Jump to content

லசந்தவின் கொலையை ராஜபக்ஸக்கள் மறந்திருக்கலாம், நாட்டு மக்கள் மறக்கவில்லை…


Recommended Posts

லசந்தவின் கொலையை ராஜபக்ஸக்கள் மறந்திருக்கலாம், நாட்டு மக்கள் மறக்கவில்லை…

தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்…

Gota-with-gun-800x530.jpg
சன்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க, கொலை செய்யப்படும் முன்னர், அவர் கைது செய்யப்படவிருந்ததாக அவரது கொலை தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சிசிர மெண்டிஸ், குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம், லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் வழங்கிய வாக்குமூலத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

 

சிசிர மெண்டிஸ், கடந்த மாதம் 11 ஆம் திகதி, லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பாக, குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசோக விஜேதிலக்க தன்னை தொடர்புக்கொண்டு, லசந்த விக்ரமதுங்கவை கைதுசெய்யுமாறு உத்தரவிட்டிருந்ததாக சிசிர மெண்டிஸ், குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் வழங்கிய வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

அலரி மாளிகையில் நிர்மாணிக்கப்பட்டிருந்த நிலத்தடி பதுங்குகுழி சம்பந்தமாக சன்டே லீடர் பத்திரிகையில் தகவல் வெளியிட்டமை காரணமாகவே லசந்த விக்ரமதுங்கவை கைதுசெய்ய உத்தரவிடப்பட்டிருந்தது. எனினும் லசந்த விக்ரமதுங்கவுக்கு எதிராக முறைப்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை என்பதால், சிசிர மெண்டிஸ், தனது மூத்த அதிகாரி விடுத்திருந்த உத்தரவை பொருட்படுத்தவில்லை.

இந்த நிலையில், கடந்த 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 26, 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் சிசிர மெண்டிஸை தொலைபேசியில் தொடர்புக்கொண்ட, அசோக விஜேதிலக்க, லசந்த விக்ரமதுங்கவை எப்படியாவது கைதுசெய்யுமாறு கூறியுள்ளார்.முறைப்பாடுகள் எதுவும் இல்லாத நிலையில்,லசந்த விக்ரமதுங்கவை எப்படி கைதுசெய்ய முடியும் என சிசிர மெண்டிஸ் கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள அசோக விஜேதிலக்க, இது பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவு எனவும் இதனால், முறைப்பாடுகள் அவசியமில்லை, உடனடியாக கைதுசெய்யுமாறும் கூறியுள்ளார்.

இதற்கு அமைய லசந்த விக்ரமதுங்கவை கைதுசெய்ய தான் தயாரானதாகவும் அப்போது தன்னை தொடர்புக்கொண்ட அசோக விஜேதிலக்க, லசந்த விக்ரமதுங்கவை கைதுசெய்யாது திரும்பி வருமாறு அறிவித்ததால், தான் திரும்பி வந்து விட்டதாகவும் சிசிர மெண்டிஸ், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் முன்னிலையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்யப்பட்டு சில வருடங்களின் பின்னர், குறித்த சம்பவம் பற்றி, வெளிநாட்டு ஊடகம் ஒன்றின் ஊடகவியலாளர், கோத்தபாய ராஜபக்சவிடம் கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த கோத்தபாய ராஜபக்ச, “லசந்த விக்ரமதுங்க என்பவர் யார்” என பதிலளித்திருந்தார்.
லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்ட பின்னர், கோத்தபாய ராஜபக்சவினர், அவரை மறந்திருக்கலாம், ஆனால் நாட்டு மக்கள் அதனை மறக்கவில்லை என சிங்கள பத்திரிகை ஒன்று கூறியுள்ளது.

சட்டம், நீதிமன்றத்தின் சுதந்திரம் மற்றும் பொலிஸ் சுதந்திரம் பற்றியும் ஜனநாயகம் குறித்தும் உபதேசம் நடந்தும் கோத்தபாயவினர், அன்று பொலிஸாரை தமது தேவைக்கு அமைய பயன்படுத்தினர்.அத்துடன் தற்போது தன்னை கைதுசெய்வதை தடுக்க உயர் நீதிமன்றத்தை நாடும் கோத்தபாய, அன்று தமக்கு எதிரான எந்த நபராக இருந்தாலும் முறைப்பாடுகள் இன்றி கூட கைதுசெய்தார்.

லசந்த விக்ரமதுங்க தனது பத்திரிகையில் வெளியிட்ட தகவலுக்கு அமைய அலரி மாளிகைக்குள் ஆடம்பரமான சொகுசான வசதிகளுடன் கூடிய நிலத்தடி பதுங்குகுழி நிர்மாணிக்கப்பட்டிருந்ததாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்ததுடன் அவற்றின் புகைப்படங்களையும் பிரசுரித்திருந்தன.அரச பணத்தை செலவிட்டு, ஆட்சியாளர்கள் மேற்கொள்ளும் இப்படியான நிர்மாணிப்புகள் பற்றிய தகவல்களை நாட்டுக்கு தெரியப்படுத்துவது ஊடகவியலாளர்களின் கடமை. எனினும் சட்டம் சீரழிந்து காணப்பட்ட ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், அந்த கடமையானது உயிரை பறிக்கொடுக்கக் கூடிய பாரதூரமான குற்றம்.தாம் குற்றவாளிகள் இல்லை என தற்போது அடிக்கடி கூறி வரும் ராஜபக்சவினர் மீது லசந்த கொலை தொடர்பான குற்றத்தை ஒப்புவிக்க, சிசிர மெண்டிஸ் வழங்கிய வாக்குமூலம் மிகப் பெரிய சாட்சியம்.

