Jump to content

கடிகார மனிதர்கள் திரைவிமர்சனம்


Recommended Posts

கடிகார மனிதர்கள் திரைவிமர்சனம்

 

கடிகார மனிதர்கள் திரைவிமர்சனம்
 
 

கடிகார மனிதர்கள் திரைவிமர்சனம்

 

கடிகார மனிதர்கள் தலைப்பை பார்த்ததும் புரிந்திருக்கும் படத்தின் கதை காலத்தின் பின்னால் ஓடும் ஏழை மனிதர்களை பற்றியது என்று.

நடிகர் கிஷோர், கருணாகரன் மற்றும் லதா ராவ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வாடகை வீட்டில் உள்ளவர்கள் படும் இன்னல்களை காட்டியுள்ளது.

கதை:

வறுமை காரணமாக சென்னையை தேடி வருகிறது கிஷோர் மற்றும் லதா ராவ் குடும்பம். அவர்களுக்கு மூன்று குழந்தைகள். வண்டியில் வீட்டு சாமான்களை ஏற்றிக்கொண்டு புரோக்கர் உதவியுடன் தெருத்தெருவாக வீடு தேடுகின்றனர்.

5 பேர் கொண்ட குடும்பம் என்பதால் எந்த வீட்டு ஓனரும் இவர்களுக்கு வீடு தர முன்வரவில்லை. 3500 ரூபாய்க்கு மேல் இவராலும் வாடகை கொடுக்க முடியாது.பின்னர் இறுதியாக இவர்களுக்கு ஒருவர் மட்டும் வீடு தர முன்வருகிறார். ஆனால் 4 பேர் மட்டுமே இருக்க வேண்டும் என அவர் கூற புரோக்கர் இவருக்கு இரண்டு குழந்தைகள் மட்டும் தான் இருக்கிறார்கள் என பொய் கூறிவிடுகிறார்.

இந்த பொய்யை மறைக்க கிஷோர் அவரின் கடைசி பையனை ஒரு பெட்டியில் போட்டு தினமும் வீட்டுக்குள் கொண்டுவந்து மீண்டும் காலையில் அதே பெட்டியில் ஸ்கூலுக்கு கொண்டு சென்று விடுவார்.

அதே காம்பவுன்டுக்குள் குடிவரும் கருணாகரனுக்கும் ஹவுஸ் ஓனர் மகளுக்கும் காதல் - அது தனி ட்ராக்கில் செல்கிறது.

இப்படியே தொடரும் வாடகை வீடு வாழ்க்கையில் காலம் கடக்க கடக்க அவர்கள் சொன்ன பொய்யால் அதிக பிரச்சனைகள் வருகிறது.

அதையெல்லாம் எப்படி சமாளித்தார்கள், அவர்களால் சொந்த வீடு வாங்கமுடிந்ததா என்பது தான் மீதி கதை

க்ளாப்ஸ் & பல்ப்ஸ்:

வாடகை வீடு கஷ்டங்களையும், வீடு உரிமையாளர்களின் அராஜகத்தையும் வெட்ட வெளிச்சமாக காட்டியதற்கும், பொய் சொல்லாமல் பலருக்கும் வீடு கிடைக்காது என தற்போதைய சமூக பிரச்சனையை காட்டியதற்கும் அறிமுக இயக்குனர் வைகறை பாலன் அவர்களை பாராட்டலாம். கிஷோர், லதா ராவ் நடிப்பு பர்ப்பெக்ட். கருணாகரனின் காதல் சீன்களை சாம்.C.S மியூசிக் தூக்கி நிறுத்துகிறது.

ஆனால் மெதுவாக செல்லும் திரைக்கதை பார்ப்பவர்களை கொஞ்சம் அதிகமே சோதிக்கிறது. ஒரு சைக்கிள் ரேசை எதோ F1 ரேஸ் அளவுக்கு பில்டப் கொடுத்ததெல்லாம் டூமச்.

மொத்தத்தில் கடிகார மனிதர்கள் 2 மணி நேர வாடகை வீடு சீரியல். எதார்த்த சினிமாவை ரசிப்பவர்கள், அதிக பொறுமை இருப்பவர்கள் பார்க்கலாம்.

http://www.cineulagam.com/films/05/100952?ref=cineulagam-reviews-feed

Link to comment
Share on other sites

வாடகை வீட்டில் இருப்பவர்கள் மற்றும் வீட்டு ஓனர்கள் கவனத்துக்கு..! - ‘கடிகார மனிதர்கள்’ விமர்சனம்

 

‘இந்த உலகத்துல இரண்டே இரண்டு சாதிதான், ஒண்ணு வாடகை கொடுக்குற சாதி, இன்னொண்ணு வாடகை வாங்குற சாதி.’ இது இந்தப் படத்தில் வரும் ஒரு வசனம். அப்படி வாடகை கொடுக்கும் தொழிலாளிதான் இந்தக் ‘கடிகார மனிதர்க’ளில் ஒருவன். 

