Jump to content

ஏ 9 வீதியில் கோர விபத்து- தாயும் -வெளிநாட்டிலிருந்து வந்த மகளும்- உயிரிழந்த சோகம்!!


Recommended Posts

ஏ 9 வீதியில் கோர விபத்து- தாயும் -வெளிநாட்டிலிருந்து வந்த மகளும்- உயிரிழந்த சோகம்!!

 

 

 

IMG-20180806-WA0002.jpg

 
 
 

வெளிநாட்டிலிருந்து வந்த மகளை கொழும்பிலிருந்து அழைத்துக் கொண்டு வீடு திரும்பியவர்கள் ஏ- 9 வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் சி்க்கினர். அதில் தாயும் மகளும் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கோர விபத்து கிளிநொச்சி ஏ 9 வீதி இயக்கச்சிப் பகுதியில் இன்று அதிகாலை நடந்துள்ளது.

வீதியில் முறையற்ற விதத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்சார சபையின் வாகனத்துடன், கொழும்பு இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த கயஸ் வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியது எனத் தெரிவிக்கப்படுகிறது.

 

பருத்தித்துறையை சேர்ந்த குடும்பம் ஒன்று வெளிநாட்டில் இருந்து வந்த தனது மகளை அழைத்து கொண்டு யாழ்ப்பாணம் திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது.

விபத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த மகளும் அழைக்கச் சென்ற தாயும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் 6 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

IMG-20180806-WA0001.jpgIMG-20180806-WA0000.jpgDSC07036-750x430.jpgDSC07035-750x430.jpgDSC07034-750x430.jpgDSC07033-750x430.jpgDSC07032-750x430.jpg

http://newuthayan.com/story/10/ஏ-9-வீதியில்-கோர-விபத்து-தாயும்-வெளிநாட்டிலிருந்து-வந்த-மகளும்-உயிரிழந்த-சோகம்.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுநாயக்காவில் இருந்து நேரா ஊர் போகவேண்டும் என்று, டிரைவர் இரவோட இரவா ஓடி வராதும்.... ஓய்வெடுக்காமல், திரும்புவதும், இப்படி விபத்துகளுக்கு காரணமாகின்றது. பார ஊர்தி நிறுத்தியிருப்பதை தூரத்திலே அவதானிக்க முடியாத தூக்க கலக்கம். 

மதுவைப் போல, நித்திரை கலக்கமும் கொல்லும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

கட்டுநாயக்காவில் இருந்து நேரா ஊர் போகவேண்டும் என்று, டிரைவர் இரவோட இரவா ஓடி வராதும்.... ஓய்வெடுக்காமல், திரும்புவதும், இப்படி விபத்துகளுக்கு காரணமாகின்றது. பார ஊர்தி நிறுத்தியிருப்பதை தூரத்திலே அவதானிக்க முடியாத தூக்க கலக்கம். 

மதுவைப் போல, நித்திரை கலக்கமும் கொல்லும்

அடிக்கடி விபத்துக்கள் கொழும்பிலிருந்து தூக்க கலக்கத்தில் வரும் வாகனங்களே அடிபடுகின்றன 

ஆழ்ந்த அனுதாபங்கள் ஊரைப்பார்க்க பல ஆசைகளுடன் வந்திருப்பார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேருக்கு நேர் மோதுவது வேறு, நித்திரை மயக்கத்தில் வீதியில் நிறுத்தி இருந்த வாகனத்தை பின்னால் வந்து மோதுவது வேறு.

தவறு வான் டிரைவரது தான். 

மேலை நாடுகளில் பார ஊர்தி இயக்குபவர்கள், ஒருநாளுக்கு இவ்வளவு நேரம் தான் ஓடவேண்டும் என்ற சட்டபூர்வ வரையறை உள்ளது.

எங்கே, எத்தனை மணிக்கு கிளம்பினார், எங்கே ஓய்வு எடுத்தார் என்ற பதிவு, டிரைவரிடமும், கம்பனியில் உள்ள அவரது மனேஜரிடமும் மிகச் சரியாக இருக்க வேண்டும். 

ஒரே மாதிரி இல்லாவிடில், அபராதம், லைசன்ஸ் ரத்து. மேலாக, கம்பனி தன்னை விரைந்து செல்ல தூண்டுகிறது என போலீஸாரை டிரைவர் அழைத்தாலும், தூண்டியவர் உள்ள போவார் என்பதால் எல்லாம் ஓர் ஒழுக்கமான முறையில்.

