்ட சேர்த்துவெச்சிருங்க சார். ம்ம்... சார்? இல்லல்ல சார்... சரி சார்... சரி சார். சிக்னல் வீக்கா இருக்கு சார்... இறங்கினதும் அனுப்பிடுறேன் சார்... ஓகே... ஓகே... தேங்ஸ் சார்.’’

போன்கால் கட் ஆன மொபைலில் ஸ்க்ரீன் சேவராகச் சிரிக்கும் சம்யுக்தாவைப் பார்க்கும்போது கலங்கும் கண்களைக் கட்டுப்படுத்தச் சிரமப்பட்டாள். தன்னுடைய கீழ் உதட்டை அழுந்தக் கடித்துக்கொண்டாள்.

காதில் ஹியர்போனுடன் அதுவரையில் தன் மொபைலையே பார்த்துக்கொண்டிருந்த ஓர் இளம்பெண், ரம்யாவை ஒருமுறை ஏறெடுத்துப் பார்த்துவிட்டு மீண்டும் குனிந்துகொண்டாள்.

ரம்யா மீண்டும் முகத்தைப் பக்கவாட்டில் வாசல் பக்கமாகத் திருப்பிக்கொண்டாள். புலனுக்கு அர்த்தமாகாத காட்சிகள் பின்னோக்கி ஓடிக்கொண்டிருந்தன.

மாம்பலம் ஸ்டேஷனில் இறங்கியதும், பரபரவென விரையும் கூட்டத்திலிருந்து ஒதுங்கி மெதுவாக நடந்தபடியே மொபைலின் லாக்கை விடுவித்தாள். வெயில் உஷ்ணம் பரவிய இந்த பிளாட்பாரம், தொலைவில் மேலேறி இரண்டாகப் பிரியும் பாதைகளை நோக்கிய படிக்கட்டுகளைக் குறிவைத்து நீண்டுகிடக்கிறது.

ஸ்டேஷனுக்கு வெளியே கெளரி டூவீலருடன் காத்திருப்பாள். மனம் திறந்து அனைத்தையும் இறக்கிவைக்க வாழ்க்கையில் அமைந்த உற்றதோழி அவள் மட்டுமே.

வக்கீலுக்கு அனுப்புவதற்காக சம்யுக்தாவின் சமீபத்திய புகைப்படத்தைத் தேடுவதற்கு மொபைல் கேலரியைத் திறந்தபோது, சற்றுமுன் எடுத்த செல்ஃபி முதலில் இருந்தது. அதில், தன்னோடு சேர்ந்து முட்டைக்கண் விரிய போஸ்கொடுத்த ப்ரியம்வதாவின் கண்களை உற்றுப்பார்த்தாள் ரம்யா. அந்தப் பார்வையில் இருக்கும் அர்த்தத்தைத் தேட முயன்று தோற்றுப்போனாள்.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • என்னைப் பொறுத்தவரை இங்கு கடைகளில் விற்கும் பொருட்களை வாங்குவதே பாதுகாப்பானதாக இருக்கும் ( 100%  அல்ல). இறக்குமதியாளர்கள் Port Health மற்றும் Trading Standard இன் நடவடிக்கைகளினால் சரியான முறையில் செயற்படுவார்கள்.
    • ஏற்கனவே Necto உட்பட பல Elephant House பானங்கள் இங்கு U.K. தான் Diluting ( சரியான சொல்லா ???). Sugar Levy பிரச்சனையால் . https://www.gov.uk/guidance/check-if-your-drink-is-liable-for-the-soft-drinks-industry-levy#:~:text=You'll pay%3A,8g or more per 100ml @goshan_che சிறீலங்காவில் இருந்து உங்களுக்கு நேரடியாகவரும் மிளகாய் தூள் மற்றும் கோப்பி தூள் என்பவற்றில் Aflatoxin மற்றும் Pesticide residues என்பவற்றின் நிலை என்ன?  
