Jump to content

சிலை கடத்தல் வழக்கு சி. பி .ஐக்கு மாற்றியதில் எந்த உள்நோக்கமும் இல்லை - ஜெயக்குமார்


Recommended Posts

சிலை கடத்தல் வழக்கு  சி. பி .ஐக்கு மாற்றியதில் எந்த உள்நோக்கமும் இல்லை - ஜெயக்குமார்

 

 

தமிழகத்தில் நடைபெற்ற சிலைக்கடத்தல் வழக்கை விசாரிக்கும் பொறுப்பை சி. பி. ஐக்கு மாற்றியதில் தமிழக அரசிற்கு எந்த உள்நோக்கமும் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக மேலும் தெரிவித்ததாவது, 

news_image_political_3_8_18.jpg

‘சிலை கடத்தல் பிரச்சினை சர்வதேச அளவிலான பிரச்சினை. தமிழக பொலிஸார் ஸ்கொட்லாந்து பொலிஸாருக்கு இணையான வல்லமை பெற்றது என்பதில் மாற்று கருத்து இல்லை. 

சர்வதேச பிரச்சினை என்பதால் சி. பி. ஐ அமைப்பை நாடவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. சி பி ஐக்க மாற்றினாலும் அல்லது மாற்றாவிட்டாலும் கேள்வி எழுப்புகின்றனர். 

குறித்த விவகாரத்தில் குற்றம் இழைத்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டம் முன் நிற்கவேண்டும் என்பது தான் அரசின் ஒரே நோக்கம். அதனால் சிலை கடத்தல் வழக்குகள் விசாரிக்கும் பொறுப்பை சி .பி .ஐ.வசம் மாற்றியதில் தமிழக அரசிற்கு எந்த உள்நோக்கமும் இல்லை.’ என்றார்.

http://www.virakesari.lk/article/37808

Link to comment
Share on other sites

ஜெயலலிதாவையே சிறைக்கு அனுப்பியவர் கவிதா! புதிய தகவல்கள்

 
 

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் உற்சவர் சிலை தங்க மோசடியில் இந்து அறநிலையத்துறை கூடுதல் இணை ஆணையர் கவிதா கைது செய்யப்பட்டுள்ளார். அதிர்ச்சி தருவதாக இருக்கிறது கவிதாவின் அரசியல் பின்னணி! 

ஜெயலலிதாவையே சிறைக்கு அனுப்பியவர் கவிதா! புதிய தகவல்கள்
 

சிலை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவின் பின்னணி, ஆச்சர்ய ரகம்! ஆம், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இரண்டு தரப்பிலுமே நேரடியாக மேலிடங்களுடன் பேசும் அளவுக்கு செல்வாக்கு மிக்கவராக வலம் வந்திருக்கிறார் கவிதா.

'சசிகலாவின் உறவினர் என்பதால்தான் கவிதாவை தமிழக அரசு அவரைப் பழிவாங்குகிறது என ஒரு தரப்பினரும், இல்லையில்லை தமிழக அரசு கவிதாவை காப்பாற்ற முயற்சிக்கிறது. அதனால்தான் வழக்கையே சி.பி.ஐ-க்கு மாற்றுகிறது என மற்றொரு தரப்பினரும் சொல்லிவருகிறார்கள். இந்நிலையில், கவிதாவின் உண்மையான பின்னணி என்பது குறித்து விசாரிக்கக் களத்தில் இறங்கினோம். தங்கள் அடையாளங்களை வெளிப்படுத்தாமல் சிலர் நம்மிடையே பேசினார்கள்.

யார் இந்த கவிதா? 

 

 

கவிதா - ஜெயலலிதா பின்னணி

அவர்கள் சொல்வது இதுதான்-

திருநெல்வேலியைப் பகுதியை பூர்விகமாகக் கொண்டவர் கவிதா. பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்த இவர், சட்டப்படிப்பு முடித்து சென்னையில் வழக்கறிஞராகப் பணியாற்றியவர். பாரம்பர்ய தி.மு.க. குடும்பத்தைச் சேர்ந்த இவர், தமிழகத்தையே அதிரச் செய்த கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக வாதாடியவர். 

 
 
 

 

கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே வழக்கு! 

ஜெயலலிதா முதன் முறையாக முதல்வரானபோது அவர் மீது பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்தன. அதில் கொடைக்கானலில் உள்ள பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கு மிக முக்கியமானது. 1991 -96 ஆட்சிக்காலத்தில் இந்த ஹோட்டலுக்கு விதிமுறைகளை மீறி அனுமதி வழங்கியதாக அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா, உள்ளாட்சித்துறை அமைச்சர் செல்வகணபதி ஆகியோர் மீது புகார் எழுந்தது. தி.மு.க தரப்பில் தொடரப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பு 2000ல் வழங்கப்பட்டது. அதில் ஜெயலலிதா குற்றவாளி என அறிவிக்கப்பட்டு ஓராண்டு சிறைத் தண்டனையும் அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் 2001ம் ஆண்டு மேல்முறையீடு செய்து விடுதலையானார் ஜெயலலிதா. இந்த வழக்கில் சீனியர் வழக்கறிஞர் ஒருவரிடம் ஜூனியராக பணியாற்றியவர் கவிதா. சீனியருக்கு முக்கிய தரவுகளை எடுத்துக் கொடுப்பது, சீனியர் வராதபோது தானே வழக்காடுவது என முக்கிய பங்காற்றியிருக்கிறார். ஒரு வழக்கறிஞராக இந்த வழக்கில் கவிதா கட்டிய தீவிரமும் அவரது விடாமுயற்சியும் அளப்பறியது.

 

 

குடும்பப் பின்னணி! 

இரும்புத்திரை படபிடிப்பில் கவிதாவின் மகன் மித்ரன்

கவிதாவின் தந்தை, முன்னாள் முதல்வர் அண்ணாதுரைக்கு இந்தி மொழிபெயர்ப்பாளராகவும், உதவியாளராகவும் பணியாற்றியவர். அதனால் தி.மு.கவில் கவிதாவின் குடும்பம் செல்வாக்கோடு இருந்தது. வழக்கறிஞராகப் பணியாற்றிய காலத்தில், சரவணன் என்ற வழக்கறிஞரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார் கவிதா. சரவணன், சசிகலாவுக்கு உறவினர். அதாவது, சசிகலாவின் அண்ணி இளவரசியின் சம்பந்தியான திருச்சியைச் சேர்ந்த பொறியாளர் கலியபெருமாள், சரவணனின் சித்தப்பா. இதனால் திருமணத்திற்கு பிறகு அ.தி.மு.கவிலும் கவிதாவுக்கு செல்வாக்கு ஏற்பட்டது. அ.தி.மு.கவில் ஏற்பட்டுள்ள நெருக்கத்தால் போயஸ் கார்டனில் சர்வசாதாரணமாகச் சென்றுவரக்கூடியவராக இருந்தார் சரவணன். கவிதாவின் மகன் மித்ரன், விஷால் நடித்த ‘இரும்புத்திரை’ படத்தின் இயக்குநர்.  

