Jump to content

மாகாண சபை அமைச்சரை நியமிப்பதும் பதவி நீக்குவதும் முதலமைச்சரின் உரிமை


Recommended Posts

மாகாண சபை அமைச்சரை நியமிப்பதும் பதவி நீக்குவதும் முதலமைச்சரின் உரிமை

 
Untitled-2sdsa.jpg

உத்தியோகபூர்வ வடிவம் மாத்திரமே ஆளுநருக்கு உரியது

மாகாண சபையில் அமைச்சராக ஒருவரை நியமிப்பதோ அல்லது பதவி நீக்கம் செய்வதோ முதலமைச்சரின் உரிமையாகும். அதற்கு உத்தியோகபூர்வ வடிவம் கொடுப்பது மாத்திரமே ஆளுநருக்குரியது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். ஆளுநர் உத்தியோகபூர்வ வடிவம் கொடுக்கத் தவறியதால் முதலமைச்சரின் உரித்து எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாரத்துக்கொரு கேள்விக்கு வழங்கியுள்ள பதிலிலேயே வடமாகாண முதலமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். டெனீஸ்வரனின் பதவி விலக்கல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள உச்சநீதிமன்ற வழக்குத் தொடர்பில் பதில் வழங்குகையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். அமைச்சர் நியமனங்களும் பதவி நீக்கல்களும் ஆளுநரால் வர்த்தமானியில் பிரசுரிப்பது ஒரு வழக்கமாகிவிட்டது.

டெனீஸ்வரனின் பதவி நீக்கத்தை ஆளுநர் ஏற்று புதிய அமைச்சர் ஒருவரை அவர் இடத்திற்கு நியமித்திருந்தாலும் பதவி நீக்கம் வர்த்தமானிக்கு பிரசுரிக்க அனுப்பப்படவில்லை. இதை ஆளுநரே அண்மையில் ஏற்றுள்ளார். அந்நீக்கம் பிரசுரிக்கப்பட்டிருந்தால் மேன்முறையீட்டு நீதிமன்றம் அவர் நீக்கப்பட்டுவிட்டார் என்பதை ஏற்றிருக்கும். உத்தியோகபூர்வமாக அறிவித்தல்கள் ஏதும் வெளிவராததால் அவர் தொடர்ந்து பதவியில் இருந்து வருகின்றார் என்று முடிவெடுத்து ஆளுநரே பதவி நீக்கம் செய்ய வல்லவர் என்று கூறி சட்டப்படி ஐந்து அமைச்சர்களே இருக்க வேண்டிய இடத்தில் தற்போது; சேர்த்து ஆறு அமைச்சர்கள் இருப்பதால் நியமன அதிகாரம், நீக்கும் அதிகாரம் கொண்டவர் (ஆளுநர்) உரிய நடவடிக்கை எடுத்து சட்டப்படி ஐந்து அமைச்சர்கள் அமைச்சர் அவையில் இடம்பெற ஆவன செய்ய வேண்டும் என்று தீர்மானம் அளித்தது.

தற்போதைய அமைச்சர்களான கலாநிதி சர்வேஸ்வரன்;, அனந்தி சசிதரன், வைத்திய கலாநிதி குணசீலன் மற்றும் சிவநேசன் ஆகியோர் எனது சிபார்சின் பேரில் ஆளுநரால் நியமிக்கப்பட்டு நியமனங்கள் வர்த்தமானியிலும் முறையாகப் பிரசுரிக்கப்பட்டன. அவர்கள் நால்வரும் சட்டப்படி நியமிக்கப்பட்ட நான்கு அமைச்சர்கள். தற்போது டெனீஸ்வரனும் ஒரு அமைச்சரே என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியுள்ளது. அமைச்சர் ஒருவரை பதவி விலக்கைச் செய்யக் கூடியவர் ஆளுநரே என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

 

 
 

இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டியவர் ஆளுநரே அன்றி முதலமைச்சர் அல்ல. ஆறை ஐந்தாக்குவது ஆளுநரையே சாரும். என்னை எவரும் குறை கூற முடியாது. நடந்தவற்றுக்குப் பொறுப்புக் கூற வேண்டியவர் ஆளுநர்.

டெனீஸ்வரன் அமைச்சராகக் கடமையாற்றுவதற்கு தற்போதிருக்கும் அமைச்சர்கள் நால்வரில் ஒருவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும். மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்மானப்படி அதனை ஆளுநர் ஒருவரே செய்யலாம்.

மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்மானப்படி அவரே பதவி நீங்கம் செய்ய அதிகாரம் உடையவர். முதலமைச்சர் அல்ல. மேற்படி தீர்மானத்தால் என்னுடைய கைகள் மாத்திரமன்றி ஒன்பது மாகாண முதலமைச்சர்களின் கைகளும் கட்டப்பட்டுள்ளன.

http://www.thinakaran.lk/2018/07/31/உள்நாடு/25769/மாகாண-சபை-அமைச்சரை-நியமிப்பதும்-பதவி-நீக்குவதும்-முதலமைச்சரின்-உரிமை

Link to comment
Share on other sites

“என்னுடைய கைகள் மட்டுமல்ல 9 மாகாண முதல்வர்களின் கைகளும் கட்டப்பட்டுள்ளன”

வாரத்துக்கொரு கேள்வி – 29.07.2018

Vikki-800x444.jpg
தற்போது எல்லோரையும் கவர்ந்திழுத்துக் கொண்டிருக்கும் ஒரு கேள்வி இவ்வாரக் கேள்வியாக இடம்பெறுகின்றது.

 

பத்திரிகையாளர் கேள்வி: உங்களால்த் தான் வடமாகாண சபையின் நடவடிக்கைகள் ஸ்தம்பித்திருப்பதாகக் கூறப்படுகின்றது. அவைத்தலைவர் ஆளுநருடனும் உங்களுடனும் சமாதானம் பேச வந்ததாகவும் கூறப்படுகிறது. உச்ச நீதிமன்ற வழக்கின் அடுத்த தவணை செப்ரெம்பர் மாதத்திற்குச் சென்றுள்ளதால் அதுவரை அமைச்சர் அவை சந்திக்க முடியாதென்று கூறப்படுகிறதே. உங்கள் கருத்தென்ன?

பதில்: நானா வழக்குப்போட்டேன்? முதலில் போடப்பட்ட வழக்கு மேல் முறையீட்டு நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர் உச்சநீதிமன்றத்திற்கு மேன்முறையீடு செய்து வழக்கு திரும்பவும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டு தற்போது மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் ஒரு தீர்மானம் அளிக்கப்பட்டுள்ளது. குறித்த தீர்மானம் நடைமுறைப்படுத்த முடியாததாகவுள்ளது. ஆகவே அது பற்றிய மேன்முறையீடு உச்சநீதி மன்றத்தில் உள்ளது. அங்கு காரணங்கள் கூறப்பட்டு தற்போது செப்ரெம்பர் மாதத்திற்குத் தவணை போடப்பட்டுள்ளது.

இந்த வழக்கைப் பற்றிப் பல பத்திரிகைகளும் வலைத்தளங்களும் தாம் நினைத்த நினைத்தவற்றைக் கூறி வருகின்றனர். என்னிடம் கருத்தறிய இந்தக் கேள்வியைக் கேட்டமைக்கு முதலில் எனது நன்றிகள் உரித்தாகுக!

முதலில் பிரச்சினையை விபரிக்கின்றேன்.