    • 26 APR, 2024 | 03:25 PM   உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதலில் ஈடுபட்ட ஜஹ்ரான்ஹாசிமை வளர்த்தவர் தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர் சுரேஸ் சாலே என ஐக்கியமக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவதளபதியுமான சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். சுரேஸ் சாலே தற்போது தனக்கும்இந்த விடயத்திற்கும் தொடர்பில்லை என காண்பிக்க முயன்றாலும் அவர் இதிலிருந்து தப்ப முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நான் பதவியிலிருந்தவேளை அவரை அரச புலனாய்வு பிரிவிலிருந்து நீக்கினேன் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச அவரை மீண்டும் அந்த பதவிக்கு நியமித்தார் என  சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். சுரேஸ் சாலேயின் வலதுகரமான பொனிபேஸ் பெரேரா கிழக்கிற்கு பொறுப்பான இராணுவஅதிகாரியாக நியமிக்கப்பட்டார் எனவும் தெரிவித்துள்ள சரத் பொன்சேகா சுரேஸ் சாலே என்மீது அவறுதூறு தெரிவித்தால் நான் இந்த ஆவணத்தை சமூக ஊடகங்களில் வெளியிடுவேன் அது அவர் எப்படிப்பட்டவர் என்பதை வெளிப்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார் ஜஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பிலிருந்த இவ்வாறான நபர்களே கௌரவம் மிக்க வீரர்களாக சித்தரிக்கப்படுகின்றனர் எனவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/182029
    • 26 APR, 2024 | 01:25 PM   கிளிநொச்சி கண்டாவளை கல்லாறு பகுதியில் இயங்கிவரும் சட்டவிரோத குழு ஒன்றினால் பெண் தலைமைத்துவக் குடும்பம் உள்ளிட்ட இருவருக்கு வழங்கிய வாழ்வாதார மிளகாய் தோட்டம் ஒன்று நேற்றிரவு (25) அழிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 10 மணிக்குப் பின்னர் இருவருக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட மிளகாய் தோட்டத்திற்குள் நுழைந்த குறித்த சட்டவிரோத குழுவினர் காய்க்கும் நிலையில் காணப்பட்ட மிளகாய்ச் செடிகளைப் பிடுங்கி எறிந்ததோடு, தூவல் முறை நீர் விநியோக குழாய்களை உடைத்து, வெட்டியும் சேதப்படுத்தியுள்ளனர்.   பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றுக்கும் பிரிதொரு குடும்பம் ஒன்றுக்கும் நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி திட்டத்தின் கீழ் பல இலட்சங்கள் செலவு செய்து மேற்கொள்ளப்பட்ட மிளகாய் பயிர்ச் செய்கையே குறித்த சட்டவிரோத குழுவினால் அழிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டவிரோத குழுவில் கல்லாறு மற்றும் பிரமந்னாறு  கிராமங்களைச் சேர்ந்த சில இளைஞர்கள் காணப்படுவதாகவும், இந்தப் பிரதேசங்களில் இடம்பெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வு, திருட்டு,  வாள் வெட்டு, உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் இவர்கள் ஈட்டுப்பட்டு வருவதாகவும் பொது மக்கள் அச்சம் காரணமாக  இவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்வதற்குக் கூட முன்வருவதில்லை என்றும், இருந்த போதிலும் குறித்த மிளகாய் தோட்ட உரிமையாளர்களில் ஒருவரின் மாடு களவாடப்பட்ட விடயத்தில் அவர் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததன் காரணமாக பொலிஸாரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்திய போது அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அக்குழுவைச் சேர்ந்த ஏனையவர்கள் ஒன்று சேர்ந்தே அவரின் மிளகாய் தோட்டத்தை அழித்துள்ளனர் எனப் பிரதேச பொது மக்கள் தெரிவித்துள்ளனர். இக் குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் ஒரு சிலரால் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதும் பொலீஸாரினால உரிய நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளவில்லை என்றும் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/182011
    • விவிபேட்: 100% ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்கக் கோரிய மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி - தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 05:17 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் விவிபேட் - VVPAT (Voter-Verified Paper Audit Trail) இயந்திரங்கள் மூலம் பெறப்பட்ட ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்க வேண்டும் என்று பலதரப்புகளில் இருந்தும் தொடுக்கப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மீண்டும் வாக்குச் சீட்டுக்கு மாற வேண்டும் என்று கோரிய மனுவும் இத்துடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. எனினும் விவிபேட் இயந்திரங்களும் சீல் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேட்பாளர்கள் விரும்பும்பட்சத்தில், வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு வாக்குப் பதிவு இயந்திரங்களில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலர் புரோகிராம்களை பொறியாளர் குழுவால் பரிசோதிப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.   