தி.மு.க., அ.தி.மு.க உறவு! 

முன்னாள் முதல்வர் அண்ணாதுரை மற்றும் தன் தந்தைக்கும் உள்ள நெருக்கத்தின் காரணமாக, தி.மு.க ஆட்சியின்போது அதன் முக்கிய பிரமுகர்களிடம் சர்வசாதாரணமாக பேசக்கூடியவராக இருந்தார் கவிதா. அதேபோல் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால், கணவர் சரவணன் மூலமாக, அந்தக் கட்சியினரிடமும் சர்வசாதாரணமாகப் பழகி வந்தார். தி.மு.கவைச் சேர்ந்த பெரியகருப்பன் அறநிலையத்துறை அமைச்சராக இருந்தபோது கவிதாவுக்கு பணிமாறுதல் கொடுக்கப்பட்டது. அப்போது முதல்வர் கருணாநிதியே தலையிட்டு அந்த உத்தரவை ரத்து செய்ததாகக் கூறப்படுகிறது. கருணாநிதி முதல்வராக இருந்தபோதுதான் கவிதாவின் தந்தைக்கு தமிழ்நாடு குடியிருப்பு வாரியம் மூலமாக மயிலாப்பூரில் வீடும் வழங்கப்பட்டதாம். 

அரசுத்துறையில் அசுர வளர்ச்சி! 

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்

கவிதாவின் வளர்ச்சி பற்றி பேசும் அறநிலையத்துறை முன்னாள் ஊழியர்கள் சிலர், ''தனபால் இணை ஆணையராக இருந்தபோது, அவர் சார்ந்த சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே கவிதாவுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது. ஆணையராக தனபால் பதவி உயர்வு பெற்றபோது, திருப்பணி இணை ஆணையராக கவிதாவை உயர்த்தினார். அதன் பிறகு திருப்பணி கூடுதல் ஆணையராக பதவி உயர்வு பெற்றார் கவிதா. சென்னையில் உள்ள எல்லா அதிகாரிகளுக்கும் பணிமாறுதல் கிடைக்கும். ஆனால், கவிதாவும், தனபாலும் அதிகார பலத்தால் சென்னையிலேயே கோலோச்சி வந்தனர். கவிதாவின் அசுர வளர்ச்சி அவருடன் பணியில் சேர்ந்தவர்களை பிரமிப்படைய செய்தது. அவரை எதிர்த்துக் கொண்டு யாரும் அங்கே பணியாற்ற முடியாத சூழல் உருவானது. அதனால், அவருக்கு இணையான அதிகாரிகள் பலரே... கப்சிப் ஆகிவிட்டனர்.

கைது செய்தால் காட்டிக் கொடுப்பேன்! 

பொன்.மாணிக்கவேல்

இந்த விவகாரம் பற்றி ஆரம்பம் முதல் கவனித்துவரும் ஆன்மிக அன்பர்கள் சிலர், ''பழநியில் இருக்கும் தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் புதிதாக செய்யப்பட்ட முருகன் உற்சவர் சிலை முறைகேடு வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜரான இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் தனபால் தற்போது வீட்டுச் சிறையில் இருக்கிறார். காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் உற்சவர் சிலை மோசடி மற்றும் பழனி தண்டாயுதபாணி சிலை மோசடி ஆகிய வழக்குகளில் முத்தையா ஸ்தபதி வீட்டுக் காவலில் இருக்கிறார். கவிதாவை கைது செய்யத் தகுந்த ஆதாரம் வேண்டும் என்பதற்காக, முத்தையா ஸ்தபதி உள்ளிட்டவர்களுக்குச் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவினர் வலை விரித்தார்கள். முத்தையா ஸ்தபதி கொடுத்த வாக்குமூலத்தை வைத்தே கவிதாவிடம் விசாரணையைத் தொடங்க நினைத்தார்கள். ஆனால், பலம் பொருந்திய கவிதாவை, அத்தனை எளிதாக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினரால் நெருங்க முடியவில்லை. ‘என்னைக் கைது செய்தால், அனைவரையும் காட்டிக் கொடுத்துவிடுவேன்’ என உயர் அதிகாரிகள் பலருக்கும் மிரட்டல் விடுத்ததாகக்கூறப்படுறது. இதனால் முக்கிய அமைச்சர் ஒருவர், பொன்.மாணிக்கவேலிடம் பேச்சுவார்த்தை நடத்திப்பார்த்தார். ஆனால், பொன்.மாணிக்கவேல் பின்வாங்குதாக இல்லை. 

சோமாஸ் கந்தர் உற்சவர் சிலை

கடந்த 7 மாதமாகச் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு ஒத்துழைப்பு தராமல் இருந்துவந்தார் கவிதா. ஏகாம்பரநாதர் கோயில் உற்சவர் சிலை விஷயத்தில் 50 லட்சம் வாங்கினார் கவிதா என்று அர்ச்சகர் ஒருவர் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில்தான் கடந்த 31ம் தேதி கவிதாவைக் கைது செய்துள்ளனர். இந்த நிலையில், ‘எல்லாமே கமிஷனர் சொன்னார்... நான் வெறும் கையெழுத்து மட்டுமே போட்டேன்’ எனக் கும்பகோணம் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறாராம் கவிதா.

கவிதாவை கைது செய்ததும் தமிழக அரசே நிலைகுலைந்துவிட்டது. அவர் வாயைத் திறந்தால் தி.மு.க மற்றும் அ.தி.மு.கவில் உள்ள பல முக்கிய புள்ளிகளும், முன்னாள் - இந்நாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளும் இதில் சிக்குவார்கள். அது, ஆட்சிக்கே கூட உலை வைக்கும் அளவுக்கு விஸ்வரூபம் எடுக்கும் என்பதால்தான், வழக்குகளை சி.பி.ஐ-க்கு மாற்றும் முடிவைத் தமிழக அரசு எடுத்துள்ளது” என அதிர்ச்சி கிளப்புகிறார்கள். 