சென்ற வருடம் ஆகஸ்ட் மாதத்தில் கௌரவ டெனீஸ்வரன் அவர்களை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினேன். அதுபற்றி ஆளுநருக்கு அறிவித்து அவருக்குப் பதிலாகவும் இன்னொரு அமைச்சருக்குப் பதிலாகவும் இரு புதிய அமைச்சர்களை நியமிக்க ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தேன். என் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. கௌரவ டெனீஸ்வரன் நீக்கப்பட்டு அவர் இடத்திற்கும் மற்றோர் அமைச்சர் இடத்திற்கும் இரு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டார்கள். அரச அலுவலர்கள் சார்பான நியமனங்களும் பதவி நீக்கங்களும் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட வேண்டும் என்று சட்டம் இருக்கின்றது. அமைச்சர்கள் நியமனம், பதவி நீக்கல் பற்றியும் அவ்வாறான ஒரு விதி இருக்கின்றதோ தெரியாது. அது பற்றி நான் ஆராயவில்லை. ஆனால் அமைச்சர் நியமனங்களும் பதவி நீக்கல்களும் ஆளுநரால் வர்த்தமானியில் பிரசுரிப்பது ஒரு வழக்கமாகிவிட்டது. கௌரவ டெனீஸ்வரன் அவர்களின் பதவி நீக்கத்தை ஆளுநர் ஏற்று புதிய அமைச்சர் ஒருவரை அவர் இடத்திற்கு நியமித்திருந்தாலும் கௌரவ டெனீஸ்வரன் அவர்களின் பதவி நீக்கம் வர்த்தமானிக்கு பிரசுரிக்க அனுப்பப்படவில்லை. இதை ஆளுநரே அண்மையில் ஏற்றுள்ளார். அந் நீக்கம் பிரசுரிக்கப்பட்டிருந்தால் மேன்முறையீட்டு நீதிமன்றம் அவர் நீக்கப்பட்டு விட்டார் என்பதை ஏற்றிருக்கும். அவ்;வாறு பிரசுரிக்காததால் மேன்முறையீட்டு நீதிமன்றம் கௌரவ டெனீஸ்வரன் அவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக உத்தியோக பூர்வமாக அறிவித்தல்கள் ஏதும் வெளிவராததால் அவர் தொடர்ந்து பதவியில் இருந்து வருகின்றார் என்று முடிவெடுத்து ஆளுநரே பதவி நீக்கம் செய்ய வல்லவர் என்று கூறி சட்டப்படி ஐந்து அமைச்சர்களே இருக்க வேண்டிய இடத்தில் தற்போது கௌரவ டெனீஸ்வரனுடன் சேர்த்து ஆறு அமைச்சர்கள் இருப்பதால் நியமன அதிகாரம், நீக்கும் அதிகாரம் கொண்டவர் (ஆளுநர்) உரிய நடவடிக்கை எடுத்து சட்டப்படி ஐந்து அமைச்சர்கள் அமைச்சர் அவையில் இடம் பெற ஆவன செய்ய வேண்டும் என்று தீர்மானம் அளித்தது.

இதில் கவனிக்க வேண்டியவை பின்வருவன –

அரசியல் யாப்பின் உறுப்புரை 154கு(5) பின்வருமாறு கூறுகின்றது (ஆங்கிலத்தில் இருந்து எனது மொழிபெயர்ப்பு) ‘மாகாணமொன்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அம் மாகாண சபையின் உறுப்பினர்களின் மத்தியில் இருந்து மற்றைய அமைச்சர்களை ஆளுநர் அவர்கள் முதலமைச்சரின் அறிவுரைக்கு அமைய நியமிக்க வேண்டும்’.
இந்த உறுப்புரையில் பதவி நீக்கம் பற்றிக் குறிப்பிடப்படவில்லை. வேறெங்கேயுந் தானும் அதுபற்றிப் பிரஸ்தாபிக்கப்படவில்லை.

தற்போதைய அமைச்சர்களான கௌரவ கலாநிதி சர்வேஸ்வரன் அவர்கள், கௌரவ அனந்தி சசிதரன் அவர்கள், கௌரவ வைத்திய கலாநிதி குணசீலன் அவர்கள் மற்றும் கௌரவ சிவநேசன் அவர்களும் எனது சிபார்சின் பேரில் ஆளுநரால் நியமிக்கப்பட்டு அவர்களின் நியமனங்கள் வர்த்தமானியிலும் முறையாகப் பிரசுரிக்கப்பட்டன. அவர்கள் நால்;வரும் சட்டப்படி நியமிக்கப்பட்ட நான்கு அமைச்சர்கள். தற்போது கௌரவ டெனீஸ்வரனும் ஒரு அமைச்சரே என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியுள்ளது. அமைச்சர் ஒருவரின் பதவி விலக்கைச் செய்யக் கூடியவர் ஆளுநரே என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. தற்போதுள்ள நிலையில் என்னையுஞ் சேர்த்து முறைப்படி நியமிக்கப்பட்ட ஐந்து அமைச்சர்கள் இருக்க, மேலும் ஒருவரை (கௌரவ டெனீஸ்வரன் அவர்கள்) அமைச்சர் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கண்டுள்ளது. அத்துடன் பதவி நீக்கும் அதிகாரம் ஆளுநரிடமே உள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் கண்டுள்ளது. அவ்வாறெனின் அந்த அதிகாரம் முதலமைச்சரிடம் இல்லை என்பதே மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்மானம்.

