Jump to content

பன்னீர் VS பழனிசாமி... பதவிச்சண்டையில் புது இன்னிங்ஸ்


Recommended Posts

மிஸ்டர் கழுகு: பன்னீர் VS பழனிசாமி... பதவிச்சண்டையில் புது இன்னிங்ஸ்

 

 

p42_1533032661.jpg‘காவேரி மருத்துவமனையில் இருக்கிறேன்’ என்ற கழுகார், வாட்ஸ் அப் மூலம் சில செய்திகளை அனுப்பியிருந்தார்...

dot_1533032454.jpg தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட பிறகு மத்திய அரசின் உளவுப் பிரிவான ஐ.பி., தமிழக சூழ்நிலைகளை உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்துள்ளது. தமிழகத்தில் பல ஐ.பி அதிகாரிகள் உள்ள நிலையில், கருணாநிதியின் உடல்நிலை தொடர்பான ரிப்போர்ட்களை அனுப்புவதற்காக எஸ்.பி லெவலில் உள்ள அதிகாரி ஒருவரை சிறப்பு அலுவலராக நியமித்துள்ளனர். அந்த சிறப்பு அதிகாரி, ‘ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், தி.மு.க தொண்டர்கள் தரப்பிலிருந்து பெரிய அளவில் சச்சரவுகள் வராது’ என ரிப்போர்ட் கொடுத்திருக்கிறார் அவர். 

dot_1533032454.jpg புல்லட் பரிமளம், டி.டி.வி.தினகரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச வந்தாரா, அல்லது கொடும்பாவி கொளுத்த வந்தாரா என்பது குறித்த சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீஸ் தீவிரமாக விசாரித்து வருகிறது. அ.ம.மு.க-வின் காஞ்சிபுரம் நகரச் செயலாளராக இருந்த இவர், அதிரடி நடவடிக்கைகளுக்குப் பெயர் பெற்றவர். ஜெயலலிதா காலத்தில் மூன்று முறை பரிமளம் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். இருந்தும், தினகரன் அவருக்கு வாய்ப்பு கொடுத்தார். இந்த நிலையில், மாவட்டச் செயலாளர் மொளச்சூர் பெருமாளுக்கும் பரிமளத்துக்கும் பிரச்னை. கட்சியின் மண்டல பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் முன்னிலையில் மாவட்டச் செயலாளருடன் தகராறு செய்தாராம் பரிமளம். தகவல் தெரிந்து, பரிமளத்தைக் கட்சியிலிருந்து நீக்கினார் தினகரன். அடுத்த நாள் இந்தச் சம்பவம் நடந்தது.

மறுநாள் ஜூலை 30-ம் தேதி காலை 11 மணிக்கு தினகரன், வீட்டிலிருந்து வெளியே கிளம்பிச் சென்றார். அவர், புகார் கொடுப்பதற்காக சென்னை போலீஸ் கமிஷனர் ஆபீஸ் போகிறார் என்று கட்சியினர் பேசிக்கொண்டனர். ஆனால் தினகரன், கமிஷனர் ஆபீஸ் போகாமல் ஒரு மணி நேரத்தில் வீட்டுக்குத் திரும்பிவந்துவிட்டார். பிறகு வெற்றிவேல் மட்டும் போய், தினகரன் குடும்பத்துக்குப் பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்தார். இந்த நிலையில், ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழில் ‘தேவை இசட் பிளஸ் பாதுகாப்பு..!’ என்ற தலைப்பில் கட்டுரை வெளிவந்துள்ளது. தினகரன் வீட்டு சம்பவத்துக்கும் இந்தக் கோரிக்கைக்கும் முடிச்சுப்போடுகிறது போலீஸ்.

p42s_1533032551.jpg

dot_1533032454.jpg தமிழகம் முழுவதும் போய்க் கூட்டங்கள் நடத்தினாலும், சொந்த ஊரான மன்னார்குடியில் அவரால் கூட்டம் நடத்த முடியவில்லை. ஏற்கெனவே இரண்டு முறை அறிவித்து, போலீஸ் தடை விதித்துவிட்டது. இப்போது சென்னை உயர் நீதிமன்றத்துக்குப் போய் உத்தரவு வாங்கி, ஆகஸ்ட் 5-ம் தேதி மன்னார்குடியில் பேசவிருக்கிறார் தினகரன். ஒரு பக்கம் உணவுத்துறை அமைச்சர் காமராஜ், இன்னொரு பக்கம் திவாகரன் என இருவரையும் என்ன விமர்சனம் செய்வாரோ என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் சம்பந்தப்பட்ட வட்டாரத்தில்.