அட, ஆண்டவா!

https://www.vikatan.com/news/coverstory/133062-kavitha-appeared-as-an-advocate-in-jayalalitha-case-and-more-info-on-her.html

Link to comment
Share on other sites

`உண்மையைச் சொன்னால் கவிதா மட்டுமல்ல...' -  ஆதாரங்களுடன் ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் 

 

மாணிக்கவேல்

சிலை தடுப்புப் பிரிவு போலீஸ் ஐ.ஜியான பொன்.மாணிக்கவேலின் கையிலிருக்கும் ஆதாரங்கள் ஆளுங்கட்சியைச் சேர்ந்த இரண்டு பேருக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சிலை தடுப்புப் பிரிவு போலீஸ் ஐ.ஜியான பொன்.மாணிக்கவேலின் அதிரடி நடவடிக்கை, தமிழக இந்து சமய அறநிலையத்துறையினருக்கு மட்டுமல்லாமல், ஆளுங்கட்சியினருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியது. இதனால்தான் இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும் என்று ஆளுங்கட்சியினர் ஆர்வம்காட்டியதோடு ஆணையையும் பிறப்பித்தனர். தமிழகக் கோயில்களில் திருட்டுப்போன சிலைகளைக் கண்டுபிடித்தபோது ஆளுங்கட்சியினர் பொன்.மாணிக்கவேலின் செயலைப் பாராட்டிப் பேசினர். நீதிமன்றம்கூட, ரயில்வே ஐ.ஜி-யாக பொன்.மாணிக்கவேல் மாற்றப்பட்டபோது சிலை வழக்குகளை பொன்.மாணிக்கவேல் விசாரிக்க நீதிமன்றம் தனி உத்தரவை பிறப்பித்தது.

 

 

ராஜராஜ சோழன் சிலையைக் கண்டுபிடித்து தஞ்சாவூருக்கு கொண்டுவந்த பொன்.மாணிக்கவேலுக்கு பாராட்டுகள் குவிந்தன. சிலைகளைக் கண்டுபிடித்த அவர், தங்கச் சிலைகள், தங்கக் கோபுரங்கள் செய்ததில் நடந்த முறைகேடுகளைக் கண்டுபிடித்தது ஏனோ ஆளுங்கட்சியினருக்குப் பிடிக்கவில்லை. பழனியில் ஸ்பதி முத்தையா, முன்னாள் ஆணையர் தனபால் ஆகியோர் மீது பொன்.மாணிக்கவேல் நடவடிக்கை எடுத்ததை ஆளுங்கட்சியினர் ரசிக்கவில்லை. இன்னும் சில மாதங்களில் பொன்.மாணிக்கவேல் ஓய்வு பெற்றுவிடுவார் என்று ஆளுங்கட்சியினர் அமைதியாக இருந்தனர். ஆனால், ஓய்வு பெறுவதற்குள் சிலை முறைகேடுகளில் தொடர்புடையவர்களை சும்மா விடமாட்டேன் என்று பொன்.மாணிக்கவேல் டீம் கூடுதல் ஆணையர் கவிதாவை கைதுசெய்தது. கவிதாவுக்கு எதிராக காஞ்சிபுரம் கோயில் சிலை முறைகேடு மட்டுமல்லாமல் திருவேற்காடு கோயில், திருத்தணி கோயில் எனப் பட்டியல் உள்ளது. 

 

 

இந்து அறநிலையத்துறையின் திருப்பணிகளின் கூடுதல் ஆணையரான கவிதா, அந்தப்பதவியில் நீண்டகாலமாக இருந்துவருகிறார். தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் நடக்கும் திருப்பணிகளை கவனித்துவந்த கவிதா மீது மூன்று ஆண்டுக்கு முன்பிலிருந்தே குற்றச்சாட்டுக்கள் குவியத் தொடங்கின. ஆனால், சில காரணங்களால் கவிதா இடமாற்றம் செய்யப்படுவது தடுக்கப்பட்டது. கவிதாவுக்கு பக்கப்பலமாக இருந்தவர்கள் ஓய்வு பெற்றதும் அவர் மீது நடவடிக்கைகள் பாயத் தொடங்கின. கவிதாவின் சொந்த ஊர் தஞ்சாவூர். மயிலாப்பூரில் குடியிருந்தார். 

கவிதா கைதானதும் அவருக்கு ஆதரவாக சிலர் அறிக்கை விட்டனர். அவரை ஜாமீனில் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தச் சூழ்நிலையில் கவிதாவின் கைது படலத்தோடு சிலை வழக்குகள் சி.பி.ஐ-யிடம் மாறப்போகிறது. பொதுவாக காவல்துறையில் சிலை தடுப்புப் பிரிவுப் பணி என்பது தண்டனைக்குரிய பணியாக கருதப்படும். லத்திகா சரண், டி.ஜி.பி-யாக இருந்தபோதுதான் சிலை கடத்தல் மன்னன் சுபாஷ்கபூருக்கு கடிவாளம் போடப்பட்டது. அப்போதும் பொன்.மாணிக்கவேல் அப்பிரிவில்தான் இருந்தார். சர்வதேச நெட்வொர்க் கும்பலுடன் சுபாஷ் கபூருக்கு உள்ள தொடர்புகள், உள்ளூர் பிரமுகர்கள் என எல்லாவற்றையும் விசாரணை மூலம் வெளியில் கொண்டுவந்தார் பொன்.மாணிக்கவேல். 

கவிதாவையடுத்து, ஆளுங்கட்சிக்கு நெருக்கமான இரண்டு பேருக்கு சிலை தடுப்புப் பிரிவு போலீஸார் குறி வைத்திருந்தனர். இந்தத் தகவல் ஆளுங்கட்சியினருக்குத் தெரியவந்ததும் உஷரான அவர்கள் பொன்.மாணிக்கவேலுக்கு செக் வைத்துள்ளனர். நீதிமன்றத்தில் பொன்.மாணிக்கவேல், சமர்ப்பிக்கவுள்ள ஆதாரங்களில் ஆளுங்கட்சியினரின் பெயர்கள் இடம்பிடிக்கும் என்று சொல்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள். முன்னதாக பொன்.மாணிக்கவேலுக்கு எந்தவித ஆதாரங்களும் கிடைத்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றனர் இந்து சமய அறநிலையத்துறையினர். திருவேற்காடு கோயிலில் கவிதா தொடர்பான ஆதாரங்கள் எல்லாம் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளதாம்.

 

 

ஆளுங்கட்சியினரின் தலையீடு காரணமாகச் சிலை தடுப்புப் பிரிவில் உள்ள போலீஸாரில் சிலர், பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக சில செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தனக்கு நம்பிக்கைக்குரியவர்கள் மூலம் ஆதாரங்களைத் திரட்டி சேகரித்துவைத்துள்ளார் பொன்.மாணிக்கவேல். இதற்காக அவரின் டீம் இரவு பகல் எனப் பாராமல் ஆதாரங்களைத் திரட்டியுள்ளது. அந்த ஆதாரங்கள் நீதிமன்றங்களில் சமர்ப்பிக்கப்படும்போது நிச்சயம் ஆளுங்கட்சியைச் சேர்ந்த இரண்டு முக்கிய நபர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்கின்றனர்' உள்விவரம் தெரிந்தவர்கள்.

https://www.vikatan.com/news/tamilnadu/133030-ig-ponmanickavel-intervention-may-create-political-storm.html

Link to comment
Share on other sites

சிலை வழக்கு - சி.பி.ஐ சிக்கல் - ஆர்ப்பரிக்கும் ஐ.ஜி... ஆடிப்போன ஆட்சி!

