Jump to content

உலக தாய்ப்பால் வாரம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தாயின் அன்பை போன்றே தூய்மையானது தாய்ப்பாலும்..

DjgjI_fUYAARYh_.jpg:large

ஆகஸ்ட் 1 முதல் 7 ஆம் தேதிவரை உலக தாய்ப்பால் வாரமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் தீம் - தாய்ப்பால்: வாழ்க்கையின் அடித்தளம் என்பதாகும். 

தாய்ப்பால், பிறந்தகுழந்தையின் முதல் ஆகாரம். குழந்தை பிறந்து முதல் ஒருமணிநேரத்தில் கொடுக்கப்படும் தாய்ப்பால், குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் தாய்ப்பால் அளிப்பது குழந்தைகளுக்கு மட்டுமின்றி, தாய்களுக்கும் நல்லது. குழந்தைக்கு தாய்ப்பாலூட்டும் பெண்கள், தாய்பாலூட்டாத பெண்களை விட வேகமாக குணமடைகிறார்கள், சிசெரியன் செய்தாலும் கூட இதன் பலன்கள் கிடைக்கின்றன. குழந்தையின் பால் குடிக்கும் செயல்பாடு, உடலில் ஆக்ஸிடோசினை வெளியிட்டு, கர்ப்பப்பையை வேகமாக குணமாக்குகிறது. குழந்தைப்பேற்றுக்குப் பின்பு உடலின் அதிகப்படியான எடையை குறைப்பதிலும் தாய்ப்பாலுட்டுவது உதவுகிறது. மேலும் கர்ப்பை புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கிறது. எலும்புகளின் ஆரோக்கியமும் மேம்படுகிறது. தாய்ப்பாலூட்டுவது உடலில் மட்டுமல்ல, மனதளவிலும் பலன்களைத் தருகின்றது. குழந்தைப் பேற்றுக்குப் பின்பான மன அழுத்தம் குறைவடைவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

எந்த ஒரு குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டப்படுகிறதோ, அந்த குழந்தை, மனதளவிலும் நல்ல வளர்ச்சியைப் பெறும் என்று பல ஆய்வுகள் கூறியிருக்கிறது. குழந்தையின் முழுமையான வளர்ச்சிக்கு தாய்ப்பால் அவசியம். பால் கொடுக்கும் பொழுது, தாய் தன் குழந்தையை அரவனைத்து குழந்தையுடன் பேசும் போது, அவர்கள் இருவருக்கிடையே ஒரு பிணைப்பும் பந்தமும் ஏற்படுகிறது. அவர்கள் வளர்ந்தபிறகு, மற்றவர்களோடு அன்பாக நடந்துகொள்ளவும் இந்த பந்தம் உதவுகிறது.

எனவே தான் தாய்ப்பால், வாழ்க்கையின் அடித்தளமாகிறது.

https://www.femina.in/tamil/health/

https://twitter.com/hashtag/உலக_தாய்ப்பால்_வாரம்?src=hash

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

பால் கொடுக்கும் பொழுது, தாய் தன் குழந்தையை அரவனைத்து குழந்தையுடன் பேசும் போது, அவர்கள் இருவருக்கிடையே ஒரு பிணைப்பும் பந்தமும் ஏற்படுகிறது. அவர்கள் வளர்ந்தபிறகு, மற்றவர்களோடு அன்பாக நடந்துகொள்ளவும் இந்த பந்தம் உதவுகிறது

தாய்ப்பாலுக்குள் ....உலகின் மிகப்பெரிய பலநாட்டுக் கம்பனிகளின் வியாபார இரகசியம் ஒன்று ஒழிந்துள்ளது என்று ....அண்மையில் தான் அறிந்தேன்! 

இந்தக் கொம்பனிகள்....தங்கள்...உற்பத்திப் பொருட்கள்....தாய்ப்பாலின் அமைப்புக்கு...மிகவும் அண்மையாக இருக்கும் படி பார்த்துக் கொள்கிறார்கள்! இதற்காக...பெருமளவு.. பணத்தை ஆய்வுகளுக்காகச் செலவழிக்கின்றனர்!

ஒரு கிறீமோ, அல்லது யோகர்ட் போன்ற பொருட்களோ....பாலிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்களோ....தாய்ப்பாலின் சுவைக்கு...நிகரான சுவையைத் தருமெனில்.....பாவனையாளர்கள் அந்தப் பொருட்களைத் திரும்பத் திரும்ப வாங்கிக்கொண்டிருப்பார்கள்! ஏனெனில்...அவர்களது...வாழ்வின் முதலாவது சுவை...அவர்களது அடி மனதில் ஆழமாகப் பதிந்து விடுகின்றதாம்!

முன்னொரு பதிவில்...நிழலி...எவ்வளவு பொருட்கள் சந்தையில் இருந்தும்....நம்மட சனங்களும்...அவர்களின் அடுத்த தலைமுறையும் கூட...நெஸ்பிறே ...உபயோகிப்பதற்கான காரணமும் இது தான்!

எனவே தான் தாய்ப்பால், வாழ்க்கையின் அடித்தளமாகிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.