வாடகை வீட்டில் இருப்பவர்கள் மற்றும் வீட்டு ஓனர்கள் கவனத்துக்கு..! - ‘கடிகார மனிதர்கள்’ விமர்சனம்
 

பிழைப்புத் தேடி கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்து, கடைகளுக்கு ரொட்டி சப்ளை செய்யும் தொழிலாளி கிஷோர். அவரின் மனைவி லதாராவ். இவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் என மூன்று பிள்ளைகள். குடியிருந்த வீட்டிலிருந்து திடுதிப்பென வெளியேற்றப்படுகிறார்கள். மினி லாரியில் பொருள்களையும் குடும்பத்தையும் அள்ளிப்போட்டுக்கொண்டு வாடகைக்கு வீடு தேடி சென்னையின் தெருக்களில் சுற்றத் தொடங்குகிறார் கிஷார். அவருக்கு ‘வீடு’ கிடைத்ததா இல்லையா என்பதே கதை.

கடிகார மனிதர்கள்

சென்னையில் வாடகை வீட்டில் குடியிருப்பவர்களின் வாழ்க்கையை ஒரு சோறு பதமாகச் சொல்லியிருக்கும் இயக்குநர் வைகறை பாலனுக்கு முதலில் வாழ்த்துகள். எப்படியாவது முன்னேறிவிடலாம் என்ற எண்ணத்தில் சொந்த ஊர்களிலிருந்து நகரத்துக்கு வருபவர்களில் சிலருக்கு அந்தக் கனவு நனவாகிறது. ஆனால், நகரத்தின் வேகத்தில் தங்களின் இளமையைத் தொலைத்துவிட்டு சொந்தக் கிராமத்துக்கும் செல்ல முடியாமல் நகரத்திலும் வாழ முடியாமல் திகைத்து நிற்பவர்கள்தான் அதிகம். அவர்களின் அவஸ்தைகளைக் கிஷோர் குடும்பத்தின் வழியே உணர்த்தியிருக்கிறார் வைகறை பாலன். 

 

 

‘நீங்க கிறிஸ்டியனா, இந்துவா இருந்தா மட்டும்தான் வீடு’, 'நான்-வெஜ் சாப்பிடுறவங்களுக்கு வீடு கிடையாது...’ இப்படி வீடு தேடும்போது கிஷோருக்குக் கிடைக்கும் பதில்களின் வழியே சென்னையின் வாடகை வீடு தேடலில் உள்ள வலியை நமக்கு கடத்துகிறார் இயக்குநர். பல வீடுகளில் ஏறி இறங்கியபின், ‘நாலு பேருக்கு மேல ஓர் ஆள் இருந்தாகூட வீடு கிடையாது’ என்கிறார் வீட்டு ஓனர் பாலாசிங். ‘ஒரு பொண்ணு, ஒரு பையன், அப்புறம் இவங்க ரெண்டு பேர்னு மொத்தமே நாலு பேர்தான்’ என்று போகிறபோக்கில் புரோக்கர் சொல்லும் பொய்க்குத் தலையாட்டித் தொலைக்கிறார் கிஷோர். அந்தப் பொய்யைக் காப்பாற்ற, பாலாசிங்குக்குத் தெரியாமல் தன் கடைசி மகனை அந்த வீட்டுக்குள்ளேயே மறைத்து வைக்கிறார். ஒரு கட்டத்தில் இந்த உண்மை பாலாசிங்குக்கு தெரிந்ததும் அவர்களின் குடும்பம் என்ன ஆகிறது... என்று செல்கிறது மீதிக் கதை. 

 
 

 

கடிகார மனிதர்கள்

கிஷோருக்கென்றே அளவெடுத்துத் தைத்தது போன்ற கதாபாத்திரம். ‘வீடு கிடைக்காமதான் பொருளை ஏத்திக்கிட்டு சுத்துறீங்களா’ என்று கேட்கும் மினிலாரி டிரைவரை சமாளிப்பது, தன் மகனை வீட்டு ஓனருக்குத் தெரியாமல் மறைக்கத் திண்டாடுவது, பள்ளியில் பரிசு வாங்கும் மகனுக்கு அருகில் இருக்க முடியவில்லையே என்று மருகுவது, காணாமல் போன மகனைத் தேடித் தவிப்பது, ‘நம்ம ஊருக்கே போயிடலாம்ங்க’ என்கிற மனைவியிடம், ‘அங்கப்போய் நான் என்ன பண்றது’ என விரக்தியில் கலங்குவது... என்று ‘பன்னு கடை மாறன்’ஆக மனிதர் வாழ்ந்திருக்கிறார். 