ஆகவே ஐந்து பேர்களைக் கொண்ட அமைச்சரவையே எமது மாகாண சபைக்கு சட்டப்படி அமைய வேண்டும் என்பதால் நியமிக்கும் உரித்துடையவர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியுள்ளது. அவர்கள் தீர்மானப்படி அந்த அதிகாரம் ஆளுநரையே சாரும். எனக்கு பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் இல்லை என்றே மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியுள்ளது.

ஆகவே இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டியவர் ஆளுநரே அன்றி முதலமைச்சர் அல்ல. ஆகவே உரியவாறு ஆறை ஐந்தாக்குவது ஆளுநரையே சாரும். என்னை எவரும் குறை கூற முடியாது. நான் எவரையாவது பதவி நீக்கம் செய்ய உரித்தற்றவராக மேன்முறையீட்டு நீதிமன்றினால் காணப்பட்ட பின் அது பற்றி ஏதேனும் நடவடிக்கை எடுக்க நான் விழைந்தால் மன்றை அவமதித்த குற்றத்திற்கு ஆளாகலாம்.

நடந்தவற்றுக்குப் பொறுப்புக் கூற வேண்டியவர் ஆளுநர்.

நடந்த சிக்கலை மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பின்படி சரிசெய்ய வல்லவர் ஆளுநர் ஒருவரே. கௌரவ டெனீஸ்வரன் அவர்கள் அமைச்சராகக் கடமையாற்றுவதற்கு தற்போதிருக்கும் அமைச்சர்கள் நால்வரில் ஒருவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும். மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்மானப்படி அதனை ஆளுநர் ஒருவரே செய்யலாம். மேன்முறையிட்டு நீதிமன்றத் தீர்மானப்படி அவரே பதவி நீங்கம் செய்ய அதிகாரம் உடையவர். முதலமைச்சர் அல்ல.

என்னுடைய கைகள் மட்டுமல்ல மேற்படி தீர்மானத்தால் ஒன்பது மாகாண முதலமைச்சர்களின் கைகளும் கட்டப்பட்டுள்ளன. அரசியல் யாப்பினால் முதலமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட உரித்தொன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் தடைசெய்யப்பட்டு அது ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் வடமாகாண சபை தன் நடவடிக்கைகளைச் சட்டப்படி கொண்டு நடத்த சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. வடமாகாண சபை உறுப்பினர்களுக்கும் முதலமைச்சருக்கும் மக்கள் வழங்கிய ஜனநாயக அதிகாரம் மேன் முறையீட்டு நீதிமன்றத்தால் நாட்டிலுள்ள சகல மாகாண சபைகளிலும் முடக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் மனம் வைத்தால்த்தான் இந்தச் சிக்கலைத் தீர்க்கலாம். இது பற்றி ஆளுநருடனும் என்னுடனும் கௌரவ அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் அவர்கள் பேசியது உண்மைதான். தற்போதிருக்கும் ஆறு அமைச்சர்களையும் தத்தமது பதவிகளில் இருந்து இராஜிநாமாச் செய்த பின் ஐந்து அமைச்சர்களை மட்டும் நியமிக்குமாறு ஆளுநரிடம் கோரலாம் என்று அவரால் அறிவுரை வழங்கப்பட்டது. ஆளுநருக்கு அறிவுரை வழங்க வேண்டியவர் சட்டத்துறைத் தலைமையதிபதி. அவரின் கருத்தன்று இது. கௌரவ அவைத்தலைவரின் மேற்படி அறிவுறுத்தலின் தாற்பரியத்தினை இப்பொழுது அறியப் பார்ப்போம்.

ஒன்று பதவி நீக்கப்பட்ட கௌரவ டெனீஸ்வரனை ஒரு அமைச்சராக ஏற்று சகலரும் இராஜினமாச் செய்ய வேண்டும் என்று கூறும் போது சென்ற பதினொரு மாதங்களும் கௌரவ டெனீஸ்வரன் அவர்கள் பதவி வகித்தார் என்றாகிவிடும். அவர் வேலை ஏதும் செய்யாமலே தனது 11 மாத சம்பளத்தைத் தருமாறு கோரலாம். அதற்குரிய பணம் தற்போதைய அமைச்சர்களுக்குக் கொடுத்தாகிவிட்டது.