3223_thumb.jpg

 

ந்த விஷயத்திலும், ‘சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடலாம்’ என கோர்ட் சொன்னால், அதைத் தமிழக அரசு கடுமையாக எதிர்க்கும். ஆனால், ‘சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றப்போகிறோம்’ என்று தமிழக அரசே கோர்ட்டில் தெரிவித்த விநோதம் நிகழ்ந்திருக்கிறது. ஆகஸ்ட் 1-ம் தேதி இப்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் சொல்லிவிட்டு, மறுநாளே இதற்காக தமிழக அரசு வெளியிட்ட அரசாணை, தமிழகம் முழுக்க பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணியாகக் கிசுகிசுக்கப்படும் தகவல், இந்த அதிர்ச்சியைக் கூட்டுகிறது. ‘ஐ.ஜி பொன்.மாணிக்கவேல், சிலைக்கடத்தல் தொடர்பான விசாரணையை மிகக்கறாராக நடத்திக்கொண்டிருக்கிறார். ஆர்ப்பரிக்கும் இவரின் விசாரணை, கடைசியில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியையே ஆட்டம்காணச் செய்யும் அளவுக்குப் போய்க்கொண்டிருக்கிறது என்று உளவுத்துறை கொடுத்த தகவலின் அடிப்படையில்தான், சி.பி.ஐ விசாரணை என்கிற பெயரில் விசாரணையையே மொத்தமாகக் குழிதோண்டிப் புதைக்கத் தீர்மானித்துவிட்டனர்’ என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.

p42a_1533298554.jpg

தமிழகக் கோயில்களில் நடந்த சிலைக்கடத்தல்கள் மற்றும் புதிய சிலைகள் உருவாக்கப்பட்டதில் நடந்த முறைகேடுகள் தொடர்பான வழக்குகள் வேகமெடுத்து வருகின்றன. அறநிலையத்துறை முன்னாள் கமிஷனர் தனபால், தமிழக அரசின் தலைமை ஸ்தபதி முத்தையா, கூடுதல் கமிஷனர் கவிதா... என்று அடுத்தடுத்து பலர் கைதாகிவருகிறார்கள். இந்த லிஸ்ட்டில், மேலும் சில முக்கிய அதிகாரிகளின் பெயர்களும் உள்ளன. ‘சிலைகள் திருடுபோனதற்கு உடந்தை; கோயில் திருப்பணிகளில் ஊழல்; சிலைசெய்யும் பணிகளுக்காக நன்கொடை என்கிற பெயரில் தங்கம் வாங்கியதில் முறைகேடு...’ என்று விதம்விதமான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்தான் ஒவ்வொருவரும் கைதாகிவருகின்றனர்.
அடுத்தகட்டமாக முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் என்று 67 பேரின் லிஸ்ட் தயாராக இருக்கிறது. இவர்கள் அனைவரையும் அடுத்தடுத்து கைது செய்யவும் பொன்.மாணிக்கவேல் ரெடி. வரும் நவம்பர் மாதத்தில்தான் ஓய்வுபெறுவதற்கு முன்பாகவே இந்த லிஸ்டில் உள்ள அத்தனை பேரையும் கைது செய்து, சிலைக்கடத்தல் மற்றும் முறைகேடுகள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறார் பொன்.மாணிக்கவேல். அதை மோப்பம்பிடித்த உளவுத்துறை, ‘சசிகலாவின் சமூகத்தைச் சேர்ந்தவரான பொன்.மாணிக்கவேல், அந்தக் குடும்பத்துக்கும் நெருக்கம். சிலைக்கடத்தல் வழக்கைக் கையில் வைத்துக்கொண்டு ஆட்சியையே கவிழ்க்க அவர் ரகசியத் திட்டம் தீட்டுகிறார்’ என்று தகவல் தர, அனைவரும் மிரண்டுவிட்டனர். இதையடுத்து, சீனியர் அமைச்சர்கள் சிலர் ஆட்சி மேலிடத்துக்கு நெருக்கடியைக் கொடுக்கவே, சி.பி.ஐ வசம் வழக்கை ஒப்படைக்கும் கொள்கை முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

முதலில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சோமாஸ்கந்தர் சிலை வழக்கைத்தான் கையில் எடுத்தார் பொன்.மாணிக்கவேல். 2015-ல் இந்த சோமாஸ்கந்தர் உற்சவர் சிலை பழுதடைந்ததால், புதிய சிலை செய்ய உத்தரவு பெறப்பட்டது. 50 கிலோ எடையில், ரூ.2.12 கோடி செலவில் புதிய உற்சவர் சிலை செய்யப்பட்டு, 2016-ம் ஆண்டு டிசம்பரில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. ‘இதில், 5 சதவிகிதத் தங்கம்கூட கலக்கப்படவில்லை. மொத்தத்தையும் சுருட்டிவிட்டனர்’ என்று அண்ணாமலை என்பவர், காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றப் படியேறியதுதான் இதற்கு அடிப்படை. தமிழக அறநிலையத்துறை தலைமை ஸ்தபதி முத்தையா உள்ளிட்ட ஒன்பது பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால், சிலர் முன்ஜாமீன் பெற்றனர்.

இதையடுத்து, பழனியில் முருகனுக்கு ஐம்பொன் சிலை செய்யப்பட்டதிலும் தங்க மோசடி நடந்திருக்கும் விஷயத்தைக் கையில் எடுத்த பொன்.மாணிக்கவேல், ஓய்வுபெற்ற இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தனபால், ஸ்தபதி முத்தையா, கோயில் முன்னாள் இணை ஆணையர் கே.கே.ராஜா, முன்னாள் உதவி ஆணையர் புகழேந்தி, தங்க நகை மதிப்பீட்டாளர் தேவேந்திரன் உள்ளிட்டோரைக் கைது செய்தார். இதில் முத்தையா, முன்னாள் கமிஷனர் தனபால் உள்ளிட்ட சிலர் ஜாமீனில் வெளியே இருக்கிறார்கள். ஆனால், கிட்டத்தட்ட போலீஸ் காவலுடன் ஹவுஸ் அரஸ்ட் என்கிற நிலையில்தான் உள்ளனர்.