நீதிபதிகள் சொன்னது என்ன? இந்த வழக்கில் மூன்று கோரிக்கைகள் இருந்தன: காகித ஓட்டுமுறைக்கே திரும்புதல் 100% விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்த்தல் ஒப்புகைச் சீட்டுகளை வாக்காளர்களிடம் கொடுத்து அதை மீண்டும் வாக்குப்பெட்டியில் போடச்செய்தல் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்ஜீவ் கன்னா மற்றும் திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த அத்தனை மனுக்களையும் தள்ளுபடி செய்வதாகத் தீர்ப்பளித்திருக்கிறது. நடைமுறையில் இருக்கும் செயல்பாடு, தொழில்நுட்ப விஷயங்கள், தரவுகள் ஆகியவற்றைக் கலந்தாலோசித்த பிறகு இந்த முடிவை எட்டியிருப்பதாக நீதிபதி கன்னா கூறினார். இந்த வழக்கில் இரண்டு தீர்ப்புகள் உள்ளன, ஆனால் இரண்டும் ஒன்றோடொன்று ஒத்துப்போகின்றன என்றார் நீதிபதி கன்னா. தீர்ப்பளித்துப் பேசிய நீதிபதி கன்னா, வாக்கு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னத்தைப் பதிவேற்றியவுடன் அந்தக் கருவியை சீல் செய்து வைத்து, 45 நாட்கள் வரை அவற்றைப் பாதுகாத்து வைத்திருக்கவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களின் மைக்ரோகன்ட்ரோலர்களில் பதிவான 'மெமரியை' தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபின், 2 மற்றும் 3-ஆம் எண்களில் உள்ள வேட்பாளர்களின் கோரிக்கைக்கிணங்க ஒரு பொறியாளர் குழு சரிபார்க்கலாம் என்றும் கூறினர். இந்தக் கோரிக்கை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 7 நாட்களுக்குள் செயப்படவேண்டும். இந்தச் சரிபார்ப்புக்கான செலவீனத்தை கோரிக்கை விடுக்கும் வேட்பாளர் ஏற்க வேண்டும். ஒருவேளை வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்திருந்தால், அந்தத் தொகை திருப்பித்தரப்படும், என்றார் நீதிபதி கன்னா. மேலும், "ஒரு அமைப்பின்மீது கண்மூடித்தனமாக அவநம்பிக்கை கொள்வது அடிப்படையற்ற சந்தேகங்க்களுக்கு இட்டுச்செல்லும்," என்றார் நீதிபதி தத்தா. பட மூலாதாரம்,GETTY IMAGES விவிபேட் இயந்திரம் எப்படி வேலை செய்கிறது? மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் பெயருக்கு அருகே உள்ள பட்டனை வாக்காளர் அழுத்துகிறார். அவர் அழுத்தும் அதேநேரத்தில், வேட்பாளரின் பெயர், எண் மற்றும் சின்னம் அடங்கிய ஒப்புகைச் சீட்டு விவிபேட் இயந்திரத்தில் வாக்காளர்களுக்கு 7 வினாடிகள் தெரியும். அதன் பிறகு, சீட்டு தானாகவே துண்டிக்கப்பட்டு, ஒரு ‘பீப்’ ஒலியுடன் சீல் செய்யப்பட்ட பெட்டியில் சேகரிக்கப்படும். வாக்குப்பதிவின் போது ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால், அது குறித்தும் தெரிவிக்கப்படும். நீங்கள் தீர்மானித்தபடி வாக்களித்தீர்களா என்பதைச் சரிபார்க்க வாக்காளருக்கு வாய்ப்பு கிடைக்கும். விவிபேட் இயந்திரம் ஒரு கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். வாக்களித்த வாக்காளர் மட்டுமே சீட்டில் உள்ள விவரங்களைப் பார்க்க முடியும். விவிபேட் இயந்திரங்களைத் திறக்க தேர்தல் அதிகாரிகளுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. வாக்காளர்கள் விவிபேட் இயந்திரங்களை திறக்கவோ. அவற்றைத் தொடவோ முடியாது. ஒரு விவிபேட் இயந்திரத்தில் உள்ள ஒரு காகித ரோலில் 1,500 ஒப்புகைச் சீட்டுகளை அச்சிட முடியும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள விவிபேட் ஒப்புகளைச் சீட்டுகள் சோதனை செய்யப்பட்டன. பட மூலாதாரம்,GETTY IMAGES EVM-இல் வாக்குகள் எப்படி எண்ணப்படுகின்றன? முதலில், தேர்தல் அதிகாரி மற்றும் அவருடன் பணிபுரியும் அதிகாரிகள் வாக்களிப்பின் ரகசியம் காக்க உறுதிமொழி எடுத்துக்கொள்கிறார்கள். அதன்பிறகு அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் சரிபார்க்கப்படுகின்றன. இது நடக்கும்போது, அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வாக்கு எண்ணும் முகவர்களுடன் வாக்கு எண்ணும் நிலையங்களில் இருக்க உரிமை உண்டு. இந்த முகவர்கள் வாக்கு எண்ணிக்கையை பார்க்கலாம். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதன் பிறகுதான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் குறிப்பிட்ட வரிசையில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இயக்குவதன் மூலம் எண்ணப்படுகின்றன. அதன்பிறகு, பல்வேறு வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் எண்ணப்படுகின்றன. பின்னர் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான எண்கள் கூட்டப்படும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES விவிபேட் ஒப்புகைச் சீட்டுகள் சரிபார்ப்பு கடந்த 2019-ஆம் ஆண்டில், தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கை முடிந்ததும், அவற்றின் மொத்த எண்ணிக்கை விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளுடன் சரிபார்க்கப்பட்டது. ஒவ்வொரு வாக்கு எண்ணும் கூடத்துக்கும் தனி விவிபேட் சாவடி உள்ளது. எண்ணிக்கையில் ஏதேனும் தவறு இருந்தாலோ, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டாலோ அதுபற்றி உடனடியாக தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்க வேண்டியது தேர்தல் நடத்தும் அதிகாரியின் பொறுப்பு. இந்த அறிவிப்பு கிடைத்ததும், அந்த இடத்தில் வாக்கு எண்ணிக்கையைத் தொடரவோ, வாக்கு எண்ணிக்கையை ரத்து செய்யவோ அல்லது மறு வாக்குப்பதிவு நடத்தவோ தேர்தல் ஆணையம் உத்தரவிடலாம். வாக்கு எண்ணிக்கை பிரச்னையின்றி முடிந்து, தேர்தல் ஆணையத்தால் பிற உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படாவிட்டால், தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவை அறிவிக்கலாம். 2019-ஆம் ஆண்டு தேர்தலில் கூடுதல் இயந்திரங்கள் உட்பட 39.6 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 17.4 லட்சம் விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. தேர்தல் ஆணையம் இந்த ஆண்டு சுவிதா என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது, அதில் வாக்குச்சாவடி முடிவுகளைப் பார்க்கலாம்.   பட மூலாதாரம்,ANI வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த சர்ச்சைகள் கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பல எதிர்க்கட்சிகள் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வியெழுப்பின. விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்குமாறு எதிர்க்கட்சிகள் முதலில் உச்ச நீதிமன்றத்திடமும், பின்னர் தேர்தல் ஆணையத்திடமும் கேட்டிருந்தன. ஆனால் நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் இந்தக் கோரிக்கையை நிராகரித்தன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பின்றி கொண்டு செல்லப்படுவதாக சில எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் நிராகரித்து அதில் உண்மை இல்லை என்று கூறியிருந்தது. படக்குறிப்பு,முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ். ஒய். குரேஷி முன்னாள் தேர்தல் ஆணையர் கூறுவது என்ன? முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ். ஒய். குரேஷி இதுகுறித்து பிபிசி-க்கு அளித்த பேட்டியில், தேர்தலில் பொதுமக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்த அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவிபேட் வசதி மற்றும் ஒப்புகைச் சீட்டுகளை எண்ணுதல் ஆகிய இரண்டு கோரிக்கைகளும் ஏற்கப்பட வேண்டும், என்றார். “ஓரிடத்தில் அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்ற முதல் இரண்டு வேட்பாளர்கள் வாக்குச் சாவடியில் மறு வாக்கு எண்ணிக்கை கோரினால், அதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும், இது முழுமையான மறு வாக்கு எண்ணிக்கைக்கான விருப்பத்தை வழங்கும்,” என்றார். தொழில்நுட்ப வல்லுநர்களும் குரேஷியின் இதே கருத்தைத் தெரிவிக்கின்றனர். வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பாக உள்ளதா என்பதைச் சரிபார்க்க விவிபேட் ஒரு தீர்வு என்று அவர்கள் கூறுகின்றனர். பிபிசி மராத்தியிடம் பேசிய புனேவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் மாதவ் தேஷ்பாண்டே, விவிபேட் இயந்திரத்தால் வாக்கு இயந்திரத்தின் கன்ட்ரோல் யூனிட்டுக்கு ஒரு செய்தியை அனுப்ப முடியும் என்றார். அதன்மூலம் அது ஒரு தனி ரசீதை அச்சிட முடிந்தால், அது பாதுகாப்பானதாகக் கருதப்படும், என்றார். “வாக்குப்பதிவுக்குப் பிறகும் விவிபேட் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரத்தின் கன்ட்ரோல் யூனிட் ஆகியவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு சரிபார்க்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார். https://www.bbc.com/tamil/articles/cxwvx23k0pxo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.