Jump to content

தல்செவென கடற்கரை- குப்பைக் கூடமாகிறது!!


Recommended Posts

தல்செவென கடற்கரை- குப்பைக் கூடமாகிறது!!

 

 

Thal-Sevana-Holiday-resort-Kankes-145967

 
 
 

அர­சி­யல் விடு­த­லைக்­காக 30 ஆண்­டு­கள் கால­மாக ஆயு­தம் ஏந்­திப் போரா­டிய நாம், இன்று எமது கலா­சா­ரத்­தைக் கட்­டிக் காக்­க­வும், பேண­வும், தக்­க­வைக்­க­வும் அன்­றா­டம் போராட வேண்­டி­ய­வர்­க­ளாக இருக்­கி­றோம். அதி­லும் எம்­ம­வர்­க­ளில் இருந்து, எமது இளை­ஞர்­க­ளின் கட்­டுக்­குள் அடங்­காத போக்­கு­க­ளில் இருந்து கலா­சா­ரத்­தைக் காப்­பாற்ற வேண்­டிய நிலமை ஏற்­பட்­டுள்­ளமை பெருந்­து­யர். அவ்­வா­றாக எமது கலா­சா­ரம், பண்­பா­டு­கள், விழு­மி­யங்­கள் என்­பன வெட்­டிச் சரிக்­கப்­ப­டும் இடங்­க­ளின் ஒன்­று­தான் இந்­தத் தல்­செ­வென கடற்­கரை.

அமைதி தேடிச் செல்­த­லும்
கொதித்­துப்­போய் வரு­த­லும்
வேலைப்­பளு, அழுத்­தம், பர­ப­ரப்பு, பதற்­றம் இவற்றை ஓர­ள­வே­னும் தம்­மி­டத்­தில் இருந்து தொலைத்­து­விட வேண்­டும் என்று பல­ரும் தெரி­வு­செய்­யும் ஓர் இட­மா­கத் தல்­செ­வன கடற்­கரை அமைந்­துள்­ளது. ஆனால் காதல் என்­னும் போர்­வைக்­குள் இளை­யோர்­கள் அங்கு மேற்­கொள்­ளும் காம வெறி­யாட்­டங்­களை சகிக்க முடி­ய­வில்லை. எனி­னும் பொழு­து­போக்க வந்­தி­ருந்து எல்­லை­மீ­றா­மல் தமக்­கி­டையே வார்த்­தை­க­ளைப் பரி­மா­றிக் கொள்­ளும் காத­லர்­க­ளும் இருக்­கி­றார்­கள்­தான். அவர்­கள் இந்­தப் பட்­டி­ய­லில் விதி­ வி­லக்­கா­ன­வர்­கள்.

காத­லர்­கள் என்­றால் வெளி­யி­டங்­க­ளுக்­குத் தனி­யா­கச் செல்­லத்­தான் செய்­வார்­கள். அதற்­கா­கக் காதல் என்­ப­தன் புனி­தம் அற்­று­போ­கும் வகை­யில் அனா­க­ரீ­கச் செயற்­பா­டு­க­ளில் ஈடு­ப­டு­வதை எங்­க­ணம் நோக்­கு­வது…? நீங்­கள் பேச­வேண்­டி­ய­வற்றை தனி­யா­கத்­தான் இருந்து பேச­வேண்­டுமா? பேசுங்­கள், மனம்­விட்டு பேசுங்­கள், உங்­க­ளுக்­குள் இருக்­கும் பிரச்­சி­னை­களை பேசித்­தீ­ருங்­கள், மன­தில் இருப்­ப­வற்றை பரி­மா­றுங்­கள். இவற்­றுக்கு எதற்கு மறை­வான பிர­தே­சங்­க­ ளும், பற்­றை­க­ளும், பாறை­க­ளும், பொந்­து­க­ளும்….??? ஒரு­வேளை ஏதே­னும் ஆய்­வு­க­ளில் ஈடு­ப­டு­கி­றார்­களோ! யாம் அறி­யோம் பரா­ப­ரமே.

