Jump to content

தமிழக அரசின் நோக்கம் மக்களை அச்சத்தில் வைத்திருப்பதா? நீதிமன்றின் கடுமையான கேள்வி…


Recommended Posts

தமிழக அரசின் நோக்கம் மக்களை அச்சத்தில் வைத்திருப்பதா? நீதிமன்றின் கடுமையான கேள்வி…

 
 

ஸ்டெர்லைட் ஆலை போராட்ட வழக்கின் உத்தரவுகள் வெளியாகின…

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் கடந்த மே 22ஆம் தேதி போராட்டம் நடந்தபோது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் ஒரே வழக்காக பதிவு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

 
ஸ்டெர்லைட்

243 வழக்குகள் தனித்தனியாக பதிவு செய்யப்பட்டதை சட்டம் வழங்கியுள்ள அதிகாரங்களை முறைகேடாக பயன்படுத்துவதாக மட்டுமே பார்க்க முடியும் vd அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அனைத்து வழக்குகளின் முதல் தகவல் அறிக்கையைப் படித்தாலே அவை அனைத்தும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போதுதான் பதிவு செய்யப்பட்டன என்பது புலனாகிறது என்று கூறியுள்ள நீதிமன்றம், காவல் துறை மற்றும் தமிழக அரசை இந்தத் தீர்ப்பில் கடுமையாக விமர்சித்துள்ளது.

ஒரு நபரின் பெயர் 100 முறை தகவல் அறிக்கைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், இன்னொருவரின் பெயர் 85 முறை  தகவல் அறிக்கைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ள நீதிமன்றம், அவர்கள் ஒரு வழக்கில் பிணை பெற்றாலும் வேறொரு வழக்கில் கைது செய்வதற்காக இத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டனவா என மதுரை உயர் நீதிமன்றக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. “அரசு எப்படி இவ்வாறு அலட்சியமாகவும் பொறுப்புணர்வற்றும் இருக்க முடியும்?” என்றும் நீதிமன்றம் தீர்ப்பில் கேள்வி எீப்பி உள்ளது.

sterlite madurai high court

“ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஒருவர் ஒரு மிகச் சிறிய பங்கு வகித்திருந்தாலும், அவர்கள் வீட்டுக்கதவு நள்ளிரவில் தட்டப்படும் என்றும் கைது செய்யப்படுவார்கள் என்றும் அச்சத்தில் அவர்கள் இருப்பார்கள் என அரசுக்கு தெரியாமலோ, அக்கறை இல்லாமலோ போய் விட்டதா? தங்கள் உற்றார் உறவினர்களை இழந்த மக்கள் தாங்களோ தங்கள் அன்புக்குரியவர்களோ கைது செய்யப்படுவோம் என்று தொடர்ந்து பயப்பட வேண்டுமா? இவற்றை அரசு தெரியாமல் செய்ததா, இல்லை அரசின் நோக்கமே இதுதானா?” என்று நீதிமன்றம் கடுமையாக  கேள்வி எழுப்பியுள்ளது.

போராட்டம் நடந்த நாளன்று தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில், துணை வட்டாச்சியர் சேகர் என்பவர் கொடுத்த தகவல்  அடிப்படையில் போராட்டக்காரர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை சட்டவிரோதமானது மற்றும் செல்லாது என்று அறிவிக்கக் கோரிய இரு வேறு ரிட் மனுக்கள் மீது வழங்கிய தீர்ப்பில் இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி Image captionதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை

மாவட்ட ஆட்சியரகம் சேதப்படுத்தப்பட்டதாக மட்டும் சிப்காட் காவல் நிலையத்தில் 78 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, ஸ்டெர்லைட் ஊழியர்கள் குடியிருப்பில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக 39 வழக்குகளும், ஆட்சியர் அலுவலகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக 31 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

மேலும் தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் 24 வழக்குகளும், வடக்கு மற்றும் மத்திய காவல் நிலையங்களில் தலா 15 வழக்குகளும் , தூத்துக்குடி புதுக்கோட்டை காவல் நிலையத்தில் ஆறு வழக்குகளும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் தொடர்பாக பதிவு செய்யப்பட்டன.

முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரே சமயத்திலும், சில சம்பவங்கள் சில நிமிட இடைவெளியில் மட்டுமே நிகந்துள்ளன என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.

தமிழக அரசின் உள்துறைச் செயலர், காவல் துறை இயக்குநர், கூடுதல் காவல் துறை இயக்குநர் (சி.பி.சி.ஐ.டி), தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் போராட்டம் தொடர்பாக 243 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட தூத்துக்குடியில் உள்ள ஐந்து காவல் நிலையங்களின் ஆய்வாளர்கள் ஆகியோர் இந்த வழக்கில் பதில் மனுதாரர்களாக இருந்தனர்.

 

http://globaltamilnews.net/2018/90354/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழக தேர்தல் நிலவரம் – தந்தி டிவி கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருப்பது என்ன? திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் கடுமையான இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதிகளில் பாஜக அதிமுக திமுக இடையே கடுமையான போட்டி நிலவும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள்  தேர்தல் நடக்க உள்ளது. திமுக அதிமுக பாஜக நாம் தமிழர் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டில் 4 முனை போட்டி தீவிரமாக நிகழ்ந்து வருகிறது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக 21 தொகுதிகளும் அதன் கூட்டணி கட்சிகள் மற்ற தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தேர்தல் தொடர்பாக வரிசையாககருத்துக்கணிப்புகள்   வெளியாகி வருகின்றன. அந்த வகையில்  தேர்தல் தொடர்பாக தந்தி டிவி கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது மொத்தமாக திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது : வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி உச்சக்கட்ட  ஆகிய இடங்களில் இழுபறி நீடிக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் ஆகிய தொகுதிகளில் திமுக – பாஜக இடையே இழுபறி நீடிக்கும். கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுக – திமுக இடையே இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாக்கு சதவிகிதம்: திமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 42 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். அதிமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 34 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். பாஜகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 18 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். நாம் தமிழருக்கு வாக்கு அளிப்போம் என்று 5 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர் : புதுச்சேரியில் பாஜகவிற்கான வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.   https://akkinikkunchu.com/?p=274079
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.