அடுத்தகட்டமாக திருத்தணி கோயிலிலும் தங்க மோசடி என்று பகீர் கிளம்பவே, அதையும் துருவ ஆரம்பித்தார் பொன்.மாணிக்கவேல். உடனே, பழனி சிலை முறைகேடு தொடர்பான விவகாரத்தை சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார் தமிழக டி.ஜி.பி-யான ராஜேந்திரன். ‘சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸார் சரியான கோணத்தில் விசாரித்து வருகிறார்கள். ஆனால், யார் யாரையோ தப்பிக்க வைப்பதற்காக சில சக்திகள் வெளிப்படையாகவே வேலை செய்கின்றன’ என்கிற குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக டி.ஜி.பி-க்கும் பொன்.மாணிக்கவேலுக்கும் இடையே கடித வாயிலாகக்கூட மோதல் நடந்ததாகக் கேள்வி. நீதிமன்றத் தலையீட்டின் பேரில், பொன்.மாணிக்கவேல் தொடர்ந்து பழனி கோயில் வழக்கையும் விசாரித்துவருகிறார்.

p42b_1533298626.jpg

இந்நிலையில், அறநிலையத் துறை திருப்பணிகள் பிரிவு கூடுதல் ஆணையர் கவிதா, ஜூலை 31-ம் தேதியன்று கைது செய்யப்பட்ட நிலையில், அதிரடியாக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவிடமிருந்து ஒட்டுமொத்த வழக்குகளையும் சி.பி.ஐ வசம் மாற்றி அரசாணையை வெளியிட்டு விட்டது தமிழக அரசு.

இதுதொடர்பாக பேசிய போலீஸ் அதிகாரி ஒருவர், “சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவில் ஒரு வழக்கு பதிவாகிறது. அதை விசாரிக்கும் பொறுப்பு ஓர் அதிகாரியிடம் ஒப்படைக்கப் படுகிறது. அப்படியிருக்க, குற்றம் சாட்டப்பட்டவர்களை, வழக்குக்கு சம்பந்தமில்லாதவர்கள் எல்லாம் வந்து, ஐ.ஜி முன்னிலையில் விசாரிக்கிறார்கள். இதையெல்லாம் ஒரு விசாரணை அதிகாரி எப்படி அனுமதிக்க முடியும்? ஏதாவது ஏடாகூடமாக நடந்துவிட்டால் யார் பதில் சொல்வது? இப்படி விசாரிக்க அனுமதிக்க மறுத்த காரணத்தால், ஒரு டி.எஸ்.பி மிரட்டப்பட்டுள்ளார். பின்னர் அவர், கோவை மின்திருட்டுப் பிரிவுக்கு உயர் அதிகாரிகளால் மாற்றப்பட்டார். இது ஓர் உதாரணம்தான். இப்படி பல அதிகாரிகளை வளைந்துகொடுக்கச்சொல்லி, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார் பொன்.மாணிக்கவேல். இப்படிப் பல பிரச்னைகள் இருக்கின்றன. ஆனால், நீதிமன்ற உத்தரவின்பேரில் பொன்.மாணிக்கவேல் செயல்படுவதால், உயர் அதிகாரிகளே மிரண்டு கிடக்கிறார்கள்” என்றார்.

இதுதொடர்பாகப் பேசிய மற்றொரு போலீஸ் அதிகாரி, “ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது, உளவுத்துறை உயர் அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் சில நாள்கள் இருந்தார். ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் மோதல் வந்து போயஸ் கார்டனை விட்டு சசிகலா வெளியேற்றப்பட்ட சமயத்தில், இருவருக்கும் இடையே பாலமாகச் செயல்பட்டவர்களில் பொன்.மாணிக்கவேலும் ஒருவர் என்ற பேச்சு உண்டு. ஜெயலலிதா இறந்தபிறகு சமூகரீதியாக இணைந்து செயல்பட்ட பலருடன், பொன்.மாணிக்கவேலுக்கு நட்பு உண்டு. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, எடப்பாடி அரசுக்குச் சிக்கலை ஏற்படுத்தும் எண்ணத்தில், திரைமறைவில் அவர் காய் நகர்த்துவதாகச் சந்தேகம் எழுந்துள்ளது. முன்னாள் அமைச்சர் ஒருவர், தற்போதைய அமைச்சர், சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் என்று பலரையும் ‘விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை’ என்று சொல்லி, கைதுசெய்ய அவர் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. ஒட்டுமொத்தமாக 60, 70 பேரைக் கைது செய்தால், அரசுமீதான நம்பிக்கை சுத்தமாகக் குலைந்துவிடும். நாடு முழுக்கப் பரபரப்பாகிவிடும். இது, ஆட்சிக்கே சிக்கலை ஏற்படுத்தவும் கூடும். இதையெல்லாம் கணக்குப்போட்டுத்தான், அவர் காய் நகர்த்துகிறார்.

ஈரோடு மாவட்டத்தில், ரூ.1,600 மதிப்புள்ள ஒரு சிலையை பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிலை என்று ஜோடனை செய்து ஏமாற்றுக்கும்பல் ஒன்று விலை பேசியது. அவர்களை வளைத்த சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸார், அந்தச் சிலையின் மதிப்பை கோடி ரூபாய் என்று மிகைப்படுத்திச் சொல்லியிருக்கிறார்கள். இதுமாதிரி பல விவரங்களை நாங்கள் சேகரித்துள்ளோம். இனி பொன்.மணிக்கவேலின் பாச்சா பலிக்காது. பொறுத்திருந்து பாருங்கள்” என்றார்.

ஆரம்பத்திலிருந்தே துறை அதிகாரிகளுக்கு எந்தவிதத் தகவல்களையும் தராமல், நீதிமன்றத்துக்கு மட்டுமே தந்துகொண்டிருந்தார். உயர் அதிகாரிகள் கேட்டபோதும் தரமறுத்துவிட்டார். இந்தக் கடுப்பில்தான், அவருக்கு அரசுத் தரப்பிலிருந்து முட்டுக்கட்டைகள் போடப்பட்டன. வழக்கு விசாரணையை அவரிடமிருந்தும் பறிக்கும் வேலையும் நடந்தது. ஆனால், தொடர்ந்து நீதிமன்ற நிழலில் இருந்துகொண்டு, ஓயாமல் குடைச்சல் கொடுக்கவே, பொன்.மாணிக்கவேல் என்னென்ன தவறுகள் செய்கிறார் என்பதைக் கண்டறிய உயர் அதிகாரிகள் சிலர் களத்தில் இறங்கினர்.

