Jump to content

அபிவிருத்திச் செயலணியின் – கூட்டத்தில் விக்னேஸ்வரன் பங்கேற்பார்!!


Recommended Posts

அபிவிருத்திச் செயலணியின் – கூட்டத்தில் விக்னேஸ்வரன் பங்கேற்பார்!!

 

Vigneshwaran-01.jpg

 
 
 
 

வடக்கு –கிழக்கு மாகாண அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கைகளுக்­காக அரச தலை­வ­ரால் உரு­வாக்­கப்­பட்­டுள்ள செய­ல­ணி­யின் முத­லா­வது கூட்­டம் கொழும்­பி­லுள்ள அரச தலை­வர் செய­ல­கத்­தில் இன்று மாலை 3 மணிக்கு நடை­பெ­ற­வுள்­ளது.

செயல­ணி­யின் கூட்­டத்­தில் பங்­கேற்­கப்­போ­வ­தில்லை என்று வடக்கு முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், அரச தலை­வ­ருக்கு கடி­தம் அனுப்­பி­யி­ருந்­தா­லும் இன்­றைய கூட்­டத்­தில் அவர் பங்­கேற்­பார் என்று தெரி­ய­வ­ரு­கின்­றது.

கூட்­டத்­தில் பங்­கேற்று வடக்கு அபி­வி­ருத்திகள் தொடர்­பான விட­யங்­களை முன்­வைப்­பார். இனி­வ­ரும் கூட்டங்­க­ளில் பங்­கேற்­கா­மைக்­கான கார­ணங்­க­ளை­யும் இதன்­போது அவர் வெளிப்­ப­டுத்­து­வார் என்று கூறப்­ப­டு­கின்­றது.

 
 

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­னால் வடக்கு – கிழக்கு மாகாண அபி­வி­ருத்­தி­காக சிறப்­புச் செய­லணி அமைக்­கப்­பட்­டுள்­ளது. 48பேர் செய­ல­ணி­யின் உறுப்­பி­னர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்­கள்.

வடக்கு – கிழக்கு மாகா­ணங்­க­ளில் இது­வரை முன்­னெ­டுக்­கப்­பட்ட அபி­வி­ருத்­தித் திட்­டங்­கள் தொடர்­பான விவ­ரங்­க­ளைச் செய­லணி திரட்­டி­யுள்­ளது.

திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­தும்­போது எதிர்­கொண்ட சவால்­க­ளை­யும் பட்­டி­ய­லிட்­டுள்­ளது. இன்­றைய கூட்­டத்­தில் இந்த விட­யங்­கள் முன்­வைக்­கப்­பட்டு ஆரா­யப்­ப­ட­வுள்­ளது.

இதே­வேளை, அர­சி­யல் தீர்­வின் பின்­னரே அபி­வி­ருத்தி என்று வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­தி­ருந்­தார்.

செய­ல­ணி­யின் கூட்­டத்­தில் பங்­கேற்­கப் போவ­தில்லை சில கார­ணங்­க­ளைப் பட்­டி­ய­லிட்டு அரச தலை­வர் மைத்­தி­ரி­பா­ல­வுக்கு கடி­தம் அனுப்­பி­யுள்­ள­தாக கடந்த 11ஆம் திகதி ஊடக அறிக்கை ஊடாக வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தார்.

இருப்­பி­னும் இன்­றைய கூட்­டத்­தில் முத­ல­மைச்­சர் பங்­கேற்­பார் என்று அவ­ருக்கு நெருக்­க­மான வட்­டா­ரங்­கள் தெரி­வித்­துள்­ளன. இதற்­காக கொழும்­பில் முத­ல­மைச்­சர் தங்­கி­யுள்­ளார்.