dot_1533032454.jpg அ.தி.மு.க-வில் புதிய பொறுப்பாளர்களை நியமிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. தினகரன் தரப்பு, நாடாளுமன்றத் தேர்தலுக்கான பொறுப்பாளர்கள் பட்டியலை அறிவித்ததும் அ.தி.மு.க.-வும் சுறுசுறுப்பாக நிர்வாகிகளை நியமிக்கும் பணியை ஆரம்பித்தது. முதலில் கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தர்மபுரி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை நியமிப்பது பற்றி ஆலோசனை நடைபெற்றுள்ளது. பன்னீர்செல்வம் தன் ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், நத்தம் விசுவநாதன், கே.பி.முனுசாமி ஆகியோருக்கு மாவட்டச் செயலாளர் பதவியைப் பெற்றுத்தரும் முனைப்பில் இருந்துள்ளார். ஆனால், இதற்கு எடப்பாடி பழனிசாமி சம்மதிக்கவில்லையாம். முருகையா பாண்டியன், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர், ‘பிரிந்து சென்றவர்களுக்கு முக்கியப் பொறுப்பு கொடுப் பதாக இருந்தால், நாங்கள் தினகரன் அணிக்கே சென்றிருப்போமே’ என எகிறியுள்ளனர். இதனால், பொறுப்பாளர்கள் நியமனத்தில் ஆரம்பமே சிக்கலாகியுள்ளது.

p42b_1533032625.jpg

dot_1533032454.jpg ஜூலை 29-ம் தேதி இரவு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்திலிருந்து சென்னை திரும்பினார். அவர் நள்ளிரவில் காவேரி மருத்துவமனைக்குச் சென்று கருணாநிதியைப் பார்க்கிறார் என்று தகவல் பரவியது. இதனால், காவேரி மருத்துவமனைக்குச் செல்லும் ஆவலில் இருந்த நான்கு பேர், ஒரு பிளான் செய்தனர். விமான நிலையத்திலிருந்து முதல்வரின் கார் அணிவகுப்பு வந்தபோது, அதில் இணைந்துவிட்டனர். ஆனால், முதல்வர் நேராக தன் வீட்டுக்குப் போனார். இரவு நேரத்தில் எதுவும் தெரியாமல், இவர்களும் கூடப் போயுள்ளனர். முதல்வர் வீட்டை அடைந்ததும் இந்தப் பாதுகாப்பு விதிமீறலைப் பார்த்துப் பதறிய பாதுகாப்பு அதிகாரிகள், அவர்களைக் கைது செய்தனர். ‘‘முதல்வரின் பயணத்தின்போது சில நிமிடங்கள் போக்குவரத்தை நிறுத்துகிறோம். ஆனால், காஸ்ட்லி பைக்குகளில் வரும் சில இளைஞர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. சிக்னலில் நின்றாலும், மீண்டும் போக்குவரத்தை அனுமதித்ததுமே தாறுமாறான வேகத்தில் வந்து, முதல்வரின் கார் அணிவகுப்பை அவர்கள் நெருங்குகிறார்கள். அடிக்கடி இப்படி நடக்கிறது’’ என்று முதல்வரின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் அதிர்ச்சியுடன் சொல்கிறார்.

dot_1533032454.jpg காவேரி மருத்துவமனையின் நான்காவது மாடியில் கருணாநிதி சிகிச்சை பெறுகிறார். குடும்ப உறவுகள், சீனியர் தலைவர்கள் சிலருக்கு மட்டுமே அந்தத் தளத்துக்குச் செல்ல அனுமதியளித்துள்ளார் ஸ்டாலின். முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ-க்கள் பலர் கீழ்தளத்திலேயே உள்ளனர். ஆனால், ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கு நெருக்கமான ஓ.எம்.ஜி குரூப் இளைஞர்கள், பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி போன்றவர்கள் சர்வசாதாரணமாக நான்காவது தளத்துக்குப் போவதும் வருவதுமாக உள்ளனர். இதைப் பார்த்த கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் புலம்பியுள்ளனர். கீழே தடுத்து நிறுத்தப்பட்டவர்களில் பலரும், அழகிரி வரும்போது, அவர் பின்னால் படையெடுத்ததையும் பார்க்க முடிந்தது.

dot_1533032454.jpg கருணாநிதிக்கு நான்கைந்து விதமாக ஆன்டி பயாடிக் மருந்துகளை மாற்றி மாற்றித் தந்திருக்கிறார்கள் மருத்துவர்கள். அவற்றில் ஒன்று நல்ல முன்னேற்றம் தந்ததால், ‘மேலும் சில நாள்களுக்கு அவருக்குப் பிரச்னை இல்லை’ என டாக்டர்கள் நம்பிக்கை தந்தார்கள். முதல்வர் போய்ப் பார்த்தபோது, ‘‘செயற்கை சுவாசம் இல்லாமல், அவர் உடல்நிலை சிகிச்சைக்கு ஒத்துழைத்து, இப்படி நிலையாக இருப்பதே ஆச்சர்யமான விஷயம்’’ என்று டாக்டர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.