இரண்டு அவரை அழையாது அவர் பங்குபற்றாது அமர்ந்த அமைச்சரவையின் தீர்மானங்கள் சட்டப்படி வலுவானவையா என்ற கேள்வி எழும்.  கௌரவ டெனீஸ்வரன் அவர்கள் தமக்கு குறித்த பின்சம்பளம் வேண்டாம் என்றால்க் கூட அவரில்லாமல் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் தீர்மானங்களை வலுவற்றதாக்க, பாதிக்கப்பட்ட ஒருவர் அமைச்சர் அவைக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கலாம். இதை நான் கௌரவ அவைத்தலைவர் திரு சீ.வீ.கே.சிவஞானம் அவர்களிடம் எடுத்துரைத்து ஆளுநர் வேண்டுமெனில் சென்ற ஆகஸ்ட் 20ந் திகதியன்றிலிருந்து வலுவுடையதாக வரும் விதத்தில் கௌரவ டெனீஸ்வரன் அவர்களின் பதவிநீக்கம் பற்றி வர்த்தமானியில் இப்பொழுதும் பிரசுரம் செய்யலாம் என்றேன்.

எனது சிபார்சை அப்போதே 2017ம் ஆண்டு ஆகஸ்டில் ஏற்று கௌரவ டெனீஸ்வரனை பதவியில் இருந்து நீக்கி அவர் இடத்திற்கு வேறொரு அமைச்சரை முறைப்படி நியமித்த அவர், குறித்த பதவி நீக்கத்தை வர்த்தமானியில் பிரசுரிக்காததால்த்தான் மேன்முறையீட்டு நீதிமன்றம் குற்றம் கண்டுள்ளது. வர்த்தமானியில் குறித்த பதவி நீக்கம் அப்போதே வந்திருந்தால் இந்தச் சிக்கல்கள் எவையும் எழுந்திரா. இப்பொழுது கூட தன்னுடைய அந்தத் தவறை ஆளுநர் திருத்திக் கொள்ளலாம். தாம் பிரசுரிக்கத் தவறி விட்டார் என்பதை அவரே ஒத்துக் கொண்டுள்ளார்.

ஆகவே பதவி நீக்கம் பற்றி மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்மானப்படி ஆளுநருக்கு அறிவுரை வழங்க நான் அருகதையற்றவன். அதனால்த்தான் நான் உடனே மேன்முறையீட்டு தீர்மானத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றில் நடவடிக்கைகளை எடுத்தேன். சட்டத்தின் தாமதங்கள் (டுயறள னுநடயலள) இங்கும் ஏற்பட்டு எம்மை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு நான் எவ்விதத்திலும் பொறுப்பல்ல.

வேண்டுமெனில் முதலமைச்சர் தவிர்ந்த யாரேனும் ஒரு அமைச்சரை ஆளுநர் நீக்கட்டும். நீக்கி கௌரவ டெனீஸ்வரனை அமைச்சர் அவையில் சேர்க்கட்டும். ஆனால் சட்டப்படி முறையாக நியமிக்கப்பட்டு பின் பதவி நீக்கம் செய்யப்படுகின்ற அந்த அமைச்சர் நீதிமன்றத்திற்குச் செல்வார். அதனையும் ஆளுநர் கருத்தில் கொள்வார் என்று நினைக்கின்றேன்.

என் அறிவுப்படி அமைச்சராக ஒருவரை உறுப்பினர் மத்தியில் இருந்து நியமிப்பதோ பதவி நீக்கம் செய்வதோ முதலமைச்சரின் உரித்தும் அதிகாரமும் ஆகும். அதற்கு உத்தியோகபூர்வ வடிவம் கொடுப்பது மட்டும் ஆளுநரைச் சாரும். ஆனால் உத்தியோகபூர்வ வடிவம் கொடுக்கத் தவறியதால் முதலமைச்சரின் உரித்து எந்த விதத்திலும் பாதிக்கப்படாது. ஒரு உத்தியோகபூர்வ கடப்பாட்டுக்கும் உண்மையான உரித்துக்கும் இடையில் இருக்கும் வேற்றுமையை எடுத்துரைக்கவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடக்கின்றது. ஒரு நிர்வாகச் செயற்பாட்டை மேன்முறையீட்டு நீதிமன்றம் சட்ட உரித்தாகக் கருதி அளித்த தீர்மானம் உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் வரையில் எமது நடவடிக்கைகளில் தாமதங்கள் ஏற்படத்தான் செய்யும். சட்டத்தின் தாமதங்களில் இந்த வழக்கும் அடங்குகின்றது.

நன்றி
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

http://globaltamilnews.net/2018/90021/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • 17. MI என்று எழுதி  விடுங்கோ.  நன்றி 
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.