தனது அதி­கா­ரி­க­ளுக்கு, இன்­றைய கூட்­டத்­துக்­கு­ரிய விட­யங்­க­ளைத் தயார்­ப­டுத்­து­மாறு முத­ல­மைச்­சர் ஏற்­க­னவே பணித்­துள்­ள­தா­க­வும் தெரி­ய­வ­ரு­கின்­றது.

கூட்­டத்­தில் பங்­கேற்­கப் போவ­தில்லை என்று அவ­ச­ரப்­பட்டு முத­ல­மைச்­சர் அறிக்­கையை வெளி­யிட்­டி­ருந்­தார். முத­லா­வது கூட்­டத்­தில் பங்­கு­பற்றி, வடக்கு அபி­வி­ருத்­தி­யின் தேவைப்­பா­டு­களை வலி­யு­றுத்தி, இந்­தச் செய­ல­ணி­யில் தொடர்ந்து பங்­கேற்­கா­மைக்­கு­ரிய கார­ணங்­களை அறி­வித்­து­விட்டு பங்­கேற்­கா­மல் விடு­வதே சிறந்­தது என்று முத­ல­மைச்­ச­ருக்கு சில தரப்­புக்­கள் ஆலோ­சனை வழங்­கி­யுள்­ளன.

வடக்கு அபி­வி­ருத்தி தொடர்­பில் திட்­ட­மி­டு­வ­தற்கு முத­ல­மைச்­சரை அழைத்­தும் அவர் வர­வில்லை என்று அரச தரப்­புக்­கள் தெரி­விக்­கக்­கூ­டும்.

கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் இந்­தச் செய­ல­ணி­யில் உள்­வாங்­கப்­ப­டா­விட்­டா­லும், முத­ல­மைச்­சர் பங்­கேற்­கா­விட்­டால் அந்­தத் தரப்­புக்­கள் ஊடாக அரசு இத­னைக் கையா­ளக்­கூ­டும் என்­றும் முத­ல­மைச்­ச­ருக்கு ஆலோ­சனை வழங்­கிய தரப்­புக்­கள் கூறி­யுள்­ளன. இத­னை­ய­டுத்து அவர் தனது முடிவை மாற்­றிக் கொண்­டுள்­ளார்.

இதற்கு அமை­வாக இன்­றைய கூட்­டத்­தில், பங்­கேற்று வடக்கு அபி­வி­ருத்தி தொடர்­பான திட்­ட­வ­ரைவை முன்­வைப்­ப­து­டன், தான் ஏற்­க­னவே அரச தலை­வ­ருக்கு அனுப்­பிய கடி­தத்­தில் கூறப்­பட்ட விட­யங்­க­ளை­யும் செய­ல­ணிக்­குத் தெரி­யப்­ப­டுத்­து­வார் என்­றும் அறி­ய­மு­டி­கின்­றது.

http://newuthayan.com/story/09/அபிவிருத்திச்-செயலணியின்-கூட்டத்தில்-விக்னேஸ்வரன்-பங்கேற்பார்.html

Link to comment
Share on other sites

செயலணியின் கூட்டத்தை புறக்கணித்த விக்கி

 

 

ஜனாதிபதி தலைமையில் இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி தொடர்பான செயலணியின் கூட்டத்தில் தான் கலந்துகொள்ளப் போவதில்லை என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார். 

viki.jpg

ஜனாதிபதி தலைமையில் இன்று இடம்பெறும் இந்த செயலணியில் 48 பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். எனினும் வடக்கை பிரதிநிதித்துவப்படுத்த இரண்டு பிரதிநிதிகள் மாத்திரமே இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். ஏனையவர்கள் மத்திய அரசாங்கத்தையும் பாதுகாப்பு தரப்பினரையுமே பிரதிநிதித்துவப் படுத்துகின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் நான் ஏற்கனவே இரு கடிதங்கள் மூலம் உரிய தரப்பினருக்கு அறிவித்திருந்தேன். எனினும் அவர்கள் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாகவே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

http://www.virakesari.lk/article/37506

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.