மதுரையைச் சேர்ந்த ஆன்மிகப் பிரமுகர் இதுபற்றிக் கூறும்போது, “தமிழக உயர் போலீஸ் அதிகாரிகளின் மீடியேட்டர் என்று அழைக்கப்படும் ஒரு பிரமுகர், இந்த விஷயத்தில் உளவு வேலை பார்த்திருக்கிறார். அதாவது, சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளைச் சந்தித்து, அவர்களின் ரகசியத் திட்டங்கள் மற்றம் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என அனைத்தையும் கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கிறார். சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவில் முன்பு பணிபுரிந்துவிட்டு மாறுதலாகிச்சென்றிருக்கும் போலீஸ் அதிகாரிகளையும் தனியாகச் சந்தித்திருக்கிறார். விசாரணை என்கிற பெயரில் கெடுபிடிகள் காட்டுவது, சட்டத்துக்குப் புறம்பாக நடந்து கொள்வது என்று பொன்.மாணிக்கவேல் செய்த விதிமீறல்களைக் கண்டறிவதுதான் நோக்கம். பொன்.மாணிக்கவேல் மீது அதிருப்தியிலிருந்த அதிகாரிகள் சிலர் கொடுத்த தகவல்களையெல்லாம் மேலிடத்துக்குக் கொண்டுபோயிருக்கிறார் அந்த புரோக்கர். இதையெல்லாம் வைத்து தான், சிபி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிடும் முடிவு எடுக்கப்பட்டிருக் கிறது” என்று சொன்னார்.

பொன்.மாணிக்கவேலுக்கு எதிராகத் திரட்டப்பட்டிருக்கும் ஆதாரங்கள் அத்தனை வலிமையானதாக இல்லையென்றாலும், அதிரடியாக இப்படியொரு முடிவை அரசு எடுப்பதற்குப் போதுமானதாக இருந்திருக்கிறது. அதனால்தான், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் ஆகஸ்ட் 1 அன்று சிலைக் கடத்தல் வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது, ‘‘இந்த வழக்குகளை சி.பி.ஐ-க்கு மாற்ற கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸாரின் விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. விசாரணையில் வெளிப்படைத் தன்மையும் இல்லை. அரசுடன் ஒருங்கிணைந்து பணியாற்றுவதில்லை’’ என்று தெரிவித்தார், தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன். உண்மையில், கடந்த ஓராண்டில் மட்டும் 25-க்கும் மேற்பட்ட சிலைகளை மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை, ராஜராஜன் மற்றும் உலகமாதேவி சிலைகள். இருபதுக்கும் மேற்பட்டோரைக் கைது செய்துள்ளார்கள்.

p42_1533298607.jpg

இந்த விவகாரம் தொடர்பாக பொன்.மாணிக்கவேல் பேச மறுத்துவிட்டார். சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரிகளிடம் பேசியபோது, ‘‘முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பொன்.மாணிக்கவேல் பற்றி நன்றாகத் தெரியும். ஆனால், இந்த ஊழலில் கைதாகப்போகும் அதிகாரிகள், சென்னையைச் சேர்ந்த பிரபல மருத்துவமனையின் உரிமையாளர்களில் ஒருவர், இந்த வழக்கில் சிக்கியிருக்கும் முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்களின் உதவியுடன் முதல்வருக்குத் தவறான தகவல்களைத் தந்துள்ளனர். சசிகலாவுக்கு ஆதரவாக, ஆட்சி கவிழும் அளவுக்கான நிலையை பொன்.மாணிக்கவேல் உருவாக்கிக்கொண்டிருக்கிறார் என்கிற தோற்றத் தையும் ஏற்படுத்திவிட்டனர். இதைப்பற்றியெல்லாம் முதல்வரே நேரடியாக பொன்.மாணிக்கவேலிடம் விசாரித்திருந்தால், உண்மை தெரிந்திருக்கும். ஆனால், அதைச் செய்யாமல் அவசரப்பட்டு விட்டனர்’’ என்கிறார்கள்.

இந்த வழக்கில் ஆரம்பம்தொட்டே கறார் காட்டிவரும் நீதிபதி மகாதேவன், சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி-யான பொன்.மாணிக்கவேலின் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனித்து வருகிறார். தமிழக அரசு இப்படிச் செய்வதை அவர் ஏற்றுக்கொள்வாரா, அல்லது ஏற்கெனவே இடியாப்பச் சிக்கலில் இருக்கும் இந்த வழக்கு சி.பி.ஐ கைக்குப் போவதை நிராகரிப்பாரா? விரைவில் விடை தெரியும்.

- கனிஷ்கா, இ.லோகேஸ்வரி
அட்டை ஓவியம்: ஹாசிப்கான்
படங்கள்: கே.ஜெரோம்


ஆதாரம் இல்லை!

கா
ஞ்சிபுரம் சிலை மோசடி வழக்கு ஆரம்பகட்டத்தில் பரபரக்கப்பட்டபோதே, கவிதாவிடம் இதுகுறித்துக் கேட்டிருந்தோம். ‘‘இது ஆதாரமில்லாத குற்றச்சாட்டு. இந்த வழக்கைத் தொடுத்திருக்கும் அண்ணாமலை, அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடத்தில் மாத வாடகைக்குக் கடை வைத்து நடத்திவந்தார். முறையாக வாடகைப் பணம் தராததால், கடையைக் காலி செய்ய உத்தரவிட்டது அறநிலையத் துறை. அதற்குப் பழிவாங்கவே ஆதாரமே இல்லாமல் இதுபோன்ற வழக்கைத் தொடர்ந்திருக்கிறார்’’ என்று சொன்னார்.


எப்போது ரெய்டு?

தி
ருடப்பட்ட சிலைகளின் பின்னணி தொடர்பான தகவல்களைக் கேட்டு, சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத் துறை கமிஷனர் ஆபீஸுக்கு சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினர் பலமுறை அலைந்துள்ளனர். அதற்கு முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. ஆனால், முன்னாள் ஆணையர் தனபாலுக்காக முக்கிய ஆவணங்களின் நகல்களை எல்லாம் விடுமுறை தினத்தன்றுகூட ஒருசில அதிகாரிகள் எடுத்துச் சென்றனராம். பொன்.மாணிக்கவேலுக்கு இது தெரிந்ததும் கடுப்பாகிவிட்டார். இதையெல்லாம் நீதிமன்றத்தில் விரிவாக எடுத்துச்சொல்லி, அறநிலையத்துறை கமிஷனர் ஆபீஸில் உள்ள ஆவணங்களைக் கைப்பற்றும் நோக்கில் ரெய்டு நடத்த அனுமதிபெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.

கவிதா கைதுசெய்யப்பட்ட அன்றே இந்த ரெய்டும் அரங்கேறுமே என்கிற பதற்றமும், மேற்கொண்டு அதிகாரிகள் கைது செய்யப்படுவார்கள் என்கிற பயமும் கமிஷனர் ஆபீஸில் பரவியது. அறநிலையத் துறை அதிகாரிகள் சுமார் நாற்பது பேர் வரை 59 நாள் வரை விடுப்பு எடுக்க விண்ணப்பங்களுடன் ஆணையர் ஜெயாவைச் சந்தித்தனர். வாங்க மறுத்துத் திருப்பி அனுப்பிவிட்டார் ஜெயா. அதேசமயம், ‘‘இனி எந்தப் பிரச்னையும் இருக்காது. முதல்வர் அலுவலகம் வரை பேசியாகிவிட்டது. யாரும் பயப்படவேண்டாம்’’ என்று கமிஷனர் உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது.