டிரைவருக்கு ஓவர்ரைம் ....? சட்டபூர்வமான தடை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

0.3 மதுசாரம் அவரது சுவாசத்தில் கலந்திருந்தால் வாகனமோட்டும் திறனில் மாற்றமேற்படும் அதனால் வீதியைப்பற்றிய எதிர்வுகூறலும் அதன்பின்னதான செயற்பாடும் வழமையானதாக இருக்காது.  

தொழில்முறைச் சாரதி ஒருவரது  நாலு மணிநேர வாகன ஓட்டுதலுக்குப்பின்பு ஆகக்குறைந்தது இருபது நிமிடம் அதிகூடயதாக நாற்பத்து ஐந்து நிமிடம்  ஓய்வு கட்டாயம் எடுத்தல்வேண்டும் ஆனால் இருபத்துநாஙு மணிநேரத்தில் ஒன்பது மணிநேரம் மட்டுமே வாகனம் ஓடலாம் (அதாவது பயணிகளை ஏற்றிக்கொண்டு) இந்த ஒன்பது மணிநேரத்தில் மேற்கூறிய 45 நிமிட ஓய்வுநேரம் அவரால் எடுத்திருக்கப்படல்வேண்டும்.

வாகனம் அனைத்தும் வருடத்து ஒருதரம் போக்குவரத்துக் கண்காணிப்புக்கட்டுப்பாடளரால் தகுந்தமுறையில் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதுடன் மட்டுமல்லாது பொதுப்போக்குவரத்துக்கான முதலுதவி அவசர வெளியேற்றல் மதுசாரச் சோதனைக்கருவி, சாரதீய வரைகருவி ( பயணகாலம் வாகனசாரதியின் விபரம் வேகம் ஓய்வுநேரம் ஆகியற்றைச் சரியானமுறையில் காட்டும்) பொதுப்போக்குவரத்துக்கான அனுமதிப்பத்திரம் ஐரோப்பிய ஒன்றிய சட்டவரைவுகளுக்கமைவான பொதுப்போகுவரத்துப்பயிற்சி முடித்ததற்கான சான்றிதளட்டை இவைகள் அனைத்தும் உள்ளடக்கியிருக்கவேண்டும். 

தவிர முக்கியமான சாலைகளில் வாகனங்களை நிறுத்துவதற்கான அறிவுறுத்தல்கள் அதன்போது கடைப்பிடிக்கவேண்டிய பிற விடையங்கள் ஆகியவற்றைக் கவனிக்காத வாகன சாரதிகள் அனைவருமாகக்கூடிய தண்டப்பணம் அறவிடப்படும்.

பொதுப்போக்குவரத்துப்பாதைகள் வாகன நெரிசலைக்கவனமெடுத்து கனரக வாகனங்கள் குறிப்பிட்ட நேரத்திற்குத் தடைசெய்யப்படும்.

வாகனச் சாரதிகளுக்கான அனுமதிப்பத்திரப் ப்ரீட்சைகளுக்கான வினாத்தாள்கள் ஆறுமாதங்களுக்கு ஒருமுறை பரிசீலனை செய்யப்படும். புதிய நியமங்கள் உள்வாங்கப்படும் இவை அனைத்தையும் இலங்கையில் கடைப்பிடித்தால் இலங்கையில் ஓடும் டொல்பிஙள் அனைத்தும் பேரீசம்பழத்துகு விற்கப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது பிழை பாரஊர்திகாரனில்த் தான் .ஒரு பாரஊர்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தால் அதற்கு பின்னால் அடையாளப்படுத்த வேண்டும்.குறைந்தது மின்னிமின்னி எரிகிற வெளிச்சத்தை என்றாலும் போட வேண்டும்.

இதற்கப்புறம் தான் இடித்தவரின் பக்கம் திரும்ப வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏ 9 உயிர்ப்பலி எடுக்கிற வீதிகளில் முதன்மையானது.

மேலும்.. நீண்ட தூரப் பயணப் பாதையில்...வேகமாக வாகனங்கள் பயணிக்கும் சூழலில்..  வாகனங்களை வீதி ஓரத்தில் நிறுத்த அனுமதிப்பது போன்ற முட்டாள் தனங்கள் பல உயிர்களைக் காவு கொண்டுள்ளன.

சொறீலங்கா வீதி விதிமுறைகள்.. காலத்தேவைக்கு ஏற்ப நடக்கும் சம்பவங்களை தடுக்கும் நோக்கில் மாற்றி அமைக்கப்படுவதில்லை.

