Jump to content

“யாழ். மாநகரசபையில் என்னை முடக்குவதற்கும், அகற்றுவதற்கும் முயற்சி”


Recommended Posts

“யாழ். மாநகரசபையில் என்னை முடக்குவதற்கும், அகற்றுவதற்கும் முயற்சி”

 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

Manivannan_9407-1-800x534.jpg

 

யாழ். மாநகரசபையில் என்னை முடக்குவதற்கும், அங்கிருந்து அகற்றுவதற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏன் துடியாய் துடிக்கின்றனர் எனக் கேள்வியெழுப்பியிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசியஅமைப்பாளரும் மாநகர உறுப்பினருமான வி.மணிவண்ணண் அவ்வாறு என்னை அகற்றுவதனூடாக கூட்டமைப்பினர் எதனைச் சாதிக்கப் போகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடகஅமையத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றஊடகவியலாளர் சந்திப்பின் போது மாநகர சபை நிலைமைகள் குறித்து கருத்து வெளியிடுகையிலையே மணிவண்ணண் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,

யாழ்ப்பாண மாநகர சபையின் பிரதிமுதல்வர் எமது கட்சியின் உறுப்பினர் ஒருவரை அச்சுறுத்தியுள்ளார். இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருக்கின்றோம். மாநகர சபை பிரதி முதல்வராக இருக்கின்றவர் முன்னாள் ஆயுதக் குழு ஒன்றின் சார்பாகவே போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்.
ஆகையினால் அவரிடம் ஆயுதங்கள் இருக்கின்றனவா என்றஅச்சம் எமக்கு ஏற்பட்டிருக்கின்றது.

ஆயினும் எமது உறுப்பினருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பில் நாம் உரியநடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கின்றோம். மாநகரசபையில் ஆளுங்கட்சியாக இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சபையில் எதிர்க்கட்சியாக இருக்கின்ற தமிழ்த் தேசியமக்கள் முன்னணியின் உறுப்பினர்களை அச்சுறுத்தும் செயற்பாடுகளையும் எம்மை முடக்குகின்ற செயற்பாடுகளையுமே தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர்.

மாநகரசபையில் எமது கட்சியின் விகிதாசார முறைமையில் தெரிவான உறுப்பினராக இருக்கின்ற நான் சபையின் மராமத்துக் குழுவின் தலைவராகவும் இருக்கின்றேன்.

அத்தோடு சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் அவர்கள் தங்கள் தங்கள் வட்டாரத்திற்கான அபிவிருத்தி வேலைகளை முன்னெடுத்து வருகின்றமை போன்று தேசியப் பட்டியல் உறுப்பினராக இருக்கின்ற எனக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் நானும் பல இடங்களில் அபிவிருத்தி வேலைகளை முன்னெடுத்து வருகின்றேன்.

அவ்வாறு நான் அபிவிருத்திகளை முன்னெடுத்து அதனைக் குழப்பும் செயற்பாடுகளை கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மேற்கொள்கின்றனர். ஏனெனில் அவர்கள் தங்கள் வட்டாரங்களில் தாங்கள் தான் எதுவானாலும் செய்யவேண்டும். அங்கு வேறு யாரும் எந்தஅபிவிருத்தியும் செய்யக் கூடாதென்று கூறுகின்றனர்.

ஆனால் மாநகரசபையின் மராமத்துக் குழுவின் தலைவர் என்ற வகையில் சபை எல்லைக்குட்பட்ட எந்தப் பகுதிக்கும் சென்றுவரமுடியும்.

மக்களுக்கான அபிவிருத்திகளை முன்னின்று செயற்படுவதால் என்னை முடக்குவதற்கும் என்னை அகற்றுவதற்குமான சதிவேலைகளை கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மேற்கொண்டு வருகின்றனர். மாநகரசபையில் நல்லதிட்டங்களை மற்றும் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை மேற்கொள்கின்ற போது அதனை ஏன் தடுக்கின்றனர் அல்லது ஏன் விரும்புகின்றனர் இல்லை என்ற கேள்வி எழுகின்றது.

இது விடயங்களில் எனது கட்சியையும் என்னையும் பொறுத்தவரையில் சபை ஆரம்பிக்கப்பட்ட போதே முதல்வரின் அதிகார துஸ்பிரயோகங்களை நாங்கள் வெளிக் கொண்டுவந்ததாலும்,மாநகரத்தில் நடைபெறுகின்ற இரானுவத்தினரின் நிகழ்வுகளில் பங்குபற்றுவதில்லை எனச் சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு மாறாக சபை முதல்வர் கலந்துகொண்டமை தொடர்பில் சபையில் எதிர்ப்பு வெளியிட்டமை,பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கோரி சர்வவதேச விசாரணை வேண்டுமெனசபையில் முதல்வரின் எதிர்ப்புக்கள் மத்தியிலும் தீர்மானமாக கொண்டுவரப்பட்டமை ஆகிய காரணங்களால் என்னை இந்தச் சபையில் இருந்து அகற்றவேண்டுமென நினைக்கின்றனர்.