பிறகு நடைபெற்ற அறநிலையத்துறை அலுவலர்கள் கூட்டமைப்புச் சங்கத்தின் கலந்தாலோசனைக் கூட்டத்தில், இணை ஆணையர்கள் மற்றும் துணை ஆணையர்கள் கலந்துகொண்டார்கள். ‘தமிழக அரசு கொண்டுவந்திருக்கும் சி.பி.ஐ விசாரணைக்கு நன்றி. அதிகாரிகள்மீது பொய் வழக்கு போடுவது இனி தவிர்க்கப்படும். சி.பி.ஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்புக் கொடுக்கப்படும்’ என்றெல்லாம் கூட்டத்தில் பேசியுள்ளனர்.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

’கவிதாவும் உடந்தை!’ vs ’கையெழுத்திட்டது மட்டுமே கவிதா!’ - சிலை கடத்தல் சிக்கல்

 

நிலவரம் எதுவாக இருந்தாலும், உயர்ந்த பொறுப்பில் இருப்பவரைச் சுற்றி இவ்வளவு சர்ச்சைகள்... அவருக்குத் தெரியாமலே இவ்வளவு விவகாரம் நடந்திருந்தாலும் அது குற்றத்தின் ஒரு பகுதிதான். அதே சமயம் அவரை பலிகடாவாக்கும் முயற்சிகள் நடப்பின், அதுவும் கண்டனத்துக்குரியது.

’கவிதாவும் உடந்தை!’ vs ’கையெழுத்திட்டது மட்டுமே கவிதா!’ - சிலை கடத்தல் சிக்கல்
 

ந்து சமய அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையர் கவிதா குறித்து முரண்பட்ட தகவல்கள் வெளியாகின்றன. `முதல் தகவல் அறிக்கையில் கவிதா பெயர் இல்லை. இந்தக் கைதின் மூலம் பொன்.மாணிக்கவேலுக்குத்தான் பாதிப்பு வரப் போகிறது' என ஒரு பிரிவினரும், `ஆதாரங்கள் இல்லாமல் ஓர் உயர் அதிகாரியை அவர் கைது செய்ய மாட்டார்' எனவும் மற்றொரு சாராரும் பேசி வருகின்றனர்.

கவிதா, இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர்
 

கவிதா விவகாரத்தில் என்ன நடக்கிறது? 

திருநெல்வேலியைப் பகுதியை பூர்வீகமாகக் கொண்டவர் கவிதா. சட்டப்படிப்பு முடித்து சென்னையில் வழக்கறிஞராகப் பணியாற்றியவர். பாரம்பர்யமான தி.மு.க. குடும்பத்தைச் சேர்ந்தவர். ஜெயலலிதா முதன் முறையாக முதல்வரானபோது அவர் மீது பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்தன. அதில் கொடைக்கானலில் உள்ள பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கு மிக முக்கியமானது. 1991 -96 ஆட்சிக்காலத்தில் இந்த ஹோட்டலுக்கு விதிமுறைகளை மீறி அனுமதி வழங்கியதாக அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா, உள்ளாட்சித்துறை அமைச்சர் செல்வகணபதி ஆகியோர் மீது புகார் எழுந்தது. தி.மு.க தரப்பில் தொடரப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பு 2000-ல் வழங்கப்பட்டது. அதில் ஜெயலலிதா குற்றவாளி என அறிவிக்கப்பட்டு ஓராண்டு சிறைத்தண்டனையும் அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதா குற்றவாளி என அறிவிக்கப்பட்ட வழக்கில் சீனியர் வழக்கறிஞரிடம் ஜூனியராகப் பணியாற்றியவர் கவிதா. முக்கியத் தரவுகளை எடுத்துக்கொடுப்பது என இந்த வழக்கில் முக்கியப் பங்காற்றியிருக்கிறார் என்கின்றனர் அவரது ஆதரவு அதிகாரிகள். 

 

 

தி.மு.க, அ.தி.மு.க பின்னணி! 

இதுகுறித்து நம்மிடம் பேசிய அதிகாரி ஒருவர், ``கவிதாவின் தந்தை, முன்னாள் முதல்வர் அண்ணாதுரைக்கு இந்தி மொழிபெயர்ப்பாளராகவும் உதவியாளராகவும் பணியாற்றியவர். அதனால் தி.மு.கவில் கவிதாவின் குடும்பம் செல்வாக்கோடு இருந்து வந்தது. வழக்கறிஞராகப் பணியாற்றிய காலத்தில், சரவணன் என்ற வழக்கறிஞரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார் கவிதா. சசிகலாவின் உறவினர்தான் சரவணன். அதாவது, சசிகலாவின் அண்ணி இளவரசியின் சம்பந்தியான திருச்சி கலியப்பெருமாள், சரவணனுக்கு சித்தப்பா முறை ஆவார். அ.தி.மு.கவில் ஏற்பட்டுள்ள நெருக்கத்தால் போயஸ் கார்டனில் சர்வசாதாரணமாகச் சென்றுவரக்கூடியவராக இருந்தார் சரவணன். இந்த நெருக்கம்தான், `சசிகலாவின் பினாமி’ எனக் கவிதா குறித்து பரவும் தகவல்களுக்கு இதுவே அடிப்படை. கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில் அறநிலையத்துறை அமைச்சராகப் பெரிய கருப்பன் இருந்தபோது, திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் பணியாற்றினார் கவிதா. அறநிலையத்துறை சொத்துகள் தொடர்பான விஷயத்தில் உள்ளூர் தி.மு.க-வினருடன் மோதவேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து, கவிதாவுக்குப் பணிமாறுதல் கொடுக்கப்பட்டது. முதல்வர் கருணாநிதியே தலையிட்டு அந்த உத்தரவை ரத்து செய்ததாகவும் தகவல் வெளியானது. 

 

 

அறநிலையத்துறை ஆணையராக தனபால் இருந்தபோது, திருப்பணிகள் ஆணையராக நியமிக்கப்பட்டார் கவிதா. தனபால் மீது பொன்.மாணிக்கவேலின் கரம் இறுகியிருக்கிறது. அவரது பணிக்காலத்தில்தான் பல்வேறு முறைகேடுகள் நடந்தன. திருப்பணிகள் துறையில் இருந்ததால், கவிதா மீதும் சந்தேக வளையம் திரும்பியுள்ளது. தனபால் இணை ஆணையராக இருந்தபோது, அவர் சார்ந்த சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே கவிதாவுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது என்கிறார்கள். ஆணையராக தனபால் பதவி உயர்வு பெற்றபோது, திருப்பணி இணை ஆணையராகப் பதவிக்கு வந்தார் கவிதா. அதன் பிறகு திருப்பணி கூடுதல் ஆணையராகப் பதவி உயர்வு பெற்றார். சென்னையில் உள்ள எல்லா அதிகாரிகளுக்கும் பணிமாறுதல் கிடைக்கும். ஆனால், கவிதாவும் தனபாலும் சென்னையிலேயே பதவியில் நீடித்து வந்தனர். தனபால் விவகாரத்தில் ஆதாரங்களைச் சேகரித்தபோதுதான், கவிதாவின் தொடர்புகளும் தெரிய வந்ததாகச் சொல்கின்றனர். இதனால் பொன்.மாணிக்கவேல் கவிதாவுக்குச் சிலைக்கடத்தல் விவகாரங்களில் வலுவான தொடர்பு இருக்கும் என நம்பினார்!’’ என்றார்.   