குறைந்த ஊதியத்தில் குடும்பத்தை நடத்தவும் முடியாமல் அதற்காகக் கணவனைத் திட்டவும் முடியாமல் கையறு நிலையில் தவிக்கும் ஏழைக் குடும்பத் தலைவியாக லதாராவ். இப்படி நடிக்கிற மனுஷியை ஏன் நிறைய படங்கள்ல பார்க்க முடியறதில்லை என்று நமக்குத் தோன்றவைக்கும் அளவுக்கு இயல்பாக நடித்திருக்கிறார். ‘சில வீட்டு ஓனர்கள் இப்படித்தான் இருப்பாங்க’ என்ற பிம்பத்தைக் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் கடுகடு முகமும் சிடுசிடு பேச்சுமாக வரும் பாலாசிங். 

 

 

மற்றபடி கருணாகரன், பிரதீப் ஜோஸ், சிசர் மனோகர், ஷெரின், வாசு விக்ரம் எனப் பலர் இருக்கிறார்கள். சென்னையில் தங்கி சினிமாவில் நடிக்க முயற்சி செய்யும் கதாபாத்திரத்தில் பிரதீப் ஜோஸ். இதிலும் அவர் நடிக்க முயற்சி மட்டுமே செய்திருக்கிறார். ‘இவர் கண்டிப்பா தயாரிப்பாளராதான் இருப்பார். அவரோட ஆசைக்காக நடிக்க வெச்சிருக்காங்க’ என்று ரசிகர்கள் பேசிக்கொள்வதை திரையரங்கிலேயே கேட்க முடிகிறது. உங்களுக்கான கேரக்டர் இருந்தா நடிங்க பாஸ், நீங்களே உருவாக்கிக்காதீங்க.

கடிகார மனிதர்கள்

நம் கைப்பிடித்து கதைக்குள் கூட்டிச்செல்கிறது சாம் சி.எஸ்ஸின் பின்னணி இசை. ஒரே டெம்ப்ளேட்டில் படத்தில் ஆங்காங்கே வரும் பாடல்கள் ஓகே ரகங்களே. நடுத்தர வர்க்க குடும்பங்களின் வீடுகள், தெருக்கள் என நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது உமா சங்கரின் ஒளிப்பதிவு. ஆனால், சென்னையின் பரபரப்பை லாங் ஷாட்டில் காட்டுகிறார்களே தவிர வேகம், கூட்டம்... எனச் சென்னையின் இயல்பை நெருங்கிச் சென்று உணர்த்துவது போன்ற காட்சிகள் வெகு குறைவு. அதனால் கதையுடன் ஒன்ற சிரமப்பட வேண்டியதாக உள்ளது. மற்றபடி உமா சங்கரின் ஒளிப்பதிவு கதைக்கு நியாயம் செய்துள்ளது. ஹரிசங்கர் இன்னும் ஷார்ப்பாக எடிட் செய்து படத்தின் வேகத்தை இன்னும் கூட்டியிருக்கலாம். ரியலா, செட்டா என்று தெரியாத அளவுக்கு அடுக்குமாடி குடியிருப்பு, பேக்கரி என்று உண்மைக்கு நெருக்கமான செட்களை வடிவமைத்துள்ளார் ஆர்ட் டைரக்டர் ராஜா. 

வாடகை வீட்டில் குடியிருக்கும் ஒரு குடும்பத்தின் வழியாக ஒட்டுமொத்த நகரவாசிகளின் வலியையும் சொல்ல முற்பட்டு இருக்கிறார் இயக்குநர். ஆனால், அதை இயல்பான காட்சிகளாகக் கடத்துவதில் தவறியிருக்கிறார். தவிர பழைய 500 ரூபாய் நோட்டுகள், ‘சைக்கிள் பந்தயம்-2014’ என்று வரும் பேனர்... இதன் மூலம் தாமதமாக ரிலீஸ் செய்யப்பட்ட படம் என்று வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. இயல்பான கதையோட்டத்தில் ‘சைக்கிள் பந்தயத்தில் வென்றால் வீடு’ என்று வரும் திடீர் அழைப்பு, பிரதீப் ஜோஸின் கேரக்டர்... போன்றவை கதையிலிருந்து விலகித் துருத்திக்கொண்டு தெரிகின்றன. ‘சென்னையில் உள்ள வீட்டு உரிமையாளர்கள் அனைவருமே இப்படித்தான்’ என்கிற பொத்தாம் பொதுவான விமர்சனமும் ஏற்றுக்கொள்ள முடியாதது. 

குடும்பத் தேவைகளுக்காக உழைத்துக்கொண்டே இருக்கும் மனிதர்களையும் அவர்களின் சொந்த வீட்டுக் கனவையும் சொன்ன விதத்தில் இந்தக் ‘கடிகார மனிதர்கள்’ நம் அனைவருக்குமான சினிமா. வாழ்த்துகள்! 

https://cinema.vikatan.com/movie-review/133058-kadikara-manithargal-tamil-movie-review.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.