இதேவேளையில் எமது மக்களினதும் மாநகரத்தினதும் அபிவிருத்தி மற்றும் உரிமை, உட்பட நிதி சார் வேலைத் திட்டமாக இருந்தாலும் அதை எதிர்க்கின்ற அல்லது அதனை விரும்பாத வகையில் கூட்டமைப்பினர் செயற்படுகின்றனர்.

ஏனெனில் இவ்வாறு மக்களுக்காக நாம் செயற்படுகின்றபோது என்னை அகற்றினால் தாம் விரும்பியவாறு செயற்படலாமெனவும் கூட்டமைப்பினர் கருதுகின்றனர்.

இவ்வாறு என்னை அகற்றியோ அல்லது என்னுடைய செயற்பாடுகளைத் தடுத்தோ தாம் நினைத்தவாறு செயற்படலாமென அவர்கள் கருதுவது தவறு. அவர்கள் மக்களுக்காக அதனைச் செய்யவில்லை என்பதுடன் தங்களது சுயநல அரசியலையும் சுயலாபங்களுக்காகவமே செய்கின்றார்கள் என்பதேஉண்மை.

குறிப்பாக தற்போது எனது வட்டாரத்திலே நான் அபிவிருத்தி வேலை செய்வதை விரும்பாத சுயநலவாதி உறுப்பினர் ஒருவர் அதனைதடுத்திருக்கின்றார். ஆனால் அந்தவட்டாரத்தில் சபைக்கு ஆதனத்தை நான் கட்டிவருகிறேன். ஆகையினால் அங்கு எது செய்யவும் எனக்கு சுதந்திரம், உரிமை உண்டு. அதனை யாரும் கேள்விக்குட்படுத்த முடியாது என மேலும் தெரிவித்தார்.

 

 

http://globaltamilnews.net/2018/90009/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உறவே,  இப்படியே  போனால் எம்மை இறுதியில் பச்சடி போட்டுவிடுவார்கள் என்பதை முன்னமே துல்லியமாக கணிப்பிட்டு  உயிரைக் காப்பாற்ற ஓடி வந்த நீங்கள் உட்பட்ட நாம் அனைவரும் அறிவு ஜீவிகள் தான். 😂   
    • @goshan_che மீண்டும் உங்களை கண்டது மகிழ்ச்சி… ஆனால் 2 (?) வார விடுமுறையில் மக்களின் வாக்களிக்கும் தன்மையை தீர்மானிக்க முடியுமா? நீங்கள் குறிப்பிட்டவாறு தமிழ்தேசிய கூட்டமைப்பு  தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழ் மக்கள் கூட்டணி ஆகியவற்றிற்கு மக்கள் வாக்களிக்க போவதில்லை என்ற முடிவிற்கு எவ்வாறு வந்தீர்கள்? 
    • நல்லது  உற‌வே அப்படிபட்ட  நீங்கள் தமிழ்நாட்டில்  சீமான் தனது மகனுக்கு ஆங்கில மோகத்தால் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பதை எதிர்க்கவில்லையே. 😭  இலங்கையில்  தமிழர்களும் சிங்கலவர்களும் தங்கள் மொழிகளில் கல்வி கற்பது போன்று மற்றய நாட்டு மக்களும் தங்கள் மொழியில் கல்வி கற்பது போன்று சீமான் தனது மகனுக்கு தமிழ் வழி கல்வி கற்பித்திருந்தால் அது ஒன்றும் சாதனையில்லை  அது ஒரு அடிப்படை விடயம்.அதுவும் தமிழ் தமிழ் என்று சொல்லி அரசியல் செய்யும் சீமான் முதல் செய்ய வேண்டியது.     சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ? சீமானை பற்றி வந்த நல்ல செய்தி ஆங்கில மோகத்தால்  தனது மகனுக்கு தமிழ்நாட்டில் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பது 🤣  
    • யாழ்.போதனா வைத்தியசாலையில் எரியூட்டி திறப்பு! யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயாணத்தில் அமைக்கப்பட்டுள்ள, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியினை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த எரியூட்டி கொள்முதல் செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. முன்பதாக வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் எரியூட்டியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் கடும் இழுபறி ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்திற்கமைய யாழ் மாநகர சபை, கோம்பயன்மணல் மயான சபை என்பவற்றின் அனுமதியுடன் குறித்த எரியூட்டி கோம்பயன்மணல் இந்து மயானத்தில் நிர்மாணிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1375554
    • எந்தக் காலத்திலும் அதிகாரவெறி கொண்டவர்களாலும் ஆக்கிரமிப்பாளர்களாலும்தான் இந்த உலகம் அமைதியை இழந்து கொண்டிருக்கின்றது.........!   தொடருங்கள் ஜஸ்டின் .......!   👍
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.