பொன்.மாணிக்கவேல், சிலை

எல்லாம் கமிஷனர்தான்! 

இந்த விவகாரத்தைத் தொடக்கம் முதலே கவனித்து வரும் கோயில் நிர்வாகிகள் சிலர், ``பழநியில் இருக்கும் தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் புதிதாகச் செய்யப்பட்ட முருகன் உற்சவர் சிலை முறைகேடு வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜரான இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் தனபால் தற்போது வீட்டுச் சிறையில் இருக்கிறார். காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் உற்சவர் சிலை மோசடி மற்றும் பழனி தண்டாயுதபாணி சிலை மோசடி ஆகிய வழக்குகளில் முத்தையா ஸ்தபதி வீட்டுக் காவலில் இருக்கிறார். கவிதாவை கைது செய்யத் தகுந்த ஆதாரம் வேண்டும் என்பதற்காக, முத்தையா ஸ்தபதி உள்ளிட்டவர்களுக்குச் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவினர் வலை விரித்தார்கள். முத்தையா ஸ்தபதி கொடுத்த வாக்குமூலத்தை வைத்தே கவிதாவிடம் விசாரணையைத் தொடங்க நினைத்தார்கள். `என்னைக் கைது செய்தால், விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரையும் சுட்டிக் காட்டுவேன்’ எனக் கவிதா தரப்பினர் மிரட்டியதாக அதிகாரிகள் சொல்கின்றனர். இதையடுத்து, பொன்.மாணிக்கவேலிடமும் பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஆனால், அவர் பின்வாங்கவில்லை. இதற்கிடையே கடந்த 7 மாதங்களாக நடந்த சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவின் விசாரணைகளுக்குக் கவிதா ஒத்துழைக்கவில்லை. ஏகாம்பர நாதர் கோயில் உற்சவர் சிலை விவகாரம் தொடர்பாக, அர்ச்சகர் ஒருவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் கடந்த 31-ம் தேதி கவிதாவைக் கைது செய்துள்ளனர். ஓர் அர்ச்சகர் கூறும் வாக்குமூலத்தை வைத்து ஆதாரமில்லாமல் கூடுதல் ஆணையர் ஒருவரைக் கைது செய்ய முடியுமா என்றெல்லாம் கேள்வி எழுப்புகின்றனர். ‘எல்லாமே கமிஷனர் சொன்னார்... நான் வெறும் கையெழுத்து மட்டுமே போட்டேன்’ எனக் கும்பகோணம் நீதிமன்றத்தில் கவிதா தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் அரசுக்குக் கெட்ட பெயர் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில்தான், சி.பி.ஐ விசாரணை என்ற ஆயுதத்தைத் தமிழக அரசு எடுத்தது!" என்கின்றனர் விரிவாக. 

 

 

`அந்த' 9 பேர்! 

அதே சமயம் இதுகுறித்து இன்னொரு கோணமும் விவரிக்கிறார் அறநிலையத்துறையின் உயர் அதிகாரி ஒருவர். ``கவிதா மீது பொய்யான குற்றச்சாட்டைச் சொல்லி வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். எங்கள் துறையில் இருப்பவர்கள் யாருமே இந்தக் குற்றச்சாட்டை நம்ப மாட்டார்கள். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சோமாஸ்கந்தர் சிலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், தாங்கள் தப்பிப்பதற்காக கவிதாவின் பெயரைக் கூறியுள்ளனர். இதை அடிப்படையாக வைத்து அவரைக் கைது செய்துவிட்டனர். முதல் தகவல் அறிக்கையில் கவிதாவின் பெயரே கிடையாது. முதல் தகவல் அறிக்கையில் உள்ள 9 பேர்களில் ஒருவரைக்கூட கைது செய்யாமல், அதில் உள்ள ஒருசிலர் சொன்னதாக, வெறுமனே சொல்லப்பட்ட தகவலின் அடிப்படையில் கவிதாவைக் கைது செய்திருக்கிறார்கள். ஆணையர் எழுதி எழுதி வைத்துள்ள உத்தரவில், கையொப்பம் மட்டும்தான் கவிதா போடுவார். அதற்காகச் செய்யாத தவறுக்கு எப்படிப் பொறுப்பாவார். இதுவரை காணாமல் போன சிலைகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதை மறைப்பதற்காக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினர் போடும் நாடகம் இது. பழனி, காஞ்சிபுரம் என முறைகேடு நடந்திருப்பதாகப் புகார் எழுந்துள்ள கோயில் பக்தர்கள் தரப்பிலிருந்து, ‘நான் தங்கம் கொடுத்திருக்கிறேன். ரசீது கொடுக்கவில்லை. முறைகேடு நடந்துள்ளது.’ என யாருமே இதுவரை காவல்நிலையத்தில் புகார் அளிக்கவில்லை. தங்கம் வசூல் செய்வதில் முறைகேடு நடந்திருந்தால் விஜிலென்ஸில்தானே விசாரிப்பார்கள். சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினர் எப்படி விசாரணை செய்ய முடியும். அவர் எந்தக் கட்சியையும் சார்ந்தவர் கிடையாது” என்றார் நிதானமாக.

நிலவரம் எதுவாக இருந்தாலும், உயர்ந்த பொறுப்பில் இருப்பவரைச் சுற்றி இவ்வளவு சர்ச்சைகள்... அவருக்குத் தெரியாமலே இவ்வளவு விவகாரம் நடந்திருந்தாலும் அது குற்றத்தின் ஒரு பகுதிதான். அதே சமயம் அவரை பலிகடாவாக்கும் முயற்சிகள் நடப்பின், அதுவும் கண்டனத்துக்குரியது. நேர்மையான விசாரணை மூலம் நியாயம் எது என்பதை சர்ச்சைகளுக்கு இடமில்லாமல் வெளிக்கொணர வேண்டும். 

நீதிமன்றத்தில் பொன்.மாணிக்கவேல் தாக்கல் செய்யப் போகும் ஆவணங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கலாம்!  

https://www.vikatan.com/news/coverstory/133210-follow-up-report-on-kavithas-arrest.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.