நெடுஞ்சாலைகளில் 5 கிலோமீற்றருக்கு ஒரு வாகனத் தரிப்பிடம்.. அல்லது ஓய்விடத்தை அமைத்துக் கொடுப்பதன் வாயிலாக.. இப்படியான சம்பவங்களை கணிசமாகக் குறைக்கலாம். அத்தோடு உள்ளூர் மக்களின் வியாபாரத்தையும் வருமானத்தையும் அதிகரிக்கலாம்.

ஏ9 சாலை ஆண்டுக்கு அள்ளித்தரும் வருமானத்தில் ஒரு 10 சதவீதத்தை போட்டாலே.. இந்த விடயத்தை இலகுவாகச் சாத்தியமாக்கலாம்.

ஆசாதாரண சூழ்நிலையில்.. தெளிவாக வாகனம் நிறுத்தப்படுவது வேகமாக வரும் வாகனங்களின் சாரதிகள் பாதுகாப்பான தூரத்தில் உணரத்தக்க சமிக்ஞைகள் கொண்டு நிறுத்தப்படுவது தவிர.. வீதியோர வாகன நிறுத்தங்களுக்கு முற்றாகத் தடை போட வேண்டும். தவறுபவர்களின் வாகன அனுமதிப்பத்திரம் நிரந்தரமாக தடை செய்யப்பட வேண்டும். 

குறிப்பாக இராணுவ.. கடற்படை.. விமானப்படை.. வாகனங்கள் பொதுமக்கள் பயணிக்கும் வீதிகளில் பயணிக்க தடை போட வேண்டும். மேலும்.. இராணுவ வாகனங்களை இயக்கும் சாரதிகளுக்கு கடும் கண்டிப்பான கட்டளைகள் வழங்குவதோடு.. மீறுபவர்கள் பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுதல் வேண்டும். குற்றம்.. புரிவோர் கடும் தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். ?

இவை எல்லாம் சொறீலங்காவில் உணரப்படுமே.. அது தான் திருந்துமா...???!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் !

ஒரு பேருந்துக்கு பின்னால் சென்றுகொண்டு இருந்தால் 
பேருந்து ஓட்டுனருக்கு நிறுத்தி இருந்த வாகனம் தெரியும் 
பின்னால் செல்பவருக்கு தெரியாது. பேருந்து ஓட்டுனர் 
அருகில் சென்றதும்  வெட்டி எடுத்து விடுவார். இவர்களுக்கு திடீரெனெ 
தோன்றும் வாகனம் .... நேர் எதிர் திசையில் இருந்து என்ன வருகிறது என்று எதுவும்தெரியாது 
அந்த குழப்பத்தில்தான் இப்படியான விபத்துக்கள் நடக்கின்றன. 

இதை பார்க்கும்போது வான் ஓட்டுநர் பிரேக் அடிக்கவில்லை 
போல தெரிகிறது ..... ஒரு வேளை வெட்டி எடுத்துவிடலாம் என்று 
நம்பியிருப்பர் ... இடைவெளி போதுமானதாக இல்லாமல் 
சென்று மோதியிருக்கலாம்.

வேகமாக போவது என்று முடிவு எடுத்தால் ...
இடைவெளி 
எதிர்பாராத விடயங்களை 
எப்போதும் கடைபிடிக்க எதிர்பார்க்க வேண்டும்.  
இடைவெளி ரொம்ப அவசியம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விபத்துக்கள்

Image may contain: one or more people, people walking and outdoor

புலம்பெயர்ந்து பல வருடங்கள் கழிந்து தாயகத்து உறவுகளை காண ஊர் வரும் நண்பர்கள் , உறவுகள் சொந்தங்களே கொழும்பிலிருந்து வரும் போது பேருந்துகளையோ, அல்லது புகைவண்டிகளையோ பயன்படுத்துங்கள்

உங்கள் அவசர பயணம் விபரீதமாக அமைந்து விடுகிறது வெளிநாடுகளில் கூட இப்படி விபத்துக்கள் அதிகமாக நடப்பதில்லை ஆனால் இலங்கையில் மட்டும் அதிக விபத்துக்கள் எவ்வளவு தண்டப்பணம் விதித்தாலும் தடைகள் விதித்தாலும் விபத்துக்கள் குறைந்தபாடில்லை .

ஒரு சொகுசு வானை வாடகைக்கு எடுத்து வருவதால் உங்களை உசத்தியாகவோ அல்லது மேலை நாட்டுக்காராகவோ நினைக்க வேண்டாம் .