அவுஸ்திரேலியாலில் வசிக்கும் லசந்த விக்ரமதுங்கவின் புதல்வியிடமும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலங்களை பெற்றுள்ளனர். இதனடிப்படையில், லசந்த கொலை தொடர்பான விசாரணைகள் துரிதமாக முன்னெடுக்கப்படும் எனவும் அந்த சிங்கள பத்திரிகை கூறியுள்ளது.

http://globaltamilnews.net/2018/89858/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மகிந்த படுத்த கட்டிலில் தம்பி படுத்து எழுந்து வந்திட்டார். மற்றவர்களுக்கும் அந்த ஆசை வரும் தானே? (நான் ஜனாதிபதிக்கட்டிலை சொன்னேன் ராசா😜)
    • பையா நீங்கள் புதுப் பதிவு போட வேண்டிய  அவசியமே இல்லை........ அதுதான் அவர் போட்டி விதிகளில் வடிவாக சொல்லியிருக்கிறார் ....போட்டி விதி  04 ஐப் பின்பற்றி அவரின் அனுமதி பெற்று உங்களின் பதிவில் சில திருத்தங்கள் செய்யலாம்........ அவரின் அனுமதி பெறுவது உங்களின் கெட்டித்தனம் ...... ஏதோ என்னாலானது "புத்தியுள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும்".....!  😁
    • அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் குழப்பநிலை! முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் அமைந்துள்ள கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது குழப்பநிலை ஏற்பட்டிருந்தது. இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது குறித்த  மக்கள் சந்திப்பின் போது செய்தி சேகரிப்பதற்கு சென்றிருந்த முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் ஒருவர் அதனை காணொளியாக பதிவு செய்திருந்த நிலையில், அமைச்சரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் காணொளி எடுக்க வேண்டாமென  அவரைத் தடுத்ததோடு அதனை மீறி எடுத்து செய்தி பிரசுரித்தால் வீடுதேடி வருவோம் எனவும் அச்சுறுத்தல் விடுத்ததாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ் அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டதாகவும், பின்னர் பொலிஸார் அமைச்சருக்கு இது குறித்து தெரியப்படுத்தி இருந்ததாகவும் ஆனால் எந்த நடவடிக்கையும் இது தொடர்பாக  எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2024/1378726
    • இராணுவ வீரர்களின் கவனத்திற்கு! முறையான விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத மற்றும் சட்டவிரோதமான முறையில் சேவையை விட்டு வெளியேறியுள்ள இராணுவத்தினருக்கு ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் மே மாதம் 20 ஆம் திகதி வரை பொது மன்னிப்பு காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது மன்னிப்புக் காலத்தின் போது, தமது படையணி தலைமையகத்துடன் தொடர்பு கொண்டு சட்டரீதியாக சேவையை விட்டு வெளியேற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு முன்னர் முறையான விடுமுறையின்றி பணிக்கு சமூகமளிக்காத அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் உரிய ஆவணங்களுடன் தத்தமது படையணி தலைமையகத்திற்கு மட்டும் சமூகளிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இராணுவ சேவையில் இருந்து வெளியேறும் அடிப்படை அனுமதி வழங்கல் நடவடிக்கை, 72 மணித்தியலங்களுக்குள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ அடையாள அட்டை அல்லது இராணுவ அடையாள அட்டை தொலைந்து விட்டது எனின் சமீபத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட பொலிஸ் அறிக்கையின் பிரதி, தேசிய அடையாள அட்டை அல்லது சாரதி அனுமதி பத்திர பிரதி, சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள், வரவு வைக்கப்பட்டுள்ள வங்கி புத்தகத்தின் பிரதி ஆகியவற்றை கொண்டுவருமாறு இராணுவ ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. மேலும், முறையான விடுமுறையின்றி பணிக்கு சமூகமளிக்காமை தவிர வேறு சட்ட விரோத நடவடிக்கைகளில் சம்பந்தப்படாதவர்கள் மற்றும் முறையான விடுமுறை இன்றி தற்போது வெளிநாட்டில் இருக்கும் இராணுவ உறுப்பினர்கள் மீண்டும் சமூகமளிக்காது தனது படையணியுடன் தொடர்பு கொண்டு இந்த பொது மன்னிப்புக் காலத்தின் போது சட்டரீதியாக தமது சேவையை விட்டு வெளியேறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பிரிவு மேலும் அறிவித்துள்ளது. https://athavannews.com/2024/1378764
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.