 
 

அனு­ப­வம்
ஓர் உண்­மைச் சம்­ப­வம். இளை­ஞர்­க­ளாக ஒன்­று­சேர்ந்து பொழு­து­போக்­கு­வ­தற்காக காங்­கே­சன்­துறை தல்­செ­வென கடற்­க­ரைக்குச் சென்­றி­ருந்­தோம். சரி நாங்­கள் ஓரி­டத்­தில் இருந்து அரட்டை அடிப்­போம் என்று கடற்­க­ரை­யின் ஒரு­ப­கு­திக்­குச் சென்­றி­ருந்­தோம். அங்கு பார்த்­தால் ஓரிரு காதல் ஜோடி­கள் அமை­தி­யான முறை­யில் தமக்­கி­டை­யில் கருத்­து­களை பரி­மா­றிக்­கொண்­டி­ருந்­த­னர். சரி நாம் ஏன் அவர்­களை தொந்­த­ரவு செய்­வேண்­டும் என எண்ணி, கடற்­க­ரை­யின் இறு­திப் பகு­திக்­குச் சென்­றோம். அங்கு உடைந்த பழைய தடுப்­ப­ணை­க­ளும், பாறை­க­ளும் சூழ்ந்து கற்­க­ளாக காணப்­பட்­டது.

ரு தடவை எட்­டிப்­பார்­போம் என பார்த்­தால் ஒவ்­வொரு கற்­க­ளின் இடை­வெ­ளி­யி­லும், பொந்­து­க­ளி­லும் ஒவ்­வொரு ஜோடி­கள். இந்­தப் பத்­தி­யில் முன்­னர் குறிப்­பிட்­டது போல ஏதே­னும் ஆய்­வா­கக்­கூட இருக்­க­லாம். கேட்­டால் காத­லர்­க­ளாம்!!!!. நல்­ல­வே­ளை­யாக இந்­திய வீட்­டுத்­திட்­டக் குழு இந்­தக் காட்­சி­க­ளைப் பார்கவில்லை. பார்த்­தி­ருந்­தால், குடித்­த­னம் நடத்­து­வ­தற்கு ஏன் பத்து, பதி­னைந்து லட்­சம் பெறு­ம­தி­யான வீடு­கள் சிறு குகை­களே போதுமே என்ற முடி­வுக்கு வந்­து­வி­டு­வார்­கள்.

நாங்­கள், என்ன இதுவென்று சலித்­துப் போயி­ருக்க இன்­னொரு இளை­ஞர் குழு­வொன்று அங்கு வந்­தது. அவ்­வாறு ஒழிந்­தி­ருந்­த­வர்­க­ளை­யும் பதுங்­கி­யி­ருந்­த­வர்­க­ளை­யும் தேடித்­தே­டிப் பிடித்து விரட்­டி­னார்­கள். ‘‘நீங்­கள் துரத்­தி­னால் துரத்­துங்­கள் எங்­க­ளுக்கு இந்த இடம் இல்­லை­யென்­றால் வேறு இடம் கிடைக்­கா­மலா போய்­வி­டும். அங்­கி­ருந்து நாம் ஆய்­வைத் தொட­ரு­வோம்’’ என்று சொல்­லா­மல் சொல்­லி­ய­படி அவர்­கள் நகர்ந்­தார்­கள். சில பெண்­கள் ‘‘விப­சார வழக்­கில் சிக்­கிக்­கொண்ட பெண்­க­ளைப் போன்று’’ துப்­பாட்­டா­வால் தமது திரு­மு­கங்­களை மூடிக்­கொண்­டனர்.

கட்­டுப்­ப­டுத்த நட­வ­டிக்கை
இத்­த­கைய கலா­சார சீர­ழி­வு­ க­ளைக் கட்­டுப்­ப­டுத்த நட­வ­டிக்­கை­கள் அவ­சி­யம். இதற்­கான இரண்டு திட்­டங்­கள் மன­தில் ஆழ ஊடு­ரு­வு­கின்­றன. ஒன்று, இதற்­கா­கவே சில இடங்­களை அமைத்­துக் கொடுப்­பது. ஆம், மேற்­கத்­திய நாடு­கள் இது­போன்ற நட­வ­டிக்­கை­களை ‘தனிப்­பட்ட சுதந்­தி­ரம்’ என்ற வரை­ய­றைக்­குள் வைத்­துள்­ளன. ஒரு விதத்­தில் அது சரி­யா­ன­தும் கூட. இத­னால் அத்­த­கைய நாடு­க­ளில் காத­லர்­கள் செல்­வ­தற்கு என்று ஏரா­ள­மான இடங்­கள் உள்­ளன.