வாகன உரிமையாளர்களோ தற்போது வெளிநாட்டிலிருந்து பலர் வருகை தருவதால் சாரதிகளை மாற்றாமலும் அதிக பணம் சம்பாதிக்கும் நோக்கிலும் அவர்களையே மீண்டும் மீண்டும் பணியில் அமர்த்துவதால் சோர்வாகி போகும் போதிலும் தூக்க கலக்கத்திலும் விபத்துக்கள் கண் இமைக்கும் பொழுதில் நடந்து விடுகிறது.

நடந்த பிறகு இன்னொருவரை குற்றம் சாட்டி பலன் இல்லை ஆக முறையான பயணத்தை கையாண்டு பயணத்தை தொடருங்கள் உறவுகளை சந்தியுங்கள் சந்தோஷ்மாக உங்கள் விடுமுறையை கழித்து விட்டு செல்லுங்கள் .

நம்ம யாழ்ப்பாணம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவங்களின்ரை ஆக்கினை பெரிய ஆக்கினை.....மூலைக்கு மூலை கமராவை வைச்சுக்கொண்டு நிப்பாங்கள். இழுத்து ஓடேலாது......கொஞ்சம் ஸ்பீட் எண்டால் பின்னாலை வந்து நிப்பாட்டி காசு கட்டெண்டு நிப்பாங்கள்.
இப்ப அந்தமாதிரி இழுத்து ஓடலாம்....ரோட்டும் அந்த மாதிரி.....அங்கை பிரச்சனை எண்டு இஞ்சையிருந்து கத்துறவங்களை இழுத்துப்போட்டு மிதிக்கோணும்.

அநியாயமாக மரணித்த அந்த உறவுகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் இன்று இருந்தால் கிளிநொச்சியில் விபத்துக்கள் நடந்திருக்கமாட்டது. வேகமாக வாகனத்தினை ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதித்திருப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, கந்தப்பு said:

அவர்கள் இன்று இருந்தால் கிளிநொச்சியில் விபத்துக்கள் நடந்திருக்கமாட்டது. வேகமாக வாகனத்தினை ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதித்திருப்பார்கள்.

வெறும் அபதாரம் விதிப்பதால் விபத்துக்களை கட்டுப்படுத்த முடியுமா?

கட்டுனாயக்காவிலிருந்து யாழ்ப்பாணம் 380 கி.மீ. இந்த பாதையை ஓடி முடிக்க  8-9 மணி நேரம் எடுக்கிறது.

இதையே அதிவேக நெடும்சாலை போட்டால் 4 மணி நேரம் போதுமானது.

அவசர அவசரமாக யாழுக்கு புகையிரதத்தை ஓட வைத்தவர்கள்.ஏன் இன்னமும் நெடுஞ்சாலைகளை அமைக்கவில்லை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Ahasthiyan said:

விபத்துக்கள்

Image may contain: one or more people, people walking and outdoor

புலம்பெயர்ந்து பல வருடங்கள் கழிந்து தாயகத்து உறவுகளை காண ஊர் வரும் நண்பர்கள் , உறவுகள் சொந்தங்களே கொழும்பிலிருந்து வரும் போது பேருந்துகளையோ, அல்லது புகைவண்டிகளையோ பயன்படுத்துங்கள்

உங்கள் அவசர பயணம் விபரீதமாக அமைந்து விடுகிறது வெளிநாடுகளில் கூட இப்படி விபத்துக்கள் அதிகமாக நடப்பதில்லை ஆனால் இலங்கையில் மட்டும் அதிக விபத்துக்கள் எவ்வளவு தண்டப்பணம் விதித்தாலும் தடைகள் விதித்தாலும் விபத்துக்கள் குறைந்தபாடில்லை .

ஒரு சொகுசு வானை வாடகைக்கு எடுத்து வருவதால் உங்களை உசத்தியாகவோ அல்லது மேலை நாட்டுக்காராகவோ நினைக்க வேண்டாம் .

வாகன உரிமையாளர்களோ தற்போது வெளிநாட்டிலிருந்து பலர் வருகை தருவதால் சாரதிகளை மாற்றாமலும் அதிக பணம் சம்பாதிக்கும் நோக்கிலும் அவர்களையே மீண்டும் மீண்டும் பணியில் அமர்த்துவதால் சோர்வாகி போகும் போதிலும் தூக்க கலக்கத்திலும் விபத்துக்கள் கண் இமைக்கும் பொழுதில் நடந்து விடுகிறது.

நடந்த பிறகு இன்னொருவரை குற்றம் சாட்டி பலன் இல்லை ஆக முறையான பயணத்தை கையாண்டு பயணத்தை தொடருங்கள் உறவுகளை சந்தியுங்கள் சந்தோஷ்மாக உங்கள் விடுமுறையை கழித்து விட்டு செல்லுங்கள் .

நம்ம யாழ்ப்பாணம்

 

 கொண்டுபோற பெட்டி சுமைகளை 
பஸ்ஸுக்கும் ரயிலுக்கு சுமந்து தெரிய வேண்டும் அல்லவா ?
அதுக்கு ஏதும் வழி  இருக்குமா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

 கொண்டுபோற பெட்டி சுமைகளை 
பஸ்ஸுக்கும் ரயிலுக்கு சுமந்து தெரிய வேண்டும் அல்லவா ?
அதுக்கு ஏதும் வழி  இருக்குமா ?

கட்டுநாயக்கா விமான நிலையம் அருகே அரச பேருந்துகள் தரித்து நிற்கின்றன  மட்டக்களப்பு ,கல்முனைக்கு ஆனால் வடக்கு பக்கம் என்ன மாதிரியென்று அறிய முடியல ஆனால் யாழ்ப்பாண பேருந்து நிலையம்  விமான நிலையத்துக்கு பஸ்களை போக்குவரத்துக்கு விட முடியும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலதிகமாக இன்ரசிற்றி எக்பிரஸ் ரயிலை, இரவு 11:30/ 11:45 மணிக்கு இருபக்கமும் ஓட்டலாமே, சனமும் பகல்நேரத்தை சேமிப்பதுடன், பாதுகாப்பாக இரவில் பயணிக்கலாம, அரசுக்கும் வருமானம் என்று ஒரு ரயில்வே உயர்பதவியில் உள்ள நணபருக்கு சொன்ன போது, இரு பக்கமும் பார்த்து விட்டு சிரித்தவாறே சொன்னார்; பஸ் ஓனர்களில் பலர் அமைச்சர்கள், அதுதான் விசயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுபோல் எத்தனை நடந்து விட்டது. வாகன ஓட்டுனர்களின் அசட்டைதனமே காரணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு முறையும் இப்படி விபத்துக்கள் நட்க்கையிலை சமூக ஊடகம்கள் தொடக்கம் இங்கு யாழ் வரை கருத்துக்கள் பயங்கரமாய் ஓடி விளயாடும் கொஞ்ச நாள் போனபின் மறந்துவிடுவார்கள் பின் அடுத்த விபத்து நடக்கும்மட்டும் அமைதியாய் போகும் ஆனால் இந்த விபத்தால் நடந்த பட்டறிவை கொண்டு அடுத்த விபத்துக்களை  தவிர்க்க முடியாமல் தொடர்வது படு கேவலமாய் இருக்கும் . இந்த கொழும்பு யாழ் வீதியில் முறையான தரிப்பிடமின்ரி வீதியின் பக்கத்தில் ஆபத்தை விளைவிக்கும் வண்ணம் நின்ற பாரவூர்த்திகளால் இதுவரைக்கும் 10க்கும் மேல பாரதூரமான உயிரழப்புடன் கூடிய விபத்துக்கள் நடந்துள்ளன .திருந்துவதுக்கு சான்ஸ் இல்லை . ஆனையிறவு தாண்டியவுடன் யாழ் வந்துவிட்டம் எனும் உந்துதல் இன்னும் வேகமாக ஓடியிருக்கிறார் யுத்தம் முடிந்தபின்னரும் யுத்தத்தின் போது உயிருக்கு குடுத்த மதிப்பு இன்னும் தொடர்கிறது போல் உள்ளது ..............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ஈழப்பிரியன் said:

வெறும் அபதாரம் விதிப்பதால் விபத்துக்களை கட்டுப்படுத்த முடியுமா?

கட்டுனாயக்காவிலிருந்து யாழ்ப்பாணம் 380 கி.மீ. இந்த பாதையை ஓடி முடிக்க  8-9 மணி நேரம் எடுக்கிறது.

இதையே அதிவேக நெடும்சாலை போட்டால் 4 மணி நேரம் போதுமானது.

அவசர அவசரமாக யாழுக்கு புகையிரதத்தை ஓட வைத்தவர்கள்.ஏன் இன்னமும் நெடுஞ்சாலைகளை அமைக்கவில்லை?

வீதி ஒழுங்குகளுக்கு மேலைத்தேய நாடுகளிலும் அபராதம் எனும் பெயரில்தான் சட்டங்களை அமுல்படுத்தி வருகின்றார்கள். அடிதடிகளை பிரயோகிக்க மாட்டார்கள். வீதிகளின் நிலவரம் இரண்டாம் பட்சம். tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.