இங்கு அவ்­வா­றான இடங்­களை அமைத்து வச­தி­களை ஏற்­ப­டுத்­திக் கொடுத்­து­விட்­டால் கண்ட இடங்­க­ளி­லும் இவ்­வாறு கலா­சா­ரம் சிக்­கிக் சின்­னா­ பின்­ன மா­காது.

இரண்­டா­வது, திரு­டர்­க­ளைப் பிடிக்க விழிப்­புக் குழுக்­கள் அமைக்­கப்­பட்­ட­தைப் போன்று, இந்­தக் கலா­சா­ரத் திரு­டர்­க­ ளை­யும் பிடிப்­ப­தற்கு சில குழுக்­களை நிறுவி தல்­செ­வன, கசூ­ரினா, கோட்டை என்று இவ்­வா­றான சம்­ப­வங்­கள் அவ­தா­னிக்­கப்­ப­டும் இடங்­க­ளில் நிறுத்­து­வது. எனி­னும், தனி­ம­னித மனங்­க­ளில் ஏற்­ப­டும் மாற்­றமே அனைத்­தை­யும் விட மேலா­னது. அதுவே ஆகச்­சி­றந்த நட­வ­டிக்­கை­யும்­கூட.

http://newuthayan.com/story/10/தல்செவென-கடற்கரை-குப்பைக்-கூடமாகிறது.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

இது சிங்கள பெயர்தானே ? 

தல் என்றால் பனை என்று நினைக்கிறேன்!

இது இராணுவத்தால் நடத்தப் படும்.....விடுதி என்று.....அவர்களது வலைப்பூ சொல்லுது!

Link to comment
Share on other sites

யாழ்பாணம் முழுவதுமே குப்பைக் கூழமக தானே இருக்கிறது. மழை பெய்தால்  கால் வைக்க முடியாத அளவுக்கு அழுக்கு. பண்ணைப்பகுதியில் கொட்டப்படும் கழிவுகளால் அப்பகுதி முழுவதும் நாற்றம் அடிக்கிறது. அவசரத்பொதுக்கு கூட து மலசல கூடங்களை பாவிக்க முடியாத நிலை. இது குறித்து மாகாண. மாநகர சபை தகுந்த நடவடிக்கை களை எடுக்கவும் இல்லை அங்குள்ள மக்களும் எமது தாயகத்தை  சுத்தமாக வைத்திருக்க ஒத்துழைப்பதும் இல்லை.

இந்த நிலையில் அந்த குப்பைகள் நாற்றங்கள் எல்லாம் கடந்து  போயே இந்த பத்திரிகையாளர் காதலர்களின் தனிப்பட்ட விடயங்களில் மூக்கை நுழைத்துள்ளார். இவரது செயல் தான் உண்மையான கலாச்சார சீரழிவு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்கிசை / வெள்ளவத்தை / கோல்பேஸ் / கொழும்பு பொது நூலகத்திற்கு அருகாமயில் எல்லா இடங்களிலும் காதலர்கள் காலம் கலமாக இப்படி சந்தித்து சல்லாபிப்பது வழமைதானே. தமிழ் , சிங்களம் , முஸ்லீம் எல்லோரும்தானே இங்கே 
உட்கார்ந்திருக்கின்றார்கள். ஏன் மற்றவ்ர்களின் ப்ரைவசியை எட்டிப் பார்க்கின்றீகள்? 

தல்செவென கடற்கரை- குப்பைக் கூடமாகிறது!! ‍ இது த‌லையங்கம். செய்தியோ மற்றவர்களின் ஊருபலாய்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.